Friday, November 10, 2006

கதிரவெளி முற்றுப் புள்ளியல்ல!

கதிரவெளி முற்றுப் புள்ளியல்ல!


இலங்கையை மாறி மாறியாளும் சிங்களக் கட்சிகள் இதுவரை இலங்கை மக்கள் அனைவருக்கும் மரணத்தைத் தவிர வேறெந்த நன்மையையும் செய்யவில்லை!இலங்கையின் இதுவரையான அரசியல் போக்குகளை மெல்ல ஆழ்ந்து நோக்குமிடத்து இந்தவுண்மை புலப்படும்.இலங்கை பல்லின மக்களைக்கொண்ட நாடாகினும் அந்த நாட்டில் பேரினக் காட்டாட்சிதான் தொடர்ந்து நிலவுவதை நாம் அந்த நாட்டின் பாசிச மயப்படுத்தபட்ட இராணுவத்தின் ஜனநாயகப் படுகொலையிலிருந்து புரிந்துகொள்வது மிக இலகுவானதாகும்.


மக்கள் தமது சொந்த மண்ணில் அகதியானபின்பும் அவர்களின் உயிர்வாழ்வை இந்தத் தேசம் மதிப்பதில்லை.இருந்தும் இன்றிருக்கும் இந்தப் படுபிற்போக்கான ஆட்சியமைப்பும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆளும் வர்க்கமும் என்றுமில்லாதவாறு தம்மை ஜனநாயகத்தின் காவலர்களாகவும்,இலங்கையின் பல்லினச் சமூகத்துக்கும் பாதகமற்றவர்களாகவும் படுவேகமாகப் பரப்புரை செய்கிறது.இதையும் தமிழ்பேசும் மக்களது தலைவிதியை மாற்றப் போவதாகக் கூறும் இயக்கங்கள்,கட்சிகள் தண்டமிட்டு"ஆம் உண்மைதான்"என்று நமக்குள் கருத்துக்கள் கூறி,இலங்கை அரசுக்கு ஜனநாயக முகமூடி தரிக்கின்றனர்.இதற்கு அவர்கள் "புலிகளின் பாசிசத்தை"துணைக்கழைத்துச் சிங்கள அரசானது புலிகளின் பாசறைகளால்-மக்களுக்குள் அவர்கள் ஒளிந்து இராணுவத்தைத் தாக்குவதால்,இராணுவமும் பதில் தாக்குதலைத் தற்காப்புக்குத் தொடுக்கும்போது மக்கள் அழிகிறார்கள் என்கின்றார்கள்.இதை இன்றைய நமது அரசியலில் மிகச் சகஜமாகச் சொல்வதில் ரீ.பீ.சி.போன்ற மகா நெட்டூரம் கொண்ட வானொலிகளாலும்,அதில் பங்குபெறும் கடைந்தெடுத்த கைக்கூலி "ஆய்வாளர்களாலும்" முடிகிறது!


நமக்கோ அப்பாவி மக்களின் சாவில் அரசியல் நடாத்தும் இந்தக் கேடுகெட்ட அரசியல் விபச்சாரகர்களை எங்ஙனம் மக்களிடமிருந்து அகற்றுவதென்ற யோசனை-மக்களின் சாவுக்கு நீதி கேட்கும் தர்ம வேதனை!


இன்றுவரை இலங்கையின் இனவழிப்பானது பல்லாயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்களையும்,அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தும்,கையகப்படுத்தியும் "தன்னாட்சி கொடிய இஸ்ரேலுக்கு நிகரானதென" நிரூபித்து வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்த புலிகளும் மற்றைய குழுக்களும் தத்தமது இயக்க நலன்களுக்காக இந்த மக்களின் அடிப்படை வாழ்வுரிமையைக்கூட ஏலமிட்டு விற்பதற்குத் தயக்கமில்லை!, தயாராகிய கையோடு ஒவ்வொருவரும் தமது நலன்களை முதன்மைப்படுத்திய அரசியலில் இலங்கைப் பாசிச அரசை ஒருகட்டத்தில் சாடியும் மறுகட்டத்தில் ஆதரித்தும் தமது பிழைப்பைச் சரிவரச் செய்கிறார்கள்.


வாகரை கதிரவெளிக் கிராமத்தில் பாடசாலையில் தமது உயிரைக் காக்கும்பொருட்டுத் தஞ்சமடைந்த மக்களை அவர்கள் தமிழைப் பேசும் ஒரே காரணத்துக்காகச் சாகடிக்கும் உரிமையைச் சிங்களப் பாசிச ஆட்சியாளர்கள் கையிலெடுத்து, அந்த மக்களைக் கூட்டோடு அழித்துள்ளார்கள்.இது 08.11.2006 நடந்தேறிய இனவழிப்பாகும்.இலங்கையரசானது தன்வரையில் இலங்கையின் முழுமொத்த மக்களின் ஓடுக்குமுறையரசாக இருந்துகொண்டே அந்த மக்களைக் காக்கும் ஜனநாய அரசென்றும் சொல்லி வருகிறது.இதையும் சில விட்டேந்திகள்-ரீ.பீ.சீ "ஆய்வாளர்கள்,அரசியல்வாதிகள"; என்ற பகற் கொள்ளைக் காரர்கள் நியாயப்படுத்தி பட்டப்பகலில் நடுரோட்டில் தத்தம் தாயை மானபங்கப்படுத்தித் தமது உணர்வைப் ப+ர்த்தி செய்கிறார்கள்.



இத்தகைய சமூக விரோதிகள் நமது மக்களுக்கு முன்வைக்கும் அரசியலானது அந்த மக்களைப் ப+ரணமாக அழிப்பதற்கு இலங்கையரசுக்கு ஒப்புதல் கொடுக்கும் அரசியலே.இதற்கு இத்தகைய திருடர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம் "புலிப் பாசிசம்"என்ற புலிகளின் மக்கள் விரோதச் செயற்பாடுகளாகும்.இங்கும் இத்தகைய மாபியாக்களை உருவாக்கிய அரசியலை மக்களுக்குள் திணித்தவர்கள் இந்தப் புலிகள்தான்.இவர்களின் கொடுமுடி ஆதிக்கத்தால் பழிவாங்கப்பட்ட கட்சி-இயக்க அரசியல் பொறுக்கிகள் இப்போது கூட்டணியமைத்து நம் மக்களின் அனைத்து அடிப்படை வாழ்வாதாரங்களையும் அடியோடு மொட்டையடிக்கும் அரசியல் தந்திரத்துக்கு அடிகோலும் தரணத்தை இந்தப் புலியரசியலே தூபமிட்டது.என்றபோதும் இத்தகைய திருடர்களை மக்கள் இனம்காணும் இன்றைய தரணத்தில், மக்களைப் பொருளாதார மற்றும் யுத்த அனர்த்தங்களால் வருத்தித் தத்தமது அரசியல் இலக்கை(தமிழர்களின் சுய நிர்ணயவுரிமையை இல்லாதொழித்தல்) எட்டும் காரியத்தில் இன்றைய இலங்கை மற்றும் இந்திய உலக நலன்கள் முனைப்படைகின்றன.இதன் உச்சக்கட்டமாக அகதிகளாக இருக்கும் மக்கள்மீது தாக்குதல் தொடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைக் கொடுத்து, புலிகளுக்கான மக்களின் ஆதரவை அடியோடு அழிக்கும் இஸ்ரேலியவகை அடக்குமுறை அரசியலை இலங்கை-உலகம் முன்னெடுத்து வருகிறது.



இந்நிலையில் இந்தியா மக்களுக்காக உணவுக் கப்பல் அனுப்புவதும்,இராணுவம் "நியாய விலை"கடை வைப்பதும் இந்தவகை அரசியல் இலாபத்துக்காகத்தான்.இதையும் மக்களின்மீது இவர்களுக்கிருக்கும் கரிசனைதான் காரணமென்று "ரீ.பீ.சீ."பொறுக்கிகள் அலம்புகிறார்கள்.இந்தியாவோ தன் விவசாயிகளின் பட்டுணிச் சாவுக்குக் காரணமான ஒரு கொடிய அரசு.எலிக்கறியுண்ட தர்மபுரி மற்றும் இரமநாத புர மாவட்ட விவசாயிகளைக் கேட்டால் இந்தியாவின் "கருணை" புரியும்.இந்தியாவின் வட மாநிலத்தில் கணிசமான விவசாயிகள் கடும் பஞ்சத்தால் செத்து மடியும்போது,அவர்களைக் காக்க வக்கற்ற வலதுகுறைந்த இந்தியா இலங்கை அரசியலில் மாபெரும் வல்லரசாம்,கருணைகொண்ட பாண்டவர் ப+மியாம்!,மசிர்.



மக்கள் அன்றாடம் செத்து மடியும் இலங்கையில் மசிரைப் புடுங்கின அரசியல் பொறுக்கிகளும் அன்றாடம் செத்து மடியத்தான் செய்கிறார்கள்.இத்தகைய கொலைகளிலொன்று இன்று 10.11.2006 நடந்திருக்கிறது.இதுவும் இலங்கையின் அரசவன்முறையின் தொடர்ச்சிதான்.இங்கேயும் இந்த மாபியாத்தனமான அரசியல் முன்வைக்கும் மக்கள் நலன்-ஜனநாயகம் என்னவென்பது நமக்குப் புரிந்து கொள்ளத் தக்கதே!மக்களைச்சாராத தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதி இரவிராஜ் கொழும்பில் தமிழ் மக்கள் பெயாரால் பொறுக்கித் திரிந்து,உல்லாச வாழ்வு வாழ்ந்தபோது கொல்லப்பட்டுள்ளார்.இது அராஜகமான அரசியலில் அதை முன்னெடுக்கும் அனைவருமே ஒவ்வொரு கட்டத்தில் அழிவார்கள் என்பதை மீளவும் இலஷ்மன் கதிர்காமருக்குப்பின் உணர்த்தும் ஒரு கொலைதான்.



சொந்த மக்கள் இவர்களின் பிழைப்புவாத அரசியல் மற்றும் கோசங்களாலும்,அரசியல் சதிகளாலும் செத்துமடியும்போது, அதில் குளிர்காயும் எல்லாவகைப்பட்ட மாபியா அரசியற் குண்டர்களுக்கும் இதுதான்(கொலை) கதியாகும்!அது பிரபாகரனாக இருந்தாலென்ன இல்லை மகிந்த இராஜபக்ஷயாகவிருந்தலென்ன,எல்லோரும் மக்களின் அழிவில் அரசியல் நடாத்தும் பிழைப்புவாதிகளே.இவர்களுக்கும் இவர்களால் தூண்டப்படும் மற்றைய துணைக்கட்சி-படைகளுக்கும் இந்தச் சாவு வரத்தான் போகிறது.அது ஒவ்வொரு கட்டத்தில் நிகழும்.அதுவரையும் இத்தகைய திருடர்கள் மக்களை அழித்தே வருவார்கள்.இதில் கதிரவெளிமட்டுமல்ல முற்றுப் புள்ளி.



"நாம் மக்களின் அழிவுகளைக் கண்டு ஆழ்ந்த வேதனையடைவோம்!,அவர்களின் வாழ்வுக்காகச் சிறிதாவது பேசுவோம்,மௌனங்களைக் கலைத்து"


மிகுந்த வேதனையோடு,


பரமுவேலன் கருணாநந்தன்.
10.11.06

Wednesday, November 08, 2006

கண்ணீர் அஞ்சலி!

கண்ணீர் அஞ்சலி!








22.07.1954 – 30.10.2006



தமிழ்த் தேசிய விடுதலையின் ஆயுதப்போராட்ட ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் புரட்சிகர சிந்தனையாளருமான ~மாஉ| என்றழைக்கப்படும் மகாலிங்கம் உத்தமன் அவர்கள் 30.10.2006 அன்று காலமானார் என்ற செய்தியை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.


யார் இந்த உத்தமன்!


தமிழ் மக்களாகிய நம்மில் பலரும் அறிந்திராத மனிதர் இவர். ஆனாலும் போராட்ட வரலாற்றிலிருந்து அகற்றப்படமுடியாதவர். மறக்கமுடியாதவர். உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட மகா உத்தமன் அந்த மண்ணின் மைந்தர்களான பொன்.சிவகுமாரன் சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து “தமிழ் மாணவர் பேரவை“ அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இந்த அமைப்பே முதன் முதலில் மாணவர்களையும் இளைஞர்ளையும் எழுச்சியுடன் அணிதிரட்டிய அமைப்பாகும். தமிழர்களுக்கென தனியரசு தேவை என்பதை வலியுறுத்தியதோடு அதற்கான ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்மாணவர் பேரவை அறைகூவல் விடுத்ததோடு செயலிலும் இறங்கியது. இதன் அடுத்துவந்த செயல்பாடுகளில் சிவகுமாரன் -அரச படைகளிடம் சிக்காமல்- தற்கொலை செய்துகொள்ளவும் ஏனையவர்கள் தலைமறைவாகவும் அந்த அமைப்பு தேக்கத்திற்குள்ளானது.


சென்யோன்ü கல்லூரி மாணவனான உத்தமன் கல்விகற்பதற்காக லண்டன் பயணமானார். கல்விகற்பதற்காக லண்டன் சென்ற உத்தமனின் அரசியல் வாழ்வு இன்னும் தீவிரமடைந்தது. அவரது உலகப்பார்வையும் சிந்தனையும் விசாலமடைந்தது. சர்வதேச முற்போக்கு புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதுடன் அவற்றின் போராட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டார். இவற்றின் பலாபலன்களை ஈழவிடுதலைப் போரட்டத்தில் சுவறச்செய்தார். இவர் ஊட்டிவளர்த்த விடுதலை இயக்கம் (புளொட்) சீரழிவுக்குள்ளானபோது அதிலிருந்து வெளியேறிய புரட்சிகர சக்திகளுடன் (தீப்பொறிக் குழுவுடன்) கைகோர்த்துக் கொண்டதோடு, தமிழீழ மக்கள் கட்சியினை உருவாக்குவதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் உந்து சக்தியாக விளங்கினார்.


சமூக விஞ்ஞானத்துறையில் கற்றுத்தேர்ந்தவரான தோழர் உத்தமன் தத்துவ கோட்பாட்டுத் துறையிலும் பெரும்பங்களிப்பை வழங்கியவராவார். தமிழ்த் தேசியம் குறித்த கோட்பாட்டு விவாதங்களில் பின்புலமாக விளங்கியதோடு முரண்பட்டு நின்ற பலரையும் அதன்பால் வென்றெடுத்தார். உயிர்ப்பு கோட்பாட்டு சஞ்சிகையில் உத்தமனின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாகும். ஈழப்போரட்டம் ஈடாட்டம் கண்ட வேளையில் அதனை கருத்துரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தூக்கிநிறுத்தவதில் சளைக்காமல் செயல்பட்டார். புரட்சிகர அமைப்பின்றேல் புரட்சியில்லை என்பதற்கேற்ப அமைப்பு உருவாக்கத்தில் காலத்தைச் செலவுசெய்தார். உத்தமன் கோட்பாட்டு ரீதியில் தனது எழுத்தியக்கத்தை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தும் அவர் அதை நூல்வடிவில் மேற்கொள்ளவில்லை. அமைப்புச் செயற்பாட்டினுள் அவர் கவனம் செலுத்தினார். இருப்பினும் அவர் எழுதிய “சார்புநிலைப் பொருளாதாரம்“ எனும் நூல் அவரது தத்துவ ஆளுமைக்குச் சான்று பகரும்.


““அதிகாரம் புகழ் குடும்பம் மற்றும் வசதி ஆகிய அனைத்தையும் கொன்ட ஒரு மனிதர் எந்தவித கோபமோ தயக்கமோ இன்றி ஒரு இலட்சியத்துக்காக அனைத்தையும் துறக்கத் தயாரக இருக்கும் மனோநிலை அசாதாரணமானது.““


ஆனாலும் இப்படிச் சொல்வது அவருக்குப் பிடிக்காது என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். புரட்சிகர போராட்டவாழ்வில் அவருடன் பயணித்த சகபயணிகள் இடையில் இறங்கிச்சென்றபோதும் அவரது பயணம் மட்டும் நிற்கவில்லை . சலிக்காமல் - உடல் தளர்சியடைந்த போதும் - தொடர்சியாக பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது அவா தனது முன்னாள் சகபயணி சிவகுமாரனை நினைத்துக் கொண்டு மண்ணுக்கு சென்றபோது அங்கேயே முற்றுப்பெறுமென யார் கண்டது.



““ஒரு கலைஞனுக்குரிய கவனத்துடன் நான் உரமேற்றியருக்கும் என் மன வலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும்.““ - சே குவேரா



இந்தப் போராளிக்கு எமது அஞ்சலிகள் !


- சுவிü நண்பர்கள்