Sunday, May 18, 2008

இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன.

கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே

    • தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும்
      மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது

>>>"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி
மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ்
மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்று
நாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம்
இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று
திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது.
<<<


இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக யாராவது எதைச்செய்தாலும் அது தமிழருக்கு எதிராகவே செய்யப்படுகிறது என்கிற ஒரு மனநிலையிலேயே பல தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் உள்ளனர் போலவே தெரிகிறது. இன்னமும் இலங்கையின் ஒரே பிரச்சினை தமிழர்-சிங்களவர் பிரச்சினை தான் என்ற மன நிலையிலிருந்து பலர் விடுபடவில்லை.


இலங்கையின் இன்றைய அதிமுக்கிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அதிற் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான அரச ஒடுக்குமுறையும் விசுவரூபமெடுத்திருக்கிற சிங்கள பவுத்தப் பேரினவாத இனவெறியும் அதன் விளைவான, போகும் விடுதலைப் போராட்டமும் அதி முக்கியமானவை என்பதிலும் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆயினும் அது மட்டுமே தான் பிரச்சினை என்கிற அணுகுமுறை தவறானது என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன்.


அந்தத் தவறான அணுகுமுறை மட்டுமன்றிச் சர்வதேச அரசியல் பற்றிய குறைபாடான அறிவும் இன்று வரை தமிழ் இன விடுதலைப் போராட்டத்தில் பல தவறான போக்குகட்குக் காரணமாக இருந்துள்ளன.


மலையகத் தமிழரதோ, முஸ்லிம்களதோ தேசிய இனப்பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் முகம்கொடுக்கும் இன ஒடுக்குமுறைகள் பற்றியும் தமிழ்த் தலைவர்கள் மத்தியிலோ ஆய்வாளர்கள் மத்தியிலோ எவ்வளவு அக்கறை இருந்து வந்துள்ளது என்பதை நாம் சுய விமர்சனக் கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும்.



சிங்களப் பேரினவாத அரசு தமிழ் முஸ்லிம் முரண்பாடுகள் பற்றியும் வடக்கு-கிழக்கு முரண்பாடு பற்றியும் அறிந்து அந்த அறிவின் அடிப்படையிற் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதிற் வெற்றி கண்டுள்ள அளவுக்கு அரச ஒடுக்கு முறைக்கு உட்பட்ட மக்களை ஒன்றுபடுத்திப் போராட்டத்தைப் பலப்படுத்துமளவுக்குத் தமிழ்த் தலைமைகளோ பிற தேசிய இனத் தலைமைகளோ மதியூகத்துடன் செயற்பட்டிருக்கிறார்களா? பகைமைக்கே தேவையில்லாத வேறுபாடுகளை புறக்கணியாமல் கவனித்து அவற்றை நட்பான முறையில் கையாள என்ன முயற்சியாவது எடுக்கப்பட்டதா? இன்று கிளறி விடப்பட்டுள்ள பிரதேசவாதம் தமிழ்-முஸ்லிம் மக்களிடையிலான உறவுக்குங் கேடானது. அதைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? நிச்சயமாகத் தமிழ் முஸ்லிம் தேசிய வாதிகளல்ல.


தினமும் பிரதேசவாதமும் ஒழிக்கப்பட்டு விட்டன என்றும் தமிழ் மக்கள் ஒன்றுபடுத்தப்பட்டு விட்டனர் என்றும் தமிழ்த் தேசியவாதமே அதை இயலுமாக்கியது என்றும் கற்பனைக் கதைகள் கூறப்பட்டன. அதன் விளைவாக உண்மையாக இருந்துவந்த பிரச்சினைகள் பற்றிப் பேச முற்பட்டோர் தமிழரைப் பிரிக்க முயலுவோராகக் காட்டப்பட்டனர். செய்தியைக் கொண்டுவந்த தூதனைத் தண்டித்துவிட்டுச் செய்தியைக் கவனிக்காமல் விட்ட அரசன் மாதிரி தமக்குச் சாதகமற்ற எதையும் பற்றிக் "கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே" என்ற விதமாகவே தமிழ்த் தேசிய வாத அரசியல் பழக்கப்பட்டு விட்டது.



1976ல் த.வி.கூ.தமிழ் ஈழம் பிரகடனம் செய்த போது அது பற்றிய ஒரு
விவாதத் தொடர் வடக்கின் இடது கம்யூனிஸ்டுகட்கும் தமிழரசுக் கட்சி மரபில்
வந்தோருக்குமிடையே நடந்தது. அந்த விவாதம் தமிழ்த் தேசிய வாதிகளிடம் தமிழீழ விடுதலை
பற்றி தாங்கள் யாருக்காக எந்த மண்ணை விடுதலை செய்யப் போகிறார்கள், எப்படிப் போராடப்
போகிறார்கள் என்பன பற்றி ஒரு விதமான திட்டமும் இல்லை என்பது வெளியாகி அபாயம்
தென்படத் தொடங்கிய உடனேயே த.வி.கூட்டணியினர் யாரும் மேற்கொண்டு இவ்வாறான
விவாதங்களில் இறங்கக் கூடாது என்று மறித்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.



1980களின் நடுப் பகுதியில் இளைஞர் இயக்கங்கள் நடுவே பிளவுகள் மோசமாகி ஆளையாள் கொல்லுகிற அளவுக்கு முற்றுவதற்கு முன்பு, தமிழீழத்தை ஏற்காதவர்கள் தமிழ்த் தேசியவாதம் பற்றிய விவாதங்களில் பங்குபற்ற இயலாது என்று தடைவிதித்த "சிந்தனையாளர்களும்" இருந்தனர். தமிழரிடையே ஜனநாயக முறையிலான விவாதத்தை மறித்த அதே சிந்தனையாளர்கள் தமது `நடுநிலையும்' `சுதந்திரமான சிந்தனையும்' கேள்விக்குட்பட்ட போது அது ஜனநாயக மறுப்பு ஃபஸிஸம் என்றெல்லாம் பேசத்தலைப்பட்டனார். தேசியவாதத்தையே நிராகரித்துப் புலம் பெயர்ந்த முதலாளிய சர்வதேச வாதிகளாகவும் மாறினர். உண்மையில் இன்று வரை சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேசி வந்துள்ளார்கள். நேர்மையான இடது சாரிகள்தாம் பாராளுமன்ற இடதுசாரிகள் இவ் வகைக்குள் வர மாட்டார்கள் பிரிவினையை அவசியமான ஒரு தீர்வு என்று ஏற்காமல் பிரிந்து போவதற்கான உரிமையை ஏற்றவர்கட்குத் தமிழ் மக்களது பிரச்சினைகட்கும் பிற தேசிய இனங்களது பிரச்சினைகட்கும் ஒரு பொதுவான தீர்வு என்ற விதமாகத் தேசிய இனப் பிரச்சினையை அணுக முடிந்தது; விறைப்பான நிலைப்பாடுகளைத் தவிர்த்து மக்களது நலன் சார்ந்த முடிவுகளை வந்தடைய முடிந்தது. மாற்றுக் கருத்துக்களை நேர்மையாக விவாதித்து மறுதலிக்கவும் பயனுள்ளவற்றை உள்வாங்கவும் தமது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அவற்றை சுயவிமர்சன நோக்கில் ஆராய்ந்து திருத்தவும் முடிந்தது.


"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ் மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்று நாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம் இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது. முன்பு ஒரு நிலைப்பாட்டிலிருந்து பின்பு தலைகீழாக மாறினபிறகும் அதேவிதமான "எல்லாந் தெரிந்த" "என்றுமே பிழைவிடாத" தோரணையில் இவர்களாற் பேச இயலும். தூற்றிய ஒன்றைப் புகழ்ந்து போற்றவும், போற்றிய ஒன்றை நிந்தித்துத் தூற்றவும் இவர்கட்கு வாய் கூசுவதில்லை. ஏனென்றால் இவர்கள் நடத்துவது மக்கள் அரசியலல்ல. இவர்களது ஆதரவாளர்கள் சம்பளம் வாங்குகிற ஏவலட்கள் போன்று இவர்கட்கு எங்கிருந்தோ வரக்கூடாத இடங்களிலிருந்தெல்லாம் வருகிற வருமானத்தின் மீது தங்கியுள்ளனர். இந்த அவலம் தீவிர தமிழ்த் தேசியவாதிகளிற் பெரும்பாலானவர்கட்கு நேர்ந்துள்ளதென்றால் அது ஒரு தனி மனிதரோ ஒரு சில தனிமனிதரதோ சுயநலத்தால் நடந்ததாக இருக்க இயலாது.


தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும் மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது என்பது எனது கருத்து. இதை எந்தத் தமிழ் தலைமையும் ஏற்றதில்லை. அதுமட்டுமன்றி அவை சனநாயக முறையில் தமது அரசியலை விருத்திசெய்யவும் இல்லை. மாற்றுக் கருத்துக்கள் தட்டி அடக்கப்பட்டளவுக்கும் புறக்கணிக்கப்பட்டளவுக்கும் பின் நாளில் சுட்டு புதைக்கப்பட்டு வருமளவுக்கும் எது பற்றியுமான திறந்த விவாதம் நடந்ததில்லை. இன்றுங்கூட மக்கள் உண்மைகளைக் கண்டறிய இயலாத விதமாகப் புனைவுகள் மூலம் அவர்களது கவனத்திசை திருப்பப்பட்டு வருகிறது. ஊடகங்கள் சில மிகவும் உடந்தையாக உள்ளன.



ஈரான் இலங்கைக்குப் பெருமளவிலான பொருளாதார உதவி வழங்க முன்வந்துள்ளது. அது ஏன் என்ற விளக்கமே இல்லாமல் அது இலங்கை மீதான ஆதிக்க நோக்குடையது. தமிழருக்கு எதிரான நோக்குடையது. அதில் ஆயுத உதவியும் உள்ளடங்கும் என்கிற விதமாகத் தமிழேடுகளில் எழுதப்பட்டு வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் வழங்குகிற உதவிகள் தொடர்பாகவும் மேலாதிக்க நோக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு விடயம் மட்டும் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. இந்த மூன்று நாடுகளும் இலங்கையின் உள்விவகாரங்களில் என்றுமே தலையிட்டதில்லை. இரண்டு அரசுட்கு இடையிலான நல்லுறவு என்ற எல்லை மீறி எதுவுமே இதுவரை நிகழவில்லை. மாஓ காலத்துச் சீனா விடுதலை எழுச்சிகட்கு ஆதரவு வழங்கியது. இன்றைய சீனாவுக்கு அந்த அக்கறையும் இல்லை. சீனா இந்து சமுத்திரத்தில் எங்கெல்லாமோ ராணுவத் தளங்களை வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கோ இந்திய அரசாங்கத்துக்கோ தெரியாத கதைகள் எல்லாம் ஏதேதோ இணையத் தளங்களிலிருந்து அறுவடை செய்யப்படுகின்றன. ஆனாற் கண்ணுக்கு தெரிகிற இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன. இது ஏன்?



ஏனாயிருந்தாலும் ஏமாற்றப்படுவோர் தமிழ், முஸ்லிம் மக்கள் தான். கருணா பொய்க் கடவுச்சீட்டில் லண்டன் போக முன்னமே இங்குள்ள தூதரகம் உண்மையை அறியும். போகவிட்டு அதன்பின் கைது செய்து குறுகியகாலம் சிறைக்கனுப்பிய போது மனிதஉரிமை மீறல் விசாரணைகள் நடக்கும் என்றெல்லாம் கனவுகள் காணப்பட்டன. கருணாவை இலங்கை அரசாங்கத்துடனான தனது அரசியற் பேரங்களில் ஒரு சின்னத் துடுப்புச்சீட்டாகப் பிரித்தானிய ஆட்சியாளர் பயன்படுத்தினரே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கம் அவர்கட்கு என்றுமே இருக்கவில்லை.


இது ஒரு சின்ன நாடகம்.


இது போலப் பெரிய, சிறிய நாடகங்கள் பல நடக்கின்றன. உண்மையென்று நம்புமாறு நமக்கு சொல்லப்படுகிறது. அது நமது அரசியல் நிபுணர்களது இருப்புக்கு அவசியமானது.



மறுபக்கம்


கோகர்ணன்

நன்றி :Thinakkural

Sunday, May 11, 2008

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா...

இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல!


//தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல
நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான
சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில்
பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது
தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. //


இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா என்பதைக் கூட ஐயத்திற்கும் விவாதத்திற்கும் உரிய விடயமாக்குவதில் தமிழக அரசியல்வாதிகள் சிலரும் அவர்கட்கு முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்களும் சிறிது வெற்றி பெற்றிருந்தாலும் அண்மைய செய்திகள் உண்மை என்னவென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும் இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல.

உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும் குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள் கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும் விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை. அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப் பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன? இன்றுவரை நாடற்றவர்களாகத் தமது மண்ணிலும் அண்டை நாடுகளிலும் அதற்கப்பாலும் அகதிகளாக வாழுகிறார்கள். தமது சொந்த மண்ணில் மிகக் கொடுமையாக அடக்கப்படுகிறார்கள்.


//அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம்
என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால்
மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி,
தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக
மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில்,
குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத்
தெரிகிறது.
அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம்
சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும்
மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும். //



உலகெங்கும் தமிழர் உள்ளனர் அவர்கட்கென்று ஒரு நாடு இல்லை என்றும் சனத்தொகையில் தமிழருடன் ஒப்பிடத்தக்க அராபியருக்கு இருபதுக்கும் மேலான நாடுகள் உண்டு என்னும் வாய்ப்பாடு மாதிரிச் சிலர் ஒப்பித்து எழுதி வருகின்றனர். அத்தனை அரபு நாடுகள் இருந்தும் உலக அரபு மக்களின் நிலை என்ன? இன்னமும் இஸ்ரேலால் எந்தவிதமான தயக்கமுமின்றிப் பலஸ்தீன மண்ணைத் தொடர்ந்து அபகரிக்கவும் பலஸ்தீன அராபியரை இம்சிக்கவும் முடிகிறது. லெபனானின் எல்லைக்குக் குறுக்காகத் தாக்குதல் தொடுப்பதுடன் அதன் தலைநகர் மீதுங் குண்டெறிய முடிகிறது. சிரியாவிடமிருந்து நாற்பது ஆண்டுகள் முன்பு பறித்த பகுதியிலிருந்து வெளியேற மறுக்கிறதுடன் சிரியாவிற்குள் தாக்குதல்களை நடத்த முடிகிறது . இஸ்ரேல் தனது சொந்த வலிமை காரணமாக இவ்வளவு திமிருடன் நடந்துகொள்ள முடிகிறது என்று யாருஞ் சொல்ல இயலுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கரமாகவே இஸ்ரேல் செயற்படுகிறது. இஸ்ரேலின் வலிமை அமெரிக்காவின் வலிமையே ஒழிய வேறல்ல. இன்று மத்திய கிழக்கில் அமெரிக்கா- இஸ்ரேல் - துருக்கி என்கிற கூட்டணி ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்கா மீதான அச்சங்காரணமாக அல்லது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நிலைக்க முடியாது என்பதனால் மத்திய கிழக்கில் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக் கேட்க இயலாதவையாக அரபு அரசுகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் எந்த அமெரிக்கா உலகில் சனநாயகத்தை நிலைநிறுத்தவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் போர் தொடுத்து வருகிறதோ, அதே அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தமது நாடுகளில் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளை நடத்துகின்றன. அமெரிக்கா ஒழித்துக்கட்டப் போவதாகச் சபதம் செய்துள்ளதே, அந்த அல்-க்ஹைதா அதை உருவாக்கியதும் சோவியத் யூனியனிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அனுப்பி வைத்ததும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்த சவூதி அரேபியாதான்.


//ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான
புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது
என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை
நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும்
பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா
பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து
பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது
ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக்
கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக்
கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு
நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?
//

அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் நன்மைகளை அரபு மக்களில் ஒரு சிறிய பகுதியினரே அனுபவிக்கின்றனர். ஊழல் மிக்க, நடத்தை கெட்ட ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பேரைச் சொல்லி அரபு மக்களை துய்த்தும் அடக்கியும் ஆண்டு வருகிறார்கள். அரபு மக்களின் நலனுக்கும் அராபியருக்கான நாடுகள் எத்தனை உள்ளன என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. சில நாடுகளில் அரபு மக்களின் நலனுக்காக இயங்கி வந்த இடதுசாரிகளை 1940களில் ஒழித்துக் கட்டிய அரபு தேசியவாதக் கட்சிகள் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளாயின. எனினும், அவற்றில் ஓரளவேனும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தது. இப்போது அதுவும் ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் பூரண சுதந்திரமான அரபு நாடு என்று சொல்லக்கூடிய நிலையில் ஒரு அரபு நாடும் இல்லை.


1950 களில் முடியாட்சிகளை வீழ்த்தத் தொடங்கி 1960 களில் அந்நிய ஆட்சியாளரை விரட்டிய விடுதலை இயக்கத்தை அரபு மக்கள் மீளக் கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கான போராட்ட மரபு பலஸ்தீனத்தில் உயிருடன் உள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.


அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும் பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக் கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?

இங்கெல்லாம் தேசிய இனப்பிரச்சினைகள் அந்நிய வல்லரசுகளது உலக மேலாதிக்க, பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்கு வசதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான், உலக மக்களின் நட்பையும், நீதிக்கான போராட்டங்கட்கான பொதுவான ஆதரவையும் ஆட்சியாளர்களின் இரகசிய நோக்கங்களையும் வேறுபடுத்திக் காணத் தவறுகிற போது மேலாதிக்க நோக்கங்கட்கு நாம் உதவுகிறவர்களாகிறோம்.


தமது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு நாம் வேண்டிக் கொள்கிற ஒவ்வொரு அந்நிய நாடும் எவ்வாறு தமது பிரச்சினை தொடர்பாக நடந்து கொண்டுள்ளது என்று கவனிப்போமா? சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? உலக அரங்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா குறுக்கிட்டுள்ள அளவுக்கு வேறெந்த நாடாவது குறுக்கிட்டுள்ளதா? அக்குறுக்கீடுகளால் நன்மை கண்டோர் யார்? அமெரிக்க மக்களும் அமெரிக்கக் குறுக்கீடுகளால் நன்மை அடையவில்லை என்பதை நாம் மறக்கலாகாது. அமெரிக்காவின் போர்களால் ஏற்படுகிற எண்ணெய் விலை ஏற்றமும் அமெரிக்காவின் பெரு முதலாளிய நிறுவனங்கட்கே நன்மையாகியது. அங்கே பஞ்சம் ஏற்பட்டாலும் அவர்கள் பணங் குவித்துக் கொண்ட இருப்பார்கள். அதுவே உலகப் போர்க் காலங்களிலும் அமெரிக்கப் பொருளாதார நெருக்கடிகளின் போதும் நடந்தது.


இந்தியாவை அஞ்சி அண்டை நாடுகளின் அலுவல்களில் குறுக்கிட்ட நாடும் கிடையாது. ஆக்கிரமிப்பிலும் போரிலும் இறங்கிய நாடும் கிடையாது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிய இந்தியா, சோவியத் யூனியன் பலவீனப்படத் தொடங்கிய நிலையிலே அமெரிக்காவுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தொடங்கிவிட்டது. சோவியத் - இந்திய ஒத்துழைப்பில் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் பொது எதிரியாகச் சீனா இருந்தது. அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம் இரு நாடுகட்கும் பாதகமானதாய் இருந்தது. சோவியத் விஸ்தரிப்பு நோக்கங்கள் செயற்பட்ட பிராந்தியங்களும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலக்குகளும் வெவ்வேறாகவே இருந்தன.



//உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு
குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ
அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள்
பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும்
குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள்
கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும்
போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும்
விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு
சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை.
அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப்
பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப்
பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த
மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி
அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன?
//

அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம் என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால் மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி, தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில், குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத் தெரிகிறது.

அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம் சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும்.



>>இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல. <<

தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில் பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது.



தினக்குரலில் மறுபக்கஞ் சொல்வது:
-கோகர்ணன்

Tuesday, May 06, 2008

கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் நக்கினாலும் சரி...

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத சதி தான், கிழக்கின் தேர்தல்!


>>>மக்களின் வாயைப் பூட்டி விட்டு, இவர்கள் தாம் நடத்துகின்ற கூத்துத் தான் இந்த தேர்தல்கள். புலி எதைச் செய்ததோ அதையே இவர்கள் அரசின் கூலிப்படையாக செய்தபடி, அதை வெட்கமானமின்றி புலியின் பெயரில் ஜனநாயகம் என்கின்றனர்.
இந்த அரசு இன்று செய்யாததையா அன்று புலிகள் செய்துவிட்டனர். எத்தனை படுகொலைகள், எத்தனை கடத்தல்கள், காணாமல் போன நிகழ்ச்சிகள். அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இவர்களின் துணையும் ஆதரவுமின்றி அவை நடக்கவில்லை. ஆனால் எதுவும் நடவாவது போல் நடந்து கொள்கின்ற பக்காத் திருட்டு அரசியல். அதையே இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.<<<




//அதன் அரசியல் மக்களை வென்று எடுத்ததல்ல. மக்களை கொன்று
போடும் பேரினவாத சூழ்ச்சிக்கு துணையாக இருத்தல் தான். தமிழ் மக்களின் ஜனநாயகத்தின்
பெயரில் இலண்டனில் இருந்து சென்றாலும் சரி, கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில்
நக்கினாலும் சரி, பேரினவாத சூழ்ச்சிக்கு கம்பளம் விரிக்கின்ற எட்டப்பர்கள் தான்
இவர்கள். இவர்கள் தமது எட்டப்பத்தனத்தை மூடிமறைக்க, புலிப் பாசிசத்தை துணைக்கு
வைத்துக் கொண்டுள்ளனர். இதுவே தமிழ் மக்களுக்கு எதிரான சதிக் கூத்து. புலிப்
பாசிசத்தை தமது கமக்கட்டில் வைத்துக்கொண்டு, தம்மை தாம் முற்போக்குவாதிகள் என்று
காட்டிக்கொள்ளும் வேஷதாரிகள். இவர்களோ மனித விரோதத்தையே அரசியலாக கொண்ட துரோகிகள்
ஆவர்.
பேரினவாத பாசிச பயங்கரவாத கொலைகளுக்கு முண்டு கொடுக்கும் இந்த
புலியெதிர்ப்புக் கூட்டம், படுபிற்போக்கான வலதுசாரிய பாசிச சிந்தனையையும் செயலையும்
அடிப்படையாக கொண்ட கும்பல். இதற்கு வெளியில் மாற்று அரசியல், ஏன் சுயம் கூடக்
கிடையாது.
கடந்த காலத்தில் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் புலிகள் பற்றி
வெளியிட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னிலைப்படுத்தி புலியொழிப்பு பேசியவர்கள்.
இன்று அரசு மீதான அவர்களின் குற்றச்சாட்டுகளை, 'ஏகாதிபத்திய சதி" என்று கூறுகின்ற
அற்பத்தனத்தை செய்கின்றனர். பச்சோந்தித்தனத்தை ஆன்மாவாக கொண்ட பிழைப்புவாத
நக்குத்தனம்.//

 ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும் :

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.


முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.


தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும், சுயமான மானமுள்ள மனிதர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. அச்சத்தையும் பீதியையும் மனித உணர்வாக விதைத்தபடி, சுயஆற்றல் நலமடிக்கப்பட்டுள்ளது.


சமூகத்துடன் எந்த தொடர்பையும் சுயமான சுதந்திரமான மனிதர்கள் கொண்டு இருக்கக் கூடாது, என்பதே, இந்த பாசிட்டுகள் சொல்லுகின்ற தெளிவான செய்தி. இதுமட்டுமல்ல சுயநலத்தை மூலமாகக் கொண்டு, இந்தப் பாசிசத்தை பயன்படுத்தி அற்ப உணர்வுகளையும் கூட தீர்த்துக்கொள்ளும் வக்கிரமாக இது அரங்கேறுகின்றது.


கடத்தல், காணாமல் போதல், கைது, இனம் தெரியாத படுகொலைகள் சித்திரவதையின் பின்னால் பல நோக்கம் உண்டு. தனிப்பட்ட பழிவாங்கல்கள், பணத்திற்கான கைதுகள், அற்ப பாலிய உணர்வை தீர்க்க கைதுகள், தமது குற்றங்களை மூடிமறைக்க கைதுகள் என்று, வரைமுறையற்ற இவை பலவடிவில் தொடருகின்றது. இது புலியொழிப்பின் பெயரில், சிலரின் சர்வாதிகார பாசிச ஆட்சியாக ஏகாதிபத்திய சதியாக அரங்கேறுகின்றது.
இதை ஜனநாயகம் என்று காவித் திரிகின்ற புலியெதிர்ப்பு உண்ணிகள். ஜனநாயகத்தின் பெயரில் ஊர்ந்து நக்கி மக்களையே தின்ன முனைகின்றது. பேரினவாத கூலிப்படைகளாக வளர்க்கப்பட்ட இந்த கூட்டம், பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை ஜனநாயகமென்று கூறி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.


இந்த நிலையில் இலங்கை எங்கும் சுயமரியாதையுள்ள, சிந்தனைச் சுதந்திரம் கொண்ட மனிதர்கள் யாரும் சுயமாக வாழ முடியாது என்பது தான் இன்றைய பொதுவான நிலை.


இரத்தம் குடிக்கும் புலியெதிர்ப்பு உண்ணிகள்


இலங்கையில் நடக்கும் புலியல்லாத ஒவ்வொரு கொலையிலும், புலியெதிர்ப்பு அரசியலுக்கு பங்கு உள்ளது. பேரினவாத பாசிச வெறியாட்டத்தில், அங்குமிங்குமாக புலி ஒழிப்பின் பெயரில் பங்களிக்கின்றனர். பேரினவாதத்தின் ஒவ்வொரு செயலையும், புலியெழிப்பாக காட்டி நக்கும் கூட்டம் தான் இந்தக் கூட்டம்.


அதன் அரசியல் மக்களை வென்று எடுத்ததல்ல. மக்களை கொன்று போடும் பேரினவாத சூழ்ச்சிக்கு துணையாக இருத்தல் தான். தமிழ் மக்களின் ஜனநாயகத்தின் பெயரில் இலண்டனில் இருந்து சென்றாலும் சரி, கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் நக்கினாலும் சரி, பேரினவாத சூழ்ச்சிக்கு கம்பளம் விரிக்கின்ற எட்டப்பர்கள் தான் இவர்கள். இவர்கள் தமது எட்டப்பத்தனத்தை மூடிமறைக்க, புலிப் பாசிசத்தை துணைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். இதுவே தமிழ் மக்களுக்கு எதிரான சதிக் கூத்து. புலிப் பாசிசத்தை தமது கமக்கட்டில் வைத்துக்கொண்டு, தம்மை தாம் முற்போக்குவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் வேஷதாரிகள். இவர்களோ மனித விரோதத்தையே அரசியலாக கொண்ட துரோகிகள் ஆவர்.
பேரினவாத பாசிச பயங்கரவாத கொலைகளுக்கு முண்டு கொடுக்கும் இந்த புலியெதிர்ப்புக் கூட்டம், படுபிற்போக்கான வலதுசாரிய பாசிச சிந்தனையையும் செயலையும் அடிப்படையாக கொண்ட கும்பல். இதற்கு வெளியில் மாற்று அரசியல், ஏன் சுயம் கூடக் கிடையாது.
கடந்த காலத்தில் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் புலிகள் பற்றி வெளியிட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னிலைப்படுத்தி புலியொழிப்பு பேசியவர்கள். இன்று அரசு மீதான அவர்களின் குற்றச்சாட்டுகளை, 'ஏகாதிபத்திய சதி" என்று கூறுகின்ற அற்பத்தனத்தை செய்கின்றனர். பச்சோந்தித்தனத்தை ஆன்மாவாக கொண்ட பிழைப்புவாத நக்குத்தனம்.


புலியெதிர்ப்பு, புலியொழிப்பையும் இப்படியும் முக்கி முனங்குகின்றனர். காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, ஏகாதிபத்தியம் முதல் ஜே.வி.பி. வரை ஆதரித்தும் எதிர்த்தும் கயிறு திரிக்கின்ற முடிச்சு மாத்திப் பேர்வழிகள். யாரெல்லாம் புலியை ஒழிக்க முனைகின்றனரோ, அவர்கள் ஜனநாயகவாதிகள் என்பதே, காலத்துக்காலம் இவர்களின் புலியொழிப்பு சித்தாந்தமாகும்.


இந்த கூட்டத்துக்கு ஏற்ற பேரினவாத சர்வாதிகார கொடுங்கோலர்கள் தான், இன்று இலங்கையில் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இதுவோ மிக சதித் தன்மை கொண்டது. தனக்கு எதிரான அனைத்தையும், புலி முத்திரை குத்தி அழித்தொழிக்க சங்கற்பம் கொண்டுள்ளது. எதையும் எப்படியும் முத்திரை குத்தவும், நியாயவாதம் பேசவும், தர்க்கம் செய்யவும் கூடிய, பாசிச சிந்தனையையும் ஆற்றலையும் பெற்றுள்ளது.



தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத சதி தான், கிழக்கின் தேர்தல்


மாபெரும் ஜனநாயக மோசடி. சிங்கள பேரினவாதத்தை நிறுவ, தமிழ் இனத்தை அழிக்க, நடத்துகின்ற திருகுதாளங்கள் இவை. தனது கூலிபடைகளை கொண்டு, ஜனநாயக பாசிசக் கூத்துகள்.

இராணுவ பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி, யாரும் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூனியத்தை உருவாக்கி, கூலிப்படைகளை கொண்டு தேர்தலை நடத்தி, அவர்களே ஜனநாயக காவலராகின்றனர்.

கூலிக்கு மாரடிக்கும் கொலைகாரக் கும்பலாக, ஆள் காட்டிகளாக திரிந்த அராஜக கும்பலுக்கு, சட்ட அந்தஸ்து கொடுத்து விடுகினற கூத்துத் தான் இந்த ஜனநாயகம். இலங்கை அரசின் கூலிப்படைகள், தேர்தல் என்ற மோசடி மூலம் ஜனநாயக காவலராக்கி வேடிக்கை, இப்படி இலங்கையில் அரங்கேறியது.

இந்த மண்ணில் சுதந்திரமான எண்ணம் கொண்ட, சுதந்திரமான செயலைக் கொண்ட எந்த மனிதனும் உயிருடன் நடமாட முடியாது. அரசை எதிர்க்கின்ற யாரும், இந்த ஜனநாயக பூமியில் வாழமுடியாது. இது தான் இவர்கள் இங்கு படைத்துள்ள ஜனநாயகம்.
இந்த பாசிச ஜனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார்? ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள், மக்களை கொள்ளையடித்து வாழ்பவர்கள், கற்பழிப்புகள் செய்தவர்கள், அடிதடிப் பேர் வழிகள், கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்கள், என்று சமூகத்துக்கு எதிரான இழிவான செயல்களைச் செய்பவர்கள் அல்லது அதற்கு துணையாக நின்றவர்கள் இவர்கள். இதற்குள் துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி தேர்தலில் நிறுத்தப்பட்ட அப்பாவிகள் மறுபுறம். இப்படி பாசிசம் பலவழியில் செழித்து நிற்கின்றது.


ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி இது. உணர்வு ரீதியாக, சித்தாந்த ரீதியாக, கூலிப்படை அரசியல். ஜனநாயக வித்தைகள் மூலம், அரங்கேற்றுகின்ற அரசியல் சதிகளும் திருகு தாளங்களும் மட்டுமே அரங்கேறின. வென்றவர்கள் முன்னாள் பாசிசப் புலி, இன்னாள் பாசிசக் கூலிப்டை. அரச புலனாய்வுப் பிரிவின், தொங்கு சதைகள். ஆள்காட்டிகள் மூலம், முழு சமூக ஜனநாயக கூறுகளையும் அழிதொழித்தபடி, ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறுவதுதான், இந்த பாசிச மோசடி.


எஞ்சி இருக்கின்ற ஜனநாயகத்தை சிதைக்க, அதன் கூறுகளை அழித்தொழிக்க, தேர்தல் மோசடிகள். இது தமிழ் மக்களின் பெயரில், பேரினவாதிகளால் அரங்கேற்றப்படுகின்றது. தமிழ் மக்கள் இந்த தேர்தலுக்காக ஏங்கி நிற்பதாக காட்டுகின்ற மோசடி தான், கூலிக்கு மாரடிக்கும் கும்பலின் பிழைப்புவாத அரசியல்.

மக்களின் வாயைப் பூட்டி விட்டு, இவர்கள் தாம் நடத்துகின்ற கூத்துத் தான் இந்த தேர்தல்கள். புலி எதைச் செய்ததோ அதையே இவர்கள் அரசின் கூலிப்படையாக செய்தபடி, அதை வெட்கமானமின்றி புலியின் பெயரில் ஜனநாயகம் என்கின்றனர்.

இந்த அரசு இன்று செய்யாததையா அன்று புலிகள் செய்துவிட்டனர். எத்தனை படுகொலைகள், எத்தனை கடத்தல்கள், காணாமல் போன நிகழ்ச்சிகள். அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இவர்களின் துணையும் ஆதரவுமின்றி அவை நடக்கவில்லை. ஆனால் எதுவும் நடவாவது போல் நடந்து கொள்கின்ற பக்காத் திருட்டு அரசியல். அதையே இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.


சில ஏகாதிபத்திய எதிர்வினைகள் எதனால்?


சர்வதேச ரீதியாக ஏகாதிபத்திய முரண்பாடு முற்றிவருவதன் விளைவு, இலங்கையிலும் எதிரொலிக்கின்றது. இலங்கை அரசின் யுத்த முனைப்பை உருவாக்கி, இந்த போட்டி ஏகாதிபத்திய ஊடுருவல்கள் நடக்கின்றது.

இலங்கை அரசுக்கு எதிரான சில ஏகாதிபத்திய எதிர்வினைகள், இலங்கை சந்தை தொடர்பானதே. அமெரிக்கா – ஐரோப்பிய ஏகாதிபத்தியுடன் முரண்படுகின்ற ஏகாதிபத்தியங்கள், அரசின் யுத்தமுனைப்பை பயன்படுத்தி இலங்கையில் ஊடுருவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் தமது சுரண்டல் கட்டமைப்பை பாதுகாக்க, தற்காப்பு நிலையெடுத்து, அரசின் மனித உரிமை மீறல் பற்றி ஊளையிடுகின்றது.

மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை விவாதம், ஏகாதிபத்திய முரண்பாடுகளில் இருந்து வெளிவருகின்றது. இது யுத்தத்துக்கு ஆதரவாக, ஒருபுறம் யுத்த வளங்களை வழங்க, மறுபக்கம் யுத்த வெளிப்பாடான மனிதவுரிமை மீறல்களைப் பற்றி மற்றைய ஏகாதிபத்தியங்கள் பேசுகின்ற நிலையை உருவாகியுள்ளது.

புலிகளின் பாசிச பயங்கரவாத நிலையால், இதில் தடுமாற்றங்களும் உண்டு. இரண்டையும் செய்ய முனைகின்ற தன்மை வெளிப்படுகின்றது.
ஏகாதிபத்தியங்கள் விரும்பியவாறு, நிலைமையை பரஸ்பரம் ஆட்டுவிக்கின்றது. யுத்த முனைப்பை முன்தள்ளி, அதை கொண்டு மற்றய ஏகாதிபத்தியத்தை புறந்தள்ள முனைவதும் போட்டி ஏகாதிபத்தியங்கள் தான்.
இலங்கை யுத்த செய்யும் சுய ஆற்றலும், வளமுமற்றது. ஏகாதிபத்திய நலனுக்கு ஏற்ற யுத்த சர்வாதிகாரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் குறுகிய குடும்ப நலனை முன்னிறுத்தி, யுத்த வழி ஊழல் இலஞ்சம் மூலம் முன்னேற வழிகாட்டி, யுத்தத்தை மற்றைய ஏகாதிபத்த்pயத்துக்கு எதிராக திணித்துள்ளது.


இப்படி இலங்கையில் இரண்டு யுத்தம் நடக்கின்றது.

1. புலி ஒழிப்பு யுத்தம

2. அமெரிக்கா – ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றைய ஏகாதிபத்திய யுத்தம்.

ஒரு சூக்குமமான, வெளித் தெரியாத நிழல் யுத்தம் பல முகத்துடன் அரங்கேறுகின்றது. இந்தியாவின் அதிகளவிலான தலையீடும், சீனா, ரூசியா, ஈரான் போன்ற நாடுகளின் தலையீடும், ஏகாதிபத்திய முரண்பாடுகள் விளைவால் அதிகரிக்கின்றது. யப்பான் அங்குமிங்கும் நெளிகின்றது.
மொத்தத்தில் இதன் விளைவால் யுத்த வளம் கிடைப்பதுடன், யுத்தத்தை பயன்படுத்தி வாழ்கின்ற கூட்டத்தின் பாசிச அரசியல் மூர்க்கமாகி, யுத்த வெறியுடன் கொட்டமடித்து நிற்கின்றது.


இப்படி ஏகாதிபத்திய முரண்பாடுகள், இலங்கையின் பொருளாதாரம் மீதான ஆதிக்கப் போட்டியாக, தமது இராணுவ செல்வாக்குக்குட்பட்ட மண்டலமாக வைத்திருக்கும் போட்டியாக மாறி நிற்கின்றது.

புலிகள் தாமே உருவாக்கிய சொந்த அழிவில் துரிதமாகின்றனர்


சர்வதேசத்தில் மாறிவரும் போக்குகளை பயன்படுத்தும் நிலையில் கூட, புலிகள் இல்லை. அரசியலை, போராட்டத்தை இராணுவவாதத்தில் மூழ்கடித்து சிதைந்து போனார்கள் புலிகள். தமது பாசிச வெறியாட்டம் மூலம் பயங்கரவாத இயக்கமாக, தமக்கு தாமே உலக அங்கீகாரம் பெற்று நிற்கின்றனர். இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள், புலிக்கு சாதகமாக கூடிய எந்த வழியும் கிடையாது. மாறாக அரசுக்கு சார்பாகியுள்ளது. ஒருபுறம் யுத்தம் செய்ய புலியை தடைசெய்யாத ஏகாதிபத்திய ஆதரவையும், மறுபக்கம் புலியை தடைசெய்த ஏகாதிபத்தியங்களையும் பேரினவாதம் பயன்படுத்துகின்றது. புலிப்பாசிசம் என்ற ஒரு கல்லில், இரண்டு மாங்காய் என்ற உத்தி இங்கு பேரினவாதிகளால் நிகழ்த்தப்படுகின்றது.
புலிகள் ஏகாதிபத்திய முரண்பாட்டை பயன்படுத்தி இனியும் மீள முடியாது.


1. புலிகள் அதற்கான சர்வதேசக் கூறுகளை முன் கூட்டியே அழித்துவிட்டனர்.

2. யுத்தத்தை முனைப்புடன் நடத்த முடியாத வகையில், மக்கள் மத்தியில் முற்றாக அம்பலப்பட்டு, மக்களிடம் தோற்றுக்கொண்டு இருக்கின்றனர். இது பேரினவாதிகளிடமான தோல்வியாக மாறிவிட்டது.


தமிழ் மக்களின் கதி என்பது மோட்சமல்ல, நரகம் தான். எந்த மீட்சிக்கும் இடமில்லை. மொத்தத்தில் இலங்கை ஏகாதிபத்திய சூறையாடலுக்குள் சிதைக்கப்பட்டு அழிகின்றது. மக்களின் மீட்சிக்கான பாதைகள், மேலும் மேலும் ஆழமாக சிதைந்து சுருங்கி வருகின்றது என்பதே உண்மை.



பி.இரயாகரன்16.03.2008


தமிழரங்கத்திலிருந்து...

Thursday, May 01, 2008

மாஓ வாதிகள்...

//எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,
தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச்
சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக
வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்
சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //




மறுபக்கம்:


>>>மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப்
பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல. <<<



நேபாளத்தில் அதி முக்கியமான அரசியல் நிகழ்வென்று கூறக் கூடிய விதமாக முடியாட்சியின் ஒழிப்பை அதன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள மாஓ வாதிகளின் வெற்றி, வெறும் தேர்தல் வெற்றியல்ல. பாராளுமன்றத்தின் மூலம் வர்க்கம், இனம், மதம், சாதி, பால் என்ற அடிப்படைகளில் ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளை வென்றெடுக்க இயலாது என்பது ஒரு புறம் இருக்க ஒரு சனநாயக நாட்டில் பாராளுமன்றத்தின் மூலம் செய்யக் கூடியதைக் கூடச் செய்ய இயலாதளவுக்கு உண்மையான அரசியல் அதிகாரம் நேபாள மன்னராட்சியின் கையில் இருந்தது. நேபாள இராணுவம் அந்த அரசியல் அதிகாரத்தின் உத்தரவாதமாக இருந்தது.


1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியால் எதையுமே செய்ய இயலாதது போக அந்த ஆட்சி கூடக் கலைக்கப்பட்டு மன்னராட்சிக்கு உடன்பாடான நேபாள காங்கிரஸ் அரசாங்கம் அமைத்தது. இத்தகையதொரு பின்னணியிலேயே மாஓ வாதக் கம்யூனிஸ்ட்டுக்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறி 1996 ஆம் ஆண்டு மக்கள் யுத்தத்தைத் தொடுத்தனர்.


அப்போது அவர்கள் வலுவான ஒரு சக்தியாக இருக்கவில்லை. அவர்கள் ஒரு புறம் அரசுடன் போர் தொடுத்தனர். மறுபுறம் தங்கள் ஆதரவுப் பிரதேசங்களில் மாற்று அரசியல் அதிகாரம் ஒன்றைக் கட்சியெழுப்பினர். இந்த அதிகாரத்திற்கு ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதாக இருந்தது. காணிச் சீர்திருத்தம், பண்ணையடிமை முறை ஒழிப்பு, சாதி, மதப் பாகுபாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பெண்கள் சமத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் அவர்களது அக்கறை இருந்தது. அதை அவர்கள் செயலிலும் காட்டினர். கொள்கைகளை மக்களுக்கு விளக்கினர். அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி மக்களுடன் கலந்தாலோசித்தனர். மக்கள் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்தினர்.


கட்சியிலும் மக்கள் படையிலும் தலைமைப் பொறுப்புகளிலும் பல்வேறு மட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் இருந்தனர். யாரையும் கட்டாயப்படுத்திக் கட்சியிலோ படையிலோ சேர்க்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. மக்கள் அரச படைகளதும் ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாட்களதும் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. தாங்கள் வென்றெடுத்த உரிமைகளைக் காத்து விருத்தி செய்ய அவர்களுக்கு அரசியல் தேவைப்பட்டது. அரசியற் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் மக்களை நெறிப்படுத்தியது. வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம், மக்கள் யுத்தம் என்பவற்றை முதன்மைப்படுத்தியது. ஒரு அரசியல் சிந்தனையே.
நேபாளத்தின் சனத்தொகை இலங்கையுடன் ஒப்பிடத்தக்கது. அங்கு பத்தாண்டுகளாக நாடு தழுவிய ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது. அப் போராட்டத்தின் போக்கில் நாட்டின் 80 முதல் 90 சதவீதம் வரையிலான நிலப்பரப்பு மாஓ வாதக் கம்யூனிஸ்ற்றுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாஓ வாதிகள் மக்கள் யுத்தத்தின் மூலம் ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்த எத்தனையோ தருணங்கள் இருந்தன. அவர்கள் அதேவேகத்தில் தொடர்ந்திருந்தால் தலை நகரமான காத்மண்டு உட்பட முழு நாட்டிலும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஓரிரு ஆண்டுகளே போதுமாயிருந்திருக்கும். இதை அப்போது ஒத்துக் கொள்ளத் தயங்கியவர்கள் இப்போது ஒத்துக் கொள்கின்றனர்.


>>>வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ
வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப்
பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ
வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை
முடிவு செய்யும். <<<

மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே, விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம் கொடுக்க நேரும்.
நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல் குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும் இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது.


நேபாள முடியாட்சி தன் இயலாமையை மூடி மறைக்கப் பாராளுமன்றத்தைக் கலைத்து முழு அதிகாரத்தையும் தன் வாசமாக்கிய போது பாராளுமன்றக் கட்சிகள் இயங்குவதற்கான வாய்ப்பே இல்லாது போயிற்று. மன்னராட்சிக்கு எதிராக அவை ஒன்றிணைந்த போதும் அவற்றால் மன்னராட்சியின் அடாவடித்தனங்கட்கு முன் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இச் சூழலில் மாஓ வாதிகளின் குறுக்கீடு அவர்கட்கு உதவியாக அமைந்தது. அவர்களால் மன்னராட்சிக்கு எதிராகத் தைரியமாக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிந்தது. சுருங்கச் சொன்னால் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மாஓ வாதிகள் ஒரு சனநாயக ஆட்சியை இயலுமாக்கினர். வேறு விதமாக நேபாளத்திற்கு எவ்விதமான சனநாயக ஆட்சியும் மீண்டிருக்க இயலாது.

//மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச்
சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற
முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில்
பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப்
பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு
பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால்
இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில்
குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு
சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே,
விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம்
கொடுக்க நேரும்.
நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல்
குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய
ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த
பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும்
இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு
முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது. //


மன்னர் பணித்த பின்பு ஏழு பாராளுமன்றக் கட்சிகளிடையிலும் பழைய பாராளுமன்ற விளையாட்டுக்கு மீளுகிற நோக்கம் வந்து விட்டது. குறிப்பாக நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ற் கட்சி என்பன தமது பாராளுமன்ற அரசியல் ஆதிக்கம் பற்றிய சிந்தனையிலே இருந்தன. மாஓ வாதிகள் அதற்கு உடன் படவில்லை. ஒரு அரசியல் நிர்ணய சபையைச் சனநாயக முறைப்படி தெரிந்தெடுத்துப் புதிய அரசியல் யாப்பொன்றை வகுத்து மக்களின் சனநாயக, அரசியல், சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று வற்புறுத்தினர். வேறு வழியின்றி ஏழு கட்சிக் கூட்டணி அதற்கு உடன் பட்டது. அதன் பின்பும் மாஓ வாதிகள் அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை வலிமை பெற இயலாத விதமாகப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.


தென் கிழக்கு நேபாளத்தின் மாதேஸி சமூகத்தினரிடையே இந்திய இந்துத்துவ விஷமிகள் கலவரங்களைத் தூண்டி விட்டனர். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை இழுத்தடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பல `கண்டங்கள் தாண்டி' மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல.


பத்தாண்டுக்கால ஆயுதப் போராட்டத்தின் மூலம் பால் அடிப்படையிலும் இன,மத,மொழி அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் இருந்து வந்த ஒடுக்கு முறைகட்கெதிரான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பழைய நிலவுடைமையாளர்கள் தங்களது இழந்த ஆதிக்கத்திற்கு மீளப் பலவாறும் முயல்வார்கள். அது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புகிற பேரில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்த முயலும். ஏற்கனவே நேபாளத்தில் நிலை கொண்டுள்ள என்.ஜீ.ஓ. முகவர்கள் மூலம் பல குழிபறிப்பு வேலைகள் நடைபெறும். இதனிடையே கம்யூனிஸ்ட்டுகள் தம்மைத் திரும்பத்திரும்பப் புடமிட வேண்டும்.


வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை முடிவு செய்யும்.


எவ்வாறாயினும் தேசிய வாதிகளும், தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற் சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை.


-பேராசிரியர் கோகர்ணன்

நன்றி:தினக்குரல்


http://www.thinakkural.com/news/2008/4/27/sunday/marupakkam.htm