Friday, December 30, 2011

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்...

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்,அவருடன் எனது உரையாடல்.

ந்த உரையாடலானது,சமூக ஆவேசத்தின் மத்தியில் பாசிசப் புலிகளது ஒரு உறுப்பினரான கனடா வாழ் முரளிதரன் நடராஜாவோடு[ http://www.facebook.com/nadarajah.muralitharan ] அரண்மொழி வர்மன் முகநூல் நிலைத்தகவலில் [http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply ]நடாத்தப்பட்டது.

புரட்சியாளர்கள் குறித்துக் குறுந்தேசியவாதிகள் கடந்தகாலத்தில் "கொலை செய்யக் குரைக்கும்" அதே பண்போடு,உரையாடுவதென்பது பாசிசத்துக்குப் புதிதில்லை!

பாசிசம் எப்போதும்,மக்களை இனத்தின்பெயரால்-தேசத்தின் பெயரால்,மொழியின் பெயரால் காயடித்தே தமது இலக்கை அடைவதற்கு முனைவர்.வளர்ச்சியடைந்த முதலாளியத்தின் உச்சக்கட்டமானது, தனது நெருக்கடியைத் தீர்ப்பதில் இரண்டு உலக மகா யுத்தங்களையும்,உலக மகாயுத்தமெனத் தெரியாதபடி இப்போது தொடர்ந்து நேட்டோத் தலைமையில் சுயாதீனமிக்க மக்களையும்-தேசங்களையும் வேட்டையாடுவது வரலாறாகும்.

இந்நிலையில்,வளர்ச்சியடையாதவொரு இனத்துள்,தோன்றிய முரண்பாடானது,ஒரு தேசத்தில் பல்லினங்கள் வாழும் சந்தர்ப்பத்தில் தோன்றும் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கில், இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்கமானது தனது முரண்பாட்டை"இனவிடுதலை-தேச விடுதலை"எனச் சொல்லி முதலாளியத்துக்கொப்பிய பண்போடு பாசிசமாக உச்சம்பெற்று மக்களைக் கொன்றுபோடுகிறது.

இதற்குச் சிங்கள இனவாத அரசைத் தாங்கும் சிங்கள ஆளும் வர்க்கமும்,தமிழ் இனவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழ் ஆளும் வர்க்கமும் சமீப காலத்தில்"புலி-சிங்கள அரசு"என்ற இரண்டு யுத்த ஜந்திரத்தின்வழி மக்களை வேட்டையாடியது வரலாறு.இதுவும் பாசிசத்தின் இன்னொரு முனையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்து,சிங்கள ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் தமதாக்கிப் புலிகளது இன்றைய தலைமை(கே.பி.,கருணா-பிள்ளையான்,நெடியவன்-விநாயகம்,உருத்திரகுமார்) தமிழ்பேசும் மக்களைச் சுயவெழிச்சி கொள்ளாமலும்,தொடர்ந்தேவப்படும் சிங்கள மேலாதிக்கத்தைப் புரியாதிருக்கவும் போடும் நடாகம்"அபிவிருத்தி-புனர்வாழ்வு"என்று விரியும்போது,அங்கே,மக்களைத் தொடர்ந்து சிங்களப் பாசிச அரசின் ஆதிக்கத்துக்கு உட்படுத்துவதே.

இதன் வாயிலாக சிங்கள இனத்தைத் தொடர்ந்து பகமைக்குட்படுத்தித் தமிழ் பேசும் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பதில், இவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு ஒத்தாசையாக இருப்பதென்பது, புரியப்பட இந்தவுரையாடல் சாட்சியமாக இருக்கலாம்.

எனவே,புரட்சியை இலங்கையிலிருந்து ஓரங்கட்ட,புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கும் புலி அரசியலானது மக்களை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுப்பதாகும்.

இதையுரைப்பதன் தொடரில், இந்தவுரையாடலின் உளவியலை ஆய்ந்து பார்க்கலாம்.அதிகாரம் என்பது பன்முகத் தகவமைப்பின்வழி, ஒரு குவியத்திலிருந்து இன்னொரு தளத்துக்குத் தாவிச் சென்று மீளவும், அந்தக் குவியத்துக்குச் சென்று வீங்குவது.அதை, வரலாற்றில் உரைப்பதன்வழி,இந்தவுரையாடலுக்குள் உடைத்துப் பார்க்கும் உளவியல் சில உண்மைகளைப் பேசுமென்றே கருதுகிறேன்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.11


உரையாடல்:


Arunmozhi Varman
http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply



Nadarajah Muralitharan “அதிகாரங்களை விசுவாசிப்பதன் மூலம் மனிதன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றான்” என்று சயந்தன் சொல்லுகிறார். அப்போது மாற்றுக் கருத்தாளர்களை் குறித்து என் நினைவைத் தாக்கியது என்னவெனில் ஏகாதிபத்தியங்களையும் , முதலாளித்துவத்தையும் சாடியவர்களில் பலரும் இந்த ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளிலே தங்கள் இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதை எவ்வகையிலும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதில்லை. இவ்வாறு தாங்கள் சமரசத்துக்குள்ளாகுவதை , தங்கள் மனச்சாட்சிக்கு நியாயப்படுத்துவதை வசதியாக இவர்கள் பொதுவெளிக்கு மறைத்து விடுவார்கள்.
vor 13 Stunden · Gefällt mir · 4

Sri Rangan Vijayaratnam அதிகாரங்களை மனிதர்கள் விசுவாசிப்பதன் மூலம் தம்மைத் தக்கவைக்க முடியுமெனில் பிரபாகரன் ஏன் முள்ளி வாய்க்கலுக்குள் மண்டை பிளவுண்டு சாகவேண்டும்?


உலகில், கோடிக்கணக்கானவர்கள் ஏன் அகதியாகவும்,ஒரு வயிற்றுச் சோற்றுக்காவும் அலையவேண்டும்?


உயிர்த்திருப்பதற்கான ஆசையில், ஏன் அகதியாகி அலையவேண்டும்?


தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும்,மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு மாற்றுக் கருத்தாளர்களா இப்போது உயிர்விடவேண்டும்?


ஏன்டா இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறீங்கள்?

போய் உம்பை வளைத்து வேலை செய்து உங்களைக் காப்பாத்துங்கோடா!அப்போது , தெரியும் அதிகாரத்தைத் தனிமனிர் விசுவாசிக்கிறாரா அல்லது அதிகாரம் தனிமனிதரை சுற்றி தனது வலுக்கரத்தை எப்படிப் பின்னியுள்ளதென்று.அந்நிய அதிகாரங்களை நக்கி-விசுவாசித்துத் தமிழருக்கு விடுதலையைப் பெற்றுத்தர முனைந்த புலிகள் எப்படி,விடுதலையானர்களென்பதைப் பாடமாக எடுங்கோடா...
vor 9 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan சிறிரங்கன் அவர்களே நீங்கள் வசிக்கும் நாடு முதலாளித்துவ நாடா அல்லது என்ன வகையறாவுக்குள் அடங்கும் நாடு என்பதை மாத்திரம் சொல்ல முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan உலகிலே நிறைய நாடுகள் இருந்தும் அந்த நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று உங்களால் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இன்று நான் நினைக்கின்றேன். உலக மாந்தர்களோடு சராசரியாக ஒப்பிடும்போது உங்கள் மாத வருமானமும் , சொத்திருப்பும் பல நுாறு மடங்குகள் அதிகம் அல்லவா? வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு மாத விடுமுறையை எடுத்துக்கொண்டு எந்த மூன்றாம் உலக நாடுகளுக்குச் சென்று , இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அரசியல் பணி செய்து வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan பொதுவெளியல் நீர் அரசியல் கதைப்பதற்கு உமது மொழியின்படி உமது மாத , சொத்து வருமானங்களை மக்கள் முன்வைக்காமல் மற்றவர்களது வருமானங்கள் தொடர்பாகப் பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam இதை நீர் கேட்பதுதாம் இன்றைய நூற்றாண்டின் சுவரிசியம்.அதுவும் நீர் புலிகளைச் சுத்துவதாக மக்களைச் சுத்தியதெல்லாம் போகட்டும்.முதலில் நெடியவனிடம் கேட்டு முழுச் சொத்து விபரத்தையும் வெளியிடும்.பிறகு எனது"சொத்து"விபரத்தை வெளியிடுகிறேன்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஜேர்மன் முதலாளித்துவ அரசின் சலுகைகளில் எவற்றை நீா் புறந்தள்ளி வாழுகிறீர்கள் என்ற பட்டியலைத் தர முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan அவர்களைக் கயவர்கள் , கொடியவர்கள் என்று கூறும் நீர்தானே முன்னுதாரணத்துக்காக இவற்றையெல்லாம் வெளியிட்டு உமது நேர்மையை, தார்மீக அறத்தை உலகத்துக்குப் பறை சாற்ற வேண்டும்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam முட்டாள் ,உலகமெல்லாம் மக்களுக்கானது.அதைக் கொள்ளையடித்தவனே முதலாளி,புலியும் மக்களைக்கொன்று முதலாளிகளாகியது.கிட்டரை முன்தள்ளிய ஜேர்மனியப் பெரு நிறுவனங்கள்போல்.அந்த முலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கும் தொழிலாளிகளில் நானும் ஒருவன்.அதனால்,இந்தவுலகத்தில் முதலாளிக்கு மட்டுமல்ல அவனை உருவாக்கும் உழைப்புக்கும்-உழைப்பாளிக்குமே இந்தவுலகம் சொந்தம்.இதைக்கூடப் புரியமுடியாதவொரு சாம்பிராணி"தேசியம்"பேசி மக்களை மொட்டையடிக்குது-தூ...
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan நான் சுத்தியவன் என்றால் நீர் தானே இந்த நுாற்றாண்டின் மாபெரும் புரட்சிவாதி! புரட்சிவாதி புரட்டல்காரர்களைச் சாட்டித் தப்பித்துக் கொள்வது மாபெரும் அவலமல்லவா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam பரட்சிக்காரன் ஒவ்வொரு உழைப்பாளியும்தான் அவன் எந்தப் புரட்டல்காரனைச் சுத்தியவனென இந்த ப் பாசிஸ்டுக்கள்தாம் வகுப்பெடுக்கவேண்டும்?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan தாங்கள் ஜேர்மனிய முதலாளிகளிடம் சலுகை பெற்று மூன்றாம் உலக நாடுகளில் இன்னலுறுகின்ற தொழிலாளர்களைக் காட்டிலும் வசதியான வாழ்வை வாழ்பவர்தானே!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் தங்களால் மூன்றாம் உலக நாடு ஒன்றில் தொழிலாளியாக வாழும் வாய்ப்பினைக் கொள்ள முடியாமல் உள்ளது?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam சுவிசில் சுத்திக் கனடாவுக்குத் தப்பிய பீடைகளெல்லாம் மீண்டும் தேசியம்-விடுதலையென எவனது பிள்ளைகளையும்-எவளது தாலியையும் அறுக்க நியாயம் அளக்கிறீர்கள்.உங்களையெல்லாம் நடுத்தெருவில் வைத்துக் காறி உமிழவேண்டும்.அதற்கானவொரு காலம் கட்டாயம் வரும்.நீங்கள் மக்களாகி ஒவ்வொரு உழைப்பாளத் தமிழ் பேசுவனிடமிருந்தும் தப்ப முடியாது!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan நேரடியாகப் பதில் சொல்லும்! நாங்களெல்லாம் மக்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உமது சொத்து வருமான விபரத்தை மக்கள் முன் வைக்காது தொழிலாள வர்க்கம் , புரட்சி என்று மக்களது காதில் புா சுற்ற வேண்டாம்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த உரையாடல்களில் இருந்து நீர் உம்மைப் போலிப் புரட்சியாளனாக அகில உலகுக்கும் பிரகடனப்படுத்தியுள்ளீர்கள்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
ஜேர்மனிய முதலாளியிடம் சலுகை?அது சலுகையல்ல மந்தாரம்.அவன் எமது உழைப்பைச் சுரண்டீ உயிர்வாழ்வதற்காக எமக்கிடும் பட்டுணிச் சம்பளம்.அதைக்கூட வன்னியில் பாலங்கட்டியவனுக்குப் புலிகள் கொடுக்காமல் போட்ட நாமத்துக்கு இங்கிருந்து உழைத்தனுப்பிய கதையெல்லாம் உண்டு.பாலங்கட்டச் சொன்னவர்களே,யுத்தம் கழுத்துக்குள் நெருங்கியபோது எல்லோருக்கும் நாமம் போட்டு,மக்கள் சொத்தை மூட்டை கட்டிக் கப்பலுகுக் காத்திருந்து, மண்டைபிளந்த கதையெல்லாம் சலுகைதாம் காவடியாரே?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan மற்றவனைச் சாட்டி தனது வருமான , சொத்து விபரங்களை மறைக்கின்ற இந்தத் தந்திரசாலியை மக்களே இனம் காணுங்கள்!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த மனிதன் கூறுகின்றார் “நாங்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று”. ஒரு பேச்சுக்காக உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அனால் நான் கேட்கின்றேன். இந்த மனிதன் தனது மாதாந்த , சொத்து விபரங்ளை வெளியிட மறுக்கின்ற புரட்சி பற்றிக் குசாலாக முதலாளித்துவத்தின் முதுகில் குந்தியிருந்து ஏப்பம் விட்டவாறே பொழுதுபோக்கிற்குக் கதைக்கின்ற உண்மையான தொழிலாளி வர்க்கத்தை ஏய்க்கின்ற நபர் என்று.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
சொத்து விபரம்?என்னிடம் இருப்பது சிற்றி பேங்க கடனும்,ஸ்பார்காஸ ஓவற்றாப்புந்தாம்.வீடுவாசல்,காணி பூமி வைத்திருக்கும் புலிப்பினாமிகள்தாம் சொத்து விபரம் தரவேண்டும்.அப்படிச் சொத்தையெல்லாம் நான் வைத்திருக்கவில்லை!கோவண்ங்கூட உழைத்து வேண்டியதடா ...இதுவெல்லாம் புலிகளது அகாராதியில் முடியுமா?மக்களை பேமானியாக்கி ,உயிரை-உழைப்பைத் தட்டிப் பறித்த கபோதிகள் நீங்கள்.ஒரு இனத்தையே வரலாற்றில் ஒட்ட மொட்டையடித்து,அடிமைப்படுத்திச் சென்றதுமில்லமால்,இன்னும் ஒட்டக் கழுத்தறுக்கும் குணத்தின் தொடர்ச்சியாக எஞ்சியிருப்பவரையும்,சுரண்ட முனையும் உங்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்க வேண்டும்.கடந்த காலத்தில்,லையிட் போஸ்ட்டில் பாண்-கோழி கழுவெடுத்தவனுக்குத் தண்டனை கொடுத்த பாசிச அராஜக வாதிகள்,இன்று மக்கள் பணத்தைத் தமதாக்கிப் பெரும் தொழில் நிறுவனர்கள்.தூ...
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan உந்த விடுகையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இலங்கைக்குச் சென்று தற்போழுது ஏன் உம்மால் தொழிலாளியாக வாழ முடியாதுள்ளது. அது பற்றிய பதிலைக் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் வன்னியையும், புலியையும் சாட்டி விவாதத்தை திசை திருப்ப முயலுகிறீர். நீர் யார் என்பதை மக்கள் முன் வையும். உம்மைப் பற்றித்தான் நீர் பேச வேண்டும். ஏனென்றால் நீர்தான் உலகப்புரட்சியை முன்னெடுப்பவர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதை நீர் முதலில் செய்யும்.அதன்பின் நான் இலங்கைக்குச் செல்கிறேனா இல்லை ஜேர்மனியில் புடுங்கிறேனவெனப் பார்ப்போம்.உங்கட பாசிசத்தின் தொடர்ச்சியலேதாம்,ஜேர்மனியைத் தேடி அலைந்தவர்கள் மக்கள்.ரயர் போட்டெரித்த பாசிஸ்டுக்கள் எல்லாம்,இலங்கைக்குப் போவென்று சொல்லும் உரிமை உண்டா?பாசிசஸ்டுக்கு எந்தக் கருத்துரிமையுமுண்டா?பாசிசட்டுக்களே இப்போது,மக்களுக்காகக் கண்ணீர் விடுவதாகச் சொல்லிக்கொண்டு,மக்களது பணத்தின்மீதும்,அவர்களது பொருளும் மீதும் தேசியத்தின் பேரில் கைவைக்கும்போது, முல்லைத் தீவுக்குள் உள்ள ஏதோவொரு சிறு வாய்க்காலுக்காக தெருவெல்லாம் இறங்கியவன் புலம் பெயர்ந்த ஓட்டாண்டித் தமிழன்தான்.அவனுக்கு ஆப்பு வைத்துச் சிரத்தையோடு செல்வஞ் சேர்த்த நீங்களெல்லாம் இப்போதும்,வெள்ளை வேட்டி கட்டி வேட்டைக்குத் தயாராவதுதாம் இந்த நூற்றாண்டின் மிக மோசடி!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan சார் நான் இப்போது உங்களைக் கேட்பது, தங்களால் இப்போது இலங்கைக்குச் சென்று தொழிலாளியாக வாழ்ந்து அந்தத் தொழிலாளிகளுக்காகப் ஏன் போராட முடியாதுள்ளது என்பதை சற்று இந்த உலகத்துக்கு விளக்குவீர்களா ?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் என்னைச் செய்யச் சொல்லி வசதியாக நீர் ஓடி ஒழிகிறீர் ? நீர்தானே சர்வதேசப் புரட்சியாளர்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் ஒரு படு போலியென்பதை அப்பட்டமாக நிருபித்துவிட்டீர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நான் இலங்கைக்குச் சென்றால் மரணமும், உமக்கு செங்கம்பள வரவேற்பும் கிடைக்குமென்பதை இத்தால் யாவரும் அறிவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் ஜேர்மன் முதலாளித்துவத்தை நக்குவதன் மூலம் இலங்கைத் தொழிலாளி அடைய முடியாத சுகங்களையெல்லாம் அனுபவித்து இன்பம் கண்ட போலிப்புரட்டு வார்த்தையாளர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam ஏன்,உமது தலைவர்களில் பலர் இலங்கை அரசின் செங்கம்பள வரவேற்பில் இருக்கும்போது,உமக்கென்ன தண்டனை அங்குகிடைக்கும்?நீர் அவர்களது நிகழ்ச்சி நிரலை இங்கு தேசியவிடுதலையெனச் சொல்லி இங்கிருக்கும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில்,இப்படியுரைப்பது அவசியம்தாம்.உமக்கு இலங்கை அரசு தண்டனை தருகிறதோ இல்லையோ நமது புலம்பெயர் மக்கள் விரைவில் தருவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் கடன் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர். நீர்தான் மார்க்ஸியவாதி! பாட்டாளிவர்க்கப் புரட்சியாளன்! தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உமது குடும்பத்தின் மாத வருமானம், வீடு, சொத்து விபரங்களை நீர் அகில உலகப் பாட்டாளி வர்க்கத்திடம் முன்வைக்க வேண்டும்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan எனக்குத் தண்டனையைத் தருமுன் நீர் இலங்கை சென்று தொழிலாளியாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியாளனாகவும் ஏன் வாழமுடியாதுள்ளது என்பதை சிறிது அகில உலகத் தொழிலாள வர்க்கத்திடம் எடுத்தியம்புவீர்களா?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதை அவர்கள் இன்னும் கேட்கவில்லை.அப்படிக் கேட்கும்போது நான் முன் வைப்பதில் சிரமமில்லை.முதலில்,இப்போது ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்கிறான்-கேட்கிறாள் "புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மக்களது சொத்தைப் புலிகள் தமதாக்கித் தலைமறைவாகியவர்களில் எவரெவர் இன்னும் எத்தனை மில்லியனோடு இருக்கின்றனர்?;அச் சொத்துகள் யாவும் மக்களது என்பதால் அதைப் பொது நிதியமாக்கி வன்னியில் வதைபடும் மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதும் ,இங்கிருக்கும் நெடியவனிடம் எத்தானைகோடி மக்கள் பணம் இருப்பதென்பதை முதலில் கேட்டுச் சொல்லும்.அத்தோடு நீர் கொள்ளையடித்ததையும் கூறிவிடும்.சுவிசில் உம்மைத் தேடியவர்கள்.இப்போது கனடாவுக்குள் கால் வைத்துள்ளனர்...
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த நுாற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையை நீங்கள் வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். தொழிலாள வர்க்கம் இந்த மாபெரும் செஞ்செனையின் தளபதி, பாட்டாளி வர்க்கக் கோட்பாளனின் காலடியில் மண்டியிட்டு வருமான , சொத்துவிபரங்களைக் கேட்காத வரைக்கும் எல்லாவற்றையும் மூடி மறைத்து வர்க்க ரகசியம் பேணுவார் என்பதை இத்தால் அகில உலகுக்கும் அதற்குமப்பாற்றபட்ட பிரபஞ்சத்திற்கும் பிரகடனப்படுத்துகிறோம். அதுவரை அவர்பின் அணி திரள்வோம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan தனக்குப் பின்னால் நாலு சனத்தைத் திரட்டத் தெரியாதவன் குந்தியிருந்து மயிர் புடுங்கி மண்ணாங்கட்டியால் மந்திரவித்தை புரிகிறானாம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
கே.பி.இடம் தூது அனுப்பி இருக்கிறேன்.அவரெனக்கு ஒரு வேலை தருவதாகவும் சொல்லி உள்ளார்.மிக விரைவில் ,"அண்ணன் பிரபாகரனால் சர்வதேசப் புலித் தலைவரெனச் சொல்லப்பட்ட கே.பி."இடம் வேலை செய்ய நான் போவதில் காரியம் நடக்கிறது.நீரும் வாரும்.உமக்கும் பொது மன்னிப்புத் தரும்படி நான் மகிந்தாவிடம் நேரடியாகவே சொல்லி உயிர்ப் பிச்சை தரவழிவகை செய்கிறேன்.அதற்கு, முதலில் இலட்சம் மக்களைக் கொல்வதற்கு நீர் உடந்தையாக இருந்ததும்,ஐரோப்பாவில் திட்டமிட்டு மாற்றுக் கருத்தாளர்களைப் படுகொலை செய்வதற்கும் நீரும் காரணமானதை ஒத்துக்கொண்டு,பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பைக் கோரி விடவேண்டும்.அத்தோடு, உமது சொத்துக்களை "என்னிடம்விட்ட கோரிக்கைப்படி" முன்வைத்து,அது மக்கள் சொத்தானால்,வன்னியில் வதைபடும் மக்களக்கு உதவி செய்ய முயற்சி செய்து ,அச் செல்வத்தை வன்னிக்கு அனுப்பி விடவேண்டும்.அப்போது ,உமையும் உயிர்வாழ மக்கள் அநுமதிப்பார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இவங்களுக்கு புலியையும், புலியின்ரை வாலையும் விட்டால் சொந்தமாய் ஒண்டுமே பண்ணத் தெரியாது.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan பத்துச் சனத்தைக் கூட்டிக் கூட்டம் போட்டால் 10,000 கட்சி உருவாக்குவாங்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இவர்களை உலகின் மூலையில் உள்ள எந்தத் தொழிலாளர்களும் நம்பவில்லை.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதூதம் சொல்கிறேன்:எமது பிரச்சனை மக்களைத் திரட்டிப் பலிகொடுப்பதில்லை.நாம் தமிழீழஞ் சொல்லிüயும்,விடுதலை சொல்லியும் மக்களை ஆயுதம்காட்டிக் களத்துக்கு அனுப்பிக் கொல்பவர்களில்லை.புலிகள் செய்த இந்த மக்கள் விரோதத்தை எதன் பெயராலும் செய்யமாட்டேன்.ஆனால் ,இப்படிச் செய்ய முனையும் உம்மைப் போன்ற கயவர்களை-பாசிஸ்டுக்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதாம் முதல் வேலை!அதற்குப் பின் மக்களே தீர்மானிப்பார்கள் தமது தலைவிதியை.நீர்,இதைக்கூடப் புரிய முடியாத மண்டாக இருந்துகொண்டு ,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்துவதில் புலிகளது குப்பைகளைக் காவித் திரிகிறீரே?இன்னும் ,திருந்தி மக்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாதிருப்பதில் எந்த அதிகாரம் உம்மைத் தடுக்கிறது?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan சனங்களுக்குக் கதை விடாதேயும். நான் கேட்பது உமது மார்க்சிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான தத்துவார்த்தம் வருமான , சொத்துவிபரங்கள் தொடர்பில் ஒரு மார்க்ஸியவாதி ஆற்ற வேண்டிய கடப்பாடு என்னவென்பது தொடர்பானதே?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் கூறும் விளக்கம் மார்க்சீயத்தின் அடிப்படைகளோடு பெரும் முரண்பாடு கொள்கிறதே ?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அது மார்க்சிச வாதிக்குத் தெரியும்.அதைப் புலிப்பாசிஸ்டுக்கள் வகுப்பெடுப்பதுதாம் சுத்தக் கொடூரம்.அதை நாங்கள் செய்துகொள்வது இருக்கட்டும்.புலிகளாகிய பாசிஸ்டுக்கள் நீங்கள்,இறுதிவரை மக்களை வன்னிக்குள் வைத்து வேட்டையாடிய காட்டுமிராண்டிகள், இறுதியாகச் சரணடைந்தபோது- என்ன நடந்ததென்றாவது சொல்வீர்களா?அல்லது பிரபாகரனுக்கு என்ன நடந்ததேன்று மக்களுக்குச சொல்வீர்களா?ஏனெனில் ,மக்கள்தாம் தமது உயிரையும்,உடமைகளையும் உங்களிடம் பறிகொடுத்து,உங்களை நம்பி நடாற்றில் வீழ்ந்தவர்கள்.அதைச் செய்ய வக்கில்லாத நீங்கள்,மகத்தான புரட்சி குறித்து வகுப்பெடுப்பதற்கு உங்களுக்குக் கொலைகாரப் பாசிசப் புலிகளுக்கு என்னடா அருகதையுண்டு?
vor etwa einer Stunde · Gefällt mir
Nadarajah Muralitharan

இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறுகிறது. நீர் அம்பலப்படுத்தப் போகிறன் எண்டு சொல்லிறியள். மற்றும் இங்கு மக்கள் என்பதில் தொழிலாளர்களையும் இணைக்கின்றீர்களா ? மக்கள் , தொழிலாளர்கள் எண்டு பேசும்போது லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழும் மக்களை, தொழிலாளிகளை எப்படி முதலாம் உலகநாட்டிலே மாத்திரம் தொழிலாளியாக வாழுவேன் என்று அடம்பிடிக்கும் உம்போன்ற அதியுயர் சலுகை பெற்ற தொழிலாளர்களோடு இணைத்துக் கொள்வீர்கள் என்பது தொடர்பான சந்தேகங்கள் எழும். அதை எப்படித் தங்களது கோட்பாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவீர்கள் என்பதையும் அறிய அகில உலகப்பாட்டாளி வர்க்கம் காத்து நிற்கின்றது.
vor 59 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
நான் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாரும்.அதன்பின் பாட்டாளிய வர்க்கம்,முதலாம்-இரண்டாம்-மூன்றாம் உலகம் பற்றிப் புலிகளுக்கு வகுப்பெடுக்க அவசியமொன்றுருவானால் அதைச் செய்ய எப்பவும் தாயராக இருக்கிறோம்.முதலில் உங்கள் மறைப்பு அரசியலில் பக்ககங்களைத் திறந்து ,மக்களுக்கு உண்மையையும்,அவர்களிடம் மன்னிப்பும்,புலம்பெயர் தேசத்தில் மக்களிடம் தட்டிப் பறித்த செல்வத்தைத் தமாதாக்கி வைத்திருக்கும் உம்மைப் போன்ற புலிப்பினாமிகளிடமிருந்து மீள மக்களிடம் சென்றறைடைய வழியைச் சொல்லும்.
vor 53 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அண்ணா ! ஆத்திரப்படாதீர்கள்! உங்கள் நிதானமின்மை கண்டு மார்க்சின் கல்லறை திறந்து கொண்டுவிடும். நீங்கள் தானே தொடர்ந்து சொல்லுகிறீர்கள். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டு விட்டார்களென்று. எனவே உங்கள் திட்டம் பற்றிப் பேசுங்கள். எத்தனை இலட்சம் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் தங்கள் பின்னால் அணிவகுத்துள்ளார்கள் என்பது பற்றி மொழியுங்கள்.!
vor 52 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan என்னண்ணா ! குழந்தை மாதிரிப் பேசுறியள். அவையளையெல்லாம்(மக்களை) மீட்டாயிற்று என்று உங்களை மாதிரி இடதுசாரி ஆட்கள் சொல்ல நீங்கள் மக்கள் கண்களில் விழிப்பு உண்டாயிற்று, அவர்கள் புதிய வழியில் அணிதிரள்வார்கள் என்றும் ஆருடம் சொல்லி நிறைய நாளாயிற்று! பேந்தும் புலி, கிலியெண்டு ஏன் அண்ணை வெருளிறியள்?
vor 45 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அவர்கள் அம்பலப்பட்டாயிற்று! தோற்கடிக்கப்பட்டாயிற்று! கதை முடிந்தது! என்று கூப்பாடு போடும் நீங்கள் இப்பவும் அவை அதைச் செய்ய வேணும், இதைச் செய்ய வேணும் எண்டு குதியாய் குதிக்கிறியள் ?
vor 43 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
இதனூடாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்.தொடர்ந்து பாசிஸ்டுக்களாகிய நீங்கள் மக்களிடம் உண்மை பேச மறுத்துவிட்டு,மற்றவர்களிடம் புரட்சி குறித்துக் கேட்கிறீர்கள்.நாமோ புரட்சிக்குரிய சூழலே இன்னும் உருவாகவில்லையெனச் சொல்லி கருத்தாடும்போது,புரட்சி-விடுதலையென அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடியாட் படையாகவிருந்து முழு இலங்கை மக்களையும் வேட்டையாடிய நீங்கள்,சிறார்களை உயிராயுதம் எனப் பிடித்துக் குண்டைக்கட்டிக் கொன்று குவித்த நீங்கள்,இப்படி உயிர்த் துஷ்பிரயோகஞ் செய்த நீங்கள்தாம்,உண்மையில் என்ன நடந்தது.எது நடந்தது-எப்படி இவ்வளவு கொலைகளையும் தியாகம்-தேசமெனச் சொல்ல முடிந்ததென்பதை உரைத்தாகவேண்டும்.தொடர்ந்த மக்களுக்குள் இனவாதத்தை விதைத்து,மக்களினங்களைப் பிளவுபடுத்தி ,மீள ,உயிர்ப்பலியூடாகப் பதவி-பணம் அடைய முனையும் புலிப் பினாமிகளைக் குறித்து மக்கள் மிக விரைவாகவே வன்னிக்குள் படித்துவிட்டனர்.ஆக,நீங்களாகத் திருந்த முடியாதவொரு அதிகாரத்துக்குள் ஒளித்து வைத்திருக்கும் மக்கள் விரோத அரசியலை இதுள் வெளிப்படுத்த முடியாது திண்டாடும் உம்மை நான் மன்னித்தாலும்,மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ஓய்!
vor 41 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் அண்ணை ? உண்மையாய்த்தான் கேக்கிறன்! குறை நினையாதையுங்கோ! அவையள் இப்பவும் இருக்கினமா? இருந்தாலும் பலமாய் இருக்கினமா ?
vor 40 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அண்ணை! நீங்கள் ஜேர்மனியிலை குந்தியிருந்து ஈரோவிலையெல்லை சம்பளம் எடுக்கிறியள். அதாலைதானோ புரட்சிக்குரிய சூழல் உருவாகவில்லையெண்டு கதை விடுறியள் அல்லது ......
vor 38 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam புரட்சிக்குரிய சூழலையே இந்தியாவுக்கு-ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்துப் புரட்சியாளர்களை வேட்டையாடி புலிகள்,எந்த நயவஞ்சகத்தோடு இப்படி மீளவும் கொலைக்காரப் பாசையில் உரையாட முடிகிறது?எந்த ஏகாதிபத்தியத்தின் தயவில் நீர் ரூபாயில் சம்பளம் எடுக்கிறீர்?
vor 35 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan நீங்களண்ணை ஒரு மக்கள் தலைவன்தான்! உங்கள் பின்னால் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் அணிவகுத்துத் திரண்டெழுந்து நிக்கினம் எண்டும் சொல்லுங்கோ! சாதாரணமாக நீங்கள் போடுற கூட்டத்துக்கு எத்தனை ஆயிரம் பேர் வாறவையெண்டும் சொல்லுங்கோ!
vor 32 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நீங்கதானை அண்ணை ஈரோவிலை கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கிறனியள்!
vor 30 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan இதைவிட்டிட்டு நீங்கள் ஒரு இடமும் புரட்சிக்காகப் புலம்பெயர மாட்டீங்கள் எண்டும் உங்களுடைய செந்தோழர்களுக்கு நன்றாகவே புரியும்!
vor 29 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நான் இலங்கைக்குப் போய் தொழிலாளர்களுக்காய் வேலை செய்யுங்கோ எண்டு சொல்லேக்கை உங்களின்ரை அடிவயிறு பத்தியெரிஞ்சதை என்னால் உணரக் கூடியதாக இருந்துது!
vor 26 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan எந்நத் தியாகத்தையும் பாட்டாளிகளுக்காகச் செய்ய முடியாத வக்கற்ற கூட்டத்தில் நீர் தலையானவர் என்பதை யாம் அறிவோம்!
vor 25 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan ஜேர்மனிய முதலாளிய அடிவருடியான நீவிர் மலையகம் சென்று வருடத்தில ஒரு மாதம் வேலை செய்ய முடியாதா ?
vor 23 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நான் உடல்வருத்திக் கொத்துக்கொத்தாக யூரோவில் சம்பளம் எடுப்பதில் பெருமைகொள்கிறேன்.ஆனால்,நீங்கள் அனைவரும் கொலைக்களத்துக்குப் பாலகர்களை அனுப்பியபடி,மக்களை"அதோ தமிழீழம் மலர்கிறது"என்ற பொய்யுரைத்து ஏமாற்றியபடி, உண்டியல் குலக்கியும்,உள்வீட்டுக்குள் மிரட்டியும் தட்டிப்பறித்தல்லவா யூரோக்களை-டொலர்களைப் பெற்றீர்கள்!;அதைத் தொடருவதற்காக எத்தனை உயிர்களைத் துடைத்துக் குப்பையில் போட்டீர்கள்!இது பெருமையானதா முரளிதரன்-சொல்லுங்கள்!
vor 21 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அதற்கான பணபலமும், படை (இடதுசாரி) பலமும் இருந்தும் குசியாய் இருந்து கதைவிட்டுக் கொண்டு புரட்சியாளனாய் இணையத்திலும், முகப்புத்தகத்திலும் வலம் வருவது விலாச விளையாட்டுத்தானே!
vor 20 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan உமது மொழியில் பாசிஸ்ட்டுகள் எதையும் செய்யட்டுமே! ஆனால் உண்மையான மார்சீயப் பொதுவுடமைவாதியான நீவிர் அவ்வாறு செய்ய முடியாது!
vor 18 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan ஒரு பாசிஸ்ட்டை பொதுவுடைமைவாதியோடு ஒப்பிட்டு நியாயம் பேசுதல் தகுமா ?
vor 16 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam ஒன்றுக்கொன்று மாற்றிப் பின்னூட்டுப் போடாதீர்கள் முரளிதரன்,புரட்சியை நாசமறுத்ததுமல்லாது,சொந்தச் சகோதரர்களையே வேட்டையாடிய நீங்கள்,இப்போது இலங்கைக்குப் போய் மலையகத்தில் வேலை செய் என்று எம்மைப் பார்த்துக் கட்டளையிடுவதை எந்த அதிகாரத்திலிருந்து சொல்கிறீர்?
vor 14 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan நீர் கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கும் ஈரோவிலும் மூன்றாம் உலகங்களின் ரத்தம் ஊறிக்கிடக்கிறது.
vor 13 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan இது கட்டளையல்ல தோழரே! ஒரு பொதுவுடமைவாதி பணியாற்ற வேண்டிய களங்கள் அகிலமெங்கணும் விரிந்து கிடப்பினும் அதனை மறுத்து சலுகைகளையும், சுகங்களையும் ஒப்பீட்டு ரீதியில் வேண்டி ஐரோப்பிய மண்ணில் முகத்தைப் புதைத்து வாழும் உம் போன்றோரிடம் தார்மீக அடிப்படையில் விடு்க்கப்படகின்ற அறக் கேள்வி இது!
vor 9 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நான் உழைக்கும் யூரோவில்,இரத்தம் மட்டும்தாம் ஊறிக்கிடக்கு முரளி,ஆனால்,நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் மக்கள் சொத்தில் ,எத்தனை உயிரினது ஆன்மா ஒட்டிக்கிடக்கிறது தெரியுமா-எத்தனை பெண்ணின் விதவைக்கோலம்-எத்தனை தாயின் கண்ணீர் ஒட்டியிருக்கிறது தெரியுமா?"நியாயம்-தர்மம்,அறம் "பற்றிப் பேசும் தகுதி புலிப் பினாமிகளுக்கு இருக்கிறதா?எந்த மனசாட்சியோடு இப்படி உரையாடுகிறீர்கள்?அது உங்களிடம் இல்லையென்பதாற்றாம், இதுவரை மக்களது வாழ்வோடு தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட முடிகிறது.வன்னியில் சாவின் எல்லைவரை சென்றவர்களை அம்போவெனவிட்டுவிட்டு,அவர்களால்-அவர்களது உயிரால் போராட்டமெனச் சொல்லிக் கொள்ளையிட்ட பணத்தோடு,மீளவும் கணனிமுன் உட்கார்ந்து உம்மால் தமிழ் தட்ட முடிகிறதென எண்ணும்போது,நீங்கள் மனிதர்களே இல்லை!மிக மோசமான மக்கள் விரோதிகள் என்பதைத் தொடருரைத்து விடுகிறீர்கள்.இந்தவுரையாடலை நாளைய தலை முறைக்குச் சாட்சியாக்குகிறேன்-வணக்கம் மக்கள் விரோதிப் பாசிசப் புலியே!
vor 4 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan தோழரே தங்களிடம் எத்தனை தடவைகள் கூறிவிட்டேன்! ஆத்திரப்படாதீர்கள்! எம்மை சுயவிமர்சனம் செய்யாமல் வரலாற்றில் நாம் நிறைவான நகர்வை நிகழ்த்திவிட முடியாது. ஆனால் ஒரு பொதுவுடமைவாதி தான் சுயவிமர்சனத்தை நிகழ்த்த மறுத்து தேசியவாதிகளிடம் விளக்கம் கேட்டு உரையாடுவது வரலாற்று அபத்தமல்லவா ?
vor 11 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam அதைத்தாம் நானுஞ் சொல்கிறேன்.புலிகள் மக்களிடம் ,தம்மைச் சுய விமர்சனஞ் செய்து உண்மைகளையுரைத்துப் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதும்,மக்கள் சொத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்குக் கையளிப்பதும்,மீளப் போராட்டத்தைச் சொல்லிக் கொள்ளையிடாது,மக்களைத் தம்மைத்தாமே தீர்மானித்து இயங்கும் நிலைக்கு விட்டுவிடச்சொல்லி...நானும் ,இதையேதாம் சொல்கிறேன்.தலைவர்கள் மக்கள்தாமேயொழிய நாம் அல்ல!உங்கள் பாசையின்[புலியிசத் தலைமைவழிபாடு ]"தேசியத் தலைவர்"இலட்சம் உயிருக்குத்தாம் வேட்டு வைக்க முடிந்திருக்கிறது.நாமோ ,மக்களையே தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்வதில் மக்கள் முதற்கட்டமாக வெற்றிகொள்வது,இயக்காவாத மாயையிலிருந்து விடுதலையடைவதென்று அர்த்தம்.
vor 2 Sekunden · Gefällt mir


Nadarajah Muralitharan
இந்த உரையாடலை நானும் திறந்த மனதோடு சாட்சியமாக்குகிறேன்! வரலாற்றில் எந்தவித ஆதாரமும் அற்று தனிமனிதர்கள் மீது எவ்வாறான அவதுாறுகள் பொதுவுடமைவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சாட்சியம்! மற்றும் பொதுவுடமைவாதியென்று அழைத்துக்கொள்ளும் ஒருவன் தேசியவாதிகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த அரசியற் பிரக்ஞையற்று பக்குவமற்ற முறையில் விவாதத்தைக் கையாளும் அணுகுமுறையை அவதானிப்பதற்கும் இது ஓர் சாட்சியம்! பொதுவுடமைக் கோட்பாளராகத் தன்னை வரித்துக்கொள்வதில் பிரியமுடைய ஒருவர் எவ்வாறு வார்த்தைகளை நாகரீகமற்றமுறையில் பயன்படுத்துகிறார் என்பதற்கும் இன்றைய வார்த்தையாடல்கள் ஓர் சாட்சியம்!
vor 20 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நன்றி நண்பரே! மீண்டும் பேசிக்கொள்வோமு்!
vor 17 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நாங்கள் வார்த்தைகளை மட்டுமேதாம் "நாகரீகம்"அற்றுச் செய்தோமெனப் பகிரங்கமாகச் சொல்வோம்.புலிகளாகிய நீங்களோ,மனிதர்களின் உயிர்களையல்லவா, நாகரீகமற்ற முறையில் கொன்று தொலைத்தீர்கள்.தேசியத்தைச் சொல்லி,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்திய நீங்கள்,வார்த்தைகளுக்கும் நாகரீகம் கற்பிக்கும் இன்றைய நிலையில்,ஒரு யுகம் பிறந்திருக்கே-அது,நிச்சியம் உங்களைக் கேள்வி கேட்கும்!;நாளைய தலைமுறை, கொலையரசியலையும்,மாற்றுக் கருத்துக்குக் கொலையையே பரிசளித்து, ஒரு இனத்தை தேசியவாதத்தூடாகக் காயடித்துக் குறந்தேசிய வெறியின்வழி எங்ஙளம் இன்னொரு இனதுக்கு அடிமையாக்கியதென்பதை இந்தவுரையாடலது பண்பிலும்,கொலைவெறியாளர்கள் எங்ஙனம் மக்கள் நலவிரும்பிகளெனும் போர்வையில் மீளவும், தமது கோரப் பற்களை பதியம்போடும் தந்திரத்தையும்,புரட்சியாளர்களைச் சொல்லி மறைப்பதில் கிட்லரது பிரச்சாரகன் கொய்ப்பிள்சை [ nationalsozialistischer Propaganda war das von Propagandaminister Joseph Goebbels geleitete Reichsministerium für Volksaufklärung und Propaganda.]மிஞ்சியவர்ளென்பதை, இந்த உரையாடல்வழி புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.அந்தவகையில் முரளிதரன் ,தமிழ்பேசும் மக்கள் தமது அழிவிலும்,ஒரு உண்மையை இனங்காண வாய்புண்டு-அது,பாசிஸ்டுக்கள் இந்தச் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாய்ப்பிழந்தபின் தம்மை மறைத்துக்கொள்வர்.சந்தர்ப்பஞ் சரியாக வரும்போது மீளத் தமது கைவரிசையை, அந்நியச் சக்திகளோடு சேர்ந்து காட்டுவார்கள் என்று.அதற்கு ஒரு முரளிதரனும் சாட்சியாகட்டுமே!-நன்றி!.
vor einigen Sekunden · Gefällt mir