Saturday, September 01, 2012

கொலை செய்வேன்"ஓட்டுப் போடவேண்டும்"



கும்பிட்டுக் கேட்டகாலம்போய்,கொலை செய்வேன்"ஓட்டுப்
போடவேண்டும்" என்பதுதாம் ஜனநாயகம்.




இந்த மாகாணசபைத் தேர்தலில்

அடுத்த அராஜகத்தை-கொலைக் களத்தைத் திறந்திருக்கும் அரசியற் சூழ்ச்சியில் பலியாவது எது-என்ன?

 
குட்டி மாபியா பிள்ளையானின் உரையைக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலே நிலவும் ஆயுத அராஜகத்தின் ஆதிக்கத்தை அளக்க முடியும்.
 
  
"தமிழ்த் தேசியமானது" இப்போது பிரதேச வாதமாகச் சுருங்கிக் கொலையாடலாக மாறுகிறது.
 
வெல்லப் போவது தமிழ்த் தேசியக் கள்வர்களாக இருந்தாலும் கொலைப்படப்போவது எவரென்பதே எனது நோக்கு!
 
 
எனவே,பிள்ளையானைக் கொலைக்காரக் கும்பலாகத் தொடர்ந்திருத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கள்வர்கள் சதி அரசியலைச் செய்கின்றனர்.

 
பிள்ளையானுக்கு உரை மொழி வரவில்லையேதவிர அராஜக அரசியலது உண்மைகளைப் போட்டுடைக்கத் தெரிந்திருக்கிறது.
 
 
சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எவ்வளவு பெரியவுதவியைத் தமிழ் அரசியல் செய்கிறதென்பதைக் குட்டி மாபியத் தலைவன் பிள்ளையான் மூலம் அறிய முடிகிறது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கயமைக் கூட்டம் இந்த மாபியத்தனத்துள் ஜனநாயக இடைவெளியைத் தொட்டுக்காட்டும் ஒரு புள்ளியில்பிரதேச வாதத்தின் திரட்சியைக் காட்டவாவது ஒரு சந்தர்ப்பத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குச் சொல்லிக் கொள்கின்றனர்.


தன்னைத் தோற்கடித்தால் கொலை செய்வேன்-அழிப்பேன் என்ற குட்டி மாபியாப் பிள்ளையானின் கொலையாடலைக் கேட்டுப் பாருங்களேன்-இதுதாம் கிழக்குக்கு வசந்தமான மந்திரம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2012