Thursday, January 31, 2013

முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்


திரு.இத்திரயாஸ்அவர்கள் எழுதிய கட்டுரையான "ரிஷானா குற்றமும் தண்டனையும்" எனும் தொடர் கட்டுரைகள் விவாதிக்கும் குதர்க்கத்துக்கும்-தர்க்கத்துக்கும் இந்த இஸ்லாமியப் படைப்பாளிகள் -அறிஞர்களது கூட்டு "அறிக்கை"க்கும் எந்த வேறுபாடுமில்லை!இத்திரியாசாவது சரியாவின் வன் கொடுமைத்தண்டனையை இடம்-சூழலில் வைத்து மிகச் சாதுரியமான வார்த்தைகளால் விவாதித்து-விசாரித்து அதைக் காக்கின்றார்.இந்த அறிக்கையோ சரியாவைக் குறித்து வாயே திறக்காது "குற்றவியல்-மன்னிப்பு"எனும் பொது மொழியால் உரையாடிக்கொள்கிறது.இது ,1993 வீனாப் பிரகடனமும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும் [Vienna Declaration and Programme of Action-VDPA ]ஒரு பொருட்டாகக் கணக்காக எடுக்காதவொரு  கூட்டறிக்கை.இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் விரிந்த தளத்திலான மதங்கடந்த மனித நேயக் கருத்தாடலுக்குள் சிக்குப்படாத மதவாதச் சிந்தனையாளர்களாவிருப்பதன் அர்த்தம் என்ன?

எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாத கலகத்தனமான போராட்டமென்பது பெரும்பகுதி மக்களை அண்மித்தியங்கும் அரசியலாகவே இருக்க முடியும்.அத்தகைய இலக்கை மறுத்துவிட்டு மதவாதிகளாகவிருந்துகொண்டு  சரியாவின்  வன் கொடுமை மனிதவிரோதச் சட்டங்களுக்கெதிராகக்  குரல் கொடுக்க முடியாது!

இங்கு, குற்றிவியல் சார்ந்த வெறும் சட்டவாதப் பிரச்சனையாக இந்த மனிதவிரோதக் -கழுத்தறுப்பு - ஒறுப்புச் சட்டமான சரியாவைக் காப்பதில் கொலை செய்யப்பட்ட ரிஷானாவை இவர்கள் மீளவும், கொலை செய்கின்றனர்.

சரியாவின் இருப்பானதும்,அதை இலங்கை-இந்தியச் சூழலில் நிலைப்படுத்த முனையும் ஒவ்வொரு  எழுத்தும்  தொடர்ந்து    பல ரிஷானாக்களது கழுத்துக்களைத் தேடியலைவதாகவே பார்க்கப்படவேண்டும்.

இது,நியாயமா?

இந்தக் கூட்டறிக்கை மானுட நேயமான அறிக்கையாக இருக்குமா?

சரியாச் சட்டங்களையும்,அதன் பாதகத்தையும் குறித்து Islamophobia க்கு மாற்று  வெளியில் உலகில் பல பலதளத்தில் நேர்மையானவுரையாடலெழுகிறது.ஆனால், இந்திய-இலங்கைச் சூழலலோ மிகக் கெடுதியான முறையில் சரியாவையும் அதன் வன் கொடுமையையும் நிலை நிறுத்தவும்,நியாயப்படுத்தவும் முனைகிறது.இதை வன்மையாகக் கண்டிப்பதோடு இதுள் இருக்கும் மதவாதப் புனைவுகள்,அதன்வழி மீள மனிதவிரோதச் சட்டங்களை நிலைப்படுத்தும் ஆதிக்கத்தின் விசுவாசமும் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

இங்கே நான் சுட்டும் புள்ளியில் இந்த மனிதவிரோத அறிக்கையையும்,இஸ்லாமியத் தாரளவாதிகளது சரியாவின் மீதான மறைமுக ஆதரவும் தெளிவாக மறுக்கப்படவேண்டுமென்பதே எனது கருத்து.

நவீன திறந்த சமுதாயத்துக்கெதிரான இத்தகைய மழுப்பு அறிக்கைளால் இன்னொரு ரிஷானா படுகொலையாவதை மனித நேயமிக்க மனிதர்கள் எவருமே விரும்பார்.அத்தகைய மனித நேயமிக்கோர் இதுபோன்ற அறிக்கைகளைத் தொடர்ந்து விவாதித்து இதற்குள் மறைக்கப்படும் மனிதவிரோத ஆதிக்க உளவியலைத் தோலுரிப்பர்.இனியொரு இந்த அறிக்கைமீது எந்த ஆய்வுக் கண்ணோட்டத்தையும் வைக்காது சதித்தனமாக இஸ்லாமியச் சட்ட ஓழங்கான சரியாவைக் காக்கும் தந்திரத்துக்குப் பலியாவதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இது சார்ந்து நான் தொடராக விமசர்னத்துக்குட்படுத்தும் சரியாவைக் காக்கும் இஸ்லாமியத் தாராளவாத எழுத்துக்கள்மீதான கருத்துக்களாகவே மேற் கூறுபவைகள் தொடர்ந்து எழுதப்படுகிறது.

அத்தோடு இந்தக் கூட்டறிக்கையானது ரிஷானாவின் படுகொலைக்குடந்தையான சவுதி அரேபிய நிலைப்பாடுகளைச் சர்வதேசரீதியாகக் கொண்டு சென்றிருக்க வேண்டுமெனச் சொல்வதிலிருந்து இவர்கள் ரிஷானாவின் படுகொலைக்குப் பின்பேதாம் இந்த விஷயத்துள் தலை வைத்திருக்கின்றனரென்று தெரிகிறது.

சாதரணமாக இந்த ரிஷானாவுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சர்வதேச அமைப்புகளே இறுக்கமாகப் போராடியுள்ளதைக்கூட இவர்கள் கவனிக்காது அறிக்கை எழுதுவது பெரும் மோசடியானது.

இலங்கை அரசு  ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கைகளிலிருக்கும்போது அந்தவரசிடம் போய் நீதி-நியாயம் கேட்பது சுத்த மோசடி.அந்தத் தேசத்தில் சட்டவாத அரசுக்கான தர்மம் முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடிபட்டுப் போயிருப்பதைக்கூட இவர்கள் புரிந்துகொள்ளவில்லையா அல்லது ஷரியாவின் கொடிய கழுத்தறுப்பைத் திசைதிருப்புந் தந்திருத்துக்கான பொறிக்குள் இலங்கை அரசிடம் எதிர்பார்ப்பைக் குவித்து அப்பாவிகள் போல் நடித்தலா இஃது?

சவுதியில் நிலவும் கழுத்துவெட்டுஞ் சட்டமெனவுரைப்பதிலும் அத்தகைய சட்டங்களை இஸ்லாமிய நாடுகளே பயன்படுத்துவதில்லையென்பதிலிருந்தும் ஷரியாச் சட்டவொழுங்கு வேறானது சவுதியில் நிலவும் சட்டம் வேறானதெனக் காட்டும் கருத்தின்வழி மறைமுகமாக இஸ்லாமியச் ஷரியாச் சட்டவொழுங்கையும் அதன் மனிதவிரோதக் கோரத் தண்டனைகளையும் நீதியாகவும்-நேர்மையானதாகவும் உணர்த்துகின்றனர்.ஷரியாவின் கொடிய முகத்தைச் சவுதிக்குள் தேடுவதைவிட சோமாலியாவிலும்,நைஜீரியாவிலும் தேடுங்கள்.அங்கே,கை-கால்-மூக்கு அறுக்கப்பட்ட பல்லாயிரும் மனிதர்கள் நாளாந்தம் அவஸ்த்தைப்படுவதப்போது  தெரியும்.ஷரியாச்சட்டமானது இத்தகையமத அடைப்படைவாதத் தேசத்தில் மிகப்பெரும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதைக்கூட இவர்கள் அறியாதிருப்பதென்பது நமது காலத்துச் சாபக்கேடாகும்.

சர்வதேசரீதியாக ரிஷனாவின்மீதான விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான பாரிய போராட்டமெல்லாம் ஷரியாவின் முன் செல்லாக்காசாக்கிய இஸ்லாமிய மத அடிப்படைவாதமானது தொடர்ந்து விமர்சனத்துக்குட்படுவதை இத்தகைய கூட்டறிக்கைகள் மெல்லத் தவிர்த்துவிட்டு வெறும்"தண்டனையும்-மன்னிப்பும்" எனவிந்தக் கொடிய ஷரியாவைக் குறித்து இஸ்லாத்தின் வழி நியாயத்தை அடுக்குவதும்,அத்தோடு அரசுகளின்மீது பழியைப்போட்டுவிட்டு மனிதவிரோத இஸ்லாமிய அடைப்படைவாதத்தை இவர்கள் காத்துக்கொண்டு விடுகிறார்கள்.இது,கூட்டறிக்கை எழுதிய அனைவரதும் போக்காகப் பார்க்காது நிலவும் மத அடிப்படைவாத்தின் இறுகிய ஜனநாயகவிரோதப் போக்காவே நாம் பார்த்தாகவேண்டும்.

இவர்களது தெரிவிலான இஸ்லாம் சார்ந்த மென்போக்கும் ,அதையொட்டிய ஷரியாச் சட்டத்தின் மீதான நியாயப்படுத்தல்களும் மனித அறத்துக்கெதிரானது.இதைப் புரிந்துகொள்ளத்தக்க முறைமைகளோடு இதை விரிந்த தளத்தில் பார்த்தாகவேண்டும்.
மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.

இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.

எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:
"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]

இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.






பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும்,  நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.

அவர்களைத் தகவமைத்த "குற்றம்"இந்தச் சமுதாயத்தினது. மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் ,குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.

இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.

களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல் மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.

நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் "குற்றமும்,தண்டனையும்"குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.

அதைவிட , இது குறித்த புரிதல்கள் ஏலவே பூப்கா போன்ற பிரஞ்சியச் சிந்தனையாளர்களால் தெளிவாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.பூப்காவின் "கண்காணிப்பும் தண்டனையும்"எனும் நூலை[ Discipline and Punish] வாசித்தால் குரானும்,ஷரியாவும் வகுத்துரைக்கும் ஒழுங்குகள் புரிந்துபோகும்.

குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.


இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது!!

மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!

ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.

இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.

முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள். இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு. மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் எனக்கு இல்லை!

நான் எந்த மதத்தையும் ஏற்க்கப்போவதில்லை!

அனைத்துமே மனிதவிரோதப் பயங்கர நச்சுப் பொருட்கள்.இதற்கு உலகிற் தோன்றிய எந்த முதமும் விலகல்ல!

அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.

மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலிருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு"ஒரு இறைவன்"தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.

தறித்தெறியும் தலைகளைக் கண்டும்"குற்றம்-தண்டனை"எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும், இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!

இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.

"இது,ஏன்? "என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, " இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் "இறையச்சம்" செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட "மேன்மை-நியாயம்" என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?" என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!

எனக்கு  இத்திரியாசைவிட   மிகப்பெரும் அறிஞர்களும்,நவ  இஸ்லதமியச் சிந்தனையாளர்களான திரு.பாஷான்  ரைபியையும்[Prof. Dr.Bassam Tibi  ],ராறிக் ராமடானையும்[ Prof.Dr. Tariq Ramadan ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட    ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?

நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த "சட்ட" அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் " சிறப்பானது-நேர்மையானதென்பது" இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு  தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.

உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!

இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களை யொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.

1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as "progressive Islam". ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.

இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கான நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும் , மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறு விளக்கமளித்துக்  காக்க முனைவதைச்  சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.

எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.
 இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.

யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!

கொடூவாள்-கழுத்தறுப்பு!

வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!

இஸ்லாத்தின் ஷரியா!

இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.

கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.

இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.

 மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.

 மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகளா நாம் ???

கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper   ]"திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்" The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில்  எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.

இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!

போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை தனது ஆய்வுகளைச் செய்தவர்.கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக  வெளியேற வேண்டும்.

இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும்[Xenophobia] நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.

கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!


-ப.வி.ஸ்ரீரங்கன்

Saturday, January 05, 2013

இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர்

இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர்

ஜெயன் தேவா : //Ndp Front

 ரசு என்ன செய்ய விரும்புகின்றதோ அதையே புலம்பெயர் இனவாதம் செய்கின்றது. முன்பு புலிகள் தாம் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டியது போல், இன்று இடதுசாரிய வேஷம் போட்ட இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர். அந்தப் பெண்களை போதாதற்கு தாங்களும் ஊடகம் மூலம் “வன்புணர்ந்ததை” மூடிமறைக்க தத்துவவாதங்கள், தர்க்கங்கள்.

    எந்த உண்மையையும், எந்தச் சரியான கருத்தையும், இனவாதத்துக்குள் தேடமுடியாது. மறுதளத்தில் எந்த உண்மையும் மண்ணில் இருந்து சுதந்திரமாக வரமுடியாது என்பதன் மூலம், புலம்பெயர் இனவாதத்தை மண்ணில் திணிக்க முனைகின்றனர்.//
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8817%3A2013-01-03-205450&catid=368%3A2013

Sri Rangan Vijayaratnam ஜெயன் தேவா ,நீங்களே அடிக் கோடிட்டுக் காட்டிப் பிரசுரிக்கிற அளவுக்கு இரயாவின் நிலை வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி. நீங்களும்,தேவநந்தாவை அரசியற்றலைவாக ஏற்றுச் செயல்படுபவர். அந்த அரசியலது தொடரில் இயங்கிவருவதும்,இலங்கை அரச பாசிசத்தின் பின் அணிவகுத்த அரசியலது தெரிவில் ஜனநாயககங் காண்பவர் ,நீங்களென நாம் அறிவோம்.

அப்படியானவர்களது அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் இரயாவின் காட்டிக்கொடுப்பு-லொபி அரசியலானது முள்ளி வாய்க்கால்வரை புலிக்காக அனைவரையும் உள்ளிழுத்துச் சிதைத்துக் காட்டிக்கொடுத்தது. அதையே ,இப்போது இலங்கை ஆளும் வர்க்கத்துக்காக இரயாகரன் செய்துண்மையென்பதை நீங்களே பயன்படுத்தும் போது ,நாம் இன்னும் அதிகமாகப் புரிகிறோம்.

இரயா குறித்த அனைத்து மாயையும் விலகட்டும்.

எந்ததரப்பில் எவருக்கு ஏவல் நாயாகக் காலத்தைக் கடத்தும் இந்த இரயாக் குழுவானது மாபியாக்களென்பதை இதிலிருந்தாவது உணரவேண்டியது புரட்சிகரச் சக்திகளது கடமை!



ஜெயன் தேவா :  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீ ரங்கன்.நான் தேவானந்தாவையோ, இரயாகரனையோ இதுவரை சந்தித்ததில்லை. ஆனாலும் அவலப்பட்ட மக்கள் தமது கால்களில் எழுந்து நிற்பதற்காகவேனும் தேவானந்தாவின் சில முயற்சிகள் உதவக் கூடும் என நான் எதிர்பார்த்தது உண்மை. அதற்காக நான் அவருக்கு பாராட்டுக் கடிதமோ வாழ்த்து மாலை புனைந்தோ அனுப்பவில்லை. அதைத் தவிர நான் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது நான் பிறந்த மண்ணைப் பிரிந்து 30 வருடங்கள் அகதியாய் அலைந்த நிலையில் சலிப்பேற்பட்டு ஒரு முறையேனும் யாழ்ப்பாணம் (பாதுகாப்பாக) போய் வர உதவும் என்பதற்காகவோ நான் தேவானந்தாவுக்கு ஆதரவு அளிக்கப் புறப்படவில்லை.புலிப் பாசிசம் அழிக்கப் பட்ட பின் மக்களுக்குக் கிடைத்த வெற்றிடம் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் மட்டுமே அரச பாசிசத்திலிருந்து தமிழ் மக்கள் மீள முடியும் என்ற சிந்தனை யின் காரணமாக, இந்த வேலைகளுக்கு தேவானந்தா ஒரு போர்வையாக அமைய முடிய்ம் என்று நினைத்தேன். அதை நாட்டில் அனுமானித்து செயற்படக் கூடிய முறையில் தமிழ் மக்களிடையே ஒரு அரசியல் தலைமை தோன்றாமல் போனது பெரும் கவலைக்குரிய விஷயம். இதைவிட தமிழ் மக்கள் தமது அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கு வேறு எந்த செயல் முறையும் அண்மைக் காலத்தில் சாத்தியமாகிவிட முடியும் என எனது சிறு மூளைக்கு எட்டவில்லை. அதைவிட பசியுடனும், பட்டினியுடனும் தவிக்கும் மக்களுக்கு உணவு வேண்டி அதே பாசிச அரசைத் தான் இறைஞ்ச வேண்டியிருக்கிறது.அந்த மக்களுக்காக எவ்வளவுதான் தமது நிலையில் இருந்து கீழிறங்கியெயேனும் தொண்டு செய்பவர்கள் மதிக்கப் பட வேண்டியவர்களே. மருத்துவர் சிவதாசும் அத்தகையவர் என்பது எனது தீர்மானம். Investigative jounralism செய்கிரோம் என்ற பெயரில் புலம் பெயர் ஊடகங்கள் நடத்தும் கூத்துக்கள் சகிக்க முடியாதவை.இறுதியில் ஏழைப் பெண் பிள்ளைகள் வாழ்க்கையுடன் விளையாடும் இந்த ஊடகங்களின் சித்து விளையாட்டை இரயாகரன் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார் என்று பட்டதால் அதை மீள் பதிவு செய்தேன்.

Sri Rangan Vijayaratnam: வணக்கம்,ஜெயதேவன்.தங்கள் கருத்துகளுக்கு நன்றி.இந்த அரசியலைக்குறித்து எவருமே "நல்லது-கெட்டது", "பாவம்-புண்ணியம்,கொடூரம்" எனவுணர்வு வழிப்பட்டுச் சிந்தக்கமுடியாது.இது, வர்க்கச் சமுதாயம்.இங்கே, வர்க்க அரசியலே முதன்மையான நலன்களைத் தீர்மானிக்கின்றன.இதுள், இரயாகரன்-டக்ளஸ்தேவாநந்தாவெல்லாம் ஒரு பொருட்டல்ல.மாறாக,அவர்கள் எந்த வர்க்கக் குணாம்சத்தோடு அரசியலை முன் தள்ளுகின்றனரென்பதே நம்முன் இருக்கும் விஷயம்.இதிலிருந்து எவருமே தப்பமுடியாது.

புலிப்பாசிசமானது குணாம்சத்தில் தமிழ் மேட்டுக் குடியின் உணர்வுகளை-நலன்களைப் பிரதிநிதப்படுத்தியவொரு அமைப்பு.2000 க்குப்பின்பு அந்த அமைப்பினது மேல்மட்டத் தலைவர்கள் அனைவரும் புதிய தரகு முதலாளிகளாக மாறிவிட்ட சூழலில் அந்த அமைப்பினது குணாம்சமானது எப்போதும்,எவரோடும் சமரசஞ் செய்து அந்த வர்க்கத்தின் நலனையடைய முனைந்த வரலாற்றில் அஃது,அந்நிய அடியாட்படையாக நமது அப்பாவி இளைஞர்களது இனவொடுக்குமுறைக்கெதிரான உணர்வைச் சிதைத்துத் தமது வர்க்கத்துக்கேற்பத் தமிழ் மக்களைச் சிதைத்துக் கொன்றொரு அரசியலை முள்ளி வாய்க்கால்வரை நகர்த்தியது.

அது, முள்ளி வாய்க்காலில் சரணடைந்து அழியும்வரை அப்பாவி மக்களைக் கேடயமாகப் பாவித்துத் தமது இயக்க நலனையும்-இருப்பையும் காக்க முனைந்தது.அவர்களது இருப்பு அந்நியச் சக்திகளுக்கு அவசியமின்றிப் போனபோது தனியே தமிழ்மேட்டுக்குடி மாபியாக்களுக்காகப் பல்லாயிரம் மக்களைச் சாகக் கொடுத்தது.

இதுள்,நான் உங்களோடு முரண்படுவதும்,இரயா குழுவோடு முரண்படுவதும் நமது பரந்துபட்ட மக்களது நலனிலிருந்து மட்டுமே!

சிங்கள-பௌத்தவினவாதத்தின் மேலாதிக்கமானது தனியே சிங்கள ஆளும்வர்க்கத்தின் நிதி மூலதனத்தால் தூக்கி நிறுத்தப்படவில்லை.அஃது,இன்றைய மொத்தவுலகின் பெரிய சாவாலான ஆசிய மூலதனத்தால் காப்பாற்றப்பட்டுத் தாங்கப்படுகிறது.அதன் சாதக-பாதகமானது தமிழ்த் தேசியவினத்தை நாய்ப்பாடுபடுத்தினாலும் பரவாயில்லை ,ஆசிய மூலதனத்துக்கிசைவானதாவிருந்தாற் சரியென்பதே ஆசிய மூலதனத்தின் தலைமையைக் கைகயப்படுத்திய சீன-இந்தியக் கொள்கை.இதன்வழி,இலங்கையில் மேற்குலகங் சார்ந்த இலங்கையின் பிறிதொரு ஆளும்வர்க்க நலனைத் தகர்த்து மேற்குலக நவ லிபரல்களது கைப்பாவையான யூ.என்.பி.யை ஓரங்கட்டி மகிந்தாவைக் காக்கின்றன.இது,இலங்கையின் பண்டுதொட்ட தலைவிதி.இதுள் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமானது -புலி உட்பட- மேற்குலக எஜயமானர்களது கூஜாத் தூக்கிகள்.அதனாற்றாம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும்,யூ.என்.பி.க்கும் எப்போதும் தேன்நிலவு அரும்புவது.இதைப் பண்டா-செல்வா ஒப்பந்தம்,பின் அவரைச் சி.ஐ.ஏ.கொன்று போடுவதுவரை நிகழ்ந்த வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள்.பண்டா இலங்கையின் சுயாண்மைக்கும்,தேசிய மூலதனத்துக்குமானவொரு பிரதிநிதி.அவரோதாம் தேசிய முதலாளித்துவத்தின் தலைவர்.

முள்ளி வாய்க்காலுக்குப்பின்னும் நமது மக்கள் தொடர்ந்து பயங்கரவாத அச்சத்துக்குள்ளும்,தமிழ் மேட்டுக்குடியின் விதேசியவாதப் போராட்டப் பயங்கரவாதத்திலிருந்தும் தமது அடிப்படையானவுரிமைகளைச் சிங்களத் தேசிய வாதத்திடம் இழந்து சாகின்றனர். சிங்கள இராணுவமானது தமிழ்பேசும் மக்களது ஐதீக மண்ணில் மிகப்பெரும் ஜனநாயக மறுப்பைச் செவய்து தனது இருப்பையும்-சிங்கள அரச ஆதிக்கத்தையும் நிலைநாட்ட நமது இளைஞர்களைப் பலியாக்கிறது.அதன்வழி மீளவும், வீதேசியவாதக் கருத்துக்கமைய அவர்களைப் போராட-கலகஞ்செய்யத் தூண்டுகிறது.இதை ஆதரித்து,சிங்கள மேலாதிக்கத்துக்கிணைவாக இரயாகரன் அரசியல் கட்டுரை எழுதுவது தனிப்பட்ட இரயாகரன் என்ற நபரது தெரிவல்ல.

இரயாகரன் எனும் தனிப்பட்ட நபரது பெயர் ஒரு குறியீடாகும்.

அந்தப் பெயருக்குள் மறைந்து நாளாந்தம் அரச-ஆதிகச்சக்திகளுக்கேற்ப எதிர்ப் புரட்சிகரக் கருத்துக்களை ஒரு குழு செய்து வருகிறது.அதற்குத் தகுந்த நிதி-ஊடக வசதிகள் உண்டு.அதன் அரசியல் வரலாற்றுச் செயல்கள் இதையுறுத்திப்படுத்தும்.

எனவேதாம்,விவாதமொன்றை இப்படி வைக்க ஏற்பட்டது.

நாம் எவரையும்-எந்தத் தலைவரையும் நம்புவதைவிடப் பாதிக்கப்படும் மக்களை நம்பி அவர்களோடு கை கோர்ப்பபோம்.

அப்போது, அவர்களே தமது சிக்கலை எடுத்துத் தமது தலைவிதியைத் தீர்மானிப்பார்கள்.

இதைத் தடுத்திடத்தாம் இரயாகரன் குழுவென்ற சிறு ஏவற்-லொபிக்குழுவும் பெரும்ஆதிக்க அரச வியூக வகுப்பாளர்களும், தலைவர்களும் கைகோர்க்கின்றனர்.

இதை, அம்பலப்படுத்துவதற்கேற்ற கருத்துக்களைப் பலவடிவில் சொல்லி விட்டேன்.

மீளவிங்கே, எழுதுவது அவசியமில்லை.தங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
05.01.2013