Monday, February 19, 2007

எஸ்.எஸ்.குகநாதன்: என்னைப்பற்றிய...



எஸ்.எஸ்.குகநாதன்:
என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்!


அன்பு வாசகர்களே,வணக்கம்!


நம்ம தேசத்துத் தமிழர்கள் தனி நாடு கேட்டுப் போராட வெளிக்கிட்டான்கள்.

அதை தத்தமது தேவைக்காகவும்,தமது வர்த்தக மற்றும் நிதிச் சேகரிப்புக்காவும்,பொருள் குவிப்புப் போட்டிக்காகவும் தொடங்கி, இப்போது பல்லாயிரம் மக்களைக் கொன்று- இந்தத் தொகை இலட்சத்தை எட்டும்போது, புலம் பெயர்ந்த மண்ணில் தத்தமது வியாபாரப் போட்டிக்காகப் புலிகளின் பினாமிகளும் ஈழத்து வியாபாரத் திமிங்கிலங்களும் தெருச் சண்டை போடுகிறாங்கள்.

அன்றைக்குத் தமிழ் ஒலி-தமிழ் ஒளி எனும் வானொலி,தொலைக்காட்சியை எழுத்தாளர் காவலூர் ஜெகநாதனின் தம்பி குகநாதன் புலம்பெயர் நாட்டில் முதன் முதலாக ஆரம்பித்து வியாபாரத்தில் ஓ.ஓஓஓஓஓஓஓஓஓ என்று ஓங்கியபோது, அதைப் புலிகள் கைப்பற்ற தலையால் கிடங்கிட்டுப் பற்பல மோசடியூடே கைப்பற்றினார்கள்.


குகநாதனோ வர்த்தகத் துறையில் முறைப்படிப் பட்டங்கள் பெற்றுத் தொழிலைத் திறம்பட நடாத்துவதில் எல்லோரையும் விஞ்சுபவர்.அவருக்கே தண்ணி காட்டிய புலிப் பினாமி வர்த்தகர்கள், மீளவும் இலண்டனில் இருந்து ஒலிப் பரப்பாகிய ஐ.பி.சி. எனும் வானொலியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை ஸ்தாபித்த நம்ம குரு திரு.தாசியஸ் என்ற முன்னாள் கல்விப் பரிசோதகர்-நாடக இயக்குனர் எவ்வளவு போராடியும் முடியாது ஓரம் போனார்.அந்தோ அதுவும் புலிகள் வசமாகின.

இப்போது புதிய போர்!

புலிகளின் பினாமி வர்த்தகர்களுக்கும் பொதுஜனச் சாதரண வர்த்தகர்களுக்கும் போட்டி மேல் போட்டி.இப்போது தெருச் சண்டை போட்டு,ஆளாளுக்குத் தாக்குதல் தொடுத்தபடி.

இது ஈழப் போராட்டத்தின் அடுத்த பிரதிபலிப்பு.

ஈழத்தில் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சி எப்படி இலட்சம் மக்களைக் கொல்லும் போராட்டமாக மாறியதோ,அதேமாதிரி இங்கேயும் ஐரோப்பாவில் தமிழன் அடிபடுகிறான் வர்த்தகப் போட்டியில்.


இவன்கள் எப்போது திருந்துவது?

சாதரணமாக இதை எடுத்துவிடாதீர்கள்.

இதற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மிகவும் பல ஒற்றுமைகள் உண்டு.அதனது முரண்பாடு இங்கே துலக்கமுறுகிறது.

இந்தத் தெரு நாய்கள்தான் தமிழருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பான்களாம்!

ஒருவனையொருவன் துரோகி சொல்லிப் பணம் உழைக்கும் தற்குறிகளா நமது மக்களின் விடுதலைக்குப் போராடி,வென்றெடுத்து நமது மக்களை விடுதலை செய்வது?

எல்லாம் பணத்துக்கும்-சந்தை வாய்புக்கும்தான் தமிழ்,தமிழ்-உறுவே,தொப்பிள் கொடி உறவே!கருணாநிதியும் திராவிடக் கட்சிகளும் இவர்களிடம் பிச்சை எடுக்க வேணும்.

இன்னும் அமைதியானால் சொல்லுவான்கள் பல.
கேளுங்கள் இவர்கள்தான் தமிழின் காவலர்கள்!
தூ....


கருணாநந்தன பரமுவேலன்
19.02.07



---------------------------------------------


என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்:

எஸ்.எஸ்.குகநாதன்

.
கடந்த சில நாட்களாக என்னைப்பற்றியும் டான் தொலைக்காட்சி பற்றியும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுவருகின்றன. தமிழகத்தில் எமது டான் தொலைக்காட்சி தமிழகத்திலுள்ள தொலைக்காட்சி விநியோகஸ்தர்களை மோசடி செய்துவிட்டது போலவும் அதற்காக எனது பெயரைக் குறிப்பிட்டு குகநாதனின் மோசடி என்றும் அந்த இணையத்தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதலில் டான் தொலைக்காட்சி எனக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்பதும், குறிப்பாக இந்தியாவில் டான் தொலைக்காட்சியை ஒளிபரப்பிவரும் டான் ரெலிவிசன் நிறுவனத்தில் நான் 30 சதவீத பங்குகளை மாத்திரமே கொண்டிருக்கின்றேன் என்பதையும் மிகுதி 70 வீத பங்குகளுக்கு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களே சொந்தக்காரர்கள் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மிக இலகுவாக மறந்துவிடுகின்றன.
தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

டான் தொலைக்காட்சியின் விநியோகஸ்தர்களாக அவர்களே விரும்பி அதற்காக முறைப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு விநியோகஸ்தர்களாகினார்கள். அதற்காக முற்பணமும் அந்த நிறுவனத்தின் பெயரில் அதன் வங்கிக் கணக்கிற்குத்தான் செலுத்தினார்கள். அவர்களை டான் நிறுவனம் ஏமாற்றியதென்றால் அந்த நிறுவனத்தின் மீதுதான் அவர்கள் புகார் கூறலாம். அந்தப் பணத்தை நான் தனிப்பட்ட முறையில் மோசடி செய்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்றைய பங்குதாரர்கள் தான் என்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தலாம்.அதுதவிர, மூன்று தொலைக்கட்சி சேவைகளை தமிழிலும் ஐரோப்பாவின் பிரபல தொலைக்காட்சிகளான ய+ரோ நிய+ஸ(Euro news) ரேஸ்ரிவி (Trace TV) என்ற மிய+சிக் செனல் ஆகியவற்றையும் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது வருகின்றது டான் ரெலிவிசன் நிறுவனம். இந்த ஐந்து தொலைக்காட்சிகளையும் 2005 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒளிபரப்புவதற்கு அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை முதலிட்டிருக்கும் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மறந்துவிடுகின்றன.



டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி இன்றும் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகின்றது என்பது மாத்திரமல்ல ஐரோப்பாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சியை இந்தியாவில் மறுஒளிபரப்புச் செய்துவருவதும் டான் ரெலிவிசன் நிறுவனம்தான் என்பதும் பலருக்குத் தெரியாவிட்டாலும் அந்த விநியோகஸ்தர்களுக்குத் தெரியும். டான் ரிவி தமிழகத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியபோது அதனை தமிழகத்தில் சன்ரிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. என்ற கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் தவிர்ந்த ஏனைய அனைத்து கேபிள் ரிவி ஆப்பரேட்டர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள் என்பதையும் சில அதிகாரத்திலுள்ளவர்களின் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அந்த கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் ஒளிபரப்பியதையும் ஏன் இந்த இணையத்தளங்கள் குறிப்பிட மறந்துவிட்டன என்பதும் தெரியவில்லை.

ஒரு ஈழத்தமிழனின் தொலைக்காட்சியைக் கண்டு அந்த ஜாம்பவான்களே பயந்தார்கள் என்றால் அதைக்கண்டு உண்மையான ஈழத்தமிழன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டில் ஒளிபரப்பாகும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு ஒரு ஈழத்தமிழன் அனுமதியைப் பெற்றிருக்கின்றான். இது என்னைப்பொறுத்தவரை பெருமைக்குரியவையே எம்மை ஒழிப்பதற்காக என்றே சிலர் எடுத்த நடவடிக்கையின் விளைவாக நாம் எமது செயற்பாடுகளை சென்னையில் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றோமே தவிர, எமது செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிடவில்லை.ய+ரோ நிய+ஸ், ரேஸ்ரிவி என்பன இன்றும் இந்தியா எங்கும் ஒளிபரப்பாகிவருவதுடன், இந்தியாவின் முன்னணி டிரிஎச் சேவையான டிஷ் ரிவியிலும் இன்றும் ஒளிபரப்பாகிவருகின்றது. டான் ரெலிவிசன் நிறுவனம் பாண்டிச்சேரியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் இல்லத்திலேயே இயங்கிவருகின்றது. சென்னை கலையகம் மாத்திரமே தற்காலிகமாக மூடப்படிருக்கின்றது. நான் இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் குறிப்பிட்டுவருகின்றன. நான் கடந்த வாரமும் அங்குதான் இருந்தேன் என்பதை எமது நண்பர்கள் அறிவார்கள்.
(படங்களுக்கு நன்றி.நிதர்சனம்.கொம்)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக கோவை நந்தனை அனுப்பி அந்த ஏற்பாடுகளைச் செய்கின்ற அளவிற்கு ஒன்றும் விபரம் தெரியாதவன் நானல்ல. தொலைக்காட்சி நடாத்துவது என்பது இணையத்தளங்களை நடாத்துவது போன்ற ஒன்று என்று கருதுபவர்கள் தான் கோவை நந்தனை அனுப்பி அந்த பணிகளை செய்ய முயலலாம்.என்னைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவதற்காக சில இணையத்தளங்களும் சில தனிப்பட்டவர்களும் செய்துவருகின்ற விசமப்பிரச்சாரமே இது என்பதை எமது ஊடகப்பணியை நேசிக்கும் அன்பர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.அண்மையில் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாரிஸ் வந்தபோது நானே கூட்டத்திற்கு இடம் ஏற்பாடுசெய்ததாகவும் புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அமைச்சரின் வருகைக்காக கூட்டத்தை தமது அலுவலகத்திலேயே சிறிலங்கா தூதரகம் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்கு குகநாதனின் உதவி எதற்காக பயன்பட்டது என்பது தெரியவில்லை. அதுமாத்திரமல்ல, அவர் வருகையின்போது நான் இந்தியாவில் இருந்தேன்.ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ்ஒளி என்கின்ற தொலைக்காட்சி இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்று மிகச் சாதாரணமாக இந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டிற்கு முன்பு மாத்திரமல்ல, பத்து ஆண்டுகளாக தமிழ்ஒளி ஐரோப்பிய மண்ணில் வந்துகொண்டிருக்கின்றது என்பதும் சில வாரங்களாக மாத்திரம் காணாமல்போன அந்த தொலைக்காட்சி இவ்வாரம் முதல் மீண்டும் வந்திருக்கின்றது என்பதையும் இந்த இணையத்தளங்கள் வேண்டும்என்றே மறைத்துவிட்டன. தமிழ்ஒளி என்ற அந்த தொல்லைக்காட்சி தான் இன்று ரிரிஎன் என்ற பெயரில் தேசியத்தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது என்பதையும் இன்று புதிதாக இணையத்தளம் மூலம் ஊடகத்துறைக்கு வந்த இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இனியாவது தெரிந்துகொள்வது நல்லது.

நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நண்பர்கள் சிலருடன் இணைந்து தொலைக்காட்சியை ஆரம்பித்தபோது என்னை நம்பி நிதி உதவி செய்துவிட்டு இன்றுவரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் - இன்று வரை என்னுடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்கள் வேண்டுமானால் என்னை நோக்கி தங்கள் சுட்டுவிரல்களை நீட்டலாம். வேறு எவருக்கும் என்னை நோக்கி சுட்டுவிரல்களை மாத்திரமல்ல கண்பார்வையைக் கூடத் திருப்பும் தகுதியோ அருகதையோ இல்லை.


தேனியீலிருநது...

Thursday, February 08, 2007

பொட்டிட்டு மாலையணிவித்த பூசாரி கொலை.

பொட்டிட்டு மாலையணிவித்த பூசாரி கொலை.


கொலையும்,அதன் பின்னான கருத்துக் கட்டல்களும் மனிதரைத் துச்சமாக மதிக்கும் இழி நிலையாக...

நியாயப்படுத்தல் -பழியை மற்றவர்கள் மீது தூக்கி வாரி எறிவதும் ஒழிக!


கொலையுண்ட மனிதர்களை, அவர்கள் குடும்பத்தின் வலியை உணரத்தக்கவொரு காலம் எழுக.எத்தனை கொலைகள் "துரோகி" அரசியலில் நடந்துவிட்டன!

இந்தக் கொலைகளின் பின்பு அரசியல் நடத்துபவர்கள்,கொலைகளையே கூலிக்குச் செய்பவர்கள் என்றபடி இலங்கை மண்ணில் கொலை மொழியைப் புரிந்து கொள்ள முடியாதளவு அது கடினமான மொழியாக இருக்கிறது.இது மனித மொழிகளுக்கு அப்பாற்பட்ட பணமொழியோடு உறவாடுவது.இங்கே அதைப் புரிவதற்கு இலங்கைக் கொலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தே புரிந்து கொள்ள வேண்டும்.



இலங்கையில் நிலவுகின்ற இரு வேறு அரச ஜந்திரங்கள் தத்தமது இருப்புக்கும்,போட்டி அரசியலுக்கும் அப்பாவி மக்களைப் பலியெடுப்பது நாள்தோறும் நடை பெறும் அற்ப விசயமாகப் போய்விட்டது.ஒன்று ஈழத்துக்கானது மற்றது தேச ஒருமைப்பாட்டுக்கானது என்ற பரப்புரைகளோடு நாளொரு வண்ணம் மேனியொரு பொழுதாய் வளரும் கொலை அரசியல் இலங்கையெங்கும் மனிதத் தலைகளை உருட்டியபடி...


அரசியலில் ஊக்கம் பெறும் நலன்கள்மீதான அதீத அக்கறை தமது இருப்பின் நிச்சியமற்ற உணர்வில் அழிக்க முனையும் இலக்கு மனித உயிர், உடமையாக இருக்கிறது.நடப்பது மக்களின் நலனுக்கான-விடுதலைக்கான யுத்தமாக இலங்கையின் இருவேறு இராணுவ ஜந்திரங்களும் சொல்கின்றன.ஆனால் விடுதலையென்பதை நிசத்தில் அவர்களுணருவது தமது ஆளுமையை மட்டுமேயாகும்.இத்தகைய நோக்கு நிலையிலிருந்து முன் தள்ளப்படும் இன முரண்பாடுகள் முற்றிலும் மக்கள் நலனிலிருந்து அன்னியப்பட்டவொரு அரசியலை முன் மொழிகின்ற இன்றைய சூழல், மனிதக் கொலைகளின் பின்னே தனது வக்கிரமான அதிகார வெறியை மறைத்துத் துரோகியாகக் கொலையுண்டவரின் பிணத்தின் மீதேறி அரசியல் செய்கிறது.

பச்சைப் பாலகன் துரோகி,
கற்பிணித் தாய் துரோகி,
பல்லுப் போன பாட்டன் துரோகி,
ஏர் பிடிப்பவன் துரோகி,
போராடுபவன்(ள்) துரோகி,
அவன் துரோகி-இவள் துரோகி
துரோகி,துரோகி...


கொலையுண்டோரே! என்ன சொல்ல?


இதுவரை கொலையாகாத நாங்கள் உங்கள் மறைவுக்குச் சடங்கு செய்ய முனையவில்லை.மாறாக நீங்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்களைத் தேடுகிறோம், இனியும் இன்னொரு கொலையாகாத அரசியலைக் கோருவதற்காக.


போராட்ட அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துரோகியாக்கியோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.