Friday, December 30, 2011

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்...

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்,அவருடன் எனது உரையாடல்.

ந்த உரையாடலானது,சமூக ஆவேசத்தின் மத்தியில் பாசிசப் புலிகளது ஒரு உறுப்பினரான கனடா வாழ் முரளிதரன் நடராஜாவோடு[ http://www.facebook.com/nadarajah.muralitharan ] அரண்மொழி வர்மன் முகநூல் நிலைத்தகவலில் [http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply ]நடாத்தப்பட்டது.

புரட்சியாளர்கள் குறித்துக் குறுந்தேசியவாதிகள் கடந்தகாலத்தில் "கொலை செய்யக் குரைக்கும்" அதே பண்போடு,உரையாடுவதென்பது பாசிசத்துக்குப் புதிதில்லை!

பாசிசம் எப்போதும்,மக்களை இனத்தின்பெயரால்-தேசத்தின் பெயரால்,மொழியின் பெயரால் காயடித்தே தமது இலக்கை அடைவதற்கு முனைவர்.வளர்ச்சியடைந்த முதலாளியத்தின் உச்சக்கட்டமானது, தனது நெருக்கடியைத் தீர்ப்பதில் இரண்டு உலக மகா யுத்தங்களையும்,உலக மகாயுத்தமெனத் தெரியாதபடி இப்போது தொடர்ந்து நேட்டோத் தலைமையில் சுயாதீனமிக்க மக்களையும்-தேசங்களையும் வேட்டையாடுவது வரலாறாகும்.

இந்நிலையில்,வளர்ச்சியடையாதவொரு இனத்துள்,தோன்றிய முரண்பாடானது,ஒரு தேசத்தில் பல்லினங்கள் வாழும் சந்தர்ப்பத்தில் தோன்றும் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கில், இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்கமானது தனது முரண்பாட்டை"இனவிடுதலை-தேச விடுதலை"எனச் சொல்லி முதலாளியத்துக்கொப்பிய பண்போடு பாசிசமாக உச்சம்பெற்று மக்களைக் கொன்றுபோடுகிறது.

இதற்குச் சிங்கள இனவாத அரசைத் தாங்கும் சிங்கள ஆளும் வர்க்கமும்,தமிழ் இனவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழ் ஆளும் வர்க்கமும் சமீப காலத்தில்"புலி-சிங்கள அரசு"என்ற இரண்டு யுத்த ஜந்திரத்தின்வழி மக்களை வேட்டையாடியது வரலாறு.இதுவும் பாசிசத்தின் இன்னொரு முனையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்து,சிங்கள ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் தமதாக்கிப் புலிகளது இன்றைய தலைமை(கே.பி.,கருணா-பிள்ளையான்,நெடியவன்-விநாயகம்,உருத்திரகுமார்) தமிழ்பேசும் மக்களைச் சுயவெழிச்சி கொள்ளாமலும்,தொடர்ந்தேவப்படும் சிங்கள மேலாதிக்கத்தைப் புரியாதிருக்கவும் போடும் நடாகம்"அபிவிருத்தி-புனர்வாழ்வு"என்று விரியும்போது,அங்கே,மக்களைத் தொடர்ந்து சிங்களப் பாசிச அரசின் ஆதிக்கத்துக்கு உட்படுத்துவதே.

இதன் வாயிலாக சிங்கள இனத்தைத் தொடர்ந்து பகமைக்குட்படுத்தித் தமிழ் பேசும் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பதில், இவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு ஒத்தாசையாக இருப்பதென்பது, புரியப்பட இந்தவுரையாடல் சாட்சியமாக இருக்கலாம்.

எனவே,புரட்சியை இலங்கையிலிருந்து ஓரங்கட்ட,புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கும் புலி அரசியலானது மக்களை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுப்பதாகும்.

இதையுரைப்பதன் தொடரில், இந்தவுரையாடலின் உளவியலை ஆய்ந்து பார்க்கலாம்.அதிகாரம் என்பது பன்முகத் தகவமைப்பின்வழி, ஒரு குவியத்திலிருந்து இன்னொரு தளத்துக்குத் தாவிச் சென்று மீளவும், அந்தக் குவியத்துக்குச் சென்று வீங்குவது.அதை, வரலாற்றில் உரைப்பதன்வழி,இந்தவுரையாடலுக்குள் உடைத்துப் பார்க்கும் உளவியல் சில உண்மைகளைப் பேசுமென்றே கருதுகிறேன்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.11


உரையாடல்:


Arunmozhi Varman
http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply



Nadarajah Muralitharan “அதிகாரங்களை விசுவாசிப்பதன் மூலம் மனிதன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றான்” என்று சயந்தன் சொல்லுகிறார். அப்போது மாற்றுக் கருத்தாளர்களை் குறித்து என் நினைவைத் தாக்கியது என்னவெனில் ஏகாதிபத்தியங்களையும் , முதலாளித்துவத்தையும் சாடியவர்களில் பலரும் இந்த ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளிலே தங்கள் இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதை எவ்வகையிலும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதில்லை. இவ்வாறு தாங்கள் சமரசத்துக்குள்ளாகுவதை , தங்கள் மனச்சாட்சிக்கு நியாயப்படுத்துவதை வசதியாக இவர்கள் பொதுவெளிக்கு மறைத்து விடுவார்கள்.
vor 13 Stunden · Gefällt mir · 4

Sri Rangan Vijayaratnam அதிகாரங்களை மனிதர்கள் விசுவாசிப்பதன் மூலம் தம்மைத் தக்கவைக்க முடியுமெனில் பிரபாகரன் ஏன் முள்ளி வாய்க்கலுக்குள் மண்டை பிளவுண்டு சாகவேண்டும்?


உலகில், கோடிக்கணக்கானவர்கள் ஏன் அகதியாகவும்,ஒரு வயிற்றுச் சோற்றுக்காவும் அலையவேண்டும்?


உயிர்த்திருப்பதற்கான ஆசையில், ஏன் அகதியாகி அலையவேண்டும்?


தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும்,மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு மாற்றுக் கருத்தாளர்களா இப்போது உயிர்விடவேண்டும்?


ஏன்டா இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறீங்கள்?

போய் உம்பை வளைத்து வேலை செய்து உங்களைக் காப்பாத்துங்கோடா!அப்போது , தெரியும் அதிகாரத்தைத் தனிமனிர் விசுவாசிக்கிறாரா அல்லது அதிகாரம் தனிமனிதரை சுற்றி தனது வலுக்கரத்தை எப்படிப் பின்னியுள்ளதென்று.அந்நிய அதிகாரங்களை நக்கி-விசுவாசித்துத் தமிழருக்கு விடுதலையைப் பெற்றுத்தர முனைந்த புலிகள் எப்படி,விடுதலையானர்களென்பதைப் பாடமாக எடுங்கோடா...
vor 9 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan சிறிரங்கன் அவர்களே நீங்கள் வசிக்கும் நாடு முதலாளித்துவ நாடா அல்லது என்ன வகையறாவுக்குள் அடங்கும் நாடு என்பதை மாத்திரம் சொல்ல முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan உலகிலே நிறைய நாடுகள் இருந்தும் அந்த நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று உங்களால் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இன்று நான் நினைக்கின்றேன். உலக மாந்தர்களோடு சராசரியாக ஒப்பிடும்போது உங்கள் மாத வருமானமும் , சொத்திருப்பும் பல நுாறு மடங்குகள் அதிகம் அல்லவா? வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு மாத விடுமுறையை எடுத்துக்கொண்டு எந்த மூன்றாம் உலக நாடுகளுக்குச் சென்று , இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அரசியல் பணி செய்து வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan பொதுவெளியல் நீர் அரசியல் கதைப்பதற்கு உமது மொழியின்படி உமது மாத , சொத்து வருமானங்களை மக்கள் முன்வைக்காமல் மற்றவர்களது வருமானங்கள் தொடர்பாகப் பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam இதை நீர் கேட்பதுதாம் இன்றைய நூற்றாண்டின் சுவரிசியம்.அதுவும் நீர் புலிகளைச் சுத்துவதாக மக்களைச் சுத்தியதெல்லாம் போகட்டும்.முதலில் நெடியவனிடம் கேட்டு முழுச் சொத்து விபரத்தையும் வெளியிடும்.பிறகு எனது"சொத்து"விபரத்தை வெளியிடுகிறேன்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஜேர்மன் முதலாளித்துவ அரசின் சலுகைகளில் எவற்றை நீா் புறந்தள்ளி வாழுகிறீர்கள் என்ற பட்டியலைத் தர முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan அவர்களைக் கயவர்கள் , கொடியவர்கள் என்று கூறும் நீர்தானே முன்னுதாரணத்துக்காக இவற்றையெல்லாம் வெளியிட்டு உமது நேர்மையை, தார்மீக அறத்தை உலகத்துக்குப் பறை சாற்ற வேண்டும்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam முட்டாள் ,உலகமெல்லாம் மக்களுக்கானது.அதைக் கொள்ளையடித்தவனே முதலாளி,புலியும் மக்களைக்கொன்று முதலாளிகளாகியது.கிட்டரை முன்தள்ளிய ஜேர்மனியப் பெரு நிறுவனங்கள்போல்.அந்த முலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கும் தொழிலாளிகளில் நானும் ஒருவன்.அதனால்,இந்தவுலகத்தில் முதலாளிக்கு மட்டுமல்ல அவனை உருவாக்கும் உழைப்புக்கும்-உழைப்பாளிக்குமே இந்தவுலகம் சொந்தம்.இதைக்கூடப் புரியமுடியாதவொரு சாம்பிராணி"தேசியம்"பேசி மக்களை மொட்டையடிக்குது-தூ...
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan நான் சுத்தியவன் என்றால் நீர் தானே இந்த நுாற்றாண்டின் மாபெரும் புரட்சிவாதி! புரட்சிவாதி புரட்டல்காரர்களைச் சாட்டித் தப்பித்துக் கொள்வது மாபெரும் அவலமல்லவா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam பரட்சிக்காரன் ஒவ்வொரு உழைப்பாளியும்தான் அவன் எந்தப் புரட்டல்காரனைச் சுத்தியவனென இந்த ப் பாசிஸ்டுக்கள்தாம் வகுப்பெடுக்கவேண்டும்?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan தாங்கள் ஜேர்மனிய முதலாளிகளிடம் சலுகை பெற்று மூன்றாம் உலக நாடுகளில் இன்னலுறுகின்ற தொழிலாளர்களைக் காட்டிலும் வசதியான வாழ்வை வாழ்பவர்தானே!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் தங்களால் மூன்றாம் உலக நாடு ஒன்றில் தொழிலாளியாக வாழும் வாய்ப்பினைக் கொள்ள முடியாமல் உள்ளது?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam சுவிசில் சுத்திக் கனடாவுக்குத் தப்பிய பீடைகளெல்லாம் மீண்டும் தேசியம்-விடுதலையென எவனது பிள்ளைகளையும்-எவளது தாலியையும் அறுக்க நியாயம் அளக்கிறீர்கள்.உங்களையெல்லாம் நடுத்தெருவில் வைத்துக் காறி உமிழவேண்டும்.அதற்கானவொரு காலம் கட்டாயம் வரும்.நீங்கள் மக்களாகி ஒவ்வொரு உழைப்பாளத் தமிழ் பேசுவனிடமிருந்தும் தப்ப முடியாது!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan நேரடியாகப் பதில் சொல்லும்! நாங்களெல்லாம் மக்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உமது சொத்து வருமான விபரத்தை மக்கள் முன் வைக்காது தொழிலாள வர்க்கம் , புரட்சி என்று மக்களது காதில் புா சுற்ற வேண்டாம்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த உரையாடல்களில் இருந்து நீர் உம்மைப் போலிப் புரட்சியாளனாக அகில உலகுக்கும் பிரகடனப்படுத்தியுள்ளீர்கள்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
ஜேர்மனிய முதலாளியிடம் சலுகை?அது சலுகையல்ல மந்தாரம்.அவன் எமது உழைப்பைச் சுரண்டீ உயிர்வாழ்வதற்காக எமக்கிடும் பட்டுணிச் சம்பளம்.அதைக்கூட வன்னியில் பாலங்கட்டியவனுக்குப் புலிகள் கொடுக்காமல் போட்ட நாமத்துக்கு இங்கிருந்து உழைத்தனுப்பிய கதையெல்லாம் உண்டு.பாலங்கட்டச் சொன்னவர்களே,யுத்தம் கழுத்துக்குள் நெருங்கியபோது எல்லோருக்கும் நாமம் போட்டு,மக்கள் சொத்தை மூட்டை கட்டிக் கப்பலுகுக் காத்திருந்து, மண்டைபிளந்த கதையெல்லாம் சலுகைதாம் காவடியாரே?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan மற்றவனைச் சாட்டி தனது வருமான , சொத்து விபரங்களை மறைக்கின்ற இந்தத் தந்திரசாலியை மக்களே இனம் காணுங்கள்!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த மனிதன் கூறுகின்றார் “நாங்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று”. ஒரு பேச்சுக்காக உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அனால் நான் கேட்கின்றேன். இந்த மனிதன் தனது மாதாந்த , சொத்து விபரங்ளை வெளியிட மறுக்கின்ற புரட்சி பற்றிக் குசாலாக முதலாளித்துவத்தின் முதுகில் குந்தியிருந்து ஏப்பம் விட்டவாறே பொழுதுபோக்கிற்குக் கதைக்கின்ற உண்மையான தொழிலாளி வர்க்கத்தை ஏய்க்கின்ற நபர் என்று.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
சொத்து விபரம்?என்னிடம் இருப்பது சிற்றி பேங்க கடனும்,ஸ்பார்காஸ ஓவற்றாப்புந்தாம்.வீடுவாசல்,காணி பூமி வைத்திருக்கும் புலிப்பினாமிகள்தாம் சொத்து விபரம் தரவேண்டும்.அப்படிச் சொத்தையெல்லாம் நான் வைத்திருக்கவில்லை!கோவண்ங்கூட உழைத்து வேண்டியதடா ...இதுவெல்லாம் புலிகளது அகாராதியில் முடியுமா?மக்களை பேமானியாக்கி ,உயிரை-உழைப்பைத் தட்டிப் பறித்த கபோதிகள் நீங்கள்.ஒரு இனத்தையே வரலாற்றில் ஒட்ட மொட்டையடித்து,அடிமைப்படுத்திச் சென்றதுமில்லமால்,இன்னும் ஒட்டக் கழுத்தறுக்கும் குணத்தின் தொடர்ச்சியாக எஞ்சியிருப்பவரையும்,சுரண்ட முனையும் உங்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்க வேண்டும்.கடந்த காலத்தில்,லையிட் போஸ்ட்டில் பாண்-கோழி கழுவெடுத்தவனுக்குத் தண்டனை கொடுத்த பாசிச அராஜக வாதிகள்,இன்று மக்கள் பணத்தைத் தமதாக்கிப் பெரும் தொழில் நிறுவனர்கள்.தூ...
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan உந்த விடுகையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இலங்கைக்குச் சென்று தற்போழுது ஏன் உம்மால் தொழிலாளியாக வாழ முடியாதுள்ளது. அது பற்றிய பதிலைக் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் வன்னியையும், புலியையும் சாட்டி விவாதத்தை திசை திருப்ப முயலுகிறீர். நீர் யார் என்பதை மக்கள் முன் வையும். உம்மைப் பற்றித்தான் நீர் பேச வேண்டும். ஏனென்றால் நீர்தான் உலகப்புரட்சியை முன்னெடுப்பவர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதை நீர் முதலில் செய்யும்.அதன்பின் நான் இலங்கைக்குச் செல்கிறேனா இல்லை ஜேர்மனியில் புடுங்கிறேனவெனப் பார்ப்போம்.உங்கட பாசிசத்தின் தொடர்ச்சியலேதாம்,ஜேர்மனியைத் தேடி அலைந்தவர்கள் மக்கள்.ரயர் போட்டெரித்த பாசிஸ்டுக்கள் எல்லாம்,இலங்கைக்குப் போவென்று சொல்லும் உரிமை உண்டா?பாசிசஸ்டுக்கு எந்தக் கருத்துரிமையுமுண்டா?பாசிசட்டுக்களே இப்போது,மக்களுக்காகக் கண்ணீர் விடுவதாகச் சொல்லிக்கொண்டு,மக்களது பணத்தின்மீதும்,அவர்களது பொருளும் மீதும் தேசியத்தின் பேரில் கைவைக்கும்போது, முல்லைத் தீவுக்குள் உள்ள ஏதோவொரு சிறு வாய்க்காலுக்காக தெருவெல்லாம் இறங்கியவன் புலம் பெயர்ந்த ஓட்டாண்டித் தமிழன்தான்.அவனுக்கு ஆப்பு வைத்துச் சிரத்தையோடு செல்வஞ் சேர்த்த நீங்களெல்லாம் இப்போதும்,வெள்ளை வேட்டி கட்டி வேட்டைக்குத் தயாராவதுதாம் இந்த நூற்றாண்டின் மிக மோசடி!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan சார் நான் இப்போது உங்களைக் கேட்பது, தங்களால் இப்போது இலங்கைக்குச் சென்று தொழிலாளியாக வாழ்ந்து அந்தத் தொழிலாளிகளுக்காகப் ஏன் போராட முடியாதுள்ளது என்பதை சற்று இந்த உலகத்துக்கு விளக்குவீர்களா ?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் என்னைச் செய்யச் சொல்லி வசதியாக நீர் ஓடி ஒழிகிறீர் ? நீர்தானே சர்வதேசப் புரட்சியாளர்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் ஒரு படு போலியென்பதை அப்பட்டமாக நிருபித்துவிட்டீர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நான் இலங்கைக்குச் சென்றால் மரணமும், உமக்கு செங்கம்பள வரவேற்பும் கிடைக்குமென்பதை இத்தால் யாவரும் அறிவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் ஜேர்மன் முதலாளித்துவத்தை நக்குவதன் மூலம் இலங்கைத் தொழிலாளி அடைய முடியாத சுகங்களையெல்லாம் அனுபவித்து இன்பம் கண்ட போலிப்புரட்டு வார்த்தையாளர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam ஏன்,உமது தலைவர்களில் பலர் இலங்கை அரசின் செங்கம்பள வரவேற்பில் இருக்கும்போது,உமக்கென்ன தண்டனை அங்குகிடைக்கும்?நீர் அவர்களது நிகழ்ச்சி நிரலை இங்கு தேசியவிடுதலையெனச் சொல்லி இங்கிருக்கும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில்,இப்படியுரைப்பது அவசியம்தாம்.உமக்கு இலங்கை அரசு தண்டனை தருகிறதோ இல்லையோ நமது புலம்பெயர் மக்கள் விரைவில் தருவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் கடன் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர். நீர்தான் மார்க்ஸியவாதி! பாட்டாளிவர்க்கப் புரட்சியாளன்! தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உமது குடும்பத்தின் மாத வருமானம், வீடு, சொத்து விபரங்களை நீர் அகில உலகப் பாட்டாளி வர்க்கத்திடம் முன்வைக்க வேண்டும்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan எனக்குத் தண்டனையைத் தருமுன் நீர் இலங்கை சென்று தொழிலாளியாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியாளனாகவும் ஏன் வாழமுடியாதுள்ளது என்பதை சிறிது அகில உலகத் தொழிலாள வர்க்கத்திடம் எடுத்தியம்புவீர்களா?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதை அவர்கள் இன்னும் கேட்கவில்லை.அப்படிக் கேட்கும்போது நான் முன் வைப்பதில் சிரமமில்லை.முதலில்,இப்போது ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்கிறான்-கேட்கிறாள் "புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மக்களது சொத்தைப் புலிகள் தமதாக்கித் தலைமறைவாகியவர்களில் எவரெவர் இன்னும் எத்தனை மில்லியனோடு இருக்கின்றனர்?;அச் சொத்துகள் யாவும் மக்களது என்பதால் அதைப் பொது நிதியமாக்கி வன்னியில் வதைபடும் மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதும் ,இங்கிருக்கும் நெடியவனிடம் எத்தானைகோடி மக்கள் பணம் இருப்பதென்பதை முதலில் கேட்டுச் சொல்லும்.அத்தோடு நீர் கொள்ளையடித்ததையும் கூறிவிடும்.சுவிசில் உம்மைத் தேடியவர்கள்.இப்போது கனடாவுக்குள் கால் வைத்துள்ளனர்...
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த நுாற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையை நீங்கள் வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். தொழிலாள வர்க்கம் இந்த மாபெரும் செஞ்செனையின் தளபதி, பாட்டாளி வர்க்கக் கோட்பாளனின் காலடியில் மண்டியிட்டு வருமான , சொத்துவிபரங்களைக் கேட்காத வரைக்கும் எல்லாவற்றையும் மூடி மறைத்து வர்க்க ரகசியம் பேணுவார் என்பதை இத்தால் அகில உலகுக்கும் அதற்குமப்பாற்றபட்ட பிரபஞ்சத்திற்கும் பிரகடனப்படுத்துகிறோம். அதுவரை அவர்பின் அணி திரள்வோம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan தனக்குப் பின்னால் நாலு சனத்தைத் திரட்டத் தெரியாதவன் குந்தியிருந்து மயிர் புடுங்கி மண்ணாங்கட்டியால் மந்திரவித்தை புரிகிறானாம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
கே.பி.இடம் தூது அனுப்பி இருக்கிறேன்.அவரெனக்கு ஒரு வேலை தருவதாகவும் சொல்லி உள்ளார்.மிக விரைவில் ,"அண்ணன் பிரபாகரனால் சர்வதேசப் புலித் தலைவரெனச் சொல்லப்பட்ட கே.பி."இடம் வேலை செய்ய நான் போவதில் காரியம் நடக்கிறது.நீரும் வாரும்.உமக்கும் பொது மன்னிப்புத் தரும்படி நான் மகிந்தாவிடம் நேரடியாகவே சொல்லி உயிர்ப் பிச்சை தரவழிவகை செய்கிறேன்.அதற்கு, முதலில் இலட்சம் மக்களைக் கொல்வதற்கு நீர் உடந்தையாக இருந்ததும்,ஐரோப்பாவில் திட்டமிட்டு மாற்றுக் கருத்தாளர்களைப் படுகொலை செய்வதற்கும் நீரும் காரணமானதை ஒத்துக்கொண்டு,பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பைக் கோரி விடவேண்டும்.அத்தோடு, உமது சொத்துக்களை "என்னிடம்விட்ட கோரிக்கைப்படி" முன்வைத்து,அது மக்கள் சொத்தானால்,வன்னியில் வதைபடும் மக்களக்கு உதவி செய்ய முயற்சி செய்து ,அச் செல்வத்தை வன்னிக்கு அனுப்பி விடவேண்டும்.அப்போது ,உமையும் உயிர்வாழ மக்கள் அநுமதிப்பார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இவங்களுக்கு புலியையும், புலியின்ரை வாலையும் விட்டால் சொந்தமாய் ஒண்டுமே பண்ணத் தெரியாது.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan பத்துச் சனத்தைக் கூட்டிக் கூட்டம் போட்டால் 10,000 கட்சி உருவாக்குவாங்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இவர்களை உலகின் மூலையில் உள்ள எந்தத் தொழிலாளர்களும் நம்பவில்லை.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதூதம் சொல்கிறேன்:எமது பிரச்சனை மக்களைத் திரட்டிப் பலிகொடுப்பதில்லை.நாம் தமிழீழஞ் சொல்லிüயும்,விடுதலை சொல்லியும் மக்களை ஆயுதம்காட்டிக் களத்துக்கு அனுப்பிக் கொல்பவர்களில்லை.புலிகள் செய்த இந்த மக்கள் விரோதத்தை எதன் பெயராலும் செய்யமாட்டேன்.ஆனால் ,இப்படிச் செய்ய முனையும் உம்மைப் போன்ற கயவர்களை-பாசிஸ்டுக்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதாம் முதல் வேலை!அதற்குப் பின் மக்களே தீர்மானிப்பார்கள் தமது தலைவிதியை.நீர்,இதைக்கூடப் புரிய முடியாத மண்டாக இருந்துகொண்டு ,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்துவதில் புலிகளது குப்பைகளைக் காவித் திரிகிறீரே?இன்னும் ,திருந்தி மக்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாதிருப்பதில் எந்த அதிகாரம் உம்மைத் தடுக்கிறது?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan சனங்களுக்குக் கதை விடாதேயும். நான் கேட்பது உமது மார்க்சிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான தத்துவார்த்தம் வருமான , சொத்துவிபரங்கள் தொடர்பில் ஒரு மார்க்ஸியவாதி ஆற்ற வேண்டிய கடப்பாடு என்னவென்பது தொடர்பானதே?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் கூறும் விளக்கம் மார்க்சீயத்தின் அடிப்படைகளோடு பெரும் முரண்பாடு கொள்கிறதே ?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அது மார்க்சிச வாதிக்குத் தெரியும்.அதைப் புலிப்பாசிஸ்டுக்கள் வகுப்பெடுப்பதுதாம் சுத்தக் கொடூரம்.அதை நாங்கள் செய்துகொள்வது இருக்கட்டும்.புலிகளாகிய பாசிஸ்டுக்கள் நீங்கள்,இறுதிவரை மக்களை வன்னிக்குள் வைத்து வேட்டையாடிய காட்டுமிராண்டிகள், இறுதியாகச் சரணடைந்தபோது- என்ன நடந்ததென்றாவது சொல்வீர்களா?அல்லது பிரபாகரனுக்கு என்ன நடந்ததேன்று மக்களுக்குச சொல்வீர்களா?ஏனெனில் ,மக்கள்தாம் தமது உயிரையும்,உடமைகளையும் உங்களிடம் பறிகொடுத்து,உங்களை நம்பி நடாற்றில் வீழ்ந்தவர்கள்.அதைச் செய்ய வக்கில்லாத நீங்கள்,மகத்தான புரட்சி குறித்து வகுப்பெடுப்பதற்கு உங்களுக்குக் கொலைகாரப் பாசிசப் புலிகளுக்கு என்னடா அருகதையுண்டு?
vor etwa einer Stunde · Gefällt mir
Nadarajah Muralitharan

இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறுகிறது. நீர் அம்பலப்படுத்தப் போகிறன் எண்டு சொல்லிறியள். மற்றும் இங்கு மக்கள் என்பதில் தொழிலாளர்களையும் இணைக்கின்றீர்களா ? மக்கள் , தொழிலாளர்கள் எண்டு பேசும்போது லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழும் மக்களை, தொழிலாளிகளை எப்படி முதலாம் உலகநாட்டிலே மாத்திரம் தொழிலாளியாக வாழுவேன் என்று அடம்பிடிக்கும் உம்போன்ற அதியுயர் சலுகை பெற்ற தொழிலாளர்களோடு இணைத்துக் கொள்வீர்கள் என்பது தொடர்பான சந்தேகங்கள் எழும். அதை எப்படித் தங்களது கோட்பாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவீர்கள் என்பதையும் அறிய அகில உலகப்பாட்டாளி வர்க்கம் காத்து நிற்கின்றது.
vor 59 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
நான் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாரும்.அதன்பின் பாட்டாளிய வர்க்கம்,முதலாம்-இரண்டாம்-மூன்றாம் உலகம் பற்றிப் புலிகளுக்கு வகுப்பெடுக்க அவசியமொன்றுருவானால் அதைச் செய்ய எப்பவும் தாயராக இருக்கிறோம்.முதலில் உங்கள் மறைப்பு அரசியலில் பக்ககங்களைத் திறந்து ,மக்களுக்கு உண்மையையும்,அவர்களிடம் மன்னிப்பும்,புலம்பெயர் தேசத்தில் மக்களிடம் தட்டிப் பறித்த செல்வத்தைத் தமாதாக்கி வைத்திருக்கும் உம்மைப் போன்ற புலிப்பினாமிகளிடமிருந்து மீள மக்களிடம் சென்றறைடைய வழியைச் சொல்லும்.
vor 53 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அண்ணா ! ஆத்திரப்படாதீர்கள்! உங்கள் நிதானமின்மை கண்டு மார்க்சின் கல்லறை திறந்து கொண்டுவிடும். நீங்கள் தானே தொடர்ந்து சொல்லுகிறீர்கள். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டு விட்டார்களென்று. எனவே உங்கள் திட்டம் பற்றிப் பேசுங்கள். எத்தனை இலட்சம் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் தங்கள் பின்னால் அணிவகுத்துள்ளார்கள் என்பது பற்றி மொழியுங்கள்.!
vor 52 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan என்னண்ணா ! குழந்தை மாதிரிப் பேசுறியள். அவையளையெல்லாம்(மக்களை) மீட்டாயிற்று என்று உங்களை மாதிரி இடதுசாரி ஆட்கள் சொல்ல நீங்கள் மக்கள் கண்களில் விழிப்பு உண்டாயிற்று, அவர்கள் புதிய வழியில் அணிதிரள்வார்கள் என்றும் ஆருடம் சொல்லி நிறைய நாளாயிற்று! பேந்தும் புலி, கிலியெண்டு ஏன் அண்ணை வெருளிறியள்?
vor 45 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அவர்கள் அம்பலப்பட்டாயிற்று! தோற்கடிக்கப்பட்டாயிற்று! கதை முடிந்தது! என்று கூப்பாடு போடும் நீங்கள் இப்பவும் அவை அதைச் செய்ய வேணும், இதைச் செய்ய வேணும் எண்டு குதியாய் குதிக்கிறியள் ?
vor 43 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
இதனூடாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்.தொடர்ந்து பாசிஸ்டுக்களாகிய நீங்கள் மக்களிடம் உண்மை பேச மறுத்துவிட்டு,மற்றவர்களிடம் புரட்சி குறித்துக் கேட்கிறீர்கள்.நாமோ புரட்சிக்குரிய சூழலே இன்னும் உருவாகவில்லையெனச் சொல்லி கருத்தாடும்போது,புரட்சி-விடுதலையென அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடியாட் படையாகவிருந்து முழு இலங்கை மக்களையும் வேட்டையாடிய நீங்கள்,சிறார்களை உயிராயுதம் எனப் பிடித்துக் குண்டைக்கட்டிக் கொன்று குவித்த நீங்கள்,இப்படி உயிர்த் துஷ்பிரயோகஞ் செய்த நீங்கள்தாம்,உண்மையில் என்ன நடந்தது.எது நடந்தது-எப்படி இவ்வளவு கொலைகளையும் தியாகம்-தேசமெனச் சொல்ல முடிந்ததென்பதை உரைத்தாகவேண்டும்.தொடர்ந்த மக்களுக்குள் இனவாதத்தை விதைத்து,மக்களினங்களைப் பிளவுபடுத்தி ,மீள ,உயிர்ப்பலியூடாகப் பதவி-பணம் அடைய முனையும் புலிப் பினாமிகளைக் குறித்து மக்கள் மிக விரைவாகவே வன்னிக்குள் படித்துவிட்டனர்.ஆக,நீங்களாகத் திருந்த முடியாதவொரு அதிகாரத்துக்குள் ஒளித்து வைத்திருக்கும் மக்கள் விரோத அரசியலை இதுள் வெளிப்படுத்த முடியாது திண்டாடும் உம்மை நான் மன்னித்தாலும்,மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ஓய்!
vor 41 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் அண்ணை ? உண்மையாய்த்தான் கேக்கிறன்! குறை நினையாதையுங்கோ! அவையள் இப்பவும் இருக்கினமா? இருந்தாலும் பலமாய் இருக்கினமா ?
vor 40 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அண்ணை! நீங்கள் ஜேர்மனியிலை குந்தியிருந்து ஈரோவிலையெல்லை சம்பளம் எடுக்கிறியள். அதாலைதானோ புரட்சிக்குரிய சூழல் உருவாகவில்லையெண்டு கதை விடுறியள் அல்லது ......
vor 38 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam புரட்சிக்குரிய சூழலையே இந்தியாவுக்கு-ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்துப் புரட்சியாளர்களை வேட்டையாடி புலிகள்,எந்த நயவஞ்சகத்தோடு இப்படி மீளவும் கொலைக்காரப் பாசையில் உரையாட முடிகிறது?எந்த ஏகாதிபத்தியத்தின் தயவில் நீர் ரூபாயில் சம்பளம் எடுக்கிறீர்?
vor 35 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan நீங்களண்ணை ஒரு மக்கள் தலைவன்தான்! உங்கள் பின்னால் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் அணிவகுத்துத் திரண்டெழுந்து நிக்கினம் எண்டும் சொல்லுங்கோ! சாதாரணமாக நீங்கள் போடுற கூட்டத்துக்கு எத்தனை ஆயிரம் பேர் வாறவையெண்டும் சொல்லுங்கோ!
vor 32 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நீங்கதானை அண்ணை ஈரோவிலை கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கிறனியள்!
vor 30 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan இதைவிட்டிட்டு நீங்கள் ஒரு இடமும் புரட்சிக்காகப் புலம்பெயர மாட்டீங்கள் எண்டும் உங்களுடைய செந்தோழர்களுக்கு நன்றாகவே புரியும்!
vor 29 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நான் இலங்கைக்குப் போய் தொழிலாளர்களுக்காய் வேலை செய்யுங்கோ எண்டு சொல்லேக்கை உங்களின்ரை அடிவயிறு பத்தியெரிஞ்சதை என்னால் உணரக் கூடியதாக இருந்துது!
vor 26 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan எந்நத் தியாகத்தையும் பாட்டாளிகளுக்காகச் செய்ய முடியாத வக்கற்ற கூட்டத்தில் நீர் தலையானவர் என்பதை யாம் அறிவோம்!
vor 25 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan ஜேர்மனிய முதலாளிய அடிவருடியான நீவிர் மலையகம் சென்று வருடத்தில ஒரு மாதம் வேலை செய்ய முடியாதா ?
vor 23 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நான் உடல்வருத்திக் கொத்துக்கொத்தாக யூரோவில் சம்பளம் எடுப்பதில் பெருமைகொள்கிறேன்.ஆனால்,நீங்கள் அனைவரும் கொலைக்களத்துக்குப் பாலகர்களை அனுப்பியபடி,மக்களை"அதோ தமிழீழம் மலர்கிறது"என்ற பொய்யுரைத்து ஏமாற்றியபடி, உண்டியல் குலக்கியும்,உள்வீட்டுக்குள் மிரட்டியும் தட்டிப்பறித்தல்லவா யூரோக்களை-டொலர்களைப் பெற்றீர்கள்!;அதைத் தொடருவதற்காக எத்தனை உயிர்களைத் துடைத்துக் குப்பையில் போட்டீர்கள்!இது பெருமையானதா முரளிதரன்-சொல்லுங்கள்!
vor 21 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அதற்கான பணபலமும், படை (இடதுசாரி) பலமும் இருந்தும் குசியாய் இருந்து கதைவிட்டுக் கொண்டு புரட்சியாளனாய் இணையத்திலும், முகப்புத்தகத்திலும் வலம் வருவது விலாச விளையாட்டுத்தானே!
vor 20 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan உமது மொழியில் பாசிஸ்ட்டுகள் எதையும் செய்யட்டுமே! ஆனால் உண்மையான மார்சீயப் பொதுவுடமைவாதியான நீவிர் அவ்வாறு செய்ய முடியாது!
vor 18 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan ஒரு பாசிஸ்ட்டை பொதுவுடைமைவாதியோடு ஒப்பிட்டு நியாயம் பேசுதல் தகுமா ?
vor 16 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam ஒன்றுக்கொன்று மாற்றிப் பின்னூட்டுப் போடாதீர்கள் முரளிதரன்,புரட்சியை நாசமறுத்ததுமல்லாது,சொந்தச் சகோதரர்களையே வேட்டையாடிய நீங்கள்,இப்போது இலங்கைக்குப் போய் மலையகத்தில் வேலை செய் என்று எம்மைப் பார்த்துக் கட்டளையிடுவதை எந்த அதிகாரத்திலிருந்து சொல்கிறீர்?
vor 14 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan நீர் கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கும் ஈரோவிலும் மூன்றாம் உலகங்களின் ரத்தம் ஊறிக்கிடக்கிறது.
vor 13 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan இது கட்டளையல்ல தோழரே! ஒரு பொதுவுடமைவாதி பணியாற்ற வேண்டிய களங்கள் அகிலமெங்கணும் விரிந்து கிடப்பினும் அதனை மறுத்து சலுகைகளையும், சுகங்களையும் ஒப்பீட்டு ரீதியில் வேண்டி ஐரோப்பிய மண்ணில் முகத்தைப் புதைத்து வாழும் உம் போன்றோரிடம் தார்மீக அடிப்படையில் விடு்க்கப்படகின்ற அறக் கேள்வி இது!
vor 9 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நான் உழைக்கும் யூரோவில்,இரத்தம் மட்டும்தாம் ஊறிக்கிடக்கு முரளி,ஆனால்,நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் மக்கள் சொத்தில் ,எத்தனை உயிரினது ஆன்மா ஒட்டிக்கிடக்கிறது தெரியுமா-எத்தனை பெண்ணின் விதவைக்கோலம்-எத்தனை தாயின் கண்ணீர் ஒட்டியிருக்கிறது தெரியுமா?"நியாயம்-தர்மம்,அறம் "பற்றிப் பேசும் தகுதி புலிப் பினாமிகளுக்கு இருக்கிறதா?எந்த மனசாட்சியோடு இப்படி உரையாடுகிறீர்கள்?அது உங்களிடம் இல்லையென்பதாற்றாம், இதுவரை மக்களது வாழ்வோடு தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட முடிகிறது.வன்னியில் சாவின் எல்லைவரை சென்றவர்களை அம்போவெனவிட்டுவிட்டு,அவர்களால்-அவர்களது உயிரால் போராட்டமெனச் சொல்லிக் கொள்ளையிட்ட பணத்தோடு,மீளவும் கணனிமுன் உட்கார்ந்து உம்மால் தமிழ் தட்ட முடிகிறதென எண்ணும்போது,நீங்கள் மனிதர்களே இல்லை!மிக மோசமான மக்கள் விரோதிகள் என்பதைத் தொடருரைத்து விடுகிறீர்கள்.இந்தவுரையாடலை நாளைய தலை முறைக்குச் சாட்சியாக்குகிறேன்-வணக்கம் மக்கள் விரோதிப் பாசிசப் புலியே!
vor 4 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan தோழரே தங்களிடம் எத்தனை தடவைகள் கூறிவிட்டேன்! ஆத்திரப்படாதீர்கள்! எம்மை சுயவிமர்சனம் செய்யாமல் வரலாற்றில் நாம் நிறைவான நகர்வை நிகழ்த்திவிட முடியாது. ஆனால் ஒரு பொதுவுடமைவாதி தான் சுயவிமர்சனத்தை நிகழ்த்த மறுத்து தேசியவாதிகளிடம் விளக்கம் கேட்டு உரையாடுவது வரலாற்று அபத்தமல்லவா ?
vor 11 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam அதைத்தாம் நானுஞ் சொல்கிறேன்.புலிகள் மக்களிடம் ,தம்மைச் சுய விமர்சனஞ் செய்து உண்மைகளையுரைத்துப் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதும்,மக்கள் சொத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்குக் கையளிப்பதும்,மீளப் போராட்டத்தைச் சொல்லிக் கொள்ளையிடாது,மக்களைத் தம்மைத்தாமே தீர்மானித்து இயங்கும் நிலைக்கு விட்டுவிடச்சொல்லி...நானும் ,இதையேதாம் சொல்கிறேன்.தலைவர்கள் மக்கள்தாமேயொழிய நாம் அல்ல!உங்கள் பாசையின்[புலியிசத் தலைமைவழிபாடு ]"தேசியத் தலைவர்"இலட்சம் உயிருக்குத்தாம் வேட்டு வைக்க முடிந்திருக்கிறது.நாமோ ,மக்களையே தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்வதில் மக்கள் முதற்கட்டமாக வெற்றிகொள்வது,இயக்காவாத மாயையிலிருந்து விடுதலையடைவதென்று அர்த்தம்.
vor 2 Sekunden · Gefällt mir


Nadarajah Muralitharan
இந்த உரையாடலை நானும் திறந்த மனதோடு சாட்சியமாக்குகிறேன்! வரலாற்றில் எந்தவித ஆதாரமும் அற்று தனிமனிதர்கள் மீது எவ்வாறான அவதுாறுகள் பொதுவுடமைவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சாட்சியம்! மற்றும் பொதுவுடமைவாதியென்று அழைத்துக்கொள்ளும் ஒருவன் தேசியவாதிகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த அரசியற் பிரக்ஞையற்று பக்குவமற்ற முறையில் விவாதத்தைக் கையாளும் அணுகுமுறையை அவதானிப்பதற்கும் இது ஓர் சாட்சியம்! பொதுவுடமைக் கோட்பாளராகத் தன்னை வரித்துக்கொள்வதில் பிரியமுடைய ஒருவர் எவ்வாறு வார்த்தைகளை நாகரீகமற்றமுறையில் பயன்படுத்துகிறார் என்பதற்கும் இன்றைய வார்த்தையாடல்கள் ஓர் சாட்சியம்!
vor 20 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நன்றி நண்பரே! மீண்டும் பேசிக்கொள்வோமு்!
vor 17 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நாங்கள் வார்த்தைகளை மட்டுமேதாம் "நாகரீகம்"அற்றுச் செய்தோமெனப் பகிரங்கமாகச் சொல்வோம்.புலிகளாகிய நீங்களோ,மனிதர்களின் உயிர்களையல்லவா, நாகரீகமற்ற முறையில் கொன்று தொலைத்தீர்கள்.தேசியத்தைச் சொல்லி,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்திய நீங்கள்,வார்த்தைகளுக்கும் நாகரீகம் கற்பிக்கும் இன்றைய நிலையில்,ஒரு யுகம் பிறந்திருக்கே-அது,நிச்சியம் உங்களைக் கேள்வி கேட்கும்!;நாளைய தலைமுறை, கொலையரசியலையும்,மாற்றுக் கருத்துக்குக் கொலையையே பரிசளித்து, ஒரு இனத்தை தேசியவாதத்தூடாகக் காயடித்துக் குறந்தேசிய வெறியின்வழி எங்ஙளம் இன்னொரு இனதுக்கு அடிமையாக்கியதென்பதை இந்தவுரையாடலது பண்பிலும்,கொலைவெறியாளர்கள் எங்ஙனம் மக்கள் நலவிரும்பிகளெனும் போர்வையில் மீளவும், தமது கோரப் பற்களை பதியம்போடும் தந்திரத்தையும்,புரட்சியாளர்களைச் சொல்லி மறைப்பதில் கிட்லரது பிரச்சாரகன் கொய்ப்பிள்சை [ nationalsozialistischer Propaganda war das von Propagandaminister Joseph Goebbels geleitete Reichsministerium für Volksaufklärung und Propaganda.]மிஞ்சியவர்ளென்பதை, இந்த உரையாடல்வழி புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.அந்தவகையில் முரளிதரன் ,தமிழ்பேசும் மக்கள் தமது அழிவிலும்,ஒரு உண்மையை இனங்காண வாய்புண்டு-அது,பாசிஸ்டுக்கள் இந்தச் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாய்ப்பிழந்தபின் தம்மை மறைத்துக்கொள்வர்.சந்தர்ப்பஞ் சரியாக வரும்போது மீளத் தமது கைவரிசையை, அந்நியச் சக்திகளோடு சேர்ந்து காட்டுவார்கள் என்று.அதற்கு ஒரு முரளிதரனும் சாட்சியாகட்டுமே!-நன்றி!.
vor einigen Sekunden · Gefällt mir

Wednesday, November 30, 2011

தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்...

மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு...

//விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.//

இரமணியின் முக வாயில் : -Manivannan Ehambaram


தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.


„தலைவர் வல்லவர்;

தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்;

தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்;

தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்!.“


தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் „துரோகத்தின்“பெயரில் நடாத்தி முடித்தது.

நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது:


// புலி எதிப்பாளர்களை நான் நன்றாக அறிவேன் . அவர்களின் குணம் செய்கை என்பவற்றை வைத்து சில கணிப்புகள்

என்னிடம் இருக்கின்றது இது எனது சொந்த அனுபவம் ....நான் சந்தித்த பலரிடம் இருந்து அறிந்தவை....

1 ) வேற்று இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களை இன்னும் விடுதலை விருமிபிகள் என்று சொல்லவதும் ஆனால் புலிகளின் பாதை சரி இல்லை என்றும் ( ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழை என்று சொல்வது) புலிகள் தங்களை போராட விடவில்லை என்றும் சந்தர்ப்பவாதம் பேசுபவர்கள்.

2 ) சுயநல அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளின் நிழலில் இருப்பவர்கள்.

3 ) விடுதலை போராட்டத்தை எதிரிகளின் காலடியில் போட்டுவிட்டு கொள்கை மாறி சுகபோகம் அனுபவிக்கும்
கூட்டம்

4 ) ரகசிய மது மாது போன்ற எல்லா பழக்கத்துக்கும் அடிமைப்பட்ட சிலர் தங்களை புத்திஜீவிகள் என்று சமுதாய அரங்கில் தங்களை ஆய்வாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் காட்டுபவர்...

5 ) எதையும் செய்யாது வீராப்பு பேச்சில் காலம் கழிக்கும் ஒரு சிலர்

6 ) தேசத்துக்கும் பிறமக்கள் துயருக்கும் உதவ மனம் இல்லாதவர்கள் .

7 ) தங்களை விட சிறந்த கல்விமான்கள் இல்லை என்றும் தங்களிடம் இருக்கும் திறமைகளை தாங்களே
புகழும் கூட்டம்.

8 ) பதவி ஆசையும் தன்னலத்துக்காக எதையும் செய்ய துணியும் கூட்டம்....

9 ) எதிரிகளின் கைகூலிகள் , தன தவறை மறைத்து பிறர் மீது குற்றங்களை சுமத்தும் குணம்.

சரியான தகவல் தெரியாது பிறரின் சொல்கேட்டு தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள்...
பிழையான போதனைகளில் வேறு இயக்க அல்லது எதிரி வழியில் செல்பவர்கள்...
அரசியல் சுயநலம் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கு. இப்படியாக பல குணம் இருக்கும்

அனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எந்நிலையிலும் .........தமிழ் உணர்வு உள்ளவர்கள். தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்



விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.
ஈழ விடுதலைக்கு எதிராக சொந்த தாய் தாய் உடன்பிறந்தவர் செயல்பட்டாலும் அவரை தேச விரோதிகளாக கணித்து கொல்லும்கொள்ள்கை வெறி அவர்களிடம் இருக்கும். தாய் மண்ணுக்காக வாழும் அனைவரும் விடுதலைப்புலிகள்.....// -Manivannan Ehambaram
http://www.facebook.com/profile.php?id=100000789360672&sk=wall


அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை“எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்“எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.

இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்“தமிழீழக் கோசம்“எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?

இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?

இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?

தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?

சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?

இத்தகைய „தமிழீழ“க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?

இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?

அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?

இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய „மாவீரர்கள்“பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?

தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.

இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?

இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.

மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் „தமிழீழத் தாயகம்“ எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.

தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.

புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் முள்ளி வாய்க்காலும்,கே.பி.யும்,கருணாவும் தெளிவுப்படுத்தி விட்டனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.

நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.

இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.

இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?

இதன் வழி நாம் சிந்திப்போமா?


ப.வி.ஸ்ரீரங்கன்.

Monday, November 21, 2011

நந்திக் கடற்கரையில் நவம்பர்: 27

"மாவீரர்கள்" : பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...

நவம்பர்: 27,நெருங்க-நெருங்க,


ந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.


இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம் பறிக்கும் வியாபார உத்தியோடு, அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது பணப்புலி நெடியவன் குழுவுக்குள்ளும்,காடுகடந்த "தமிழீழ அரசின் " தலைமையில் இன்னொரு பிளவுக்குள் தவிக்கும் இலண்டன் தலைமைக்ககுள்ளும் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.

" குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத பணப்புலி..."

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து , தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் ,அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் பாசிசப் பணப் புலிகள்,இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இவர்களாலேயேதாம் காட்டிக்கொடுக்கப்பட்டு[இறுதியில் சரணடைந்து] செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.மாவீரரை நினைவு கூரும் தகமை இந்தப் பணப் புலிப்பினாமிகளுக்கு உண்டா?

அந்தத் தகமையானது உண்மையான-நியாயமான அறங்களால் கட்டியமைக்கப்படுவது. மக்கள்சார்ந்த துளியளவு வெளிப்படையான அரசியலும் செய்ய முடியாத இந்த மாபியாக்கள்தாம் ,இனிவரும் கார்த்திகைத் தீபம் ஏந்தக் காத்துக்கிடக்கின்றனர்.தம்மால் பலியிடப்பட்ட அப்பாவிப் போராளிகளை வைத்து ,மீளவும் பணந் திரட்டம் இந்தக் கேடுகெட்ட புலிகளுக்கு வக்காலத்து வேண்டும் அறிவுகெட்ட தேசியப் பாலகர்களை எந்தப் பொழுதிலும் ஜீரணிக்கவே முடியவில்லை!தமது சொந்தத் தலைவனுக்கு என்ன நடந்ததென்றதையே மறைத்தொதுக்கும் களவாணிக்கூட்டம்,செத்த போராளிகளுக்த் தீபம் ஏற்றுவதற்கு இலாயக்கானவர்களா?

அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது ,தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.இதற்கான உறுதியான அத்திவாரமாக இந்தப் பலிகொடுக்கப்பட்ட பாலகர்களது முகங்களைக்காட்டி ,மீளமீளப் பணம்புரட்டும் வியாபாரக் கூட்டமாக மாறியுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளை அவர்களது குணவியல்புக்கமைய அவர்களே வெளிப்படையாகக் "குத்துவெட்டில் "இறங்கிக் காட்டிக்கொண்டாலும் ,செத்த போராளிகளது முகங்களைக் காணும் எந்த மனிததரும் இரங்கவே செய்வார்கள்.

இந்தப் பலவீனத்தைக் காசாக்குவதில் அதீத கவனஞ் செலுத்தும் பணப் புலிகள்,தம்மால் அநாதவராக விடப்பட்ட போராளிகளையோ அல்லது தம்மால் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பப்பட்ட போராளிக் குழந்தைகளது பெற்றோருக்கோ இதுவரை எந்தக் காரியமும் செய்யவே இல்லை!எனினும்,கார்த்திகை இருபத்தியேழு என்பதில் காசு காணும் மனோபாவமானது,ஒரு இனத்தின் உரிமையையே வியாபாரமாக்கிய கையோடு ,செத்த போராளிகளது ஆன்மாவையே வைத்துக் கடைவிரிப்பதில் தமது "ஆன்மாவென்பது பணம் புரட்டும் ஸ்த்தானத்திலேயேதாம் புரட்டிப் போடப்பட்டதென" நிரூபிக்கின்றனர்!
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள், பசி,பட்டுணி, சாவு, பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில் உருவாக்கி விட்டுள்ளது! இப்போது ,விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!

புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்-நெடியவன்-கொடியவன் குழுவென "பணப் பிசாசுகளாக வலவந்து ,மக்களை ஏமாற்றிக்கொள்ள மீண்டும் செத்த போராளிகளது பெயரால் பணவேட்டைக்காகக் கார்த்திகைத் தீபம்,மாவீரர் முகந்தாங்கி உண்டியல் கிலுக்குமானால் ,தமிழ்பேசும் மக்கள் அடுத்த நூற்டில் ஆட்டு மந்தைகளாகவே அடுத்தவர் தயவில் வாழக் கற்றுக்கொள்வர்.இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
21.11.2011

Saturday, August 20, 2011

இந்தக் கிரீஸ் குழு...

அரச ஆதிக்கம்-அரச ஜந்திரம்...

ஆதி ஆதித்யன் :
" இது சம்மந்தமான குறிப்பில் கலையரசன் என்பவர் அதிகளவில் கொக்கரித்துக் கொண்டிருந்தார். யாருக்கு எப்படியான ஆபத்து இருக்கிறது என்பதற்கப்பால் இந்த பிசாசுகளின் பின்னணியில் சிங்கள ராணுவம் இருக்கிறது என்பதை அடியோடு மறுத்து வந்த கலையரசன் என்பவர் சிறிலங்கா அரசின் முகவர் என்பது பின்புதான் தெரியவந்தது. அவர் நீண்டகாலமாக அந்த வேலைதிட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ... ......"

Parani Krishnarajani முக நூற்றட்டியில்

பரணி, அரச ஆதிக்கம்,அரச ஜந்திரம்,அதன்வழி மக்கள் விரோதங்கள் குறித்து நிறையப் பலர் எழுத முடியும்.இனவழிப்பில் அதீத தேவையை வற்புறுத்தும் சிங்கள ஆளும் வர்க்கத்தினது நலன்களின்வழி அரச ஆதிக்கமானது பெரும்பகுதிச் சிங்களப் பாமரர்களைத் தொடர்ந்து கட்டிப் போடுவதில் பல காரியங்களைச் செய்வதை நாம் சமீப காலமாகப் பார்த்து வருகிறோம்.இது பாராளுமன்ற ஆட்சியின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதில் பண்டுதொட்டியங்கிய வியூகத்தின் இன்னொரு வகைமாதிரியானது.

எழுத்தில் அந்ததந்தக் காலத்து அரசியல் அராஜகங்கள்-போக்குகள் குறித்துப் பதிவது அவசியம்.

நீங்கள் பதிந்ததும் அவசியம்.

ஆனால்,அதை வெட்டிக் கருத்தாடுபவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதாம்.

கருத்துகளைக் காலம் தீர்மானித்துக்கொள்ளும்.

புலிவழி "தமிழீழம்"சாத்தியமென்றும்,காரிகாலன் அதைச் செய்து காட்டுவான் என்பதும் தமிழர்களின் 95 வீதமானவர்களின் புலம்பலாக-அவாவாக இருந்தது.இதுள் , பெயருக்குப் பின்னால்-முன்னால் பல பட்டங்களைச் சுமப்பவர்களே பெரிதும் புலம்பிக்கொண்டனர்.

அப்போது,நாம் புலிகள் பூண்டோடு அழிக்கப்படுவர்களெனச் சொன்னோம்.அவ் வேளைகளில் நம்மைக் கடித்துக் குதறிய பெரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் நாம் பார்த்திருந்தோம்.

இது,வரலாற்று இயங்கியலைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் பார்க்காத தொழில்முறைக் கல்வியாளர்களது வினையாக இருந்தது.அவர்களுக்குப் பின்னே ஒருபெரும் வால் கூட்டம் தொடர்ந்து அணிவகுத்துக்கொண்டது.இப்போது,இந்த உதரிவர்க்க "அறிஞர்"குழாம் இருந்த இடம் தெரியாது உதிர்ந்தே போய்விட்டது.

என்றபோதும்,உண்மைகள் முகத்தில் ஓங்கி அறையும்போது,அவர்கள் பெரும் மௌனத்துள் தியானிப்பதும்,அடையாள நெருக்கடி ஏற்படும்போது உரையாடுவதிலும் கவனம் கொள்கின்றனர்.மீளவும்,கருத்தியல்வழியாகச் சிந்திப்பதில் தமது இயலாமைகளை முற்போக்குவாதிகளிடம் கொட்டுவதில் காலத்தைப் போக்குகின்றனர்.

இன்றைய இலங்கையில் நிகழும் அராஜகங்களுக்கு நேரடியாக அரசுமட்டுமே காரணமில்லை.

அரசினது ஆதிக்கத்தை விரிவாக்கும் அந்த அரசினது ரீபிரசென்சுகள்[Representative] நமக்குள்,கிராமத் தலைவர்களாகவும்,எம்.பி. அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.அத்தோடு இராணுவத் தளபதிகளாகவும்.இவர்கள் தத்தமது பதவிகளைக் காப்பதிலும்,தமக்கு எதிராக ஓட்டளித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்த தமிழ்பேசும் மக்களை ஏதோவொரு வகையில் பழிவாங்கப் பல தளங்களில் இயங்குகின்றனர்.

புலிகளைப் பூண்டோடு அழித்த யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நகர்ந்தும் இலங்கை இராணுவத்தில் எந்த மாற்றமுமின்றி அது யுத்தக் காலத்துக் கட்டமைப்போடு இருக்கிறது.

இராணுவத் தளபதிகளுக்குப் தமது பதவியின் இருப்பு நிலைப்பட்டாக வேண்டும்.அமைச்சர்களுக்கு(டக்ளஸ் போன்றவர்கள்)த் தம்மை ஏமாற்றிய மக்களைப் பழிவாங்க வேண்டும்.கிராமத் தலைவர்கள் தமது பதவிகளை இராணுவத் தளபதிகளோடிணைந்து காப்பதில் காரியவாதிகளாக இருக்கின்றனர்.

சமூகத்தில் குடிசார் அமைப்புகளது தோற்றம் அவர்களை அச்சப்படுத்தும்போது தமது நிலைகளைக் காப்பதில் கிரிஸ் குழு அது-இதுவென அராஜகம் மேலெழுகிறது.

அரசுக்கு இது தெரிந்தும் அது இராணுவ ஆட்சியைத் திணிப்பதில் கவனஞ் செலுத்துவதும்,கூடவே தமிழ்ப் பிரதேசமெங்கும் வாழும் தாழ்த்தப்பட்ட(தலித்துகள்)மக்களை வென்றெடுத்துத் தனது ஆதிக்கத்தை நிலப்படுத்த விரும்புகிறது.

இவைகளின் கூட்டுவடிவமான இந்த நிகழ்வுப்போக்கை,புலியெதிர்ப்பு அரசசார்ப்புக் கூட்டத்தால் சகிக்க முடியாதுதாம்.அவர்களது எஜமானர்களே அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும்போது,இவை குறித்துப் பெரிதாக விவாதிக்க வேண்டியதில்லை!

ஆனால்,அவர்களது நடிவடிக்கையின் பின்னே உந்தப்படும் அரச ஆதிக்கத்தின் கண்ணிகளை விவாதிப்பதில் கவனமெடுக்கலாம்.அரச ஆதிக்கத்துக்கும்,அரச ஜந்திரத்துக்குமான இருவேறு தளங்களை மிக விரிவாக விளங்கியாக வேண்டும்.

இந்த இரு தளமும் ஒன்றையொன்று காப்பதில் தமது இருப்பையிட்டுப் பாரிய மனிதவிரோதத்தைக் கட்டமைக்கின்றன.அதிலொன்றே இந்தக் கிரீஸ் குழு.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
20.08.11

Tuesday, August 02, 2011

வேளாள முள்ளி வாய்க்கால்,கரையான் முள்ளி வாய்க்கால்....

இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்தவர்களது தலித்துவக் கோரிக்கைகள்.

"Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" By Dr. B.R. Ambedkar

லங்கை அரசு கடற் கண்காணிப்பு வலையத்த்தின் வழி சாதிரீதியகச் சில வகைமாதிரித்தாக்குதலைச் செய்கிறது.அது ஒரு பக்கத் தாக்குலாக வரியும்போது,மறு வார்ப்பாகப் பிற்போக்குத் தேசியத்தின்தோல்வியில் வர்க்க முரண்பாட்டைக்குறித்து இலங்கை அரசு,சிங்கள-தமிழ் மீன்பிடியாளர்களைப் பிளவுப்படுத்துவதில் சில தர்க்கால வெற்றியையும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைப்பதில் இத்தகையத் துண்டு உரையாடலிலுமாக ஒரு பிரச்சனையுள் பல காய்கள் நகர்த்தப்படுகிறது.




இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின்கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தெரிந்த நீங்களெல்லோரும்,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும்,அதையே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகிறீர்கள்.சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது கடந்த 200 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.

பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் தோல்வியோடு தாழ்த்தப்பட்ட மக்களது கழுத்துக்கு வரயிருந்த கயிறு இற்று அறுந்துபோய்விட்ட பின்பும்,சரியான திசையில் இந்த ஆய்வுகளை-கோரிக்கைகளை நகர்த்தமுடியாத நீங்கள், இத்தகைய அரைவேக்காட்டு நறுக்கோடு தமிழ்பேசும் முழுமொத்த மக்களது விடுதலைக்கு வேட்டுவைப்பதில் காலத்தைக் கடத்துவது சாதியத்தை அகற்றும் போராட்டமாகப் படவில்லை!

தமிழ்ச் சமுதாயத்தின் யாழ் மையவாதத்துக்குட்பட்ட தமிழ் மத்தியதரவர்க்கத்தின் இயற்கையான பலவீனத்தினதும்,முன் அநுபவமற்ற உலகியிற் கண்ணோட்டத்தாலும்,இன்னுஞ்சில விஷேக் குணாம்சங்களினது விளைவாலும் இந்த மத்தியதர வர்க்கம் நிலப்பிரபுத்தவப் பிற்போக்குத் தேசிய வாதத்துடன் தமிழீழம் காணப் புறப்பட்டு, புரட்சிகரக் குணாம்சத்தையே எட்டமுடியாது சிக்குப்பட்ட இன்றைய சூழலில் இந்த வகைக் குறுங் கதையாடல் எதையும் சாதிக்காது.இது மேலும்மக்களைப் பிளவுபடுத்தி அதே பிற்போக்குத் தேசிய வாதத்தை வளர்ப்பதிலேயேதாம் முடியப்போகிறது.

இந்தச் சூழலை விளங்கிக் கொள்ள ஒவ்வொரு தொழிற்பிரிவையும் இலங்கை-இந்தியச் சூழலில் புரியும்போது, அங்கே வர்க்க ஒடுக்குமுறையானது சாதியவொடுக்குமுறையாக விரிவதை இனங்காண முடியும்.இதைக் கவனத்தில் எடுப்பதை மறுப்பதென்பது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தின் இருப்பைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதைவிட வேறென்னவாக இருக்க முடியும்?


ஸ்ரீரங்கன்

02.08.11

Saturday, June 25, 2011

"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?

தமிழ் பேசுவதால் தமிழர்களா?;
"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?



" தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்."


ழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை, நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.


அங்கே , "பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும்" நாம் அறிந்ததுதாம்.


வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால் , அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தருணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.



இக்கட்டுரையே,தீபம் தொலைக்காட்சி"கேள்வி நேரம்"உரையாடலில் கீரன் முன்வைக்கும் அல்லது அவர் குரலூடாக முன் தள்ளப்படும் ஒரு வரலாற்றுப் பழி குறித்தான பார்வையை எப்படிப் புரிவதென்ற முயற்சியின் நறுக்கே!


"சாதியம்-தீண்டாமை" எனும் கருத்துப் பிரிப்பில்(சமூக உளவியல்) இயக்கப்பாட்டை மனோவியற்றளத்தில் பண்பாட்டு ரீதியாகப் புரிய வற்புறுத்துகிறார்.அவ்வளவு இலகுவாக இதைப் புரிவது கஷ்டமான காரியம்.எனினும்,முழுமொத்தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில் இதை எதிர்கொள்வது எப்படி?என்ற சிக்கலை எல்லோரும்தட்டிக்கழித்துப் புரட்சி பேசுகிறோம்.பண்பாட்டு இடைவெளிகள் பூர்ஷ்சுவாக் கருத்தாக்களது வழியுள் அவர்களது நலன்களைத் தக்கவைக்கும் முயற்சியில் அது நிலைபெறத் தொடங்கும்போது எஞ்சியது பூர்ஷ்சுவாப் பண்பாட்டு ஒடுக்குமுறைதானே?


ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் இத்தகைய கீரன் போன்றவரது கருத்துக்கள் எப்பவுமே தட்டிக்கழிக்க முடியாதவை.ஆனால்,இக் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் முன்வைக்கும் சாதியப் பிரச்சனைகள் அவ்வளவு இலகுவாக நீர்த்துப் போக முடியாதவை என்றே நான் கருதுகிறேன்.


தனித் தமிழ்அரசு-ஆளுதல்:


"ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்குது"


இந்தச் சமூக உளவியலையுடைத்துப் புரியும்போது சில நூற்றாண்டாக மூன்றாம் உலகத்தில் நிலவிய காலனித்துவக் கட்டத்தைக் குறித்துச் சில புரிதலுக்கு வந்தாக வேண்டும்.காலனித்துவ வாதிகளது கருத்தாளுமையானது
தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு-அந்நியர்களால்- இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இத்தைய உள்ளகக் காலனியத் தொடர்ச்சியின் வழியாகவாவது தமிழ் மேட்டுக் குடியின் ஆளும் மனவிருப்புப் "பூர்த்தியாகும் மனநிறைவு" தொடர்ந்து தனக்குள் மெலியவர்களைக் கொத்தடிமையாக்குவதில் ஒருவித ஆளுமை வெளிப்பாடாக உருப் பெற்றிருக்க வாய்ப்புகள் வரலாற்றில் அதிகமாகவே தென்படுகிறது.இதைத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளின் வழி நிறுவது கடினமாயினும்,மனோவியற் புரிதலில் வெட்ட வெளிச்சமாக வகுத்துக்கொள்ள முடியும்.


தனியுடமைச்சமுதாயத்ததுள்,நிலவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்,அதையொட்டிய ஒடுக்கு முறைகளும் அரசியல் அதிகாரம் என்பதற்கு ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞானபூ ர்வமாகப் புரிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே, தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.



காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவ-பல் தேசிய மயக் காலகட்டத்து இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள், மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாக வூன்ற வைத்துள்ளன. இவற்றைக் கடந்து நாம் இந்தப் பாழ் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட புதிய பாட்டாளிய வர்க்கப்பண்பாட்டை,பன்மைத்துவ சிறு அடையாளங்களை,பொருந்தாத் தன்மையிலான சிறு சமூக அமுக்கக் குழுமங்களாக உருவுறும் வேறுபாடுகளை இணைக்கும் பண்பாட்டைப் படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில் , வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.அவர்கள் இந்தியப் பார்ப்பனப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்குப் பலியாகும் சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு போகமுடியாது.கீரன் இத்தகைய பிளவை மிக வன்மமாக வற் புறுத்துகிறார்.இதற்குப் "பாகிஸ்த்தானைப் பிரித்தது ஜின்னாதாமென"ப் புலம்பித் தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.அகண்ட பாரதம்,ஆபத்தானதெனக்கொள்ளும் நவ காலனித்துவம் இப்படி, காந்தி-ஜின்னா வழியூடாக வேறு வரலாற்றைச் சொல்ல வைத்திருக்கிறது.அதை,வாந்தியெடுப்பது அனைவருக்குமான விடுதலையைத் தந்துவிடப் போவதில்லை!


பாண்பாட்டு ஒடுக்குமுறை வரலாறு:



வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது இல்லையா கீரன்?


அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினூடாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.சாதியத்தை வேரறுப்பதற்கான முதற்படி இங்கிருந்துதாம் தொடங்க முடியும்(இதைவிட்டு இனவாதத்துக்கு எதிரான எழிச்சியைப் போராட்டத்தைக் கூறுபோடுவது அல்ல என்பதையும் இதில் புரிந்தாகவேண்டும்!).


அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக தமிழ்ச் சமூகத்தின்உரிமைகளைச் சிதைக்கும் காரியத்தில் புலம்பெயர் தலித்துவக் குறுக்கல் வாதம் தொடர்ந்து தன்னை விருத்திக்கிட்டுச் செல்கிறது.இதைக் கீரன்போன்ற இலங்கைச் சிங்கள அரசுக்குப் பலிபோன கடாக்களது வழி புரியும்போது,இவர்கள் குறுக்கே நின்று தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய உரிமை மீது கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய இவர்களிடமிருந்து உழைக்கும் மக்களது வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.


ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!


இதைக்கடந்த எந்த உறவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இன்றைய பெரு மூலதன நகர்வில் ஐரோப்பிய அரசுகள் செய்யும் லிபியா மீதான அழிவு யுத்தம் நல்ல உதாரணமாக முடியும்.இதையுங் கடந்து "கிரேக்க அரசுமீது சுமத்தும் அழுத்தம், கிரேக்க உழைக்கும் வர்க்கத்தின் மீதான அதீத ஒடுக்குமுறையை ஜேர்மனிய டொச்சு வங்கி பிரேரிக்கும்போது" அந்தப் பிரேரணையை ஜேர்மனிய அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கிறது.இவையெல்லாம் வர்க்கங் கடந்த அரசியலை வற்புறத்தவில்லை.இதைக்கடந்து தலித்துவ அரசியலைப் புரிந்து கொள்வதில் வரலாற்று ஒடுக்குமுறையென்பதை முன் நிறுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்தில் சமூக வளர்ச்சி-சிதைவுகுறித்த புரிதல் கவனித்தில் இருத்தப்படாது தட்டிக் கழிக்கப்படுவதன் உள் நோக்கம் என்னவாக்க இருக்கமுடியும்?


தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் பிரச்சனை,அது குறித்து"ஆய்வு"ரீதியான உரையாடலுள்"சாதியம் இருக்கிறது-தீண்டாமை விலகுகிறது"என்ற புள்ளியில் மீளவும் தமிழ்ச் சமுதாயத்திள் மொத்த சமூக வளர்ச்சிக் கட்டங்கள் குறித்துச் சரியான புரிதலை மறுப்பதில் முழுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியவொடுக்குமுறையைத் தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிறுத்துகிறார்.யாழ்ப்பாணம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிதியீடாகும் ஒரு குறு நிலப்பரப்பு.அதைத் தாண்டிய சாதியவொடுக்குமுறை முழுமொத்தத் தென்னாசிய இனக் குழுமங்களுக்குள்-தேசிய இனங்களுக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பண்பாட்டின்மீது வைக்கவேண்டியதும்,அந்தப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தும் பொருளாதாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது,ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கீரனது அறிவின்மீது ஆணி அடிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?


சாதியத்தின்மீத கீரனது பார்வையை இந்தியாவுக்குள்ளும்,சிங்களச் சமுதாய அமைப்புக்குள்ளும் பொதுமைப்படுத்திப் பார்த்தோமானால்
கீரன் சிறுபிள்ளைத் தனமாகவும், அப்பாவித்தனமாகுவம் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்க அல்லது அதை நியாயப்படுத்த முனைந்து தனது அறிவிலப் புலம்பலை முழுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கெதிராகச் செய்து சிங்கள இனவாத முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்.


யாருக்கு யார் குரலிடுவது?:


யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?


பாடசாலைகளில், இலங்கை மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா? இந்தக் கல்வியைக் கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு குறித்தும், அதன் சாதியப் பிளவு அரசியல் குறித்தும் கண்டிய-கரையோரச் சங்களச் சமுதாயத்தின் சாதிய வேறுபாட்டிலிருந்து புரிவதும் அவசியமில்லையா?கொய்கமச் சாதியத்தின் வரலாறு என்ன?அதன் பொருளாதார ஆதிக்க நலன்கள் எவையாக இருக்கின்றன கீரன்?


அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை(வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது-மார்க்ஸ் /The history of all hitherto existing Society is the history of Class Struggles).அஃது, தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது. வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.


இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.


என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்?


சாதியத்தை; துடைத்தெறியும்-சமூக மேம்பாடு என்ற திசைக்கும் நிலவும் மறைமுகமான அவமானப்படுத்தல்கள்-தொடர்ந்தும் சாதியத்தை நிலைப்படுத்தும் அடையாளங்கள் யாவும் ஒரு முனையில் இன்னொரு வகை அகவொடுக்குமுறையைச் செய்கிறதேயொழிய பண்பாட்டு மாற்றத்தைக்கோரவில்லை!அத்தகைய நிலையில்,தொடர்ந்தும் அவர்களது கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?


இதிலிருந்து தலித்துவக் கோரிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியுமா?


இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்?.


பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும் மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச் சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப் பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா? இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை அழித்தனர்?


ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் கீரன்-தேவதாசன் போன்றோரிடம்இவற்றைக் குறித்த புரிதல்கள் இல்லாமலா இருக்கும்?அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை!


ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப் புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் இருப்பவர்களே!


அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?


இது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள்-உழைப்பாளர்களது பிள்ளைகள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது? தனியே சாதியத்திமிரா அல்லது வர்க்க நலனா?


ஒரு தேசிய இனமெனும்பொழிவு, புலப்படும்சிந்தனை :


எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய விய+கம் அடிபட்டுப்போகிறது.


எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.


கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஙனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?


எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.இதைத்தாம் இப்போது கீரன் மற்றும் தலித்துவ மேம்பாட்டு முன்னணி வகையறாக்கள் பேசுவதில் முடிந்துள்ளது!


இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுவது?


இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா?


அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?


இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் குறை வளங்களாலேயே (சாதியம்-பெண்ணடிமை,மத வேறுபாடு,மொழி வேறுபாடு-பிராந்திய வேறுபாடு இத்தியாதி) முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தருணத்தில் எங்கே செல்லும்?


கீரன் பேசும் சாதியறுப்புக்கான கருத்துக்கள் எந்த வகையிலும் சாதியத்தை வேரறுப்பது அல்ல. மாறாக, அது இலங்கைப் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற-அவர்களால் தகவமைக்கப்பட்ட கருத்தாடலே.இது, ஒருபோதும் தலித்துவ மக்களுக்கான விடுதலையையோ அன்றி முழுமொத்த தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கோ எந்த விதத்திலும் உதவாது, அடக்கு முறையாளர்களது தயவுக்காக நக்கிப் பிழைக்கும் கருத்தாடலாகவே காணப்படும்.இஃது, காலப் போக்கில் நிகழும்போது இத்தகைய தலித்துவக் கோரிக்கைகள் காணாமற் போவது மட்டுமல்ல,யாருக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அந்த மக்களே தம்மை ஒடுக்கு முறையாளர்களது வலையிற் சிக்க வைத்து மேலும் வதைப்படுவர்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.06.11

Sunday, January 30, 2011

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் : புரிதலும்,உரிமைகளும்!

நாம் பிரதிகளது தன்னிலைகள் குறித்தும், அதன்மீதான சுயதம்பட்டச் சீரலைச் சிதறல்களிலும் மாட்டுண்டுபோனோம்!உயிர்நிலைக் களன்களில் குதறப்படும் ஏதோவொருகணம் நோக்கிய தன்னிலைக் கோரல்களிலும் எந்தத் தோதானவொரு பொருத்தப்பாடுடைய தேடுதலைத்தானும் பகிர்ந்துகொள்ளத்தானும் எவருக்குமே துப்பில்லை.இருந்தும், பெருங்கதையாடற் புலமையும்,அதன் உள்ளார்ந்த நுட்பநோக்கும் பெருகக்பெற்றதான சுய புலம்பலே சினங்கொள்ளதக்கது.

மனித எச்சங்கள் மீது ஏறி நின்று, நோக்கப்படும் புதியதை நோக்கிய கட்டமைப்புகள் யாவுமே, வாழ்பவர்களக்கும் மண்ணோடு அள்ளுப்பட்டவருக்குமான தொடர்ந்த போராட்டமாகவே நிலைகொள்ளும் புதிய பொருளாதார ஆர்வத்தின்மீதான பொருத்தப்பாட்டைச் சுட்டுவதற்கு மேலாக, இந்த மீனவர் பிரச்சனையானது சாதராணச் சராசரி மீன்பிடி உழைப்பவர்தம் வயிற்றுப்பாட்டுக்கும்,சம்மாட்டி வடிவமாகப் புரிந்து,உணரப்பட்ட பெரு தொழில் வணிகக் கட்டமைப்புடைய தொழில்முறை ஜந்திரப்படகு கட்டும் "பெரு" வணிகத்துக்குமான வர்க்க உழைப்பு நிலைக் களன்கள் பிரத்தியேகமாகவேனும் புரிந்துணரப்படுவேண்டும்.

சாதாரணத்துக்கும்,அசாதாரணத்துக்குமிடையிலான வித்தியாசங்களை இவர்களது உழைப்பின்மீதான"பலம்-பலவீனம்"என்பதை பொருள் வளம்-வறுமைப்பட்ட ஏழை மீனவர்கள் எனும் தளத்தில்வைத்து, அணுகுவதற்கானவொரு புள்ளியைச் சுட்டியிருக்கிறான் மயூரன்.இது பரவலாக உணரப்பட்டதாகினும் அதைப் பேசுவதற்கான சூழல் மறுக்கப்பட்டிருந்த தேசியவாதக் கோரிக்கைகளது தார்ப்பாரில் எல்லாம் பூச்சியமாகக்"கருவாடு கரைந்து ஆணத்துக்க"என வாசிக்கப்பட்டது.



இப்போது, இதன் ஆணிவேரைத் தொட முனைதல் வரவேற்கத் தக்கது.கடலுக்குச் செல்பவர்கள்மீதான அத்துமீறிய மறுப்பைக்கொண்டியக்கிய தமிழ்க் கொழும்புசார் வர்த்தகமானது இராணுவத்துக்குக் கப்பஞ்செலுத்தியபடி ஜப்பானிலிருந்து ரின் மீன் இறக்கிக்கொள்ளையடித்த தேசியவிடுதலைப்போர்ச் சூழலொன்றும் பலரால் புரிந்துகொள்ளப்பட்டதே.

பெரு வணிகமானது கப்பல் கட்டி,ஏழை மீனவனது வலையறுத்துக் கடற்கொள்ளையிடுவதைத்"தமிழ் மீனவன்"என்ற பொதுப் பதத்துள் உள்ளிழுத்து விவாதிக்கக் கூடியதாக மாற்றிய அரசியலையும் உடைத்துப்பார்க்க வேண்டும்.

எந்தத் துவித-துருவ எதிர்மறைகளிலுமேனும் இதைவைத்த சொற்பப் புரிதப்படானது குதறப்படும் நலிந்த-விளிம்பு நிலைகளை நோக்கிய பலம்தேடும்,பலமளிக்கும் வரைவுகளைத் தந்துவிடுவதான தேடுதலும்,ஒத்திசைவும் அந்தக் கோரிக்கைகளுக்குள் ஊசாலாடும் வயிற்றுத் தேவைமீதான அடிப்படை உரிமைப் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ளும் நிலையுள்,கொல்லப்படும் சாதரண தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளியையும் இந்த அத்துமீறிய வர்த்தகக் காழ்புணர்ச்சி கொல்வதைத்தானும் தட்டிக் கழித்துவிட முடியுமா?

தென் கிழக்காசிய மீன் பிடித் தொழில்மீதான ஜந்திரப்படகு-ரோலர் வைத்துழைக்கும் பெரு மீன்பிடித்தொழிலுக்கும்,சிற்றுழைப்பு வடிவிலான மரபுசார் மீன்பிடித் தோணிக்குமான முரண்பாடுகள்,"வசதிபடைத்த அரசியற் செல்வாக்கு-மாபியாக் கட்டமைப்பு" என்ற தளங்களை அண்மித்துப் பார்க்காத எந்தத் தீர்ப்பும் சாதாரண மீன்பிடித் தொழிலாளிக்கு எதையும் விட்டுவைக்காது.

கடலில் சாகும் தமிழ்நாட்டு மீனவன்,பெரு வணிக-சம்மாட்டிக்குக் கீழ் பணிசெய்பவனாகினும் அந்தச் சாவைப் பெருவணிக ஆதிக்கத்துள் வைத்து அணுகுவதானது அத்தகைய நலிந்த உழைப்பாளியது இருப்பை மறுப்பதில் முடியும்.இந்தச் சிக்கலைப் புரிதலென்பது,இலங்கை-இந்தியக் கடல் எல்லை-உரிமைப் பிரச்சனையுள் வைத்து அரசியலாக்கஞ் செய்வதிலும் பார்க்க, மீன்பிடித் தொழிலுள் ஆதிக்கஞ் செய்யும் பெருவணிக-ரோலர்களது அத்துமீறிய கொள்ளை-மாபியாத் தனம் என வரைந்துகொண்டு,சாதாரண மீனவன் அதுள் தொழிலாளியாக-அடிமையாகப் பணிபுரியும் களத்தை அங்கீகரித்தால்"சாவு"சாதாரண-நலிந்த வர்க்கத்துக்கே நேர்கிறது.இதை மறுத்து ஒதுக்க எந்தத் துவித எதிர்மறைப்(சிங்கள இனவாதம்-தமிழன் இத்தயாதி புரிதல்வகையறா) புரிதலும் கைகொடுக்காது.

சம்மாட்டிகளதும்,அவர்களது எல்லைகடந்த வணிக வட்டத்தினதும்கடல்வளக் கொள்ளைக்கும்,சாதரணக் கரையோர மக்களது அடிப்படை உழைப்பின்மீதான ஆதிக்கத்துக்கும் இடையிலுள்ள இந்தச் சிக்கலானது, சிங்களக் கடற்படையினது மரபுசார்ந்த புரிதலுள்(பங்கு-கமிசன்)ஏற்படும் சிக்கலெனவும் விரிவதை எவரும் புரிந்திருக்க முடியுமாவெனவும் சந்தேகமே!

எனவே,தமிழக மீனவர்களது கொலைகளது அரசியலூக்கம் வெறும் இனவாரியான புரிதலையுந்தாண்டி வர்த்தக நலன்கள்-உழைப்புச் சந்தை,எனவிரியும் முனைகளில் புரிந்துணரப்பட்டுத் தீர்க்க வேண்டிய தேவையைப் பரந்துபட்ட மக்கள் தாம்சார் வலயத்துள் முன்மாதிரியாக அணுகுவதென்பது, அரசியல் கட்சிகளை விலத்திவைத்துப் பெருவணிகத்தின் மாபியாத் தனங்களைப் புரியந்தருணங்களே.அங்ஙனம் செயற்படும்போது இதுள் அரசுக்கும் பெருவணிக-சம்மாட்டி முறைகளுக்கும் உள்ள நீண்ட தொடர்புகள் அந்நியப்படுத்தப்பட்டுப் புரிய வாய்புகளுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.01.11

Friday, January 28, 2011

பெற்றோலிய டொலர்க் கொள்ளை!

துனிசியா,எகிப்த்து: இன்னும்பல தேசத் தலைகள் உருளும்!

ரபு தேசங்களில் நடப்பது மக்கள் புரட்சியின் பெயரால் பெற்றோலிய டொலர்க் கொள்ளை!இப்படி ஒரே வார்த்தையில் போட்டுடைக்கும் தீர்ப்புக்கு,விரிவாக எழுதப்படும் ஒரு நீண்ட புலம்பாதிக்கக் குஞ்சம், சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனது துணிவுகொண்டு...

இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக புரட்சி,ஜனநாயகம்-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இலக்கியம்,புனரமைப்பு,அபிவிருத்தியென்றெல்லாம் "சந்திப்புகள்"படு அமர்க்களமாக மாதந்தோறும் அரங்கேறுகிறது.

இலக்கியத்துக்கான நிகழ்வுகள்,உலகப் புகழ்பூத்த எழுத்தாளர்களது தயவோடு நடக்கின்றன.

எழுத்தின் மீதான பார்வைகள் மக்களுக்கான விடுதலை-ஜனநாயமெனும் மொழியாடல்களதுவழியிலேயே உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆக்க இலக்கியமென்பதை மனிதவாழ்வின் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் அதன் வர்க்கச்சாரம் புரியப்படலானது.நிலைத்திருக்கும் எழுத்து முனைப்புக்குள் நிறுவனப்பட்டியங்கும் அதிகாரங்கள்,அதுசார்ந்த கருத்தியற் பேணுகை உடைப்பட்டுப் புரிந்தும் போனது.எப்போதும்போலவே இந்தப் புரிதலிலும் ஒரு எல்லையிடப்பட்டது.கலைவடிவங்கள் கலையெனப்பேணப்பட்ட இயக்கப்போக்கின் விருத்தி மிக நேர்த்தியான கதைசொல்லிகளை வளர்த்தெடுத்திருந்தபோது அந்தக் கதைசொல்லிகள் பண்டமாக மாற்றப்பட்டபோது மிக முன்னேறிய தேசத்து இலக்கியவாதிகள் எல்லோருஞ் சந்தைப்படுத்தப்பட்டார்கள்.அவர்களே,இப்போது மக்கள் அனைவருக்குமான குரலுமாக ஒலிக்கத் தொடங்கினர்.அதிகாரம் இவர்களை ஊடகமாக்கியபின் படைப்பிலக்கியத்தின் போலித்தனம் அருவருக்கத் தக்கதாகியது.அது,மார்ட்டின் வல்சரையோ அல்லது குன்ரர் கிரசையோ மேல் நோக்கிய மனிதர்கள் என்பதை ஒரு நொடியில் நொருக்கி எறிந்துபோடுகிறது.



என்றபோதும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ராய் (Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி (Dostojewskij: Der Idiot)முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின் (Alexander S.Puschkin:Erzaelungen) கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...).

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்."

இவர்களது தடத்தைப் புரியமுனையும்போது சாதாரணமான பரிசீலனைக்குப் போவதென்பது ஆகக் குறைந்த புரிதலென்பதையுந்தாண்டி என்ன-ஏதாகிறது எழுத்தெனுங் கேள்விக்கு விடைதேடுவதாக மாறகிறதெனக்கொண்டு மேலுள்ள வரிகளை எழுதிப் பார்த்தால் உடனே அமெரிக்கா வருகிறது.

என்னவெனச் சொல்!நீ,சொல்லமாட்டாய்.சொல்வதில்-புரிவதில் சிக்கல் இல்லை!வர்க்க உணர்வில்த்தாம் சிக்கல்.எனக்குப் புரிந்ததைச் சொல்வதில் சிக்கலெழ முடியவில்லை.என் வர்க்கவுணர்வானது எனது வாழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டது.


சரி.அப்படியே இருக்கட்டும்!

இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?

சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?

கொஞ்சம் அண்மிக்கிறேனா? சரி!


அல்ஜீரியனான Camus தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

இவ்வளவும் எதற்கு?:

மாறிவரும் அரேபிய உலகின் சமீபத்திய போராட்டம் என்ன?துனிசியாவினதும்,அதைத் தொடர்ந்து ஜெமேன்,எகிப்த்துவெனத் தொடரும்"ஜனநாயகபத்தியத்தின்" [democratic imperialism]போராட்டம் எதுவரை?இதற்கும்[ Global Revolution(...) ]மரபுசார்ந்த மக்கள் போராட்டத்துக்கும்[Revolution] எந்தவழிகளில் மாறுபாடுகள் இருக்கிறது?அல்லது இது மக்கள் போராட்டமாகிறதா?வர்க்கப் போராட்டத்துள் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்?உழைப்பாளர்களது அதிகாரத்தை இங்கே எதிர்வுகூறமுடியுமா?

பரவலாக துனிசியாவிலோ ,எகிப்திலோ எந்தவொரு பகுதியிலும் ஆண்களே போராட்டத்துள் அதிகமாக ஈடுபடுவதும் இந்தத்திசையில் அரேபிய பெண்களது பாத்திரம் என்ன?மக்கள் போராட்டத்துள் பெண்ணின் பாத்திரம் புறகணிக்கப்பாட்டதொரு சூழலை நினைத்தே பார்க்க முடியாதிருக்கும்.ஆனால்,அரேபிய தேசத்தில் அதுவே உண்மையாகிறது.

தொடர்ந்து சமூகவுணர்வு-சமூகவாழ்வே உணர்வைத் தீர்மானிப்பதென்ற வாய்ப்பாடுகளைத்தாண்டி இந்த அரேபிய உலகத்தை உற்று நோக்கும்போது அவர்களது சமூகப் போராட்டத்தைப் புரிவதில் பலசிக்கல்கள் இருந்தன.நேற்றுவரை இதுவே எனக்குள்ள பிரச்சனையாக இருந்தது.இதை மேற்குலகங்கள் கூறுவதுபோன்று மக்கள் போராட்டமெனக்கொள்வதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கிறது.கிழக்கு ஐரோப்பியச்"சோசலிசச் சரிவு" போன்று இதுவும் அரோபியச் சர்வதிகாரிகளது சரிவு எனச் சொல்லும் மேற்குலகச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!அவர்கள் தேசத்து அரசுகளும்,தலைவர்களும் போராடும் அரேபிய மக்களது போராட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.மக்களது போராட்டம் எனவும் பேரிகை கொட்டுவதில் அமெரிக்க வெளிவிவகார மந்திரியும்,அஞ்கேலா மேர்கலும்(ஜேர்மனிய அதிபர்) முந்திக்கொள்கின்றனர்.கூடவே,அரேபியத் தேசத்துச் சர்வதிகாரிகளுக்குக் கோரிக்கையும்விட்டு,"அமைதிவழிப் போராட்டத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்"என ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.

எகித்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அறிமுகமாகும் எல் பாறடாய் [Mohamed ElBaradei]அணுக் கண்காணிப்புக்குழுவுக்குத் தலைவராகவிருந்து ஈரான் பற்றித் துப்புத் துலக்கி அமெரிக்காவுக்கு வக்காலத்துவேண்டிய கடந்தகாலம் என் கண்களில் பட்டுத் தெறிக்கிறது! இன்றைய அவரது வருகையில் எகித்தியப் போராட்டம்,துனிசியா போன்றவற்றின் தொடரில் அரேபிய மாபியாக்கள் பலரது தலைகள் மறைந்து போகலாம்-தத்தம் தேசங்களைவிட்டு ஓடலாம்.ஆனாலும் இது மக்களுக்கான,அவர்களது அதிகாரத்துக்கான போராட்டமாக எடுக்கமுடியுமா?-என்னால் முடியவில்லை!



துனிசியவை விட்டு வெளியேறிய அதன் தலைவர் பென் அலியை இதுவரை ஜனநாயகத் தலைவராகக் கொண்டாடிய மேர்குலகக் கட்சித் தலைவர்கள் இப்போது அவனை சர்வதிகாரியெனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.பென் அலியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளியலுக வங்கிக் கணக்கு-பணம் முடக்கப்படுகிறது.இதன் தொடராகச் சிலவற்றைக் குறித்துப் பேசமுடியும்.

1: அரேபிய உலகத்தில் நடப்பது மக்கள் போராட்டம் அல்ல,

2: இப்போராட்டத்தினது சூத்திரதாரிகள் ஏகாதிபத்திய உலகத்தவர்கள்,

3: அரேபிய உலகத்திலுள்ள தேசங்களது "அரசுகள்-தலைவர்கள்"கவிழும்போது அதன் இடத்தில் புதிய மேற்குலகச் சார்பு அரசுகளே மீளவும் வரமுடியும்,

4: தேசங்களைவிட்டுச் செல்லும் சர்வதிகாரிகளது வெளிநாட்டுச் சொத்துடமை-செல்வம்-முலதனம் முடகத்துக்குள் வந்துவிடும்.


ஓடுகின்ற அரோபியச் சர்வதிகாரிகள் ஏலவே "மக்கள் புரட்சிக்கு"தயாராகின்ற தேசங்கள்(சவுதி அரேபியா,குவைத்,கட்டார்) நோக்கியே ஓடுகின்றனர்.மேற்கில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

வழமையாக உலகச்சர்வதிகாரிகளுக்கு உறைவிடமான அமெரிக்கா இதில் கடுகளவும் இடம்கொடுக்காது ஜனநாயக வேடங்கொண்டும் உள்ளது.இதன் அச்சொட்டான அரசியல் என்னவாக இருக்க முடியுமென்பதற்காக மேலே சொன்னவற்றை மீளச் சிந்திப்பதில் கவனமெடுத்தால் நிச்சியம் இந்தப் போராட்டத்தின் திசைவழியைப் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக அரேபியத் தேசங்களது இன்றைய போராட்டமானது "சமூக இணையத் தொடர்பாடலது அழுத்தமான பங்களிப்புடனே"யேதாம் அரேபியத் தேசத்துள் "மக்கள் எழிச்சி" எழுந்துள்ளதாகவும்,ரிவிட்டர்,பேஷ்புக்-புளக்கர் போன்ற இணையவழி ஊடகங்களே இதைச் சாத்தியமாக்கப் பெரும் பங்கு செய்ததாகவும் பலர் குரலிட முனைகின்றனர்.மக்கள் எழிச்சிக்குள்ளாகும் சமூகப் புறநிலை எப்போதுமே இஸ்லாமிய மத அழுத்தங்களால் இல்லாதாக்கப்பட்டபோதும், அரேபியவுலகத்துள் சமூகவுணர்வானது வயிற்றுப்பாட்டின் வீச்சில் ஆவேசமாகும் என்பது ஏலவே அறியப்பட்டதே. இதை என் எகிப்தியப் பிரயாணங்களில் அதிகம் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன்.

இத்தாலிய மாபியாக்களது "மாபியாப் பொருளாதாரம்"உலக வணிகத்துள் நாற்பது வீதம் சுழல்கிறது என்கிறார் "மாபியா டொச்சுலாந்து"என்ற நூலின் ஆசிரியர் இயூர்கன் இரொத் .மேற்குலகில் வீழ்த்தப்படும் மாபியாக்களது இறுதியிடமானது அரேபிய-ஆசியக்கடற்கரைகளாக இருக்கின்றவென்பதை நான் சார்மல் சைக் நகரத்தில் கண்டேன்.அரேபிய-ஆசியக் கடற்கரைகளில் நிறுவப்படும் பல நட்ஷத்திர ஓட்டல்களும்,உல்லாசப் பிரயாணத்துறையையும் இந்த இத்தாலிய-உலக மாப்பியாக்களே கைப்பற்றியுள்ளனர்.இவர்களால் மொய்க்கப்பட்ட அரேபிய உலகக் கடற்கரைகளது பரந்தவெளிகள் மேற்குலகத்துக்கு நல்ல வருமானந்தரும் வியாபாரமாக இருக்கிறது.என்றபோதும் இந்த அரேபியப் போராட்டத்தால் இப் பொருளாதாரத் துறை நொருங்கிவருகிறது.இதை அனுமதிக்கும் மேற்குலகம் இந்த மாபியாக்களாலேயேதாம் ஆளப்படுகிறது.என்றபோதும் ஏன் இந்தப் போராட்டங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கு?வரவேற்று,வாழ்த்துவதன் நோக்கமென்ன?

எண்ணை டொலர்[Petrodollar] :

இன்றைய மேற்குலகத்தின் இதுகாலவரையான இயக்கத்துக்கு-இருப்பு பக்கப்பலமாக இருப்பவை உலக நாணய நிதியம்,உலக வங்கி என்பது ஒருவகையான உண்மை.இந்த வங்கிகளது வாடிக்கையாளர்கள் அதிகமாக மூன்றமுலகம் எனப்படும் தேசங்களே.கடன் கொடுத்தல் வட்டியறவிடுதல் என்பதையுந்தாண்டி இவ் வங்கிகள்-நிதியங்கள் சம்பந்தப்பட்ட தேசங்களது அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துபவை.

இந்த உலக வங்கி,நாணய நிதியங்களுக்கு எவர்களது நிதி வந்துசேர்கிறது-எப்படி வந்து சேர்கிறதெனப் பலருக்கு புரியும்.அதிகமான வளர்ச்சியடைந்த தேசத்து அரசுகளது நிதிமூலதனமே இவற்றுக்கூடாக நகர்வதாக நாம் அறிவோமா?ஆனால்,அது கடுகளவும் உண்மையில்லை!




இன்றைய நவலிபரல் பொருளாதார நகர்வில் ஊகவணிகம் அனைத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறது.உணவுப் பொருட்களையே ஊகவணிகம் விட்டுவிடவில்லை.பொருளாதாரச் சழற்சி நொடிவதும்,தேங்குவதும்,துண்டு விழுவதும்,கருப்பு மூலதனம் பணவீக்கத்தைச் செயற்கையாகப் பின்னுவதும் தொடர்கதையே.மேற்குத் தேசங்களே திவாலாகும் இன்றைய சூழலில் அமெரிக்கா கடன் பளுவிலும் 500 மில்லியன்கள் டொலருக்கு அவ்கானிஸ்தானில் தூதுவராலயம் அமைக்கிறது.தேசங்கள்,மக்கள் துவண்டுபோகும்போதும் அதிகார வர்க்கம்-ஆதிக்க வர்க்கம் தமது கைகளில் கடிக்கும் நிதிப் பளுவை மக்களது தலையிற்சுமத்துவதை ஐரோப்பியக் கூட்டமைப்பினது யூரோ நாணயத்தைக் காக்கும் நிதியீடுகளுக்குள் காணமுடியும்.அதை செவிவழி Doves G-20 பொருளாதாரக் கூட்டினது [Weltwirtschaftsforum in Davos] சந்திப்புக்குள் கேட்டக முடியும்.

பொருளாதாரம் பொறியும்போது,உலக வங்கி,நாணய நிதியம் தனது கையிருப்புத் தங்கத் தைச் சீனாவுக்கு விற்றுக் கொண்டதென்பதும் வரலாறு.

செல்வம் எங்கே?சேந்த நிதி எங்கே?உலக வங் கிகளது கையிருப்பில் இருக்கும் ரிசேர்வ்த் தங்கம்,பெற்றோலிய டொலர்களது புண்ணியம்.அதென்ன பெற்றேலாலிய டொலர்?
லருக்குப் புரியும்.எண்ணை விலை உயர்ந்தபோதும்,உயரும்போதும் குவியும் உபரிச் செல்வமானது அரேபிய மாபியாக்களது(தேசத்துத் தலைவர் எனக்கொள்க)கைகளில் குவியும்.அதை அவர்கள் மேற்குலக வங்ககளில் குவித்துவைத்துக் கனவு காண்பர்.அப்படிக் குவிக்கப்பட்ட பணம் பெற்றோலிய டொலர்கள் என்பது வரலாறு.இதன் பெறுமதி அண்ணளவாக 15 றில்லியன்கள் எனக் கொள்ள முடியும்.எனினும்,சட்டபூர்வமாக அது 6 றில்யன்கள் எனச் சொல்கிறார்கள்.இந்த பெற்றோலிய டொலர்கள் சமீபத்துப் பொருளாதாரப் பொறிவில் 25 வீதம் மூன்றே மாதத்துள் சாம்பலாகியது.அப்படியிருந்தும் இன்னும் 75 % வீதம் அமெரிக்க-ஐரோப்பிய வங் கிகளுக்குள் சுழ ல்கிறது.

இந்தப் பணம் யாருடையது?:

அரோபிய தேசங்களது தலைவர்கள்,அமைச்சர்கள்,அரேபியச் சேக்குகளது.அரோபியாவுக்கு"ஜனநாயக ஏகாதிபத்தியம்"மக்கள் புரட்சியெவெடிக்கும்போது ஒரு பென் அலி தனது பெற்றோலிய டொலர்ச் சேமிப்பை இழந்தார்.அதன் பெறுமதி 8 பில்லியன் டொலரென மதிப்பிடப்படுகிறது.

இத்தகைய பெற்றோலிய டொலர் உரைமையாளர்கள் ஒவ்வொன்றாகச் சரிவார்கள்.இது திட்டமிடப்பட்ட,நவீனத் தட்டிப்பறிப்பு.அதற்கு மக்களது ஆவேசம்,வர்க்கப் போராட்டமே பலியாகி ஒவ்வொரு அரேபிய தேசத்துக்கும் புதிய மேற்குலக எடுபிடிகள் பதவிக்கு வருவார்கள்.

அவர்கள் ஜனநாயகம் அதிகமாகப் பேசுவார்கள்.

பழைய பெற்றோலிய டொலர் உரிமையாளர்கள் தலை தப்பினால் போதுமென ஒதுங்க அவர்களது மக்கள் விரோதத்தின் அரசியல்-உரிமைப் பிரச்சனையுள் இந்தப் பெற்றோலிய டொலர்கள் மாயமாக மறைந்துவிடும்.அரேபியத் தேசங்களுக்கு புதிதாய் வரும் அரசுகள் இந்தப் பெற்றோலிய டொலர்களை மீளப் பெற முனையுமா?

அப்படிப் பெற முடியாதவாறேதாம் இன்றைய துரோக அரசியல் அரேபிய தேசத்துள் 80களின் பின் பகுதி கிழக்கு ஐரோப்பிய-இருஷ்சிய வீழ்ச்சிகளை ஞாபகமூட்டுகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.01.11

Friday, January 07, 2011

நாவலன்: சொந்த முகங்களை இழந்து...

"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்!

"சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் "நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்."புலம் பெயர் மக்கள்"இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்...நாம்,மேலே போவோம்.

நாவலன்,"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!

நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.

இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.

அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!



நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :

[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//

//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//

//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]

இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?

சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு "ஒழுங்குக்கு" உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட"ஈஸ்ற்-வெஸ்ற்"[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.

அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.

"குங்குமம்"ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!"ஆர்பைட் மார்க் பிறாய்"[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?

தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?

புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.

எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!

எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு "கொடி-தேசம்,மொழி-பண்பாடு" நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் "கமல்-ரஜனி வாழ்வு" பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.



இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,"சாமத்திய-கல்யாண-பிறந்ததின"க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.

புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.

முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் "பில்லி-சூனியமெல்லாஞ் " செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட "ஒழுங்குக்குள்" வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?

[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]

நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு"ஒரு ஒழுங்குக்குள்"வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான"அடையாள"நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.

தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட"வாழ்நிலை"இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!

[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]

"கருப்பு-வெள்ளை"-திருமணப் பந்தம்-எதிர்காலம்."கற்பு"-பதிவுத்திருமணத்துக்கு முன் "உடலறுவு"ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து"சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-"அழகாக"இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்"கருப்பு-அவலட்சணம்"கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து"வெள்ளையாக"இருக்கும் நபருக்கு இருக்கும்"செருக்கு"எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை"கருமையாக"இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து"கருமையுடைய"பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?"கருப்பு-வெள்ளை"கருத்தியலைச் செய்த "மேற்கு,கிழக்கு"க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.

இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை."அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்" வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.

[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]

தூரத்தே உருவாகும்"தூரத்தேசியவுண்ர்வு"என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்"துராத் தேசியவுணர்வடைகிறார்கள்"என்பது தப்பான கற்பித்தலாகும்.

இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.

இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன் ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :

"இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்,
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக."


[ Hier

fremd geblieben

dort

fremd geworden

Vielleicht

sollten wir

ein land suchen

einen Staat gruenden

fuer alle

die irgenwo

irgenwie

Fremde sind.]

-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984


[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]

புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!

"கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்" நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.

ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!


1:"ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்"

2;"தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்"

3:"தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்"

4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை"

ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,"கண்மூடி-கண்திறப்பு" வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.

நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை"புலம்பெயர் மக்கள்"குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!

[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]

ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?


[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]


இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா "ஜனநாயகம்"செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது "ஜனநாயகம்"என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் "ஜனநாயக"ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.


இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி...(?...)

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.01.2011