Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, June 25, 2011

"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?

தமிழ் பேசுவதால் தமிழர்களா?;
"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?



" தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்."


ழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை, நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.


அங்கே , "பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும்" நாம் அறிந்ததுதாம்.


வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால் , அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தருணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.



இக்கட்டுரையே,தீபம் தொலைக்காட்சி"கேள்வி நேரம்"உரையாடலில் கீரன் முன்வைக்கும் அல்லது அவர் குரலூடாக முன் தள்ளப்படும் ஒரு வரலாற்றுப் பழி குறித்தான பார்வையை எப்படிப் புரிவதென்ற முயற்சியின் நறுக்கே!


"சாதியம்-தீண்டாமை" எனும் கருத்துப் பிரிப்பில்(சமூக உளவியல்) இயக்கப்பாட்டை மனோவியற்றளத்தில் பண்பாட்டு ரீதியாகப் புரிய வற்புறுத்துகிறார்.அவ்வளவு இலகுவாக இதைப் புரிவது கஷ்டமான காரியம்.எனினும்,முழுமொத்தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில் இதை எதிர்கொள்வது எப்படி?என்ற சிக்கலை எல்லோரும்தட்டிக்கழித்துப் புரட்சி பேசுகிறோம்.பண்பாட்டு இடைவெளிகள் பூர்ஷ்சுவாக் கருத்தாக்களது வழியுள் அவர்களது நலன்களைத் தக்கவைக்கும் முயற்சியில் அது நிலைபெறத் தொடங்கும்போது எஞ்சியது பூர்ஷ்சுவாப் பண்பாட்டு ஒடுக்குமுறைதானே?


ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் இத்தகைய கீரன் போன்றவரது கருத்துக்கள் எப்பவுமே தட்டிக்கழிக்க முடியாதவை.ஆனால்,இக் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் முன்வைக்கும் சாதியப் பிரச்சனைகள் அவ்வளவு இலகுவாக நீர்த்துப் போக முடியாதவை என்றே நான் கருதுகிறேன்.


தனித் தமிழ்அரசு-ஆளுதல்:


"ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்குது"


இந்தச் சமூக உளவியலையுடைத்துப் புரியும்போது சில நூற்றாண்டாக மூன்றாம் உலகத்தில் நிலவிய காலனித்துவக் கட்டத்தைக் குறித்துச் சில புரிதலுக்கு வந்தாக வேண்டும்.காலனித்துவ வாதிகளது கருத்தாளுமையானது
தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு-அந்நியர்களால்- இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இத்தைய உள்ளகக் காலனியத் தொடர்ச்சியின் வழியாகவாவது தமிழ் மேட்டுக் குடியின் ஆளும் மனவிருப்புப் "பூர்த்தியாகும் மனநிறைவு" தொடர்ந்து தனக்குள் மெலியவர்களைக் கொத்தடிமையாக்குவதில் ஒருவித ஆளுமை வெளிப்பாடாக உருப் பெற்றிருக்க வாய்ப்புகள் வரலாற்றில் அதிகமாகவே தென்படுகிறது.இதைத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளின் வழி நிறுவது கடினமாயினும்,மனோவியற் புரிதலில் வெட்ட வெளிச்சமாக வகுத்துக்கொள்ள முடியும்.


தனியுடமைச்சமுதாயத்ததுள்,நிலவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்,அதையொட்டிய ஒடுக்கு முறைகளும் அரசியல் அதிகாரம் என்பதற்கு ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞானபூ ர்வமாகப் புரிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே, தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.



காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவ-பல் தேசிய மயக் காலகட்டத்து இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள், மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாக வூன்ற வைத்துள்ளன. இவற்றைக் கடந்து நாம் இந்தப் பாழ் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட புதிய பாட்டாளிய வர்க்கப்பண்பாட்டை,பன்மைத்துவ சிறு அடையாளங்களை,பொருந்தாத் தன்மையிலான சிறு சமூக அமுக்கக் குழுமங்களாக உருவுறும் வேறுபாடுகளை இணைக்கும் பண்பாட்டைப் படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில் , வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.அவர்கள் இந்தியப் பார்ப்பனப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்குப் பலியாகும் சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு போகமுடியாது.கீரன் இத்தகைய பிளவை மிக வன்மமாக வற் புறுத்துகிறார்.இதற்குப் "பாகிஸ்த்தானைப் பிரித்தது ஜின்னாதாமென"ப் புலம்பித் தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.அகண்ட பாரதம்,ஆபத்தானதெனக்கொள்ளும் நவ காலனித்துவம் இப்படி, காந்தி-ஜின்னா வழியூடாக வேறு வரலாற்றைச் சொல்ல வைத்திருக்கிறது.அதை,வாந்தியெடுப்பது அனைவருக்குமான விடுதலையைத் தந்துவிடப் போவதில்லை!


பாண்பாட்டு ஒடுக்குமுறை வரலாறு:



வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது இல்லையா கீரன்?


அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினூடாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.சாதியத்தை வேரறுப்பதற்கான முதற்படி இங்கிருந்துதாம் தொடங்க முடியும்(இதைவிட்டு இனவாதத்துக்கு எதிரான எழிச்சியைப் போராட்டத்தைக் கூறுபோடுவது அல்ல என்பதையும் இதில் புரிந்தாகவேண்டும்!).


அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக தமிழ்ச் சமூகத்தின்உரிமைகளைச் சிதைக்கும் காரியத்தில் புலம்பெயர் தலித்துவக் குறுக்கல் வாதம் தொடர்ந்து தன்னை விருத்திக்கிட்டுச் செல்கிறது.இதைக் கீரன்போன்ற இலங்கைச் சிங்கள அரசுக்குப் பலிபோன கடாக்களது வழி புரியும்போது,இவர்கள் குறுக்கே நின்று தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய உரிமை மீது கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய இவர்களிடமிருந்து உழைக்கும் மக்களது வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.


ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!


இதைக்கடந்த எந்த உறவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இன்றைய பெரு மூலதன நகர்வில் ஐரோப்பிய அரசுகள் செய்யும் லிபியா மீதான அழிவு யுத்தம் நல்ல உதாரணமாக முடியும்.இதையுங் கடந்து "கிரேக்க அரசுமீது சுமத்தும் அழுத்தம், கிரேக்க உழைக்கும் வர்க்கத்தின் மீதான அதீத ஒடுக்குமுறையை ஜேர்மனிய டொச்சு வங்கி பிரேரிக்கும்போது" அந்தப் பிரேரணையை ஜேர்மனிய அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கிறது.இவையெல்லாம் வர்க்கங் கடந்த அரசியலை வற்புறத்தவில்லை.இதைக்கடந்து தலித்துவ அரசியலைப் புரிந்து கொள்வதில் வரலாற்று ஒடுக்குமுறையென்பதை முன் நிறுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்தில் சமூக வளர்ச்சி-சிதைவுகுறித்த புரிதல் கவனித்தில் இருத்தப்படாது தட்டிக் கழிக்கப்படுவதன் உள் நோக்கம் என்னவாக்க இருக்கமுடியும்?


தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் பிரச்சனை,அது குறித்து"ஆய்வு"ரீதியான உரையாடலுள்"சாதியம் இருக்கிறது-தீண்டாமை விலகுகிறது"என்ற புள்ளியில் மீளவும் தமிழ்ச் சமுதாயத்திள் மொத்த சமூக வளர்ச்சிக் கட்டங்கள் குறித்துச் சரியான புரிதலை மறுப்பதில் முழுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியவொடுக்குமுறையைத் தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிறுத்துகிறார்.யாழ்ப்பாணம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிதியீடாகும் ஒரு குறு நிலப்பரப்பு.அதைத் தாண்டிய சாதியவொடுக்குமுறை முழுமொத்தத் தென்னாசிய இனக் குழுமங்களுக்குள்-தேசிய இனங்களுக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பண்பாட்டின்மீது வைக்கவேண்டியதும்,அந்தப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தும் பொருளாதாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது,ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கீரனது அறிவின்மீது ஆணி அடிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?


சாதியத்தின்மீத கீரனது பார்வையை இந்தியாவுக்குள்ளும்,சிங்களச் சமுதாய அமைப்புக்குள்ளும் பொதுமைப்படுத்திப் பார்த்தோமானால்
கீரன் சிறுபிள்ளைத் தனமாகவும், அப்பாவித்தனமாகுவம் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்க அல்லது அதை நியாயப்படுத்த முனைந்து தனது அறிவிலப் புலம்பலை முழுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கெதிராகச் செய்து சிங்கள இனவாத முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்.


யாருக்கு யார் குரலிடுவது?:


யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?


பாடசாலைகளில், இலங்கை மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா? இந்தக் கல்வியைக் கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு குறித்தும், அதன் சாதியப் பிளவு அரசியல் குறித்தும் கண்டிய-கரையோரச் சங்களச் சமுதாயத்தின் சாதிய வேறுபாட்டிலிருந்து புரிவதும் அவசியமில்லையா?கொய்கமச் சாதியத்தின் வரலாறு என்ன?அதன் பொருளாதார ஆதிக்க நலன்கள் எவையாக இருக்கின்றன கீரன்?


அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை(வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது-மார்க்ஸ் /The history of all hitherto existing Society is the history of Class Struggles).அஃது, தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது. வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.


இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.


என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்?


சாதியத்தை; துடைத்தெறியும்-சமூக மேம்பாடு என்ற திசைக்கும் நிலவும் மறைமுகமான அவமானப்படுத்தல்கள்-தொடர்ந்தும் சாதியத்தை நிலைப்படுத்தும் அடையாளங்கள் யாவும் ஒரு முனையில் இன்னொரு வகை அகவொடுக்குமுறையைச் செய்கிறதேயொழிய பண்பாட்டு மாற்றத்தைக்கோரவில்லை!அத்தகைய நிலையில்,தொடர்ந்தும் அவர்களது கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?


இதிலிருந்து தலித்துவக் கோரிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியுமா?


இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்?.


பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும் மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச் சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப் பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா? இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை அழித்தனர்?


ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் கீரன்-தேவதாசன் போன்றோரிடம்இவற்றைக் குறித்த புரிதல்கள் இல்லாமலா இருக்கும்?அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை!


ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப் புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் இருப்பவர்களே!


அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?


இது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள்-உழைப்பாளர்களது பிள்ளைகள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது? தனியே சாதியத்திமிரா அல்லது வர்க்க நலனா?


ஒரு தேசிய இனமெனும்பொழிவு, புலப்படும்சிந்தனை :


எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய விய+கம் அடிபட்டுப்போகிறது.


எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.


கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஙனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?


எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.இதைத்தாம் இப்போது கீரன் மற்றும் தலித்துவ மேம்பாட்டு முன்னணி வகையறாக்கள் பேசுவதில் முடிந்துள்ளது!


இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுவது?


இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா?


அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?


இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் குறை வளங்களாலேயே (சாதியம்-பெண்ணடிமை,மத வேறுபாடு,மொழி வேறுபாடு-பிராந்திய வேறுபாடு இத்தியாதி) முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தருணத்தில் எங்கே செல்லும்?


கீரன் பேசும் சாதியறுப்புக்கான கருத்துக்கள் எந்த வகையிலும் சாதியத்தை வேரறுப்பது அல்ல. மாறாக, அது இலங்கைப் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற-அவர்களால் தகவமைக்கப்பட்ட கருத்தாடலே.இது, ஒருபோதும் தலித்துவ மக்களுக்கான விடுதலையையோ அன்றி முழுமொத்த தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கோ எந்த விதத்திலும் உதவாது, அடக்கு முறையாளர்களது தயவுக்காக நக்கிப் பிழைக்கும் கருத்தாடலாகவே காணப்படும்.இஃது, காலப் போக்கில் நிகழும்போது இத்தகைய தலித்துவக் கோரிக்கைகள் காணாமற் போவது மட்டுமல்ல,யாருக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அந்த மக்களே தம்மை ஒடுக்கு முறையாளர்களது வலையிற் சிக்க வைத்து மேலும் வதைப்படுவர்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.06.11

Sunday, January 30, 2011

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் : புரிதலும்,உரிமைகளும்!

நாம் பிரதிகளது தன்னிலைகள் குறித்தும், அதன்மீதான சுயதம்பட்டச் சீரலைச் சிதறல்களிலும் மாட்டுண்டுபோனோம்!உயிர்நிலைக் களன்களில் குதறப்படும் ஏதோவொருகணம் நோக்கிய தன்னிலைக் கோரல்களிலும் எந்தத் தோதானவொரு பொருத்தப்பாடுடைய தேடுதலைத்தானும் பகிர்ந்துகொள்ளத்தானும் எவருக்குமே துப்பில்லை.இருந்தும், பெருங்கதையாடற் புலமையும்,அதன் உள்ளார்ந்த நுட்பநோக்கும் பெருகக்பெற்றதான சுய புலம்பலே சினங்கொள்ளதக்கது.

மனித எச்சங்கள் மீது ஏறி நின்று, நோக்கப்படும் புதியதை நோக்கிய கட்டமைப்புகள் யாவுமே, வாழ்பவர்களக்கும் மண்ணோடு அள்ளுப்பட்டவருக்குமான தொடர்ந்த போராட்டமாகவே நிலைகொள்ளும் புதிய பொருளாதார ஆர்வத்தின்மீதான பொருத்தப்பாட்டைச் சுட்டுவதற்கு மேலாக, இந்த மீனவர் பிரச்சனையானது சாதராணச் சராசரி மீன்பிடி உழைப்பவர்தம் வயிற்றுப்பாட்டுக்கும்,சம்மாட்டி வடிவமாகப் புரிந்து,உணரப்பட்ட பெரு தொழில் வணிகக் கட்டமைப்புடைய தொழில்முறை ஜந்திரப்படகு கட்டும் "பெரு" வணிகத்துக்குமான வர்க்க உழைப்பு நிலைக் களன்கள் பிரத்தியேகமாகவேனும் புரிந்துணரப்படுவேண்டும்.

சாதாரணத்துக்கும்,அசாதாரணத்துக்குமிடையிலான வித்தியாசங்களை இவர்களது உழைப்பின்மீதான"பலம்-பலவீனம்"என்பதை பொருள் வளம்-வறுமைப்பட்ட ஏழை மீனவர்கள் எனும் தளத்தில்வைத்து, அணுகுவதற்கானவொரு புள்ளியைச் சுட்டியிருக்கிறான் மயூரன்.இது பரவலாக உணரப்பட்டதாகினும் அதைப் பேசுவதற்கான சூழல் மறுக்கப்பட்டிருந்த தேசியவாதக் கோரிக்கைகளது தார்ப்பாரில் எல்லாம் பூச்சியமாகக்"கருவாடு கரைந்து ஆணத்துக்க"என வாசிக்கப்பட்டது.



இப்போது, இதன் ஆணிவேரைத் தொட முனைதல் வரவேற்கத் தக்கது.கடலுக்குச் செல்பவர்கள்மீதான அத்துமீறிய மறுப்பைக்கொண்டியக்கிய தமிழ்க் கொழும்புசார் வர்த்தகமானது இராணுவத்துக்குக் கப்பஞ்செலுத்தியபடி ஜப்பானிலிருந்து ரின் மீன் இறக்கிக்கொள்ளையடித்த தேசியவிடுதலைப்போர்ச் சூழலொன்றும் பலரால் புரிந்துகொள்ளப்பட்டதே.

பெரு வணிகமானது கப்பல் கட்டி,ஏழை மீனவனது வலையறுத்துக் கடற்கொள்ளையிடுவதைத்"தமிழ் மீனவன்"என்ற பொதுப் பதத்துள் உள்ளிழுத்து விவாதிக்கக் கூடியதாக மாற்றிய அரசியலையும் உடைத்துப்பார்க்க வேண்டும்.

எந்தத் துவித-துருவ எதிர்மறைகளிலுமேனும் இதைவைத்த சொற்பப் புரிதப்படானது குதறப்படும் நலிந்த-விளிம்பு நிலைகளை நோக்கிய பலம்தேடும்,பலமளிக்கும் வரைவுகளைத் தந்துவிடுவதான தேடுதலும்,ஒத்திசைவும் அந்தக் கோரிக்கைகளுக்குள் ஊசாலாடும் வயிற்றுத் தேவைமீதான அடிப்படை உரிமைப் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ளும் நிலையுள்,கொல்லப்படும் சாதரண தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளியையும் இந்த அத்துமீறிய வர்த்தகக் காழ்புணர்ச்சி கொல்வதைத்தானும் தட்டிக் கழித்துவிட முடியுமா?

தென் கிழக்காசிய மீன் பிடித் தொழில்மீதான ஜந்திரப்படகு-ரோலர் வைத்துழைக்கும் பெரு மீன்பிடித்தொழிலுக்கும்,சிற்றுழைப்பு வடிவிலான மரபுசார் மீன்பிடித் தோணிக்குமான முரண்பாடுகள்,"வசதிபடைத்த அரசியற் செல்வாக்கு-மாபியாக் கட்டமைப்பு" என்ற தளங்களை அண்மித்துப் பார்க்காத எந்தத் தீர்ப்பும் சாதாரண மீன்பிடித் தொழிலாளிக்கு எதையும் விட்டுவைக்காது.

கடலில் சாகும் தமிழ்நாட்டு மீனவன்,பெரு வணிக-சம்மாட்டிக்குக் கீழ் பணிசெய்பவனாகினும் அந்தச் சாவைப் பெருவணிக ஆதிக்கத்துள் வைத்து அணுகுவதானது அத்தகைய நலிந்த உழைப்பாளியது இருப்பை மறுப்பதில் முடியும்.இந்தச் சிக்கலைப் புரிதலென்பது,இலங்கை-இந்தியக் கடல் எல்லை-உரிமைப் பிரச்சனையுள் வைத்து அரசியலாக்கஞ் செய்வதிலும் பார்க்க, மீன்பிடித் தொழிலுள் ஆதிக்கஞ் செய்யும் பெருவணிக-ரோலர்களது அத்துமீறிய கொள்ளை-மாபியாத் தனம் என வரைந்துகொண்டு,சாதாரண மீனவன் அதுள் தொழிலாளியாக-அடிமையாகப் பணிபுரியும் களத்தை அங்கீகரித்தால்"சாவு"சாதாரண-நலிந்த வர்க்கத்துக்கே நேர்கிறது.இதை மறுத்து ஒதுக்க எந்தத் துவித எதிர்மறைப்(சிங்கள இனவாதம்-தமிழன் இத்தயாதி புரிதல்வகையறா) புரிதலும் கைகொடுக்காது.

சம்மாட்டிகளதும்,அவர்களது எல்லைகடந்த வணிக வட்டத்தினதும்கடல்வளக் கொள்ளைக்கும்,சாதரணக் கரையோர மக்களது அடிப்படை உழைப்பின்மீதான ஆதிக்கத்துக்கும் இடையிலுள்ள இந்தச் சிக்கலானது, சிங்களக் கடற்படையினது மரபுசார்ந்த புரிதலுள்(பங்கு-கமிசன்)ஏற்படும் சிக்கலெனவும் விரிவதை எவரும் புரிந்திருக்க முடியுமாவெனவும் சந்தேகமே!

எனவே,தமிழக மீனவர்களது கொலைகளது அரசியலூக்கம் வெறும் இனவாரியான புரிதலையுந்தாண்டி வர்த்தக நலன்கள்-உழைப்புச் சந்தை,எனவிரியும் முனைகளில் புரிந்துணரப்பட்டுத் தீர்க்க வேண்டிய தேவையைப் பரந்துபட்ட மக்கள் தாம்சார் வலயத்துள் முன்மாதிரியாக அணுகுவதென்பது, அரசியல் கட்சிகளை விலத்திவைத்துப் பெருவணிகத்தின் மாபியாத் தனங்களைப் புரியந்தருணங்களே.அங்ஙனம் செயற்படும்போது இதுள் அரசுக்கும் பெருவணிக-சம்மாட்டி முறைகளுக்கும் உள்ள நீண்ட தொடர்புகள் அந்நியப்படுத்தப்பட்டுப் புரிய வாய்புகளுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.01.11

Friday, January 28, 2011

பெற்றோலிய டொலர்க் கொள்ளை!

துனிசியா,எகிப்த்து: இன்னும்பல தேசத் தலைகள் உருளும்!

ரபு தேசங்களில் நடப்பது மக்கள் புரட்சியின் பெயரால் பெற்றோலிய டொலர்க் கொள்ளை!இப்படி ஒரே வார்த்தையில் போட்டுடைக்கும் தீர்ப்புக்கு,விரிவாக எழுதப்படும் ஒரு நீண்ட புலம்பாதிக்கக் குஞ்சம், சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனது துணிவுகொண்டு...

இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக புரட்சி,ஜனநாயகம்-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இலக்கியம்,புனரமைப்பு,அபிவிருத்தியென்றெல்லாம் "சந்திப்புகள்"படு அமர்க்களமாக மாதந்தோறும் அரங்கேறுகிறது.

இலக்கியத்துக்கான நிகழ்வுகள்,உலகப் புகழ்பூத்த எழுத்தாளர்களது தயவோடு நடக்கின்றன.

எழுத்தின் மீதான பார்வைகள் மக்களுக்கான விடுதலை-ஜனநாயமெனும் மொழியாடல்களதுவழியிலேயே உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆக்க இலக்கியமென்பதை மனிதவாழ்வின் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் அதன் வர்க்கச்சாரம் புரியப்படலானது.நிலைத்திருக்கும் எழுத்து முனைப்புக்குள் நிறுவனப்பட்டியங்கும் அதிகாரங்கள்,அதுசார்ந்த கருத்தியற் பேணுகை உடைப்பட்டுப் புரிந்தும் போனது.எப்போதும்போலவே இந்தப் புரிதலிலும் ஒரு எல்லையிடப்பட்டது.கலைவடிவங்கள் கலையெனப்பேணப்பட்ட இயக்கப்போக்கின் விருத்தி மிக நேர்த்தியான கதைசொல்லிகளை வளர்த்தெடுத்திருந்தபோது அந்தக் கதைசொல்லிகள் பண்டமாக மாற்றப்பட்டபோது மிக முன்னேறிய தேசத்து இலக்கியவாதிகள் எல்லோருஞ் சந்தைப்படுத்தப்பட்டார்கள்.அவர்களே,இப்போது மக்கள் அனைவருக்குமான குரலுமாக ஒலிக்கத் தொடங்கினர்.அதிகாரம் இவர்களை ஊடகமாக்கியபின் படைப்பிலக்கியத்தின் போலித்தனம் அருவருக்கத் தக்கதாகியது.அது,மார்ட்டின் வல்சரையோ அல்லது குன்ரர் கிரசையோ மேல் நோக்கிய மனிதர்கள் என்பதை ஒரு நொடியில் நொருக்கி எறிந்துபோடுகிறது.



என்றபோதும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ராய் (Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி (Dostojewskij: Der Idiot)முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின் (Alexander S.Puschkin:Erzaelungen) கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...).

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்."

இவர்களது தடத்தைப் புரியமுனையும்போது சாதாரணமான பரிசீலனைக்குப் போவதென்பது ஆகக் குறைந்த புரிதலென்பதையுந்தாண்டி என்ன-ஏதாகிறது எழுத்தெனுங் கேள்விக்கு விடைதேடுவதாக மாறகிறதெனக்கொண்டு மேலுள்ள வரிகளை எழுதிப் பார்த்தால் உடனே அமெரிக்கா வருகிறது.

என்னவெனச் சொல்!நீ,சொல்லமாட்டாய்.சொல்வதில்-புரிவதில் சிக்கல் இல்லை!வர்க்க உணர்வில்த்தாம் சிக்கல்.எனக்குப் புரிந்ததைச் சொல்வதில் சிக்கலெழ முடியவில்லை.என் வர்க்கவுணர்வானது எனது வாழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டது.


சரி.அப்படியே இருக்கட்டும்!

இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?

சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?

கொஞ்சம் அண்மிக்கிறேனா? சரி!


அல்ஜீரியனான Camus தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

இவ்வளவும் எதற்கு?:

மாறிவரும் அரேபிய உலகின் சமீபத்திய போராட்டம் என்ன?துனிசியாவினதும்,அதைத் தொடர்ந்து ஜெமேன்,எகிப்த்துவெனத் தொடரும்"ஜனநாயகபத்தியத்தின்" [democratic imperialism]போராட்டம் எதுவரை?இதற்கும்[ Global Revolution(...) ]மரபுசார்ந்த மக்கள் போராட்டத்துக்கும்[Revolution] எந்தவழிகளில் மாறுபாடுகள் இருக்கிறது?அல்லது இது மக்கள் போராட்டமாகிறதா?வர்க்கப் போராட்டத்துள் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்?உழைப்பாளர்களது அதிகாரத்தை இங்கே எதிர்வுகூறமுடியுமா?

பரவலாக துனிசியாவிலோ ,எகிப்திலோ எந்தவொரு பகுதியிலும் ஆண்களே போராட்டத்துள் அதிகமாக ஈடுபடுவதும் இந்தத்திசையில் அரேபிய பெண்களது பாத்திரம் என்ன?மக்கள் போராட்டத்துள் பெண்ணின் பாத்திரம் புறகணிக்கப்பாட்டதொரு சூழலை நினைத்தே பார்க்க முடியாதிருக்கும்.ஆனால்,அரேபிய தேசத்தில் அதுவே உண்மையாகிறது.

தொடர்ந்து சமூகவுணர்வு-சமூகவாழ்வே உணர்வைத் தீர்மானிப்பதென்ற வாய்ப்பாடுகளைத்தாண்டி இந்த அரேபிய உலகத்தை உற்று நோக்கும்போது அவர்களது சமூகப் போராட்டத்தைப் புரிவதில் பலசிக்கல்கள் இருந்தன.நேற்றுவரை இதுவே எனக்குள்ள பிரச்சனையாக இருந்தது.இதை மேற்குலகங்கள் கூறுவதுபோன்று மக்கள் போராட்டமெனக்கொள்வதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கிறது.கிழக்கு ஐரோப்பியச்"சோசலிசச் சரிவு" போன்று இதுவும் அரோபியச் சர்வதிகாரிகளது சரிவு எனச் சொல்லும் மேற்குலகச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!அவர்கள் தேசத்து அரசுகளும்,தலைவர்களும் போராடும் அரேபிய மக்களது போராட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.மக்களது போராட்டம் எனவும் பேரிகை கொட்டுவதில் அமெரிக்க வெளிவிவகார மந்திரியும்,அஞ்கேலா மேர்கலும்(ஜேர்மனிய அதிபர்) முந்திக்கொள்கின்றனர்.கூடவே,அரேபியத் தேசத்துச் சர்வதிகாரிகளுக்குக் கோரிக்கையும்விட்டு,"அமைதிவழிப் போராட்டத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்"என ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.

எகித்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அறிமுகமாகும் எல் பாறடாய் [Mohamed ElBaradei]அணுக் கண்காணிப்புக்குழுவுக்குத் தலைவராகவிருந்து ஈரான் பற்றித் துப்புத் துலக்கி அமெரிக்காவுக்கு வக்காலத்துவேண்டிய கடந்தகாலம் என் கண்களில் பட்டுத் தெறிக்கிறது! இன்றைய அவரது வருகையில் எகித்தியப் போராட்டம்,துனிசியா போன்றவற்றின் தொடரில் அரேபிய மாபியாக்கள் பலரது தலைகள் மறைந்து போகலாம்-தத்தம் தேசங்களைவிட்டு ஓடலாம்.ஆனாலும் இது மக்களுக்கான,அவர்களது அதிகாரத்துக்கான போராட்டமாக எடுக்கமுடியுமா?-என்னால் முடியவில்லை!



துனிசியவை விட்டு வெளியேறிய அதன் தலைவர் பென் அலியை இதுவரை ஜனநாயகத் தலைவராகக் கொண்டாடிய மேர்குலகக் கட்சித் தலைவர்கள் இப்போது அவனை சர்வதிகாரியெனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.பென் அலியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளியலுக வங்கிக் கணக்கு-பணம் முடக்கப்படுகிறது.இதன் தொடராகச் சிலவற்றைக் குறித்துப் பேசமுடியும்.

1: அரேபிய உலகத்தில் நடப்பது மக்கள் போராட்டம் அல்ல,

2: இப்போராட்டத்தினது சூத்திரதாரிகள் ஏகாதிபத்திய உலகத்தவர்கள்,

3: அரேபிய உலகத்திலுள்ள தேசங்களது "அரசுகள்-தலைவர்கள்"கவிழும்போது அதன் இடத்தில் புதிய மேற்குலகச் சார்பு அரசுகளே மீளவும் வரமுடியும்,

4: தேசங்களைவிட்டுச் செல்லும் சர்வதிகாரிகளது வெளிநாட்டுச் சொத்துடமை-செல்வம்-முலதனம் முடகத்துக்குள் வந்துவிடும்.


ஓடுகின்ற அரோபியச் சர்வதிகாரிகள் ஏலவே "மக்கள் புரட்சிக்கு"தயாராகின்ற தேசங்கள்(சவுதி அரேபியா,குவைத்,கட்டார்) நோக்கியே ஓடுகின்றனர்.மேற்கில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

வழமையாக உலகச்சர்வதிகாரிகளுக்கு உறைவிடமான அமெரிக்கா இதில் கடுகளவும் இடம்கொடுக்காது ஜனநாயக வேடங்கொண்டும் உள்ளது.இதன் அச்சொட்டான அரசியல் என்னவாக இருக்க முடியுமென்பதற்காக மேலே சொன்னவற்றை மீளச் சிந்திப்பதில் கவனமெடுத்தால் நிச்சியம் இந்தப் போராட்டத்தின் திசைவழியைப் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக அரேபியத் தேசங்களது இன்றைய போராட்டமானது "சமூக இணையத் தொடர்பாடலது அழுத்தமான பங்களிப்புடனே"யேதாம் அரேபியத் தேசத்துள் "மக்கள் எழிச்சி" எழுந்துள்ளதாகவும்,ரிவிட்டர்,பேஷ்புக்-புளக்கர் போன்ற இணையவழி ஊடகங்களே இதைச் சாத்தியமாக்கப் பெரும் பங்கு செய்ததாகவும் பலர் குரலிட முனைகின்றனர்.மக்கள் எழிச்சிக்குள்ளாகும் சமூகப் புறநிலை எப்போதுமே இஸ்லாமிய மத அழுத்தங்களால் இல்லாதாக்கப்பட்டபோதும், அரேபியவுலகத்துள் சமூகவுணர்வானது வயிற்றுப்பாட்டின் வீச்சில் ஆவேசமாகும் என்பது ஏலவே அறியப்பட்டதே. இதை என் எகிப்தியப் பிரயாணங்களில் அதிகம் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன்.

இத்தாலிய மாபியாக்களது "மாபியாப் பொருளாதாரம்"உலக வணிகத்துள் நாற்பது வீதம் சுழல்கிறது என்கிறார் "மாபியா டொச்சுலாந்து"என்ற நூலின் ஆசிரியர் இயூர்கன் இரொத் .மேற்குலகில் வீழ்த்தப்படும் மாபியாக்களது இறுதியிடமானது அரேபிய-ஆசியக்கடற்கரைகளாக இருக்கின்றவென்பதை நான் சார்மல் சைக் நகரத்தில் கண்டேன்.அரேபிய-ஆசியக் கடற்கரைகளில் நிறுவப்படும் பல நட்ஷத்திர ஓட்டல்களும்,உல்லாசப் பிரயாணத்துறையையும் இந்த இத்தாலிய-உலக மாப்பியாக்களே கைப்பற்றியுள்ளனர்.இவர்களால் மொய்க்கப்பட்ட அரேபிய உலகக் கடற்கரைகளது பரந்தவெளிகள் மேற்குலகத்துக்கு நல்ல வருமானந்தரும் வியாபாரமாக இருக்கிறது.என்றபோதும் இந்த அரேபியப் போராட்டத்தால் இப் பொருளாதாரத் துறை நொருங்கிவருகிறது.இதை அனுமதிக்கும் மேற்குலகம் இந்த மாபியாக்களாலேயேதாம் ஆளப்படுகிறது.என்றபோதும் ஏன் இந்தப் போராட்டங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கு?வரவேற்று,வாழ்த்துவதன் நோக்கமென்ன?

எண்ணை டொலர்[Petrodollar] :

இன்றைய மேற்குலகத்தின் இதுகாலவரையான இயக்கத்துக்கு-இருப்பு பக்கப்பலமாக இருப்பவை உலக நாணய நிதியம்,உலக வங்கி என்பது ஒருவகையான உண்மை.இந்த வங்கிகளது வாடிக்கையாளர்கள் அதிகமாக மூன்றமுலகம் எனப்படும் தேசங்களே.கடன் கொடுத்தல் வட்டியறவிடுதல் என்பதையுந்தாண்டி இவ் வங்கிகள்-நிதியங்கள் சம்பந்தப்பட்ட தேசங்களது அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துபவை.

இந்த உலக வங்கி,நாணய நிதியங்களுக்கு எவர்களது நிதி வந்துசேர்கிறது-எப்படி வந்து சேர்கிறதெனப் பலருக்கு புரியும்.அதிகமான வளர்ச்சியடைந்த தேசத்து அரசுகளது நிதிமூலதனமே இவற்றுக்கூடாக நகர்வதாக நாம் அறிவோமா?ஆனால்,அது கடுகளவும் உண்மையில்லை!




இன்றைய நவலிபரல் பொருளாதார நகர்வில் ஊகவணிகம் அனைத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறது.உணவுப் பொருட்களையே ஊகவணிகம் விட்டுவிடவில்லை.பொருளாதாரச் சழற்சி நொடிவதும்,தேங்குவதும்,துண்டு விழுவதும்,கருப்பு மூலதனம் பணவீக்கத்தைச் செயற்கையாகப் பின்னுவதும் தொடர்கதையே.மேற்குத் தேசங்களே திவாலாகும் இன்றைய சூழலில் அமெரிக்கா கடன் பளுவிலும் 500 மில்லியன்கள் டொலருக்கு அவ்கானிஸ்தானில் தூதுவராலயம் அமைக்கிறது.தேசங்கள்,மக்கள் துவண்டுபோகும்போதும் அதிகார வர்க்கம்-ஆதிக்க வர்க்கம் தமது கைகளில் கடிக்கும் நிதிப் பளுவை மக்களது தலையிற்சுமத்துவதை ஐரோப்பியக் கூட்டமைப்பினது யூரோ நாணயத்தைக் காக்கும் நிதியீடுகளுக்குள் காணமுடியும்.அதை செவிவழி Doves G-20 பொருளாதாரக் கூட்டினது [Weltwirtschaftsforum in Davos] சந்திப்புக்குள் கேட்டக முடியும்.

பொருளாதாரம் பொறியும்போது,உலக வங்கி,நாணய நிதியம் தனது கையிருப்புத் தங்கத் தைச் சீனாவுக்கு விற்றுக் கொண்டதென்பதும் வரலாறு.

செல்வம் எங்கே?சேந்த நிதி எங்கே?உலக வங் கிகளது கையிருப்பில் இருக்கும் ரிசேர்வ்த் தங்கம்,பெற்றோலிய டொலர்களது புண்ணியம்.அதென்ன பெற்றேலாலிய டொலர்?
லருக்குப் புரியும்.எண்ணை விலை உயர்ந்தபோதும்,உயரும்போதும் குவியும் உபரிச் செல்வமானது அரேபிய மாபியாக்களது(தேசத்துத் தலைவர் எனக்கொள்க)கைகளில் குவியும்.அதை அவர்கள் மேற்குலக வங்ககளில் குவித்துவைத்துக் கனவு காண்பர்.அப்படிக் குவிக்கப்பட்ட பணம் பெற்றோலிய டொலர்கள் என்பது வரலாறு.இதன் பெறுமதி அண்ணளவாக 15 றில்லியன்கள் எனக் கொள்ள முடியும்.எனினும்,சட்டபூர்வமாக அது 6 றில்யன்கள் எனச் சொல்கிறார்கள்.இந்த பெற்றோலிய டொலர்கள் சமீபத்துப் பொருளாதாரப் பொறிவில் 25 வீதம் மூன்றே மாதத்துள் சாம்பலாகியது.அப்படியிருந்தும் இன்னும் 75 % வீதம் அமெரிக்க-ஐரோப்பிய வங் கிகளுக்குள் சுழ ல்கிறது.

இந்தப் பணம் யாருடையது?:

அரோபிய தேசங்களது தலைவர்கள்,அமைச்சர்கள்,அரேபியச் சேக்குகளது.அரோபியாவுக்கு"ஜனநாயக ஏகாதிபத்தியம்"மக்கள் புரட்சியெவெடிக்கும்போது ஒரு பென் அலி தனது பெற்றோலிய டொலர்ச் சேமிப்பை இழந்தார்.அதன் பெறுமதி 8 பில்லியன் டொலரென மதிப்பிடப்படுகிறது.

இத்தகைய பெற்றோலிய டொலர் உரைமையாளர்கள் ஒவ்வொன்றாகச் சரிவார்கள்.இது திட்டமிடப்பட்ட,நவீனத் தட்டிப்பறிப்பு.அதற்கு மக்களது ஆவேசம்,வர்க்கப் போராட்டமே பலியாகி ஒவ்வொரு அரேபிய தேசத்துக்கும் புதிய மேற்குலக எடுபிடிகள் பதவிக்கு வருவார்கள்.

அவர்கள் ஜனநாயகம் அதிகமாகப் பேசுவார்கள்.

பழைய பெற்றோலிய டொலர் உரிமையாளர்கள் தலை தப்பினால் போதுமென ஒதுங்க அவர்களது மக்கள் விரோதத்தின் அரசியல்-உரிமைப் பிரச்சனையுள் இந்தப் பெற்றோலிய டொலர்கள் மாயமாக மறைந்துவிடும்.அரேபியத் தேசங்களுக்கு புதிதாய் வரும் அரசுகள் இந்தப் பெற்றோலிய டொலர்களை மீளப் பெற முனையுமா?

அப்படிப் பெற முடியாதவாறேதாம் இன்றைய துரோக அரசியல் அரேபிய தேசத்துள் 80களின் பின் பகுதி கிழக்கு ஐரோப்பிய-இருஷ்சிய வீழ்ச்சிகளை ஞாபகமூட்டுகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.01.11

Tuesday, January 04, 2011

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

லங்கைச் சிறுபான்மை இனங்களின்தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் அரசு-ஆளும்சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை அழிப்பதற்கெதிராகப் போராட முனையும் பரந்துபட்ட மக்களது அமைப்பாண்மையைச் சிதைப்பதில் நமது எதிரிகள்பலவடிவில் கூடுகிறார்கள்.நான் இதுவரை புலம்பெயர் சூழலுக்குள் இனங்காணும் அரசிலானது பற்பல கோணத்தில் மிகத் தந்திரமாக இயங்குகிறது. தம்மைத்தாமே உண்மையான மக்கள்சார் அமைப்பாக-குழுவாக முன்னிறுத்திவரும் புலம்பெயர் "இடதுசாரிகள்"அனைவரும் ஏதோவொரு ஆதிக்க நலனுக்குப் பலியாகிவிட்டு மீளவும், நமது மக்களுக்குத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக-மக்கள் "விடுதலை" அமைப்பாக இனம் காட்டுவதில் கவனங் குவிக்கின்றனர்.தமது இருப்புக்கும்,தொடர் எஜமான விசுவாசத்துக்காவும் தாம் "அம்பலப்பட்டபோதும்" அதை மறந்து-மறுத்து மக்கள் சார் அரசியலைத் தாம் பேசுவதாக ஏமாற்றுகின்றனர்.


இன்றைய மிகக் கெடுதியான அரசியல் நடாத்தைக்கு இந்தக் குழுக்களே காரணமானவர்கள்!இவர்கள், ஒருபோதுமே ஓய்ந்துபோக விரும்பாதவர்கள்.தமது எஜமானர்களது படியளப்புக்கு விசுவாசமாக இவர்கள் இயங்க முனையும் தளம் பாதிக்கப்பட்ட-யுத்தத்தால் அழிவுக்குட்ட-அரச இனவொடுக்குமுறையால் சிதைந்துபோன தமிழ்பேசும் மக்களது எதிர்காலமாக இருக்கிறது! புலம்பெயர் தளத்தில் இடதுசாரிகள்-முற்போக்குவாதிகள் எனும் போர்வையில் எந்தக் குழுவுரையாட முனைகிறதோ அதைச் செருப்பால் அடித்தாகவேண்டும்.இந்தக் கயவர்கள் தமது குழு நலனுக்கான நிபந்தனையாகத் தொடர்ந்து நமது மக்களது எதிர்கால அரசியலை இல்லாதாக்கப் பல முனை வேடமணிகிறார்கள். இதுள்" இடதுசாரிய" வேடம் இவர்களுக்கெப்பவும் கைகொடுப்பதால் அதையே தொடர்ந்து அணிந்தபடி எல்லாவற்றும் "தீர்ப்பு"எழுதுவதில் தம்மை முற்போக்காளர்களாக்கி, அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு நமது மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள்.இந்த "இடதுசாரிய"அராஜகவாதிகள் மிகக்கெடுதியான பிற்போக்கு முகாங்களது தயவிலேயே வாழ்வதென்பது உண்மையானது.எந்தவொரு புலம்பெயர் "இடதுசாரிகளும்-தேசிய,புலி-எலி வாதிகளும்"நம்பிக்கையற்ற கபட மனிதர்கள் என்பதே எனது அறுதியான நம்பிக்கை!இந்த நம்பிக்கையானது இவர்கள்மீது நம்பி ஏமாந்த எனது அநுபவத்தின்வழி ஏற்பட்டதல்ல.மாறாக இவர்களது அரசியற் பாத்திரத்தின்மீதான விமர்சனத்தின் வழி பெறப்பட்டதே!இவர்கள் அனைவரும் நாசகாரச் சக்திகள் என்பதே எனது துணிபு!இவர்களை நம்பி எந்தவொரு அரசியலும் செய்வதென்பது தம்மைத்தாமே தொலைப்பதற்கு ஏதுவானது.

இந்நிலையில், நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகளான இந்தப் புலம்பெயர்"இடதுசாரிகள்" விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது புலத்து மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.


நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை "புரட்சிகர"கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை(...) தமிழரின் பிரமுகர்களாகவும்- தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். இந்த வேலையில் தமிழரங்க வாசக வட்டமென்ற போர்வையில் இரஜாகரனது தளத்தில் கீறும் "அவர்களது" கைகளே"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"என்று அம்பலப்பட்டுப்போகிறது!

இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம்-பாசிசத்துக்கு எதிரான"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவு" என்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட குதர்க்க அரசியல் மோடி வித்தையை "இராஜாகரன்"பெயரில் எழுதும் பல முகமூடி மர்ம மனிதர்கள் செய்துவருகின்றனர்.இதேபோன்ற இன்னொரு முகமாக,ஏலவே அம்பலப்பட்டுப்போன ஞானம்-தலித்துவ அமைப்புத் தேவதாசன்குழு,இலங்கை ஜனநாயகவொன்றிய இராகவன் குழு,சோபா சக்தி வட்டமென எல்லாவிதமான சர்ச்சைக் குரிய நபர்களும் மக்களது அரசியலைக் கையிலெடுத்துத் தமது இருப்பு நோக்கிக் கூடுகிறார்கள். இரஜாகரனுக்கோ "எதிரியின் எதிரி நண்பனென" எவரையும்-எதற்காவும் "ஆதரிக்கவும்-எதிர்க்கவும்" முடிகிறது. இப்படியொரு இழி அரசியலைச் செய்வதைவிடத் தூக்குப்போட்டுத் தொங்குவது மேலாக இருக்கும் என்று எப்பவுஞ் சொல்வேன்!

புலத்திலுள்ள மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி, அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!புலத்து மக்கள் சுயமாகச் சிந்திக்க விடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது எனது நிலைப்பாடாகவே இருக்கிறது.

இன்றோ இந்தக் கேடுகெட்ட"போலி இடதுசாரிய"மாபியாக்களிடமும்,ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுக்களிடமும் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. எனினும்,இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறாத வகையில் இலங்கை-இந்திய,சீனச் சதி அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளை இந்தப் "போலி இடதுசாரிய" மற்றும் ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுகள் தமக்கேற்றபடி தகவமைத்து மக்களுக்குள் பரிசீலீத்துவருகிறார்கள்.சமீபத்தில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் ஒரு பரீட்சார்த்தமாகும்.

பண்டுதொட்டுத் தமிழ்பேசும்மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லாக் குழுக்களும்-தனிநபர் பயங்கரவாதிகளும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.இந்த மோசமான சூழலில் இத்தகைய மனிதவிரோதிகள் யாவருமே மக்கள் நலன்சார்ந்தவர்களாகத் தம்மை முன்நிறுத்தியபடி மக்களை வேட்டையாடுவதே பெரும் பயரகமானதாக இருக்கிறது.ஒரு இனவாதப் பாசிச அரசு இதன் மூலம் காப்பாற்றப்பட்டு, அது மக்கள் நல ஜனநாயக அரசெனும் படியை முன்னகர்த்திச் செல்வதே இதன்மூலம் சாத்தியமாகி வருகிறது.இது, சாதுரியமாக புலம்-நிலமென விரிகிறது.

தமிழரங்கமோ அல்லது மற்றைய அரச அனுதாபிகளோ"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"ஆதரவாகப் பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி, நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச அரசியல்-வாழ்வாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு "அரசியல்"ஆக்கி,அதுள் தமது இருப்புகளைக் காக்க முனைதலென்பது மிகக் கெடுதியானது.இவர்களை இனங்காணுதலென்பது "நான் சொல்லியோ-எழுதியோ" அல்ல.மாறாக, இவர்களது அரசியல் நடாத்தையையும்,இவர்தம் செயற்பாட்டையும் இதுவரையான காலவோட்டுத்துள் சீர் தூக்கிப் பார்த்தும்,இதுள் எந்தப் பொழுதில் எவரை "எதிர்த்து-ஆதரித்து" இவர்கள் அரசியல் செய்வதென்பதை நோக்கியே இதைச் செய்தாகவேண்டும்-இனம் காணவேண்டுமெனச் சொல்வேன்!

எமது மக்களது வாழ்வு, பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்களின்று வாழும்போது, அன்று,சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த புலம்பெயர் தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக இந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" எமக்கு முன் விரிகிறது!இதைப் பாசிசத்துக்கு எதிரான நகர்வாகச் சொல்லும் இராஜகரனது அரசியல் இருப்பே இன்று இந்தப் போலிகளை "ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்களாக்கி" ஆதரிப்பதால்மட்டும் சாத்தியமாகிறது! மாநாட்டை ஆதரிப்பதென்பது புலி எதிர்ப்பாகிறதாம்!புலியோ செத்துச் சிதைந்து எங்கோவொரு மூலையில் வர்த்தகஞ் செய்கிறபோதும் புலியே இவர்களுக்குப் பெரிய சக்தியாகவும்-முரண்பாடாகவும் இருக்கு!

ஈழப் போராட்டம்- போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல புலம் பெயர் "இடதுசாரி-ஜனநாயக"மாபியாக்கள்இந்தச் சூழலில் தமது பங்கைக் குறித்து இயங்குகிறார்கள்.இவர்கள் போடும் பாசிசத்துக்கு எதிரான எழுத்தாளர் இயக்கம்-ஊக்கம் என்பதெல்லாம் தமது அம்பலப்பட்டுப்போன திசைவழியைத் தட்டிவைத்து மறைத்துக்கட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே!


இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட புலத்து-நிலத்து மக்கள் தம் எதிர்காலத்தை இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.01.2011

Saturday, October 30, 2010

வரலாற்றில் கந்தரோடையும்,பௌத்த அடையாளமும்:

ந்தோரடை அகழ்வின்வழி கிடைக்கப் பெற்ற பௌத மத அடையாளம் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே...



றுதியான "ஈழயுத்தம்" இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது விக்கிரமசிங்கே-சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான"தீர்வு"த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு...


இன்னும் பலரோ இப்போது போடும் பட்டியலானது புலிகள்-சிங்கள அரசுகள் கேடயங்களாகக்கொண்ட தமிழ் மக்களது நிலைமைகளில் எவரிடம்,எவர் மக்களை விடுவிப்பதற்குக் கோரிக்கை வைத்து நின்றாரென்பது.


இந்திய-சீன மற்றும் மேற்குத்தேசங்களது இலங்கைமீதான பொருளாதார யுத்தத்தில் இப்போது கேடயங்களாக வைக்கப்பட்ட முழு இலங்கை மக்களையும் விடுவிக்க எவரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை... போங்கடாப் .... மக்களே!


நமது வடக்குக் கிழக்கு மக்களோ, இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து, நல்லூர்த் தேரிழுத்தும்,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.


கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் இராகவன் போன்ற மூத்த புலி உறுப்பினர்கள்(முன்னாள்) நம்புகிறார்கள்(அன்றைய ஆயுதம் ஏந்தும் சூழல் இன்று அவசியம் இல்லை எனப் பகுப்பதிலிருந்து...).




யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் அண்ணா பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன் அண்ணா சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!


முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது.


"பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம்"


பேய்க்குப் பேன் பார்த்த பேய்ப்... னாக்கள்!


இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?


பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே...


பாவலர் துரையப்பாப்பிள்ளை,கணபதிப் பிள்ளை, பத்தம நாதனைக் கடந்து, டாக்டர் இந்திரபாலாவிடம் வருபவர்களுக்குத் தமிழ்ப் பிரதேசமென இப்போது வகுத்திருக்கும் எல்லை மேலும் எங்கோ விரிவதும் புரியத்தக்கது.தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கவும் காண்பர்.பேராசிரியர் சிற்றம்பலம் நமது வரலாற்றுப் புரிதல்களைப் பார்த்துத் தூக்குக் கயிறு ஏந்தாது இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.


இத்தகைய நம்பிக்கை(யாழ்ப்பாணத்தில்-கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த அடையாளங்களது வழியில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் வடக்கில்...) வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள்(மாற்று-மாற்றுக் கருத்தாளர்களிடம்) நிலை பெறுகிறது.வரலாற்றை மகாவம்சம் கற்றுக்கொடுக்கும்வழி புரிய முடியுமா?அல்லது ,ஜனநாயகம்,விளிம்பு,பல்-கல்-புல்,அல் கொல்லெனப் புரிய முடியுமா?


இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத்துக்கொள்வே பயன்படும்.


சிங்களப் பேரினவாதம் எங்கெங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியுமோ அங்கெல்லாம் இப்படிக் கயிறுவிடும் கோணங்கிகளையும் வைத்துக்கொண்டு தன் காரியத்தை நிறைவாகச் செய்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

30.10.2010