Saturday, November 13, 2010

சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்...

சோபாசக்தி,வளர்மதி:இடையில் நான்...

Shaseevan hat geschrieben:
„அண்ணை, நீங்கள் சோபாசக்தி கேட்ட கேள்விக்கு எழுதப்போகும் பதிலை நினைத்தால் ஃபேஸ்புக்கை விட்டு ஓடி ஒளியவேண்டும் போல் உள்ளது. எதிர்காலத்தில் 'சளாப்பல்' என்ற சொல்லுக்கு உங்கள் பதிலே உதாரணமாக இருக்கும். :)



Shoba Sakthi13 November 2010 at 10:14
Betreff: From Shoba
/உங்கள் நேரத்தை இப்படியானவர்களுடன் விவாதித்து விரயம் செய்யவேண்டாம் என்று அனுபவத்தாலும் நட்பினாலும் கேட்டுக்கொள்கிறேன்// என எழுதப்பட்ட பின்னூட்டமான்றிற்கு தீபச்செல்வனும் சிறீரங்கன் அண்ணனும் விருப்பம் சொல்லியிருக்கிறீர்கள் இங்கே 'இப்படியானவர்கள்' எனச் சொல்லப்படுவது நான்தான். என்னுடன் விவாதிப்பது விரயம் என்றா நீங்கள் இருவரும் கருதுகிறீர்கள்? உங்கள் இருவரதும் பதில்கள் எனக்கு முக்கியமானவை.



இக் கிழமை முதல்,நான் புதிய வேலைகிடைத்து என்னுடல்-மூளை வருத்தி ஓய்ந்து,குடித்துத் தூங்கி,மதுமயக்கத்தில் எழுந்தபோது,கணினித்திரை மங்கலாக இருக்கச் சோபாசக்தியின் கேள்வியும்,நாரதன் சசீவனின் கருத்தும் கண்ணிலேபட்டுத் தாக்கியது மண்டையை!

இனி விஷயத்துக்கு வருவோமா தம்பி சசீவா?(இஃது-பொதுவூழ்)

தம்பி,சசீவா!,சோபாசக்தி என்ன சொறுடிங்கரது பிரச்சனைகளை அல்லது பின்னங்களைப் போட்டா கேள்வி எழுப்பியுள்ளார்?-நான் சளாப்ப!

அவரைப் பொருத்தவரை,தன்மீதான அரசியல் உரையாடலையொட்டி,அவர் இருப்புச் சம்பந்தப்பட்டதும்,அதுள் எழுந்துள்ள அடையாள நெருக்கடிகுறித்ததுமான புரிதலில் அவர்சார் அரசியலைக் குறித்து நாம் எதிர்கொள்ளும் போக்குகளோடு நெருங்க முனைகிறார்.அல்லது, நொருக்க முனைகிறார்.இது,எனக்கு,எப்போதும்போலவே விருப்புக்குரியதும்-என்னை உரைத்துப் பார்ப்பதற்கும் உவகையானதே!(இது"நான்" எழு நிலை).

அன்புச் சோபாசக்தி, "உங்கள் அரசியல்-எழுத்துப் பரந்தபட்ட மக்களது அரசியல்வாழ்வோடு இயங்குகிறதா?அல்லது நீங்கள் குறிப்பிட்டவொரு நிலையில் அத்தகைய எழுத்துக்களை மக்களது பரந்துபட்ட நலன்களோடிணைத்துப் பரந்துபட்ட மக்களையொடுக்க முனையும் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு மேய்ப்பர்களாக்கும் முயற்சியில் வியூகம் அமைப்பவரா?"(...)

ஒடுக்குமுறைகளை உடைத்து முன்னகர முனையும் எம் மக்களக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது எனக்கு உடந்தையானதில்லை!உங்களுக்கும் அப்படியே எனக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

உங்களை நோக்கி(சோபாசக்தியை நோக்கி)பல்வேறு கட்டுரைகளை-கேள்விகளை நண்பர் வளர்மதி எழுதியுள்ளார்-எழுப்பியுள்ளார்.அவருடைய கேள்வியானது உங்கள் அரசியல் நடாத்தையைக் கேள்விக்குட்படுத்துபவை.சமீகாலமாக நான் கவனித்துவரும் எழுத்துக்களில் முக்கியமானது வளர்மதியின் எழுத்துக்கள்.எப்படி உங்கள் எழுத்துக்கள் நமது மக்களது வாழ்வோடும்-விடுதலையோடும்,அவர்களது அரசியலோடும் விளைவுகளை ஏற்படுத்த முனைகிறதோ அதேயளவு உங்களது அரசியல் நடாத்தையைக் கேள்விக் குட்படுத்துவது வளர்மதியின் கேள்விகள்.

இந்தப் புள்ளியில்,நீங்கள் இதுவரை எதுவுமே நடாவாததுபோன்றிருந்துகொண்டு, மற்றவிடயங்களில் மூழ்கும்போது(அப்படிக் காட்டும் நிலையில்) நான் வளர்மதிக்கு உரைக்கிறேன்"சோபசக்தியோடு விவாதிக்க முனைவது வீண் விரயம்" என்று.அத்தகைய எழுத்தை முன்வைக்கும் பின்னூட்டமும் விருப்பமாகிறது!

வளர்மதிக்குப் பதிலுரைப்பது உங்களதுரிமை.ஆனால்,சமீபக காலமாக நீங்கள் இயக்கும் அரசியல் உரையாடல்உலகத்தால் ஒடுக்கப்படும்தமிழ்பேசும் மக்களது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதென்பதால்,நீங்கள் பொதுத் தளத்தில் வளர்மதியோடு உரையாடவேண்டும்-அவர் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும்,தாங்கள் குறித்த அரசியல் நடாத்தைக்கும் பதிலுரைத்தே ஆக வேண்டும்.இத்தைய கடப்பாட்டைத் தட்டிக்கழித்துவிட்டு என்னிடம் பதில் கேட்பதன் நியாயத்தோடு வந்திருப்பது சரியே!அதேபோன்று,நானும்"சோபாசக்தியோடு உரையாடுவது விரயம்"எனச் சொல்வதும் தங்கள் நிலையினது விளைவுதரும்எனது புரிதலில் எனக்கும் நியாயமாகிறது!

இந்த எனது "நியாயத்தை"தப்புவென நிரூபிப்பது உங்கள் கையில்.அதைச் செய்து(வளர்மதிக்குப் பதிலுரைத்து) என்னைக் கேள்வி கேட்பது இன்னொரு தளத்தில் இயலுமாகும் சோபாசக்தி.அதுவரையும்...



ப.வி.ஸ்ரீரங்கன்.

13.11.2010

Friday, November 05, 2010

வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...

"ஆக்கபூர்வ"வரலாறின் வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...


"வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!
"

"நாணயவான் வாறாரூ செம்பை எடுத்துவை, உள்ளே!"



என்றுரைத்துக் கட்டியமொன்று கடை-வாய் கிழித்து:


ன்றெமது காலச் சூழலானது சூதுநிறைந்த கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உளவியற்றாக்குதல்-காயடித்தல்வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.


இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படுவேண்டும்.


பாரதக் கரச் சேவைக்கு "பாரு நான் வந்தேன்"என்றபடியே பாட்டுக்கட்டும் பெருமாள்களுக்குப் பல்லவி எடுத்துவிடப் பெரி-அரிய,வலிய-சுழிய சுண்ணாம்பு டப்பாக்களும் களமாடிச் சேர்க்கும் கூட்டமெல்லாம் "மண்டை மூட்டைகளை" மறந்து குலாவிக் குஞ்சம் முடிய...நாமும் நரகத்திலிருந்து அவர் பாதம் நோக்கி-நோக்கி....


அவர் விபரஞ் சொல்ல முனைந்து...


சிங்களமும் சினைகொள் சங்கமித்தையும்களிகொள்பொழுதுக்குள்...




மண்டைகளில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் குருதி நெடில்ஓய்ந்தே போனதென்றால் அப்பப்ப மூக்கும் சளிகட்டிக்கொண்டதாக எடுத்தாண்டு கொள்(ல்)க! முன்னைய அரிய க(கொ)லைக்காகப் பின்னைய பொழிவுகள் எல்லாம்-எல்லோர் பெயராலும் வாசித்து,வாசித்து வஞ்சிக்கவென...இதற்குள் கூழ்ப்பானைப் பல்லியாக விஸ்வலிங்கம் சிவலிங்கம், வினை தீர்க்கும் வேலொடு இராமராஜ பகவதர் அண்ணாச்சி,படு அமர்க்களமாக மந்திகள்கூட்டு.பாரிசீல் சந்திப்பு,வானொலியில் வஞ்சிப்பு என்றெல்லாப் பக்கமும் வரதரின் வாய்மொழிப் புலமைகாண் குஞ்சுகள்...


அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் சோனியா-ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்..."பேச்சு வார்த்தை"பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் பிள்ளையாரூ-கருணாகர மாத்தையா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி வரதராஜ பெருமாளு...இழவு வீட்டில் பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்-வடக்கு பங்களாக்குள்...அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய முள்ளிவாய்க்கால் பேரரசர் பிரபாகரச் சக்கரவர்த்திக்குப் பின்னாளில் மண்டை பிளந்து துட்டக்கைமுனுவைக் காட்டிய கேடிகளில் பெருமாளும் ஒருவரெனக் கொண்டே தீரவேண்டுமெனப் பொன் கரம் கூப்பிப்பொருளுரைக்கும் நக்கீரப் பேரர்களது நாவலிக்கும் நர்த்தனத்துள்நஞ்சு வைக்கும் நல்ல பொழுதுகளும் நம்மை நெருங்கும்.


முள்ளி வாய்க்காலில் கிள்ளி வைத்த தலையும் பிளந்து,தாகம் தொலைத்த துட்டக்கைமுனுவுக்கு சிங்களத்தில் எடுத்துச் சொல்ல சிங்களமும் கற்றுத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தர வந்துள்ளார் தங்கத் தலைவர் வரதராஜ பெருமாளு.தெவிட்டாத தென்பாண்டித் தமிழிலுரைக்கும் அவர் பாலான "புகழ்" மாலை கட்ட வட்டக் கலரில் வர்ணந்தீட்டவும்"ஆக்க பூர்வமான" வரலாறொன்றுண்டெனச் சொல்லப் பலருண்டு பாரீசு மாநாகரில்-மாத்தையா மகிந்தா மடக்கி வைத்த செருப்புக்குப் பட்டில குஞ்சமெனத் "தடுக்குப் பாய் எடுத்து உள்ளே வை நாணயவான் வாறானெனச் சொல்ல" வம்பு -ஏன்? ...ம் கொட்ட எங்களுக்குஞ் சந்தர்ப்பம் வருகிறது.இந்த ...ம்---க்குள் பம்முகிற பேரவா பின்னைய பொழுதொன்றில் காகோலை கொண்டெவரை கொளுத்துமோ யான் அறியேன் அச்சோபாவே!



விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை அன்று!செம்மறிவுக் குலப் பேரரசன் முன்னாளும் இன்னாளும் முதலமைச்சுப் பொடிசூடிய திம்புத் திட்டத்து தும்புக் காவடிக்குத் தோள்கொடுத்தான் கொரிலாக்குஞ்சு!பாரதமே-பாரதமே பார் நீ பக்காப் படைப்பு நிலைக் களன்தொடு பங்காளிப் பேரிரைச்சலை!பல்லாக்குத் தூக்க இப்படியும் ஒரு கூட்டம்.பரதேசி-பரதேசி, மோட்டுக்கணக்கொன்றைக் கூட்டி நீ கழிக்கையியே சொருடிங்கர்தம் பூனைக் குற்றுயிரும் பெட்டிக் கதிர் வீச்சும் சுட்டும் பொழுதுக்குள் வாழ்தலும்-சாதலும் ஒருதடவையில்... தமிழ்ப்பெருங்குடியும் இங்ஙனமே-இங்ஙனமே!


கடன்பட்ட நெஞ்சு:


முன்னொரு காலத்தில் முக்கி-முக்கி நானெழுதிய பிச்சைப் பொடி நடைக்குள் குப்பர உன்னை அமுக்கி:


"இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது".-காப்டன் கூறிக்கொணடான்


"ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது."-ஜெனரல் கூறிக்கொண்டான்.


தேசாபிமானி கூறினார்:-" இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்".


தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:" எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்".


முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-" குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் பூராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட பூமிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்...!" மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.


கடவுள் கூறிக்கொண்டார்:-" எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த குடித் தமிழும்... தொலைந்தது இந்தப் பூமிக் கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம் நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என் விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள..." ஆத்திரப்பட்டுக்கொண்டார்.

"என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்".- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்-அன்றும்,இன்றும்.

வேறு-வேறு:

கொய்பிள்ஸ்சும் தோல்விகாண,கோவேந்தர் வரதருக்கு வாழ்த்துரைக்க வந்தானே எம் மகராசா புஷ்பா அண்ணாவின் புனைவொன்றைக்காவிக் காவி... கப்பலேறிக்கொடும் அஞ்ஞாதவாசத்துள் கொள்ளி வைக்கத் திண்ணைக்கு வந்தான் மண்டையன் வரதராஜப் பெருமாளு.தள்ளி நில்!

வேறுக்கும் வேறான வேடம்:


கே.பி.மாமா மோப்பம் பிடித்து மெல்லச் சொல்லும் அபிவிருத்தியில் எட்டிப் பிடிக்கும் புனர்வாழ்வை புலிக்கு வால் பிடித்த பின்னைய பன்னப் பாய் படுக்கைக்குரியதுகளுக்கு அம்பு வைத்து ஆட்டுகிறார் அவர்கள் புலிப் போராளிகளென. புண்ணாக்குகளும் நம்பிக்கொண்டிருக்க நாடகத்தின் தொடர்கள் நல்ல நடிகர்களைத் தேடுகிறது.இங்கும் அங்குமென சந்திப்பு-ஒத்திகையென மண்டையன் குழுத் தலைவரோ அந்தப் பெருமாளுக்கே தண்ணிகாட்டி மன்னிப்பு வேறு... ரீ.பீ.சீ வானொலியும் வகுப்பெடுக்கும் பித்தளைத் தங்கம் பின்னைய இரவில்மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார வகுப்பெடுக்க சிரசுகள் பறித்த ஆவிகள் தொடரும் அந்தா-இந்தா,முன்னாள் முதலமைச்சர் மண்டையன் குழுவின் வேட்டைப் பொழுதில்...


15 வருடத்து அஞ்ஞாத வாசத்து "தோ லருக்கு"ப் பொன்னாடை போர்த்துவதற்கு இன்னொரு பொதுவரங்குகொள் நல்ல கலைஞர்கள்-கவிஞர்கள் பெருக்கெடுக்க பண் ஊதத் தேவையென பெரு விளக்கஞ் செய் புன்னையில்லா பேரளகர்களும் இங்கே உண்டு-உண்டு!"கொல்லையில் கிடக்கும் மண் குடத்தை எடுத்து நீ உள்ளே வை-உள்ளே வை!"கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டால் நீ அழுதுண்டு அடுக்கிவிடு அப்பன்,ஆத்தையில்ல ஊருக்கு அடுப்பெரிக்கவே வக்கில்லையென.

கொட்டைபோட்ட சிரசு அறுப்பர்கள் மொட்டை போட்டு நாமமிட 15 ஆண்டுகளுக்கு வகுப்பெடுத்து நம்மையெல்லாம் தேடிக்கொள்ள நடரோட்டில் ஆண்டி வேறு அகப்பட்டானே!

ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:

"டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென" தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து, வானம் சிவந்தது-அன்று! இன்று, வர்ணக் கலவையில் வகுப்பெடுக்கும் தோரணையில் எங்கள் நாவலனும் என்ன அழகோ எப்படியழகோ!எட்டுத் திசையும் இருண்ட பொழுதில் பாரதத்தின் பாட்டி "காக்க வடை சுட்ட கதை கேளென" பக்குவமாய் பாக்குத் தறித்து பாடையில் போக்குவதற்கு தேசிக்காய் தேடியெடுத்து அரிந்து அப்பால் வீசுகிறாள்.


பிற்குறிப்பு:

எனது கைகளிலிருந்த வறுத்த வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையரசு தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்... வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழருக்குச் சொந்தமில்லையென்றும் அழுது வடிந்த ஜீ.ரிவி மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி... பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றதை விட்டுவிட்டதாகப் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் செய்தியும் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.


வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் "அவர்கள்"மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் "தோலர்களும்"தாம்.

"தாங்காதம்மா தாங்காது,கொலைத்தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!"தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ"பெரியாருக்கு"-போருக்குள்ளே

புகழுண்டு, ஊருக்குள்ளே இழவுண்டு!

நோட்டு கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த "தீர்வை"மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய... வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!


ப.வி.ஸ்ரீரங்கன்

05.11.2010

Saturday, October 30, 2010

வரலாற்றில் கந்தரோடையும்,பௌத்த அடையாளமும்:

ந்தோரடை அகழ்வின்வழி கிடைக்கப் பெற்ற பௌத மத அடையாளம் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே...



றுதியான "ஈழயுத்தம்" இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது விக்கிரமசிங்கே-சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான"தீர்வு"த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு...


இன்னும் பலரோ இப்போது போடும் பட்டியலானது புலிகள்-சிங்கள அரசுகள் கேடயங்களாகக்கொண்ட தமிழ் மக்களது நிலைமைகளில் எவரிடம்,எவர் மக்களை விடுவிப்பதற்குக் கோரிக்கை வைத்து நின்றாரென்பது.


இந்திய-சீன மற்றும் மேற்குத்தேசங்களது இலங்கைமீதான பொருளாதார யுத்தத்தில் இப்போது கேடயங்களாக வைக்கப்பட்ட முழு இலங்கை மக்களையும் விடுவிக்க எவரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை... போங்கடாப் .... மக்களே!


நமது வடக்குக் கிழக்கு மக்களோ, இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து, நல்லூர்த் தேரிழுத்தும்,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.


கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் இராகவன் போன்ற மூத்த புலி உறுப்பினர்கள்(முன்னாள்) நம்புகிறார்கள்(அன்றைய ஆயுதம் ஏந்தும் சூழல் இன்று அவசியம் இல்லை எனப் பகுப்பதிலிருந்து...).




யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் அண்ணா பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன் அண்ணா சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!


முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது.


"பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம்"


பேய்க்குப் பேன் பார்த்த பேய்ப்... னாக்கள்!


இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?


பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே...


பாவலர் துரையப்பாப்பிள்ளை,கணபதிப் பிள்ளை, பத்தம நாதனைக் கடந்து, டாக்டர் இந்திரபாலாவிடம் வருபவர்களுக்குத் தமிழ்ப் பிரதேசமென இப்போது வகுத்திருக்கும் எல்லை மேலும் எங்கோ விரிவதும் புரியத்தக்கது.தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கவும் காண்பர்.பேராசிரியர் சிற்றம்பலம் நமது வரலாற்றுப் புரிதல்களைப் பார்த்துத் தூக்குக் கயிறு ஏந்தாது இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.


இத்தகைய நம்பிக்கை(யாழ்ப்பாணத்தில்-கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த அடையாளங்களது வழியில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் வடக்கில்...) வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள்(மாற்று-மாற்றுக் கருத்தாளர்களிடம்) நிலை பெறுகிறது.வரலாற்றை மகாவம்சம் கற்றுக்கொடுக்கும்வழி புரிய முடியுமா?அல்லது ,ஜனநாயகம்,விளிம்பு,பல்-கல்-புல்,அல் கொல்லெனப் புரிய முடியுமா?


இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத்துக்கொள்வே பயன்படும்.


சிங்களப் பேரினவாதம் எங்கெங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியுமோ அங்கெல்லாம் இப்படிக் கயிறுவிடும் கோணங்கிகளையும் வைத்துக்கொண்டு தன் காரியத்தை நிறைவாகச் செய்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

30.10.2010

Sunday, October 10, 2010

நானும்,எனது படைக் கலங்களும்...

நானும்,எனது படைக் கலங்களும்.

-என் சுயஞ் சொல்லும் என்சுயசரிதை.


பொதுவாக ஒன்றை ஏற்பதும்,ஏற்காததும் என்பதற்கு அப்பால் என்னால் ஒருவிடயம் பகரப்பட்டு நான் அதுள் தவறிழைத்திருப்பின் அதை ஒத்துக்கொள்வது-நியாயப்படுத்தலையுந்தாண்டி உண்மைகளை ஏற்பதென்றே கருதுவதில் தப்பிருக்க முடியுமா?

ஒன்றை நம்ப வைப்பதற்கு அல்லது ஏற்க வைப்பதற்கெடுக்கும் முயற்சியில் எத்தனையோ "சமூக நடாத்தைகள்" பொதுத் தளத்தில் ஒன்றோடொன்று பின்னப்பட்டுக் கதை எழுதுவது எதற்காக?

சமூகத்தில் நடப்பது அனைத்துக்கும் அந்தச் சமூக அமைப்பினதும் அதுசார்ந்து வாழும் ஒழுங்குகளுக்குமிடையிலான பொதுப்பண்பு(பொருளாதார முறைமை)சார்ந்த நெறியே காரணமாகிறதென்பதால் அனைத்தையும் அது சார்ந்து பார்ப்பது நியாயமானதுதாம்.என்றபோதும்,மொட்டாக்குக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப்போட்டு என்னை நான் நியாயப்படுத்தும்போது எனது போலித்தனமும்,என் கேவலமான சதியும் நேர் எதிராக என்னைச் சிதைக்கிறது!

நான் நாணய வாதியாக என்னை உரைப்பதற்கு பல வழிகளிலும் எதையெதையோ பின்னிப் புனைகிறேன்.எதுவும்,எனது நேர்மையீனத்தை மறைப்பதற்கில்லை!நான் தப்புச் செய்யாத தூய தருணங்களைச் சொல்ல எனது பல்லக்கை மற்றவர்களும் சுமக்கக் கட்டளை-ஆலோசனை பகிர்கிறேன்.அவர்களும் எனது சமூக நடவடிக்கையும் அதுள் நான் கடந்த பாதைகளையும் எடுத்து தீர்க்கமான படம் வரைகிறார்கள்.அந்த ப்படத்துக்குப் போடப்படும் சட்டகம் "மக்களது விடுதலைக்கு-நலனுக்கானதெனச் சொல்லும்" குறிப்பானாக எனது சதிமிக்க அரசியற் பாத்திரம் புரட்சிக்கான காலவர்த்தமானத்தை நிர்ணயிக்கும் ஒரு சந்து பொந்தாகப் பகிரப்படுகிறது.இதை நானே வெறுத்தொதுக்க முனைகிறேன்.எனினும்,என் முகமூடி கிழிந்து சந்தியில் கோர முகத்தோடு நான் நிற்பது எனது எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.இது,என்னைத் துரத்துகிறது.

"எங்கெங்கோ விழுந்து,எதிலெதிலோ பட்டுத் தெறிக்கும் மழை நீராக" நான் ஆட்டுவிக்கப்படுகிறேன்!என்னால் எனக்காகச் செயற்படுவதையும்விட என்னை ஆட்டுவிக்கும் புரவலர்களுக்காகத் தினமும் இணையங்களை உலாவந்து தகவலளிப்பதிலிருந்து வேறென்னத்தைப் பெரிதாகச் செய்தேன்?

நான் வெறும் குறிப்பான்!


எனது நாமத்தில் கோலமிடும் எல்லா வகைப் புனைவும் எனக்குள் முகிழ்த்திருப்பதெனவெவராவது யோசித்தால் எனது முழுவாழ்வில் "நாள்முழுதும்" கணினித்திரையியே இருக்க வேண்டும்.இந்தவுண்மையைக்கூடப் புரியாதவர்களது கூட்டுதாம் என்னை மீளத் தகவமைக்க முண்டுகளாக வரவேற்கப்படுகின்றன.இதன் தொடரில் பேணப்படும் தொடர் நாடகங்களை எவராவது உலுப்பியெடுக்க முன், அவர்களது தலையைக் கொய்வதற்கேற்ற படையணிகளை உசார்ப்படுத்துவது சாத்தியமாக இருக்கும்.

என்றபோதும்,என் இருப்பு எப்படியும்-எதானாலும் அழியுமா?

என்னால் இது குறித்தெப்போதும் சகிக்க முடிகிறதே இல்லை!

நான் யார்?-எனக்கும் மக்கள் திரள் போராட்டத்துக்கும் எந்த வகையில் உறவிருக்கிறது?

எனது நலன்களைக் காவும் ஏதோவொரு திசையில் மக்களுக்குள் நான் பிணைக்கப்பட்டேன்!எனது கடந்த காலத்தை உரைப்பதற்குத் தோதான தகவல்களை நானே சொல்லிவிட்டேன்.இது நானறியச் சொல்லப்பட்டதே இல்லை!நான் பொய்யன்.பொய்யனது எண்ணங்கள் செயற்பாடுகள் நீண்ட காலத்துக்கு உண்மைகளது திசையில் நிலைக்க முடியாதன்ற இயக்கப்பட்டில் எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

எனினும்,அதை புரட்டி மீளவும் என்னை முன் நிறுத்தியே தீருவேனென நான் முயல்கிறேன்.அது ஓரளவுக்கு மேலே என்னை மீளப் பொய்யனெப் பகரப்போகிறது.அது பலதரப்பட்ட தளத்தில் என்னை வலுவாகச் சிதைப்பினும் ஒரு குறிப்பட்ட வட்டத்திலாவது நான் நிலைக்க விரும்புகிறேன்.

அந்த வட்டம் எனக்கு நற்சான்றிதழ் தருவதற்காக எத்தனையோ ஆய்வுகளை கூறப்பட்ட வரிகளுக்குள்ளிருந்து புலனாய்வு செய்வதில் நீதியையும்-நியாயத்தையுங் குறித்து எந்த மனசாட்சியும் எனக்கு இல்லையென மீளப் பகர்வதை நான் உணர்வுரீதியாக ஏற்கமாட்டாது தடுமாறுகிறேன். என்னால் புணரப்படும் நியாயம் என்னைச் சுற்றிய அரசியல் வாழ்வில் என்னையே சவக் குழிக்குள் தள்ளும்போது அதையும் எனக்கேற்ற முறையில் மற்றவர்களுக்கும் பொருத்தி எனது நடாத்தைகளைச் சமூகத்தின் முதுகில் ஏற்றிவைக்கவே ஆசைப்படுகிறேன்!

நான் உண்மையானவனென என்னை நானே உரைத்துப்பார்க்க எனக்கு அவசியமென்ன?

பொய்யனாக இருப்பதில் அறிந்தே தொடரும் எனது உணர்வு நிலைக்குள் என்னை உரைப்பது கடினம்.என்னை நான் உரைக்காத தருணமே என்னை மற்றவர்கள் உரைத்துப் பார்ப்பதில் முடிந்துள்ளதென்றவுண்மையையும் நான் ஏற்க மறுக்கிறேன்!

இந்தப் புள்ளியே எனக்குள் சதா புனைவுகளைச் செய்யத் தூண்டுகிறது.

ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்றை அரங்குக் எடுத்துவருகிறேன்.அது இதற்குள்ளும்,அதற்குள்ளுமாக வேஷங்கட்டும்போது எனக்கு எந்த வெட்கமுமில்லை!ஏனெனில்,"தில்லு முல்லும் உள்ளமெல்லாம் எனக்குக் கல்லு முள்ளும்." இதுவென் சுயமாகமாறிய எனது சமூகப் பாத்திரமேவின்று எனது இருப்பை அசைக்கிறது.நான் இதிலிருந்து மீண்டுவிட முனைகிறேன்.எனது இருப்பை எப்பாடுபட்டாலுங் காப்பதற்கேற்ற எல்லா வகை அஸ்த்திரங்களையும் உபயோகிக்க எனது படையணிகளுக்கு ஆலோசனை முன் வைக்கிறேன்.அவர்களும் தமது அநுபவத்துக்கேற்ற தெரிவுகளில் அஸ்திரங்களை எய்கின்றனர்.இது,பரவலாக எல்லா நியாயங்களையும் என்னைச் சுற்றி மதிலெழுப்புவதில் மற்றவர்களுக்கும் எனது பணிபோன்றவொன்று இருக்கிறது.அதில் நானே முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதைச் சொல்லிச் செல்வதையும் கவனமாகக் கவனிப்பதில், நான் எப்போதும்போல செயலூக்கத்தோடு இருக்கிறேன்.இந்தச் செயலூக்கம் ஒரு தியான நிலையாக எனக்குள் பழக்கப்பட்டுவிட்டது.எனவே,நான் எதையிட்டுங் கவலையுறேன்.

இதை மறுத்து,பண்பு ரீதியாக மாற்றம் வர, அளவு ரீதியான மாற்றம் ஏற்பட்டாகவேண்டும்.எனக்குள் இருக்கும் அளவுகோல் மாறாதவரை எனது பண்பில் எந்தக்கொம்பரும் மாற்றங்கோர முடியாது-எந்தெதிரெழுத்தும் எனக்குள்ளிருக்கும் அளவை மாற்றமுடியாது.

ஏனெனில்,எனது வாழ்நிலையே எனது அளவைத் தீர்மானிப்பதால் அது புறத்திலிருந்து என்னக்கதை உருவாக்கி இயக்கிறது.எனது வாழ்நிலை மாறத்துடிக்கும் சமூகத்துக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதென்றால் அதை யாரால் மாற்றமுடியும்?

என் வாழ்நிலையோடு தீர்மானமாகும் எனது சமூகவுணர்வு எனக்குள் பேசப்படும் புரட்சிகர நடவடிக்கையென்பது என்னளவில் உணர்வுரீதியாக உள்வாங்க முடியாது. ஏனெனில்,நான் புரட்சிகர நடவடிக்கைகளை-முன் நிபந்தனைகளை எனக்குத் தோதாக மாற்றும்-பொருத்தும் தளத்தில் எனது புரிதற்பாட்டைச் சிதைக்கும் எந்தத் தரவையும் அதன் நியாயத்தன்மையில் வைத்து மாற்றி,மாற்றியமைக்கும் எண்ணங்களது தெரிவில் நான் இருப்புக் குறித்துச் சதா இயங்குவது எனது பண்பினது தொடர்.

இதைப் புரியாதவர்கள் எனக்குப் பாடம் நடாத்த முனைந்தால் அது அவர்களது தப்பில்லை.மாறாக, அது அவர்தம் அறியாவுலகம்.

அவ்வளவுதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.10.2010

Wednesday, October 06, 2010

"நான்-நான்"-Ethical egoism

"நான்-நான்"-Ethical egoism

மீண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும்.

"நான்தான் தனித்து ஆப்பு இழுத்தேன்,

நான் தான் மார்க்சிசம் பேசினேன்,

நான் தான் தனித்து உருட்டிப் புரட்டினேன்"

புலம்பெயர் பத்திரிகை-இணைய ஊடகத்துள் இந்த முத்துக்களை மலிவாகக் காணமுடிம்.இந்த "நான்"சாகடிக்கப்படமால் நானிலித்துக்கு நன்மை பயக்குமெனக் கருத முடியுதோ?-;இல்லையே!

"நானே குரல்-நானே ஜீவன்" -"நானே புதியஜனநாயகத்தை புலம்பெயர் சூழலில் அறிமுகப்படுத்தினேன்". சுப்பரடா-சுப்பா!

1986 இன்ஆரம்பத்திலிருந்து நூரன் பேர்க்குக்கு இலங்கையிலிருந்து சென்று தமிழ்நாட்டில் வாழ்ந்த "என் குரு"( சிவகுரு ஐயாவுக்கு அன்று எழுபது வயது.அவரது மகள் ஜனகா அக்கா இன்று பிரான்சில் இருக்கிறாள்) மூலம் நேரடியா எடுத்து நாமும் வாசித்தோம்-நேரடியான சந்தாதாரராயும் இன்றுவரை இருக்கிறோம்.புலம்பெயர் மொத்தச் சமூகத்தையும்"நான்-நான்"க்குள் புதைக்க முடியுமா? சமூக மாற்றத்துக்காக எல்லோருந்தாம் உழைக்கின்றனர்.சிலர் பொதுவான எண்ணவோட்டத்துள் மூழ்கி வினைமறுப்பில் இயங்க,அதைப் பயனாக வைத்து "நான்" முன்னுக்கு வர முடியுமா?

இந்த "நான்" தொலையவேண்டுமெனச் சொன்னவர் சிவகுரு ஐயா.அவர் எனக்கு மு.வரதராஜன் அவர்களது கரித்துண்டு நாவலை வாசிக்கும்படி நச்சரித்தார்.தமிழ்நாடு பூராக அந்த நாவலைத் தேடியெடுக்க முனைந்தார், அன்றவர்.அவரும்,அவர்தம் புதல்வி ஜனகாவும் அன்று(1986-1993) தமிழ்நாட்டில் தத்தளித்த நமது மாணவர்களைப் படிப்பிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டனர்!நாம் அவர்களக்கு அணிலாக இருந்தோம்(சிறந்த சமூகசேவை-புரட்சியாளன் எனது குரருவென்று இன்றும் பணிவேன்!சிவகுரு ஐயா இப்போது உயிரோடு இருக்க வேண்டுமென அவாப்படுகிறேன்.ஆனால், அவர் பற்றி எதுவும் அறியமுடியவில்லை!).

ஓய் மிஷ்டர் "நான்":




நாம் செயற்படும் தளமானது நமது சொந்த வாழ்வினது வட்டமில்லை,மாறாக இதுவொரு சமுதாயத்தினது தளத்தின் உள்ளகத்தில் நின்றுகொண்டு அதன் இதுவரையான செயற்பாட்டின் மீது விமர்சன ரீதியாக முன்வைக்கப்படும் எழுத்துக்களோடு நாம் வருகிறோம்.

இதற்கு வழிவழி வரும் தனிநபர் வாத உளப்பாங்கைக் கருவறுத்து உலகு தழுவிய நேசிப்பும்-எமக்கு முன் வாழ்ந்த எம் முன்னோர்கள் தந்த அறிவுப்பரப்பில் நின்று நிதானிக் முனையும் ஒருவர் நிச்சியாக தன்முனைப்பிழந்த "நாம்" என்ற சுட்டலுக்குள் வந்து விடுதல் தவிர்க்கமுடியாத இயக்கப்பாடாகவேயிருக்கும்.

ஒரு தனிநபர் தன்னால் முடிந்தது என்பது, அறிவுவாத புரிதற்பாடற்ற தன்முனைப்பினது நோயாகவே இது வரை நோக்கப் படுகிறது.இங்கே"நான்"க்கு முக்கியத்துவம் தன்னிலை இருப்பபுக்கு அவசியமெனப் பார்த்தால் தனிமரமானது தோப்பாகினாற்றான் தேருக்குதவும்- சூழலுக்கும் மிஞ்சும்!இது சகல மட்டங்களிலும் பரவாத நிகழ்வுப்போக்கால் நாம் இதன் தளத்தைத் தவிர்த்து விட்டுள்ளோம்.

எதற்கெடுத்தாலும்"நான் சொன்னேன்-நான் செய்தேன்,என்னால் முடிந்தது" என்பது தனிநபர் சார்ந்தவொரு செயற்பரப்புக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் அதுகூட இன்னொரு துணையின்றி நிகழ முடியாது!

இது ஒரு குழு வாழ்வு.குழுவென்றவுடன் பல்பத்துப்பேர்களோடு திட்டமிட்டவொரு செயற்பாங்கென்று கற்பனைசெய்தால் அது தப்பு. நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்குமானால் அதன் சுட்டல் சரிவரும் பரப்பு ஒற்றை மானிட வாழ்வுக்குப் பொருந்தும்.அதுவே கூட்டு வாழ்வாய் மலர்ந்து சமுதாயமாக நாம் வாழும் இன்றைய வாழ்சூழலில் நமது என்பது செத்து நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்காது "தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது. இதன் வெளிப்பாடு குடும்ப மட்டத்தில் துணைவனின் இழப்பில் துணைவியும் தன் வாழ்வு முடிந்ததாக எண்ணுவதும்,அது சமுதாயமட்டமானால் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காதாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.

இந்த "நான்" இழப்பினது அவசியமென்பது வெறும் கருத்துருவாக்க சொற் கோர்வையற்ற சமுக உளவியற்போக்குக்கும் அதன் வாயிலான கூட்டுமுயற்சிக்கும் அவசியமானதென்பதை நம் முன்னோர்கள் நன்றாகவே அறந்துள்ளார்கள்.இதற்கொரு உதாரணம் கூறுகிறோம்(கூறுகிறேன்):

பண்டைய தமிழகத்தில் மன்னனொருவன் ஒரு ஞானியைச் சந்திப்பதற்காக அந்த முனிவரின் குடிசை(பங்களாவல்ல) நோக்கிப் போகின்றான்.போனவன் அவர்தம் குடிசையின் கதவைத் தட்டுகிறான்.பதிலுக்கு ஞானி கேட்கிறார்"யார் அங்கே?",மன்னன் கூறுகிறான்" நான் வந்திருக்கிறேன் உங்களைப் பார்க்க". ஞானியின் பதிலோ"நான் இறந்த பின் வருக!" மன்னனுக்கு எரிச்சில் அதிகமாகி "நீர் இறந்த பின் எப்படி உம்மை த் தரிசிக்கிறது?" என்ற கடுகடுப்பு. ஞானியோ மௌனமாக.

இது எதைக் குறித்துரைக்கிறதென்பதை அந்த மன்னன் மட்டுமல்ல இன்றைய "நான்" களும்தாம்அறிந்துள்ளனரென்றாலும் அவர்தம் இருப்பு அவர்களை அதையொட்டிச் சிந்திக்கவிடுவதில்லை!

சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே,தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.


"நானென்றும் தானென்றும்
நாடினேன்!நாடலும்
நானென்று தானென்று
இரண்டில்லை என்று
நானென்ற ஞான
முதல்வனே நல்கினான்
நானென்று நானும்
நினைப்பொழிந் தேனே" -என்கிறார் திருமூலர்

எனவேதாம் "நான்" சாகடிக்கப்பட்டு "நாம்","நாம்" பிறக்கிறது:



இப்போது,அதீதத் தனிநபர் வாதம் முன்வைக்கும் இன்னொரு கேள்வி:

"சுய விமர்சனஞ் செய்-மக்களுக்கு என்ன செய்தீர்? சுயநலமாகச் சிந்திப்பதைத் தவிர?"

புத்தகமும் கையுமாக,பேரெடுக்கும் மாணவர்களாகவும்,தமது குடும்பத்துக்கு-தனக்கு மட்டும் பொருள் தேடும் கனவோடு,பல்கலைக்கழகஞ் சென்று "பட்டம்" பெற்று நல்ல சீதனத்தில் பெண்ணெடுக்கும்"யாழ்ப்பாண நடுத்தர வர்க்க மனோபவமானது ஒரு பொழுதில் புழுதிதோய்ந்த கல்லொழுங்கை வழியாகப் பாய்ந்து காடுமேடெல்லாம் அலைந்தது.தனக்காக வாழ்ந்த இந்தத் தீவு வாழ்வைக் கிடுகு வேலி பிரித்து வெளியேறிப் புதியவுலகுக்காக மனமுவந்து கொடுக்க முன் வந்தது. இந்த மன இராச்சியத்தில் ஏற்பட்ட மாற்றஞ் சாதாரணமானதொன்றோ?-சொல்லுங்கள்! அங்கே,சுய நலமும் அதையொட்டிய குவிப்பு மனமும் இருந்ததா?எல்லாவற்றையுந் தாரவார்த்துக்கொடுத்து விட்டுத் தேசத்துக்காகச் செத்தவர்கள் பல்லாயிரம்பேர்கள்.அவர்களது உயிரைத் துஷ்பிரயோகஞ் செய்த இந்த இயக்க வாதமே மீளக் கேட்கிறது"சுய விமர்சனஞ் செய்- மக்களுக்கு என்ன செய்தீர்கள்?"-மக்களுக்காக என்ன செய்தீர்களென.

இந்தத் தனி நபர் வாதமானது தன்னைச் சுற்றிப் பாதுகாப்பு அரணைக் கட்டுவதற்கே இந்தக் கேள்வியோடு உலகைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறது.இன்றைய மக்களது அவலத்துக்கு அன்றைய தவறான தெரிவுகளே காரணமாகின.அந்தத் தவறான தெரிவுகளது எச்சம் மீளவும் மக்களது பெயரால் ஈனத் தனமாகப் புலம்புகிறது.இதைச் சுட்டிவதற்கு பற்பல காரணிகள் நமக்குள் நடந்துவிட்டன.எனினும், இந்தச் சுய பாதுகாப்பு அரண் அதீத தனிநபர் வாதத்துக்கு முண்டு கொடுப்பதற்கான தெரிவில் மக்களைச் சுட்டியே தமது இருப்பை உறுதிப்படுத்துகின்றன.இந்த இருப்பு எதற்காக?

இந்தக் கேள்வியே பிரதானமானது:

தத்தமது இருப்போடு நிகழ்த்தப்படும் இயக்கவாத மாயையானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருகிணைவைத் தடுத்தே வருகிறது.அது கூட்டு வேலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது மட்டுமல்ல எல்லோரையும் சிதைத்துத் தமது தேவைக்கான அரசியலைப் பொதுவான மக்கள் நல அரசியலாகவேறு வற்புறுத்தி ஏற்க வைக்கப்படாதுபாடுபடுகிறது!

இந்தப் புள்ளியற்றாம் அனைவர்மீதும் அவதூறு விதைக்கப்படுகிறது.நான் அறியப் புலம் பெயர் தளத்தில் அரசியல் செயற்பாட்டிலுள்ள 99.999999 சத வீதமானவர்கள் அவதூறின்வழி கழிசடையாக்கப்பட்டனர்.இதுள் கணிசமானவர்கள் இதே சமூகச் சாக்கடையில்தாம் பிறந்தோம்.இந்தச் சமூகத்தின் அனைத்தும் எமக்குள் பிரதிபலிக்கின்றனவென்பதை இலகுவில் மறந்துவிடும் பொய் அரசியல்-"புரட்(டு)சீ"க்கு எத்தனை விதமான ஏமாற்று வித்தை தெரிந்திருக்கோ அத்தனையையும் அது "புரட்(டு)சீ"யால் செய்து முடிக்கத் துடிக்கிறது.

இதுவொரு தளத்தில் அம்பலப்பட்டு முட்டுச் சந்தியில் நின்றாலும் அதன் அடுத்த ஆட்டம் தொடராகவரும் "புரட்சிக் கீதத்தில்" தன்னைக் கழுவு முனையும்.இது,மீளவும் அதே குழிப் பறிப்பின் தொடராக விடப்போகும்"பீலா"எல்லோருக்குமான சவக் குழியை வெட்டி வைக்க முனையும்.ஆனால்,அது உண்மையாக மக்கள் அரசியலைப் பேசாது போலியாக நடிக்கும் "எதிர்ப் புரட்சியில்" எப்பவும் அம்பலப்படும். உண்மையான புரட்சிக்காரனுக்கு எந்தத் தொங்கு சதையும் தேவையற்றது.அவ்வண்ணமே, எந்தப் பக்க வாத்தியமும் தேவையற்றது.

நீதியும்,நேர்மையும் எமது விலங்கை நாமே ஒடிப்பதற்கான திசை வழியில் வார்க்கப்படும்போது "உன்னை" எந்தக் கொம்பனாலும்-குழுவாலும் எதுவுஞ் செய்துவிட முடியாது.

எனக்குள் நிகழ்வது உனக்குள்ளும்,உனக்குள் நிகழ்வது எனக்குள்ளும் நிகழ்வது இந்த வாழ்நிலைப் பயனே!வாழ்நிலைதாம் மொத்தமான மனிதநிலையையும் உருவகப்படுத்துகிறது அதிலிருந்து தாம் எனது ";இருப்பும்"என்னால் உணரப்படுகிறது.பருப்பொருள்-பருப்பொருள் என்று படாதபாடுபட்டுப் புரிந்துகொள்ள முனைகிறோமே அது நாம் உணரும் நிலையைக்கடந்து மொத்தமான முகிழ்ப்பில் அரும்புகிறது?

எனக்கு,என்னுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுக்கின்ற புறநிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற "புரிதற்பாட்டு" வகையினமே பருப்பொருள் எனப்பகரப்பட்டும்.எனக்குமுன் விரிந்து கிடக்கும் புறநிலையான மெய்ப்பாட்டிலிருந்து சுதந்திரமாகத் திரண்டு புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்படும் இந்தப் படம் எப்படிப் பிரதிபலிக்கிறது?

நாம் திருமூலரிடம்போவோம்.அவரைக் கடாசியவர்களும் அவரது ஆன்ம விசாரணைகளில் சில பொருத்தமான புரிதல்கள் உலகவியத்துக்குத் தோதான வகையினத்துள் வருவதைக் கணக்கெடுகலாம்:

"மண்ணொன்று தான்பல
நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள்
எல்லாம் இறைவனே
கண்ணொன்று தான்பல
காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம்
ஆகிநின் றானே!" - திருமூலர் திருவாக்கு

பருப்பொருளுக்கு லெனின் கூறிய விளக்கத்தை இத்தோடு பொருத்திப்பார்த்தால் நமது வாழ்நிலையின் சமூக உணர்வு நிலை வடிவமைத்த பண்பு இன்னும் ஆழமாகப் புரிந்துபோகிறது.எனது உணர்வுக்கு வெளியே சர்வப் பொதுக் குணாம்சத்தைக் கொண்டியங்கும் இந்தப் புறவுலகு, எனக்குள் பொதுப்மைப்படும் சந்தர்ப்பத்தில், திருமூலர் சின்ன வரிக்குள் பல்லாயிரம் பக்க விளக்கத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்.இது,மனித முயற்சிகளது தெரிவில் மனிதர்கள் பொதுவான நிறை-குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்ற சிறிய புரிதல் விழிமுன் கொணரப்பட்டுத் தனி நபர்களது எல்லைகiளுயும் அதுசார்ந்த ஒழுக்கங்களையும் இந்தச் சமூகச் சாக்கடையில் உரைக்கச் சொல்கிறது.

எனவே,"நான்-நான்"மகா ராசாக்கள் மலிந்த இந்தக் காலக்கட்டத்தில்"நாம்-நாம்"கிடைப்பதற்கரிய அமிழ்தம் என்பதில் என்னதான் வேடிக்கை?

எனவே, நாம் நிற்கும் தளமானது ஒருமைத் தோற்றுவாயின் பன்மையான பயன்களே.இதுள் அவன் காசைப் பறித்தாலென்-இவன் பெண்டிரைப் புணர்ந்தாலென்ன?எல்லாம் இந்தச் சமுதாயச் சாக்கடையின் பிரதிபலிப்புத்தாம்.அதை மாற்றியமைப்பதறஇகு இந்தக் குறைபாடுடைய மனிதர்கள்தாம் முயற்று,முயன்று தம்மைத் தகவமைத்தபடி மேலே செல்லவேண்டும்.அதுவரையும்"நானும் பொய்யன்-நீயும் பொய்யன்"தாம்!

இதன் தாத்பரியம் "மாற்றானை நேசி மனமே" என்பதுதாம்.


இதுவன்றி வேறு மார்க்கம் மானுடர்கட்கு மகத்துவம் அளிப்பதில்லை.

கருத்துகட்கு மேலான மனிதநேசிப்பு மதங்களின் பால் மையங்கொண்ட மாயை அல்ல. இது மகத்துவமான அறிவின் வெளிப்பாடு.

ஆதலால், மனித மாண்புக்கு நிகராக எந்தக் கருதுகோளும்- தத்துவங்களும் எம்மை ஆட்கொள்ள முடியாது.

அப்படி ஆட்கொள்ளத்தக்க தத்துவங்களும்-தேச விடுதலைப் பரிமாணங்களும் நம்மிடமிருந்தால் காட்டுங்கள், அந்தக் கோட்டைக்குள்ளும் நுழைந்து மானுட மாண்பைப் பார்ப்போம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.10.2010

Tuesday, October 05, 2010

சுதந்திரம் யாருக்கானது?

ரோப்பாவில் பிரான்ஸ் அரசு காலாகாலமாக வாழ்ந்த சிந்தி-ரோமா மக்களை வேட்டையாடுகிறது.கிட்டலர் செய்தான் இதை,அவன் பாசிசத் தலைவன்!இவன் சார்கோசி? நெப்போலியனின் கொள்ளுப் பேரன்?

போராடும்பழங்குடி மக்கள் பிரான்சிலும்,பிரேசிலிலும் மட்டுமல்ல உலகெங்கும்.அவர்களும் போராடுகிறார்கள்.நாமும் தேசம்-இனமென்ற வட்டத்துள் இப்படிப் போராடுகிறோம்.நாம் உலக மனிதர்களென ஒன்றுபட்டு எப்போது போராடுவோம்?

கிழக்கு ஜேர்மனியின் மக்கள்-தொழிலாளர்கள்"சுதந்திரம் யாருக்கானது?"இப்படிக் கேட்கிறார்கள்:





"எம்மைச் சுதந்திரமாக ஆளும் வர்க்கம் ஒடுக்குவதற்கும்,கூலி ஏய்புச் செய்வதற்கும்,எமது வளங்களைத் திருடுவதற்குமான "சுதந்திரம்" உங்களுக்கு அவசியமானது.இது எம்மை ஒடுக்குவதற்கான சுதந்திரம்.மக்களுக்கான சுதந்திரம் இது (கிழக்கு-மேற்கு இணைப்பு)அல்ல.என்கின்றனர்.


கடந்த 03.10.2010 கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள் உலகச் சதியின் மூலம் உருவாக்கப்பட்ட ஒருமைப்பாடு-ஒன்றான பெரு ஜேர்மனியின் இணைவுக்கான கொண்டாட்டத்தில் ஜேர்மனிய அதிகார வர்க்கம் திளைக்கும்போது கிழக்கு ஜேர்மனிய மக்கள் மேற்காணும் கேள்விகளோடு...


போராட்டம் வலுக்கிறது.கிழக்கு ஜேர்மனியில்உழைப்பவர்கள் வேலையின்றி 34 சத வீதம்(மேற்கில்11 சதவீதம்) சமூகவுதவியில் வாழ்கிறார்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் பிச்சைப்பணம்-அடிமாட்டுக்கூலியுழைப்பு இந்தத் தேசத்தில்பாரிய வர்க்கப் போரைத் தகவமைத்து வருகிறது.கிழக்கு ஜேர்மனியச் சோசலிசத் தேசத்தில் வேலையிழப்பு-வேலை அற்ற நிலை மிகவும் கீழ் நிலையிலிருந்தது.என்றபோதும், அனைவருக்கும் அடிப்படை மாதாந்த வருமானம் உறுதிப்படுத்தப்பட்டிருந்து.அதை அந்த மக்கள் இப்போது உணரத் தலைப்படுகிறார்கள்.மேற்கு ஜேர்மனி இருபதாண்டுகளுக்கு முன் நடத்திய சதியை இப்போது உணர்கின்றனர்.இதை எதிர்த்துப் போராட்டம் இப்படி வெடிக்கிறது:





ஆளுங் கட்சிகளது கையாலாகத்தனம்.பெரு வங்கிகள்-முதலாளிகளுக்குக் கட்டுபட்டுக் கிடக்கும் கட்சிகளே பெரு மூலதனத்தைக் கொண்டியக்கும்போது அரச வன்முறை ஜந்திரம் போராடும் மக்களை வேட்டையாடுகிறது.போராடும் உரிமைகளைப் பறிக்கிறது.சுதந்திரமாக ஆர்ப்பாட்டவூர்வலங்களை வன்முறையில் முடிக்கிறது ஜேர்மனியப் பொலீசு.


ஒன்றுபட்ட ஜேர்மனிய மக்களது உரிமைப் போராட்டம் பற்பல தளத்தில் நிகழ்கிறது.


கூலி ஏய்ப்பு,
சமூக மானியம் வெட்டு,
வேலையிழப்பு,
தொழிற்சாலைகள் மூடுதல்,

வரிப்பணத்தை பெருவங்கிகளுக்குத் தாரைவார்த்தல்,
யுத்தத்துக்கான நிதியளிப்பு,
பெருங்கட்டுமானங்கள் மக்களுக்கு எதிரான முறையில் எழுவது,

என்ற இன்னபிற அனைத்துக்குமான மக்களது வெகுஜன எழிச்சி வலுத்தே வருகிறது.


"ஸ்ரூட்கார்ட் 21" (Stuttgart 21)சுரங்க இரயில் நிலையக் கட்டுமானத்துக் எதிரான பாரிய போர் வெடிக்கிறது.அது, வலுக்கும் ஒவ்வொரு பொழுதும் அரச வன்முறை ஜந்திரம் ஒடுக்க முனைகிறது.இது பெரு முதலாளிக்களுக்காக மக்களை ஒடுக்கும் செயலாக விரிகிறது. எனினும்,போராடும் மக்கள் பெரு வெற்றிபெற்றே வருகிறார்கள்.


இந்த நிலையில்,மதவாத நிறுவனங்களும் அவைசார் மக்கள் குழாமும் ஒரு பிந்திய- மந்தமுடைய சமூககமாக இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தருணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. மத நிறுவனங்களால்அவதியோடு சாவை நோக்கும் கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும் இந்த நிலையில் வர்க்கப் போரைத் தகவமைக்கும் இடதுசாரிய வட்டம் கிழக்கு-மேற்கு ஜேர்மனியில் வலுத்துவருவது நம்பிக்கை அளிக்கிறது.இது,பிரான்ஸ்சிடமிருந்து பாரிய பாடத்தைக் கற்கிறது.


பெருந்தேசங்களையே வேட்டையிடும் பெரு வங்கிகள்,அவைக்காகவே உருவாக்கப்படும் அரசுகளென உலகத்தில் அனைத்தும் பெருமூலதனத்துக்கு அடிமையாகிவிட்டது.


எங்கு நோக்கினும் சமூகக் கொந்தளிப்பு.வர்க்கப்பிளவு அதீதமாக விரிவடைந்தே செல்கிறது.அதேபோல் தொழிலாளர்களைப் பிளந்து வேட்டையாடுதலும் நிகழ்கிறது.சமீக காலமாக ஜேர்மனியில் கொந்தளிப்புக்குள்ளாகும் சமூக அமுக்கம் ஏகாதிபத்தியப் பெரு வங்கிகளது கோரமுகத்தின் தொடர் வினையாகவே உருவெடுக்கிறது.ஜேர்மனிய அரசும்,அதன் வன் முறை ஜந்திரமும் தனது கடமையைச் செவ்வனவே செய்கிறது.அது ஊர்வலத்தை குழப்புகிறது பெருந்தொகை மக்களை வதைத்து ஊர்வலத்தைச் சிதைக்கிறது.எனினும்,மக்கள் வீதிக்கு இறங்குகிறார்கள்.


நிலத்தடி இரயில் பாதை-நிலையமைத்தல்,


சமூக மானியவெட்டு,


பெரு வங்கிகளுக்கு வரிப்பணத்தைத் தார வார்த்துக் கொடுத்தல்,


வேலையில்லாதோரை மணித்தியாலத்துக்கு ஒரு யூரோ ஊதியம்பெற்று வேலைக்குத் துரத்துவதுபோன்ற அடிமைச்(Hartz IV-கார்ட் 4) சமுதாயத்தை உருவாக்க நினைக்கும் மூலதனப் பேய்களுக்கு எதிராக வர்க்கப் போர் மூழ்கிறது.


குரோஸ் போடர் லீசிங் (Cross Border Leasing)மூலமாக மக்களது அடிப்படையான வாழ்வாதாரவூலங்களைப் பெரு வங்கிகளுக்கு விற்ப்பது- 99 வருடத்துக்குக் குத்தகைக்கு விடுவதென சேவைத்துறை அனைத்தையும்(நீரூற்று,நதி,பெருந்தெருக்கள்,இரயில்வே,தபால்,நகரசபையினது கட்டுப்பாட்டிலிருந்த இவைகள் தற்போது தனியார் சொத்து) உலகப் பெருவங்கிகளுக்கு விற்று ஏப்பம்விட்ட ஜேர்மனிய அரசு, சுரங்க இரயில்வே கட்டுவதற்குச் சூழலைப்பாதுகாக்கும் பூங்காவை அழிக்கிறது.
பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்து இவற்றைக்கட்டும்போது,மக்களுக்கான பாடசாலைகள் திருத்த வேலையின்றி நாறுகிறது.மக்கள் வீதிக்கு வருகிறார்கள்-வர்க்கப் போர் வளர்கிறது. இதை நவீன முறையில் முறியடித்தால் எதிர்கால இடதுசாரியத்து எதிர்காலமில்லை!ஆனால்,இந்த அரசு மக்களை ஒடுக்க முடியுமானால் அது பாசிசத்தைக் கட்டமைக்கவேண்டும்.இது நடவாதவரை இடது சாரிய முகாம் வலுப்பெற்று வருகிறது.மக்கள் வெல்வதற்கான சூழலொன்று நெருங்கி வருகிறது.


"சுதந்திரம்-விடுதலை" இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்த்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா?


இன்னும் யோசிப்பதே விடையாகும்.


பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி.வர்க்கப் போரே இதை முறியடிக்கும்.அந்தப் போர் வெடிக்கிறது!



இங்கு, இந்த நெருக்கடிக்கு உந்தப்பட்டு,வாழ்நாளெல்லாம் மனித விடுதலைக்காகச் சிந்திக்கிறார்கள் பலர். தம் முன்னோர்களையும்,பின்னோர்களையும் கோடுகிழித்து சுதந்திரமென்றால் "சுயதேர்வு"செயற்படுத்தல்,என்பதும்,எதையும் மறுதலிக்கையில் தேர்விடுதலே சுதந்திரமென்பதாயும் கூறிச் சென்றவர்கள் கோடி!


இருபதாம் நூற்றாண்டின் மகத்துவமற்ற முறைமைகளுக்காக மனிதம் பலியாகியதைக் காணும் அறிவுப்பரப்புக்கு எவர் சொந்தக்காரர் ?


மார்க்சிய ஆசான்கள்-போராட்டத் தலைவர்கள் இன்றைய சூழலில் புதுமையோடு எழுகின்றனர் இப்படி : http://www.kommunistische-initiative.de/

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்-இல்லையேல்
நாம் புவியில் கருகி மாள்வோம்!- இதைச் செய்பவர்கள் பெரு வங்கிக் கயவர்கள்,பெருமுதலாளிகள்-ஏகாதிபத்தியத் தேசங்களாக இருக்கும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.10.2010

Monday, October 04, 2010

அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,..

ப் புனைவு முன்னொரு காலத்தில் எழுதப்பட்டது.இதன் கருத்துருவம் நமக்குள் நடக்கும் குத்துவெட்டுகள் குறித்து இன்னும் வலுவாகச் சுட்டுவதிலும் அஃதை நையாண்டியின்வழி அம்பலப்படுத்தி, நேரியதை நாடுவதற்காக எண்ணிப் புனையப்பட்டது.இது,இன்றும் நமது குத்து வெட்டுகளுக்குப் பொருந்துகிறது.அதுள் "மாற்றுக்கருத்தாளர்கள்-புரட்(டு)சீ"காரரானெமக்குப் பொருந்துகிறது.

இதை எதிர்த்து அன்று சயந்தன் ஒரு புனைவுசெய்தான்.அது,இன்னும் நமக்குப் பொருத்தமானது.

ஓன் மான் சோ-one-man show(Anton Chekhov: On the Harmful Effects of Tobacco) புரட்சியின்வழி , இந்த அரசியல் அண்ணாச்சிக்கும்,அந்தத் தம்பிகளுக்கும் இது பொருத்தமோ இல்லையோ எனக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது.

எனது சுயதிருப்(ப :-)தி இன்பத்தின் மிகை இரசிப்புக்காக இதைப் பதிவிட்டுத் திருப்பதிகாண் எல்லையைத் தேடி அலைகிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
05.10.2010


அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,
ஆசியன் கடையும்.



டேய் சின்ராசா வாடா வா!என்னமாதிரிப்போச்சு?

அண்ணோய் மெல்ல.இது அவங்கட காசில நடக்கிற ஆசியன் கடை.உங்கட கதையள அடக்கி அவிழ்க்கிறதுதான் நல்லது.

சரி விடடா,எல்லாம் சிறப்புற நடந்தேறிவிட்டது,அப்பாடா!

என்னண்ணோய் சொல்லுறியள்?

அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் நல்லது,கெட்டதுகளின் நமக்குப்பட்டதைச் செய்தும் போட்டோம்-இல்லையா?


இனியென்ன?

பத்தரைமாதத்துத் தங்கம்,தோழமையின் தூண்,துரும்பு...என்ன அரிகண்டமோ,இப்படிக் கழுத்தில் கிடந்து நம்மைச் சீரழிக்கிறது!


எங்கு திரும்பினாலும் ஒன்று தாங்கள் கும்பிடுற தெய்வ வணக்கம்-இல்லையென்றால் மீனுக்கும்,பாம்புக்கும் தலை வால் காட்டும் புத்திசீவிகளின் புதுத் தத்துவங்கள் புருவங்களை உடைத்துப் புதுப் புனலாய் புண்ணிய நம் கண்களுக்குள்...


சீச்சீ, இப்படியெல்லாம் நாம கதைச்சால் நடுச் சாமத்தில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து நித்திரையைக் குழப்பிப்போடும்.பையப்பைய ஆராவது இப்படி வந்து, தன் பங்குக்குப் பாட்டோ அல்லது ஓரிரு பல்லவியோ பாடித் துலைக்கிறபோது,அப்பப்பப் பொடிவைக்கிறது வழமைதான் குஞ்சு.பகிடிக்குப் பொடிவைக்கிறமாதிரித்தான் இதுவும் குஞ்சு.நான் மனிதன்,எனக்கும் கவனிப்பும்,கண்ணீரும் உண்டெல்லோ,இல்லையாடி அப்பன்?


இருக்காதா அண்ணே!
எடுத்துவிடுங்கோ,எப்பவும் நீங்கள்தான் என்ர உதாரணப் புருஷர்.என்ர தேகத்தின் குரலும்,உணர்வும் நீங்கதான்.


ஏன்ரா தம்பி சின்ராசா,எங்கேயடா ஆளக்காணோம் இவ்வளவு நாளா?


அண்ணே,கோவியாதேங்கோ.நேற்றுத்தான் வந்தனான்.போன இடத்தில மாட்டுப்பட்டுப் போயிட்டன்.புண்ணாக்கன்கள் புடிச்சு உள்ள போட்டுட்டான்கள்.


எடா மசிராண்டி உன்னை ஆருடா ஊருக்குப் போகச் சொன்னது?கண்கடை தெரியாதா அவளுக்கு ?உன்ர பொண்டாட்டியும் உன்னோட வந்தவளா?(எனக்கு என்ர உறவுக்காரப் பெண்மீது எப்பவும் ஒரு கண்.அவளை இந்தப் பரதேசி கட்டிப்போட்டுக் காடாத்திறான் நெடுக).


எடச் சீ!இந்தக் கோதாரி புடிச்ச அண்ணைக்கு என்னத்துக்கும் ஊர் நினைவுதான். நான் சொல்லுற புண்ணாக்கன்கள் இந்த ஆசுப்பத்திரிக்காரன்கள் அண்ணை.


எட இழவு,என்னடா நடந்தது?


அண்ணோய்,அதுக்க கான்சர்,இதுக்க கான்சர் எண்டுறான்கள்.


உம்!இது பெரியாக்களுக்கு வாற வருத்தம்.இப்ப உனக்கும் வேறு அது வந்திட்டுது.நானென்டாலும் உனக்கு ஒரு பாட்டாவது பாடுவன் யோசிக்காத.


அண்ணோய் ஆட்டைக் கடிச்சு,மாட்டைக்கடிச்சு...இப்ப என்னையும் கடிச்சுக் குதறுகிற எண்ணமோ?மனுசன் படுகிற பாட்டுக்கு ஊர் வம்புகளெல்லாம் வேண்டாம்.பிறகு உங்களுக்கும்,எனக்கும் நித்திரையில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து துலையும் எல்லே!


எட அப்பன்,அவருக்குப் பின்னாலா அந்த ஆடு மேய்ஞ்சுகொண்டெல்லே இருந்தது,அந்த ஆட்டுக்கு இனியென்ன பென்சனோ?


ஆருக்கண்ண தெரியும்?அதெல்லாம் பெரும் தொகையளோட விளையாடுற விஷயங்கள் அண்ண,இந்தப் பயலுக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை.நீங்கள் ஏதாவது நினைச்சுக் கொட்டாவி விடுகிறியளோ?,போங்கண்ணை.உங்களுக்கு நோச் சான்சு!


சரி,சரி விட்டுத் துலையடா.ஏதாவொரு நப்பாசை இப்படிக் கிடந்து பழைய கள்ளுக் கொட்டில் கனவைக் காண வைக்கிறது, இந்தப் பாழாய்ப்போன மனசு.அவங்களுக்குப் பின்னால நிண்டாலாவது அப்பப்ப மூக்கு முட்ட விடலாமெல்லோ!


எதுக்கும் ஒருக்கால் நல்ல டொக்டரைப் பாருங்கோ அண்ணை.என்ர டொக்டர் ஒரு மனோதத்துவ டொக்டரும்கூட உங்களுக்கு அவரின்ர விலாசத்தைத் தரட்டோ?நாளைக்கு வீட்டுப் பக்கம் வாங்கோவன்,கூழ் காச்சிக் குடிச்சுக்கொண்டு உங்கட பிரச்சனைகளையும் விலாவாரியாக் கதைப்பம்.


ஓம்போலத்தான் இருக்கடாப்பா.கூழுக்கு என்ன போடப்போறாய்?என்ர மனுசியும் இண்டைக்கு ஆட்டிறிச்சியோடக் குத்தரசிச் சோறு காச்சிறாபோலக் கிடக்கு...


கூப்பிடமாட்டீங்களே... நிச்சியமா மனுசரின்ர தலைகளில்லை அண்ணோய்!பயப்படதேங்கோ.
தலையெண்டிறபோதூன் ஞாபகம் வருகுது அந்த நாளைய யாழ்பாணத்தில எரிஞ்ச தலைகளும் ரயர்களுமாக் கண்ட கோலமெல்லாம் ஒரு காரணமான குரலுக்குச் சொந்தமெண்டு.


நல்லதடா பையா.உனக்காவது நானொரு கூழ்தாசனாக இருக்கிறேன் தானே?அதுக்காவது நாலு சிரட்டையைச் செதுக்கி வை.அப்பிடியே இன்னொரு தலையையும் கூட்டிக்கொண்டு வாறன்.


அண்ணோய்.இது சரி வராது.என்ர வீட்டில் உங்களுக்கு மட்டுதான் எலவ்ட்.தெரியுந்தானே?பிறகு மனுசி கலையெடுத்திடுவா.கூழ்ச்சிரட்டைக்குப் பதிலாக என்ர மண்டையோடுதான் உங்களுக்கு வரும்.அண்ணோய்,அடுப்படியில கிடக்கிறதுகளை உசுப்பக் கூடாதண்ணை.பிறகு கரடிக்கு வாற பலத்தைப்போல அங்கேயும் ஒரு பலம் வந்திடும்.பேந்து, எங்கட திண்ணைப் பேச்சுக்குப் பதிலாக கோழியை வெட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.


உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?


ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?


அதுதான் நீயாய்ச் சேர்த்து அடுப்படியில அலையவிட்டபிறகு இன்னொருக்கால் சேர்த்தால் உன்ர மடிதாங்காது.


மடிதாங்காட்டியும் மனசு தாங்கும் அண்ணோய்.பேசாமால் அதையும் சேர்த்துவிடுங்கோ.


சேர்க்கிறத விடு,இப்ப உன்ர வீட்டுக் ஆரோவொரு வெளி நாட்டுக்காரனையும் போட்டிருக்கிறான்களாம்.ஏன்ரா உலகத்தில இவ்வளவு பேர்கள் இருக்க, இவனை ஏன்ரா கூப்பிட்டாய்?


நானா கூப்பிட்டானான்?அவையல்லோ அனுப்பினவை!


ச்சீ.அப்பிடிச் சொல்லாதை.உலகத்தில இவன் கெட்டிக்காரன்.குடும்பப் பிரச்சனையள நல்லாத் தீர்த்துப்போட்டு,முற்போக்காத் திரியிறான்.அதனாலதான் அவன் உன்னட்டையும் வந்தது எண்டு சொல்லு.


மண்ணாங்கட்டி.என்ன சொல்லுறியள்?உங்களையும் என்ர குரலெண்டு நான் சொன்னது தப்பாப் போச்சு!போங்கண்ணை.அவன் சோசல்காரன் தங்கட கட்டிடத்தில எவனையும் கொண்டுவந்து தள்ளுவான்.அதை அகதியாகி ஒண்டின நாங்கள் தடுக்கேலாது.நீங்கள் வேறு...


சரி,சரி.என்ர குரலும் வீட்டின்ர குரலாகக் கிடக்குது ஆரும்...


அண்ண அப்ப நாளைக்குக் கூழோடு சந்திப்பம்.நீங்க மட்டும் இல்லைக் கையிலவொரு போத்திலை...



போத்திலை?டேய் அப்பன் அது கஷ்டமடா கண்டியோ?



பேசாம எல்லாத்தையும் ஒரு பம்பலாச் சொல்லுங்கோ.பகிடியெண்டு நான் எடுக்கமாட்டன் கண்டியளோ.



ப.வி.ஸ்ரீரங்கன்

Sunday, October 03, 2010

நேர்மையும்,நீதியும் மற்றவர்களுக்கும் உண்டு.

ன்று,திரு.சபா நாவலன் தொடர்பான அவதூறு அரசியல் மிக நெருக்கடியான மனவுளைச்சலைத் தருகிறது.இதுவரை நான் கொண்ட அரசியல்,அதன் தொடரில் ஏற்பட்ட தோழமைத் தொடர்ச்சி அந்தத் தளத்திலான அரசியல் வியூகம், அது வளர்த்த கருத்தியல் அணுகுமுறையெல்லாம் சந்தர்ப்பவாதமான ஏதோவொரு சதி அரசியலாக விரிந்து மேவுகிறது.இது நம்முன் விரிந்து வளர்ந்து மீளவுமொரு இருண்ட அரசியலைச் செய்யும் நெருக்கடிக்குள் மக்கள் நல அரசியலையே கருவறுக்கும் அளவுக்கு நேர்மையீனமாகக் கிடக்கிறது.

சந்தர்ப்பத்துக்கேற்றுத் தமது கருத்தியலை வலுப்படுத்த அனைத்து மக்கள் விரோதக் கருத்தியலை வளர்த்தவர்களோடும் இணைகிறது.தமது கருத்துக்களது நேர்மையீனத்துக்கு மறைப்புக்கட்ட தாயகம், தேசம்நெற், தேனியெனவும், புரட்சிகரமாகச் சிந்திக்கும் பல இணைய எழுத்தாளர்களையும் அது உள்வாங்குகிறது.அன்று எதையெல்லாம் நிராகரிக்கும்படி எம்மை வற்புறுத்திச்சோ அதையெல்லாம் தமது இருப்புக்காக அது தொடர்கிறது.

இது,சந்தர்ப்பவாதமில்லையா?

உண்மையான மக்கள் நல அரசியலுக்கு இந்த வகை அரசியல் சூதாட்டம் அவசியமில்லை என்பது எனது கருத்து.மக்களைச் சொல்லிச் சதியமைக்க முனைபவர்கள் தமது எஜமானர்களைத் தம்மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும்படி ஜீவமரணப் போராட்டம் நடாத்துகிறார்கள்.இதன் தெரிவில் உண்மையாக இயங்க முனையும் ஒவ்வொரு தனிநபர்களையும் ஏமாற்றமுடிந்தால்-ஏமாற்றுகிறார்கள். இல்லையேல் கரி பூசும் அரசியலை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.இதுவுண்மையில்திரு.சபா நாவலன் மீது இத்தகைய அரசியலைக் கட்டவிழ்த்துள்ளதா?

மிகச் சிக்கலான கேள்வி இது!

இந்தக் கேள்விக்கு விடைதேடுவது அவசியமானது.எமது மக்களது குறைந்தபட்ச அரசியல்எதிர்காலத்துக்கு இது அவசியமானது.நாம் எம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் உலக வல்லாதிக்கத்துக்கெதிராக எதிர்ப்பு அரசியலை நேர்மையான முறையில் கட்டியெழுப்பும் விசும்பு நிலையில் இருக்கிறோம்.இந்த முளையைக் கருக்கிவிடும் சேறடிப்பை எவரது தேவைக்காக முன்னெடுக்கிறார்கள்?

உண்மையில் நாவலன் குற்றமற்றவரா?:

அவரது எதிர்வினைமூலம் அதை அவர் நிரூபித்திருக்கிறார்.தான் எந்தத் தவறும் இழைக்கவில்லையெனச் சொல்லியிருந்தும் தமிழரங்கம் அவரைக்குற்றக் கூண்டில் ஏற்றியுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழரங்கும் சம்பத்தப்படுத்திய மக்கள் கலை இலக்கிய கழகமே தமது எதிர்வினைமூலம் நேரடி விவாதத்துக்குத் தமிழரங்கத்தை அழைத்திருக்கிறது.உண்மையான மக்கள் நல அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.நாவலனை விடுதலை செய்வது மாற்றுக் கருத்தியற்றளத்துக்கும்,நமது மக்களுக்கான எதிர்கால இடதுசாரிய அரசியல்விருத்திக்கும் அவசியம்.

தொடர்ந்த நமது மக்களைத் துவசம் செய்யும் அரசியலை எதிர்கொள்ள போராட்ட முன்னோடிகள் அவசியமானவர்கள்.புலம்பெயர் சூழலுள்-தளத்துள்,எவ்வளவுக்கு இரயாகரனது தேவை அவசியமோ அதில் சிறிதுகூடக் குறையாத தேவை நாவலன்சார்ந்தும் இருக்கிறது.

இந்தப் புலம்பெயர் தளத்தில் மக்கள் நல அரசியலுக்கான இந்தத் தேவையில்,மக்களது விடிவுக்காக அன்று தொடர்ந்த போராட்ட அரசியலை இன்றும் நான் தொடர்ந்தே வருகிறேன்.பாசிசத்துக்கு முன் பணியாது கருத்திட்டவன்.எனக்குத் தனித்தியங்குவது என்பது எல்லையுடையதென்பது புரிகிறது.தோழமையும்,அணி திரள்வும் அவசியமானது.அதை மறுத்து நமது விலங்கை ஒடிக்கும் அரசியல் ஒர் அடிகூட நகர முடியாது.ஆனால்,இந்த அணிதிரள்வு மீளவும் அந்நியச் சக்திகளது காலடியில் மக்களைக் கட்டிப்போடும் அரசியலாகத் தொடர்வது சகிக்க முடியவில்லை!இதை வெற்றி கொள்ளத் தொடர்ந்து கருத்தியல் யுத்தம் புரிவது தவிர்க்க முடியாதது.அதைத் தொடர்வதே எனது பணியாகக் கிடக்கிறது. தொடர்வேன்.இதற்காக எவர்மீதும் சேறடிப்பதென்பதைவிட அவர்களது உண்மைகளைக் கண்டடைவதென்பதே எனது குறிக்கோள்.

எவர்மீதும் நான் தனிப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்திருந்தால் அது நிச்சியம் சம்பந்தப்பட்டவரது நடாத்தையில் அவர் மக்கள் விரோதியாகவே இருந்திருப்பார்.அங்ஙனம் இன்றி, எவர்மீதும் ஆப்பு வைப்பது எனது அரசியல் வாழ்வில் நிகழ்ந்திருக்க முடியாது.

நான் பலதரப்பட்ட கருத்தியலைப் புனைந்திருக்கிறேன்.அது மக்களுக்கும்-பாசிசத்துக்கும் இடையிலான தொடர் முரண்பாட்டில் பாசிசத்தை எதிர்கொள்ளும் முகமாக எனது அறிவுக்கெட்டியபடி புனைந்திருக்கிறேன்.இதற்கு அதீதமான மகத்துவம் ஒன்றுண்டென்றால் அஃது கொலை அரசியலை-சூது அரசியலை அடியோடு வீழ்த்த முனைந்த கருத்தியல்-எதிர்ப்பு அரசியல் என்பதே!இதை நான் பகிரங்கமாகச் சொல்வேன்.

என்னைப் போல் கருத்திட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்களில் பலர் புலிகளை எதிர்த்துவிட்டு, அதைவிடப் பாரிய பாசிசக் கூட்டோடு தமது உறவுகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.புலிக்குப்பதிலாக-சமமாக, இன்னும் அதிகமாக மக்களையொடுக்கும் இலங்கை அரசோடு கைகோர்ப்பது அவசியமென்று அவர்கள் வாக்கு மூலம் தருகிறார்கள்.மக்களை நேசிப்பவர்கள் இப்படிச் சோரம் போக முடியாது. அது,புலிக்குக் காவடி எடுத்த அரசியலுக்கும்,மகிந்தாவுக்குக் காவடியெடுக்கும் அரசியலுக்கு மட்டுமல்ல மற்றெந்த அந்நியச் சக்திக்கும் காவடி தூக்கும் அரசியலுக்கும் பொருந்தும்.

மானுட நேசிப்பு:

மானுட நேசிப்புக்கு நிகராக எந்த பொருள்சார் மதிப்பீடுகளும் சமுதாயத்தில் நிலைபெறமுடியாது!அங்ஙனம்,மக்களது மாண்பு குறித்து இதுவரை இப்பொருளாதார உலகஞ் சிந்திக்கவுமில்லை.மனித சமுதாயமென்பது முழுக்கமுழுக்கப் பொருளாதார இலக்குகளை நோக்கித் தமது வளர்ச்சிப்போக்கைத் தகவமைத்தன் விளைவாக இன்றும் போர்கள் தொடர்கின்றன.இப்பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பதற்கான-வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் இப் பூமி வைத்திருக்கிறது.எனினும்,கொடியவர்கள் அதைத் தத்தமது சொத்தாக மாற்றியபின் மானுட இருப்புக்கு எந்த மகத்துவமும் வந்தபாடிலில்லை!

இது,குறித்து மணிமேகலையில் சாத்தனார் இங்ஙனம் அழுதுவடிகிறார்:

"ஆரும்இலாட்டியேன் அறியாப்பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினான்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்"என-

"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்"-மணிமேகலை,சக்கரவாளக் கோட்டம்:145-150-சார்த்தனார்.

யாருடைய ஆதரவுமில்லா என் அறியாப் பாலகன்(இன்று,உலகே கைகழுவிய தமிழ் மக்களைப்போல) ஈமத்தையுடைய சுடுகாட்டு வழியே( மாற்றுக்கருத்தாளர்கள்,புரட்சிவாதிகள்-தமிழீழப் போலிக்கோசத்தினூடாகப் பயணித்தது போன்று)சென்றனன். அணங்கோ அல்லது பேயோ அவனது ஆருயிரை உண்டுவிட்டது."இங்கு நோக்கு,இந்தா உறங்குபவன் போலச் செத்துக்கிடக்கிறானே-அவனைப்பார்!" என்று தாயான பேதை கோதமை அழுது புலம்ப,"அடியேய் பேயும்,அணங்கும் உயிருண்ணாதடி பேதையே,பெண்ணே,இஃது,நெருங்கிய முப்புரி நூலை அணிந்த மார்புனுடைய சார்ங்கலனது அறியாமையே பற்றுக் கோடாக,அவனது ஊழ்வினையானது வந்து உயிரைக் குடித்து நீங்கியது.ஆதலால் பெண்ணே நினது மிகப் பெருந் துயரை நீக்குவாயாக!"என்றது சம்பாபதி தெய்வம்.

அறியாமை,
அறியாமை,
அறியாமை!

ஆம்!,அறியாமை, கேடு விளைவிக்கும்!!அன்றே புனைவினூடாகப் பக்குவமாகச் சொன்னார்கள் பெரியோர்?

"ஆமா,சொன்னார்கள்!அதற்கென்ன இப்போது?"கேள்வி எழுகிறதா? நல்லது!

கேள்விதானே அறிவினது மூலவூற்று?

கேள்விகள் தோன்றணும்!

நமது மூடர்களது தெருச்சண்டை,"புரட்சி"ஆளுக்காள் ஆப்பு வைத்த தமிழீழப் போர் குறித்துக் கேள்வி எழுந்தே ஆகணும்.

இது,தோழமையைக் குழிதோண்டிப் புதைத்தது.ஒரு தளத்தில் ஒருமைப்படும் சந்தர்ப்பங்கள் பலவெழுந்தபோது அதை நிர்மூலமாக்கியது.அந்த நிர்மூலமானது தனிப்பட்ட தமது அரசியல் இலாபத்துக்காகவே நடாத்தப்பட்டு வருகிறது.அதை தூக்கி நிறுத்தியவர்களில் நானும் ஒருவன்!கடந்தகாலத்தில் புலிகளுக்கு முண்டுகொடுத்து வேவு பார்த்தவர்கள் இப்போது உலக அதிகாரவர்க்கத்தோடும், புரட்சி-மாற்றுக்கருத்தென்றவர்கள் இலங்கையினதும் அதன் இன்றைய நட்பு நாடுகளோடும் கைகுலுக்க முனைவதன்தொடரில் நம்மையெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

இந்த வகைக் குழிப்பறிப்புகள் யாவும் மக்களது நலன்-உரிமை,புரட்சியெனச் சொல்லியே அரங்கேறுகிறது.இது,இலட்சம் உயிர்களை உண்டு கழித்தும் இன்னும் நமது மக்களுக்குத் துரோகமான அரசியலேயே செய்கிறது.

இந்த ஊழ்வினைக்கு யாரு சொந்தக் காரர்?:

இப்போது,தமிழீழம் கானல் நீராகக் காடு தாண்டும்போது,அதைச் சொல்லிக் கொலைக்களத்தை ஆரம்பித்தவர்கள், அடுக்கடுக்காகத் தாமும் உயிரழித்து மறைந்தபோது,தமது தவறுகளைப் பொதுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.ஏகப் பிரதிநிதிகளாக மாறுவதற்கு எல்லோரையும் வேட்டையாடி தின்றோய்ந்தவர்கள்,அதிகாரத்தைச் சுவைக்கும்போது தமக்குமட்டுமே அதைக் கையகப்படுத்தினர்.இப்போது,உழ்வினை திரண்டு அவர்களைப் பதம்பார்க்கும்போது:

"ஐயோ,இன்றைய இவ்விழி நிலைக்கு நாம் மட்டுமா பொறுப்பு?இல்லையே,நீயுந்தாம் காரணம்"எனப் புலம்ப அறியாமைப் புலிக்குப் பலபேர் போட்டியாக...தமிழ்பேசும் மக்களது அழிவில் அரசியல் செய்பவர்கள் புரட்சியெனச் சொல்லியே தோழமைகளைத் தொலைப்பதற்கான தனிநபர் முனைப்புகளை நமக்குள் விதைத்தார்கள்.அந்த வினையின் தொடர்ச்சியானது இன்றுவரை ஒருவரையொருவர் அழிப்பதிலும் சேறடிப்பதிலும் தொடரும்போது இந்த அரசியலது மூலமே "ஈழப்போராட்ட"அராஜகத்திலிருந்தே தொடர்கிறது.மக்களை வேட்டையாடித் தமது நலன்களை முதன்மைப்படுத்திய கடந்தகால இயக்கவாதம் இன்று எல்லோரதும் முகத்தில் ஓங்கியடித்துத் தம்மைமட்டும் தூய்மைப்படுத்தித் தமது எஜமானர்களது வழிக்கான தெரிவுகளைக் கொண்டியங்குகிறது.

இது,யாழ்ப் பல்கலைக்கழகத்துக்கு துணைமுதல்வரைத் தெரிவதிலிருந்துகூட அதே அரசியலையே தேடிச் செய்கிறது.

அட சிவனே,ஆர்க்கெடுத்துரைப்பேன் இவர் மோசடிகளை?

அறியாமை,பகட்டு,பேரவா,பதவி வெறி,பிடித்துக்கொண்ட "பிரபாகரன்கள்" எல்லாம்அப்பாவிகளாகி விடுகிறார்கள் நம்மில்பலரிடம்.இத்தகையவர்கள் நடாத்தும் இணையங்கள்-கட்சிகள்-கூட்டுக்கள் யாவும் மக்களுக்கான அரசியலைச் சொல்லியே புரட்சி-புரட்சி என்கின்றன.ஆனால்,இவர்களது பின்னால் நம்பிப் போகமுடியுமா? நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் ஒரு கூட்டத்தின் கைகளில் அதீதமான நிதி-ஆட்பலம்,ஊடகப்பலம் இருக்கிறது. இந்தப் பலத்தை ஏற்படுத்தி இயக்கும் அந்நிய அரசவியூகமானது ஏதோவொரு நலனினது தெரிவிலேயேதாம் இவர்களை ஊட்டி வளர்கிறதாகத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.எனது இந்த வாதமானது கடந்தகால விடுதலைப் போராட்டத்தைத் தமது கைகளில் எடுத்த இயக்கவுறகளது செயற்பாட்டிலிருந்து சொல்வதாக எவரும் கருதவேண்டாம்.இன்றைய உலக அரசியல் வியூகத்தில் புலம் பெயர் "புரட்சி"க்காரர்கள் பலரை மேற்குலக-இந்திய வியூகம் இணைத்தே தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது.இலங்கையில் இயங்கும் அரசுசார்பற்ற நிறுவனங்கள்-அமைப்புகள்போல இந்தப் "புரட்சி-கட்சி"களென அவர்களது நெறியாண்மைக்கேற்ற சிவப்புச் சாயத்தைத் தகவமைத்தே தீரவேண்டியிருக்கிறது.இதுவே,தோழமை-கூட்டு,அணிதிரளும் அனைத்தையும் குறித்துப் புதிய புரிதல்களைச் செய்தே இயங்கவேண்டிய நிர்பந்தத்தைத் தருகிறது.

இந்த அப்பாவிகளது இணையம்-கட்சிகள்,உதிவிநிறுவனங்களது முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துபோகும்போது, அதற்கு நாம் மட்டுமே அல்லப் பொறுப்பு.ஆயுதத்தை வழிபட்டுக் கண்கடை தெரியாத கொலைக்காரர்களாகப் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் புலம்பித்திருந்ததன் பயனாக விளையும் இவ்வினை, ஊரெல்லாம் உயிர்குடித்தவர்கள் வரலாறைச் சொல்லிக்கொண்டிருக்கிறது,இன்று!

ஊடகம் நடத்துபவன்(குகநாதன்போன்ற வியாபரிகள்) தனது பங்காளிகளை ஏமாற்றியதற்குத் தான்மட்டும் பொறுப்பில்லை என்கிறான்!அதற்காக, ஆங்காங்கே அவனது ஊதுகுழல்கள் ஒலிக்கின்றன!இதைப்போல்தாம் நமது "புரட்சி-மாற்றுக்கருத்து" வட்டமும் வாந்தியெடுக்கிறது.இதுரை செய்தவற்றையெல்லாம் உரைத்துப் பார்ப்பது அவசியமாகவிருக்கிறது.எனது இதுவரையான எழுத்தில் உண்மைகளையும்,அதன்வழியான தோழமைத்தொடர்ச்சியையுமே தேடினேன்.ஆனால்,அத்தகைய எழுத்துக்களைத் தமது சந்தர்ப்பவாத அரசியற் சூழ்ச்சிக்குப் பயன்படுத்துவதிலேயே "தோழமை"உறவுகள் விரிந்துகொண்டன.கயமைமிகு அரசியல் இது.

இப்போது நாகரீகம்,நட்பு,அரசியல்மாண்பு,மானுட நேயம் குறித்தெல்லாம் பேசுகிறோம்!-குறிப்பாக நான் பேசு முனைகிறேன்.

என்ன சாமான்-மானுட நேசிப்பா?

அப்படியாகவா-நல்லது.

அதென்ன மானுட நேசிப்பு?:

கொலைகளைத் தேசத்தின் பெயரால்-மனிதர்களின் பெயரால்,தேசியத்தின்பெயரால் ஊக்குவிக்கும் அரசியல், மானுட நேசிப்பென்று பம்முவது எதனால்?நானும் இதைத் தொடந்தவன்தானே?ஒருவனைக் கழுத்தறுத்து நான்கொண்ட அரசியலை முன்நிலைப்படுத்தியவன்தானே? அவ்வண்ணமே புலிக்குக் காவடியெடுத்த தீப்பொறி-தமிழீழஞ் சஞ்சிகையெனத் தொடர்ந்தன...

தேசம் நெற்,தமிழரங்கம்,இனியொரு,தேனி எனத் தொடரும் பல் நூறு இணைய ஊடகங்கள் கொண்டியக்கும் அரசியலும் இதிலிருந்து சொட்டும் விலத்த முடியுமா?இவர்களது அரசியலது தெரிவில் வீழ்த்தப்படும் மனிதநேயம் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது.விட்டொதுங்க முடியவில்லை!எங்கோ தவறு செய்துவிட்டோமெனத் தொடர்ந்து வதைப்படுத்துகிறது.நேர்மையான அரசியலது தொடர்ச்சியே எனது எழுத்துக்கு அத்திவாரமாகும்.என்னைக் குறித்து நொந்து கொள்கிறேன்.

நாம் கணியன் பூங்குன்றனிடம் போவோம்.

மானுட நேசிப்பென்பது(இஃது, வர்க்கஞ்சார்ந்தது.என்றபோதும்...) வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது, கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.

இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.

எல்லையே இல்லா
மானுட உறவுகளைத் தமிழர்கள்
கொண்ட உறவினது அண்மைய
தடமாய்க் கணியன் மகத்துவம்
புரியாத இனமாச்சு அவன் வம்சம்!

நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.

இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது.

இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது.

அதுவே, மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு, அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது.

இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.

இங்கே,மத ஐதீகங்களுக்குக்கொடுக்கும் மதிப்பை வாழும் ஆசைக்காக, வன்னியில் அழுது மடியும் அந்த மக்களுக்கு எவருமே கை கொடுக்கவில்லை!"இறுதிவரை-ஒரு தமிழன் இருக்கும்வரை நாம் போராடிச் சாவோமென" ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழன் சொன்னான்.இன்றோ ,நந்திக்கடற்கரையில் செத்த பல்லாயிரம்போராளிகள்-தலைவன் உட்பட அழிந்துபோனபின், சொன்னவன் சொத்துச் சுகத்தோடு பம்புகிறான்.எதுவுமே நடவாததுபோலப் பொருளோடு அமைதியாகிவிட்டான்.அந்தப் பொருளை அளித்தவர்கள் மீளவும் நாடுகடந்த அரசாங்கம்-தமிழீழத்தை மட்டும் பிரதிபலானக இவர்களிடமிருந்து பெற்றுள்ளனர்!

அன்று,புலம்பெயர்ந்தவர்களுக்கு வன்னியில் இருக்கும் மக்கள்சார்பாய்-அவர்களது உயிரைப் போராட்டத்துள்-கொலைக் களத்தில் திணிக்க எவர்கொடுத்தார் அவ்வுரிமையை?

மொழியா,இன உணர்வா,தேசமா?-தெரிந்தவர்கள் உரைக்கக் கடவீர்!

"வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு"-மணிமேகலை:பவத்திறம் அறுகெனப் பாவை நோற் காதை:115

தமிழீழம்,தனி அரசு,பதவிமோகம்,அதிகாரச் சுவையோடு அள்ளுப்பட்டவர்கள் அமைத்த கோட்டைகள் யாவும் மக்களுக்குப் புதைகுழியாகின இன்று.வரியும்,தொகையும் ஏந்திய கரங்களின்று"மக்களே,மக்களே"என ஓலமிடுகிறது.

"கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்" என்று,

தொலைக் காட்சியில் உருகுகியது-வானொலியில் அழுது புலம்பியது!.இதை, ஏலவே உணராத தலைமை மரணத்தைச் சந்திக்கும் பொழுதே அதற்கும் மானுட மகத்துவம் புரிந்தது.எனவேதாம் சரணடைந்து பலியானது-என்ன செய்ய-எல்லாம் காலந் தாழ்ந்த ஞானமாகியது.எனினும்,எமது இன்றைய மாற்றுக் கருத்து அரசியல் இதைப் புரிந்துள்ளதா?நம்மிடம் நடைபெறுகிற வெட்டுக்கொத்துகளுக்குப் பின்னே எவரை அழைத்துச் செல்ல முனைகிறேன்? புரியவில்லை!இந்தப் புரியாத நிலையையே தமது பலமாக அரவணைத்தலிலும்-அவமதித்தலிலுமாக மாற்றுக் கருத்துவட்ட இயங்குகிறது.அதன் எஜமானர்களது தயவு எதுவரை என்பதே இனிவரும் அரசியல் தொடர்ச்சியாக வடிவங்கொள்ளும்.

அந்தப் புள்ளியைக் கண்டடையும்வரை நான் உறங்கேன்.

"பொய்யன் மின்புறம் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்உயிர் கொன்றுஉண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்."-வளையாபதி.

இதுதான் நாம் கொள்ளதகு அறிவு.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.10.2010

Saturday, July 31, 2010

சிதைவு.

சிதைவு.

(நாடகம்)


காட்சி:1

(முதற் திரை விரிய தாடிகாண் பெரிசு(முத்தையா விசரன்),விசரனெனப் பெயர் சூடிய அந்தவூரில், அதிகம் கற்ற மனிதத்துக்கானவொரு உயிர்.தனது நிலையில் தன்னைப் பிரகடனப்படுத்த கவிதையாய்த் தன்னை உலகுக்கு ஒப்புவிக்கிறார்.அவரைச் சுற்றிச் சின்ன வண்டுகள்(சிறார்கள்)ஊரினது சாயலிலுள்ள முற்றத்தில் ஓடி விiயாடுகிறார்கள்(எட்டுக்கோடு-கோலி) அந்த முற்றத்துக்குச் சொந்தமான வீட்டின் குந்தில் வயசான மூன்று கிளார்களும் இரண்டு இளைஞர்களும் ஒரு பெட்டிளைப்பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அப்பெட்டிக்குள்உலர் உணவுப்பொருட்கள் இருக்கிறது.)

முத்தையா (ஊருக்குவிசரன்):

திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி


பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற

தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை

கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!

தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்

ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!

திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை


(விசரனான அறிஞன் சிறார்களுக்கு கவிதை சொல்லி முடிக்கச் சிறார்களது சிரிப்பொலி வானை அதிர முத்தiயா மெல்ல நகர்கிறார்.அவர் அரங்கைவிட்டு கீழிறங்கிப பார்வையாளர்களை விழித்து விலகிறார்.முத்தையா விசரனின் கவிதைக்கும் தமக்கும் சம்பந்தமில்லாது உலர் பொருள்களோடு அந்த வீட்டின் குந்திலிருந்தவர்கள் ஒன்றிப்போக,அந்த முற்றத்துக்குச் சில வருகிறார்கள்.அதுள்குமுதினி, செல்லம்,தங்கமணி என்ற மூன்று பெண்களும்,சுந்தரம்,ராசா,மணி ஆகிய நடுவயதுக்காரர்கள்அடங்குவர்.அவர்கள் வீட்டின் குந்தில் பெட்டியோடிருக்கும் உலருணவுப்பொருட்களை உற்றுப் பார்த்தபடி இருக்க தங்கமணி பேசத்தொடங்கிறாள்.)



தங்கமணி: ஏன்டி ராசாத்தி இந்தியா எங்களுக்குச் சாப்பாடு போட்டமாதிரி நாடு பிடிச்சுத் தருமாடி?

ராசாத்தி:இந்தா பார் தங்கமணி அக்கா என்னைப் போட்டுப் பிராண்டாத.உன்ர கேள்வியை முத்தையா விசரனிட்டக்கேள்.எனக்கு இந்தியாவைத் தெரியாது.

(தங்கமணி,ராசாத்திக்கான பேச்சு வார்த்தைகளைக்குந்திலிருந்து கூர்ந்து கவனித்த மூன்று கிளார்களில் ஒருவர் எழுந்து முற்றத்துக்கு வருகிறார்.வந்தவர் தங்கமணியிடம் மட்டுமல்ல எல்லோருக்கும் பொதுவாகப் பேசத் தொடங்குகிறார்.)


மூன்று கிளவரில் ஒருவர்: இங்சபாருங்க,இப்ப எங்களுக்கு இந்தியா சாப்பாடு போட்டிருக்கு.இன்னுஞ்சில காலத்தில அது கட்டாயம் எங்களுக்கொரு தீர்வைச் செய்யும்.இப்ப எங்கட மண்ணுக்கு இந்தியா நேரடியாகத் தலையிட்டிருக்கு.அது எங்கட ஆறுகோடிச் சனத் தொகையை உலகுக்கு எடுத்துச் சொல்லுறதெண்டுதான் அர்த்தம்.


(இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது முத்தையா விசரன் ஒரு சிறு பெட்டியைக் காவிக்கொண்டு வருகிறார்.அவரது வருகைக் கண்ட வீட்டின் முன் உரையாடிய கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மீளவும் சின்னஞ் சிறுசுகள் அவருக்குப் பின்னால் வால்பிடித்து வருகிறார்கள்.அந்தப் பெட்டியை அவர் முற்றத்தில் வைத்துவிட்டு,அப்பபெட்டியில் அமர்ந்தபடி தன்பாட்டிற்குப் பேசுகிறார்.அது,எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கிறது.)


முத்தiயா(விசரன்): இந்தியா பிளேனால பெட்டி போட்டிருக்கு.இந்தப்பெட்டிக்குள் சாப்பாடு இருக்கட்டும்.அது ஒரு நாள் சாப்பாடு தந்த கையால எங்களுக்கு பெட்டியடிக்குமோ எண்டும் பயமா இருக்கு.

(முத்தையா பேசும்போது,அவரைத் துரத்துகிறாள் தங்கமணி.முத்தையா கொண்டுவந்த பெட்டியை முற்றத்தில் விட்டுவிட்டு ஒடித் தப்புகிறார். அவரது பெட்டியை சுந்தரம்,ராசா,மணி ஆகியோர் உடைத்துப் பார்க்கிறார்கள்.அதற்குள் புத்தகங்கள்.அவைகள் எல்லாம் சிவப்பு நிறங்களில் இருக்கின்றன.இளைஞர்கள் அவற்றை விரித்துப் பார்க்கும்போது திரை மூடுகிறது.)

(திரை)


காட்சி:2

(திரைவிரிகிறது.ஒரு மாதாகோவிலது சூழல் அரங்கத்தில்.அது மாதா கோவிலென மற்றவர்கள்-பார்வையாளர்கள் அறியும் திரை அமைப்பு-அரங்கமாக இருக்கவேண்டும்.அந்தக் கோவிலிலுள் வயசான தாயொருத்தி ஜெபஞ் செய்கிறாள்.அவளது குரல் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும்.)



வயசான தாய்:

ஏசுவே உன் பிறப்பையும்
பலமுறைகள் கொண்டாடியாச்சு
இருந்தும்
கொடு வாழ்வு நமக்குப்
போனதாகத் தெரியாதிருக்கும்
இந்தப் பொழுதில்
உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்
எம்மையும் சிலுவையில் அறைய
எவரும் விழி திறவார்-நீயுந்தான்ஆண்டவனே!


நீ கொடுத்து வைத்தவன்
ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது
எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே
எனினும்
எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை
எல்லோரும் ஏறி மிதித்க
எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது


முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே
செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே
சீக்கிரமாய் எழுந்து போகவும்
கர்த்தர் எமக்கு முன்பாக
எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்


எமக்குள் நடப்பதோ வேறு!
பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே
படும் துன்பம் அப்பாவிகளுக்கே
நீயோ வானத்தில் மௌனித்தபடி
கர்த்தரின் கணகணப்பில்


நானோ பிள்ளையைத் தொலைத்தவள்
சுற்றஞ் சுகம் தொலைத்தவள்
என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,
என் தேசத்தின் பிதாவுக்கு
தேவையான ஆட்பலத்தையும்
பொருட்பலத்தையும் நாம் இட்டும்
தேசம் விடியுந்தருணம் எங்கோ தொலைந்து
தறிகெட்டலைகிறதே!-நீ எமக்குக் கண் திறவாயோ?


எமக்காக நீயேன் முன் சென்று
எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?


(அந்தத் தாய் மாதா கோவிலில் அழுது மன்றாடுகிறாள்.அவள் கண்ணீருடன் தலைவிரிகோலமாகக் கோவிலைச் சுற்றி அலைகிறாள்.அவளது அருகினில் சில இளைஞர்கள் ஏதோ காரணத்துக்காகக் கூடுகிறார்கள்.அவள் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறாள்.அந்த இளைஞருள் ஒருவன் அத் தாய்க்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறான்.அந்த ஆறுதல் வாய் அசையலில்மட்டும் இருக்கும்.பார்வையாளர்களுக்கு வாய் அசைவுகள்மட்டுமே தெரிய வேண்டும்.இனைஞர்களது ஆறுதல் வார்த்தைகளுக்குப்பின் தாய் கோவிலை விட்டுச் செல்லுகிறாள்.அவளது நடையிலொரு தெளிவு இருக்கிறது. இப்போது மாதா கோவிலில் கூடிய அந்தச் சில இளைஞர்களுள் சுந்தரம்,ராசா,மணி ஆகியோரும் நிற்பது தெரிகிறது.அவர்கள் முத்தையா விசரரின் பெட்டிக்குள் இருந்த நூல்களை மற்றவர்களுக்கும் பரிமாறுகிறார்கள். அப்போது,சுந்தரம் பேசுகிறான்.அப் பேச்சுப் பார்வையாளருக்கு நன்றாகக் கேட்கிறது.)

சுந்தரம்: தோழர்களே,நமது கைக்கு வந்திருப்பது எமக்கான வழிகாட்டி.நாம் தனித்திருந்து ஒன்று கூடியுள்ளோம்.எமது மக்களுக்கு நாம்தான் விடிவை ஏற்படுத்த வேணும்.இந்தியாவை நம்பக் கூடாது.

(சுந்தரத்தின் பேச்சை முறித்து ராசா கேள்வி கேட்கிறான்)

ராசா: ஏன் நம்பக்கூடாது?

சுந்தரம்: அதுக்கு தனது நலன்கள்தான் முக்கியம்.

மணி: அண்ணே எதைவைச்சுச் சொல்லுறியள்?

சுந்தரம்: இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களை வைச்சுத்தான் சொல்லுறேன்.அவர்களை அடக்கும் இந்தியா எங்கட பிரச்சனையையும் அப்படியே அடக்கும்.

ராசா: அப்ப என்ன வழி?

சுந்தரம்: நாங்கதான்,எங்கடி கைகள்தான் உதவும்.எங்கட சனங்களை முதலில் ஒன்றாக்குவம்.பிரிவுகளை-பிளவுகளை ஐக்கியப்படுத்தினால்மட்டுமேதான் நாம் விடுதலையடைய முடியும்.


(சுந்தரம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறுபையன் ஓடோடிவந்து சுந்தரத்தின் காதுக்குள் ஏதோ சொல்ல அவர்கள் அனைவரும் கலைகிறார்கள்.திரை மூடுகிறது.)

(திரை)

காட்சி:3

(திரை மேலெழுகிறது.அலங்கோலமான வீடு.நாலா பக்கமும் சிதைவுகள்.அந்த வீட்டின் முன்னாள் இருந்து வயசாகிப்போன கிழமான தங்கமணி புலம்புகிறாள்.இண்டைக்கு இருபது வருஷத்துக்கு முன்னால சாப்பாடு போட்ட இந்தியா என்ர குடியைக் கெடுத்துப்போட்டுதே:என்ர வாழ்கையை நாசமாக்கிப்போட்டுதே என்று ஓங்கி அழுகிறாள்.அவளின்ஒப்பாரியைக் கேட்க யாருமில்லை.வீட்டிற்கு முன் பகுதி முள்வேலி தொடுக்கப்ப்டு மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்க அங்கே இராணுவத்தின் திமிர் துப்பாக்கி காவி மனிதர்களை கட்டளையுடன் பணிய வைப்பதாகவும்,அந்த மனிதர்களுக்கு உணவுப் பொட்டலும் எறியப்படுவதுமாக இருக்க,அவர்கள் முட்டிமோதி அவ்வுணவைப் பெறுவதுமாக ஒரு காட்சி இருக்கிறது.இப்போது திரை மூடப்படுகிறது.)

(திரை)

காட்சி:4

(திரை விரிகிறது.முட்கம்பி வேலிகளுக்குள் மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டு,அவர்கள்அதற்குள் சிறைப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள்(காட்சியில் இது கொணரப்படவேண்டும்).அந்தச் சனத்தொகைக்குள் முத்தiயாவும் நிற்கிறார்.மிக வயதாகிக் கூனிக்குறுகி நிற்கும் அந்தப் பொழுதில் அவர் சிறார்களை இருத்தி வைத்துச் சோறூட்டுகிறார்.சிறார்களோடு பெரியவர்களும் அமர்ந்திருக்கின்றனர்.அவர்களை இராணுவம் கண்காணிக்கிறது.)

முத்தiயா: எல்லாம் இழந்துபோட்டம்.இப்ப சோத்துக்குக் கயூவில நிக்கிறதே ஒரு தவம்தான்.

ஒரு சிறுவன்: அப்பு அம்மாவைப்பற்றி அறிஞ்சனீங்களோ?

முத்தiயா: இல்லை.எந்தக் காம்பில இருக்கினமோ தெரியாது.(முத்தiயா சோற்றைப் பிசைந்தபடி இருக்க)

இன்னொரு சிறுவன்:அப்பு கதை சொல்லுங்கோவன்.ஆமிக்காரன் அடிக்கிற கதை வேணாம்.

முத்தையா குழந்தைகளை இழுத்து அரவணைக்கிறார்.பின்பு கதை சொல்லகிறார்.

முத்ததையா: இரு நாட்டில் ஒரு தேசம் இருந்தது.அந்த தேசத்தில்எல்லோருக்கும் தமிழ்தெரியாது.அதுபோல சிங்களமும் தெரியாது.

(முத்ததையா கதையைத் தொடங்கச் சிறுவர்கள் மெல்ல அவரிடமிருந்து பிரிந்து போகிறான்கள்.பெரியவர்கள் முத்தையாவை ஏளனமாகப் பார்க்க அவரும் நிலத்தில் துவாயைப் போட்டுச் சாய்கிறார்.அந்தச் சந்தர்ப்பத்தில் சில இராணுவத்தினர் அந்த முட்கம்பிக்குள் வாழ்பவர்களில்சிலரை(ஆண்-பெண்) இழுத்துச் செல்கின்றனர்.முத்தiயா தரையிலிருந்து எழுந்து வானத்தைப் பார்க்கிறார்.அவரை ஏளனமாகப் பார்த்த சனங்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர்.வானத்தைப் பார்த்தவர் இப்போது சனங்களைப் பார்த்துப் பேச முனைகிறார்.)

முத்தiயா: எக்காலமும் இப்படி இருக்க முடியாது.என்றைக்கும் அவமானப்படுத்துவதும்,வதைபடுவதும் சாத்தியமில்லை.ஒன்று மட்டும் நிச்சியம்.நாம் எல்லோரும் வாழ ஆசைப்படுகிறோம்.அதை இந்த அரசு புரிகிறதாயில்லை!(பெரு மூச்சு விடுகிறார்)

முத்தiயாவின் கூற்றைச் சனங்கள் கூர்ந்து கவனித்து ஆமோதிக்கின்றனர்.இந்தச் சந்தர்ப்பத்தில் இராணுவம் மீளவும் வருகிறது.முத்தையா பேச்சை நிறுத்துகிறார்.சனங்களைக் கட்டளையிட்டுக் கயூவில் நிற்க வைக்கும் இராணுவம் அவர்களை மீளக் கணக்கெடுக்கிறது.இப்போது திரை மூடப்படுகிறது.)


(திரை)


காட்சி: 5

(திரை மேலெழும்போது சிங்களத் தலைநகரம் காட்சியாகிறது.அங்கே,களியாட்டங்கள் நடுக்கிறது.வெடிகள்-கொடிகளெனக் காட்சிக்குட்படுத்தும்)

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.10.2010