Saturday, November 13, 2010

சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்...

சோபாசக்தி,வளர்மதி:இடையில் நான்...

Shaseevan hat geschrieben:
„அண்ணை, நீங்கள் சோபாசக்தி கேட்ட கேள்விக்கு எழுதப்போகும் பதிலை நினைத்தால் ஃபேஸ்புக்கை விட்டு ஓடி ஒளியவேண்டும் போல் உள்ளது. எதிர்காலத்தில் 'சளாப்பல்' என்ற சொல்லுக்கு உங்கள் பதிலே உதாரணமாக இருக்கும். :)



Shoba Sakthi13 November 2010 at 10:14
Betreff: From Shoba
/உங்கள் நேரத்தை இப்படியானவர்களுடன் விவாதித்து விரயம் செய்யவேண்டாம் என்று அனுபவத்தாலும் நட்பினாலும் கேட்டுக்கொள்கிறேன்// என எழுதப்பட்ட பின்னூட்டமான்றிற்கு தீபச்செல்வனும் சிறீரங்கன் அண்ணனும் விருப்பம் சொல்லியிருக்கிறீர்கள் இங்கே 'இப்படியானவர்கள்' எனச் சொல்லப்படுவது நான்தான். என்னுடன் விவாதிப்பது விரயம் என்றா நீங்கள் இருவரும் கருதுகிறீர்கள்? உங்கள் இருவரதும் பதில்கள் எனக்கு முக்கியமானவை.



இக் கிழமை முதல்,நான் புதிய வேலைகிடைத்து என்னுடல்-மூளை வருத்தி ஓய்ந்து,குடித்துத் தூங்கி,மதுமயக்கத்தில் எழுந்தபோது,கணினித்திரை மங்கலாக இருக்கச் சோபாசக்தியின் கேள்வியும்,நாரதன் சசீவனின் கருத்தும் கண்ணிலேபட்டுத் தாக்கியது மண்டையை!

இனி விஷயத்துக்கு வருவோமா தம்பி சசீவா?(இஃது-பொதுவூழ்)

தம்பி,சசீவா!,சோபாசக்தி என்ன சொறுடிங்கரது பிரச்சனைகளை அல்லது பின்னங்களைப் போட்டா கேள்வி எழுப்பியுள்ளார்?-நான் சளாப்ப!

அவரைப் பொருத்தவரை,தன்மீதான அரசியல் உரையாடலையொட்டி,அவர் இருப்புச் சம்பந்தப்பட்டதும்,அதுள் எழுந்துள்ள அடையாள நெருக்கடிகுறித்ததுமான புரிதலில் அவர்சார் அரசியலைக் குறித்து நாம் எதிர்கொள்ளும் போக்குகளோடு நெருங்க முனைகிறார்.அல்லது, நொருக்க முனைகிறார்.இது,எனக்கு,எப்போதும்போலவே விருப்புக்குரியதும்-என்னை உரைத்துப் பார்ப்பதற்கும் உவகையானதே!(இது"நான்" எழு நிலை).

அன்புச் சோபாசக்தி, "உங்கள் அரசியல்-எழுத்துப் பரந்தபட்ட மக்களது அரசியல்வாழ்வோடு இயங்குகிறதா?அல்லது நீங்கள் குறிப்பிட்டவொரு நிலையில் அத்தகைய எழுத்துக்களை மக்களது பரந்துபட்ட நலன்களோடிணைத்துப் பரந்துபட்ட மக்களையொடுக்க முனையும் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு மேய்ப்பர்களாக்கும் முயற்சியில் வியூகம் அமைப்பவரா?"(...)

ஒடுக்குமுறைகளை உடைத்து முன்னகர முனையும் எம் மக்களக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது எனக்கு உடந்தையானதில்லை!உங்களுக்கும் அப்படியே எனக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

உங்களை நோக்கி(சோபாசக்தியை நோக்கி)பல்வேறு கட்டுரைகளை-கேள்விகளை நண்பர் வளர்மதி எழுதியுள்ளார்-எழுப்பியுள்ளார்.அவருடைய கேள்வியானது உங்கள் அரசியல் நடாத்தையைக் கேள்விக்குட்படுத்துபவை.சமீகாலமாக நான் கவனித்துவரும் எழுத்துக்களில் முக்கியமானது வளர்மதியின் எழுத்துக்கள்.எப்படி உங்கள் எழுத்துக்கள் நமது மக்களது வாழ்வோடும்-விடுதலையோடும்,அவர்களது அரசியலோடும் விளைவுகளை ஏற்படுத்த முனைகிறதோ அதேயளவு உங்களது அரசியல் நடாத்தையைக் கேள்விக் குட்படுத்துவது வளர்மதியின் கேள்விகள்.

இந்தப் புள்ளியில்,நீங்கள் இதுவரை எதுவுமே நடாவாததுபோன்றிருந்துகொண்டு, மற்றவிடயங்களில் மூழ்கும்போது(அப்படிக் காட்டும் நிலையில்) நான் வளர்மதிக்கு உரைக்கிறேன்"சோபசக்தியோடு விவாதிக்க முனைவது வீண் விரயம்" என்று.அத்தகைய எழுத்தை முன்வைக்கும் பின்னூட்டமும் விருப்பமாகிறது!

வளர்மதிக்குப் பதிலுரைப்பது உங்களதுரிமை.ஆனால்,சமீபக காலமாக நீங்கள் இயக்கும் அரசியல் உரையாடல்உலகத்தால் ஒடுக்கப்படும்தமிழ்பேசும் மக்களது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதென்பதால்,நீங்கள் பொதுத் தளத்தில் வளர்மதியோடு உரையாடவேண்டும்-அவர் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும்,தாங்கள் குறித்த அரசியல் நடாத்தைக்கும் பதிலுரைத்தே ஆக வேண்டும்.இத்தைய கடப்பாட்டைத் தட்டிக்கழித்துவிட்டு என்னிடம் பதில் கேட்பதன் நியாயத்தோடு வந்திருப்பது சரியே!அதேபோன்று,நானும்"சோபாசக்தியோடு உரையாடுவது விரயம்"எனச் சொல்வதும் தங்கள் நிலையினது விளைவுதரும்எனது புரிதலில் எனக்கும் நியாயமாகிறது!

இந்த எனது "நியாயத்தை"தப்புவென நிரூபிப்பது உங்கள் கையில்.அதைச் செய்து(வளர்மதிக்குப் பதிலுரைத்து) என்னைக் கேள்வி கேட்பது இன்னொரு தளத்தில் இயலுமாகும் சோபாசக்தி.அதுவரையும்...



ப.வி.ஸ்ரீரங்கன்.

13.11.2010

No comments: