Sunday, November 30, 2014

எஸ்.பொன்னுத்துரைக்கும் இன்னும் எவரெவருக்கோவெல்லாம்நினைவேந்தல்...

... "மக்களுக்காக" மரித்த அனைத்தியக்கப் போராளிகளுக்கும் நினைவு கூர்வதாகவேறு வகப்பெடுக்கின்றனர்.


மிழர்கள் மிகக் கெடுதியானவொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.என்னையும் இணைத்தே சொல்கிறேன்.நாம்மிகப் பொறுப்பற்ற பிழைப்பு வாதிகள்.அன்றுமின்றும்,அரிசிக்குள் குறுங் கற்களையும்,மாவுக்குள் முருகங் கற்றூளையும்,மிளகாய்த் தூளுக்குள் ஓட்டுத் தூளையும் கலந்து வர்த்தகம் பண்ணும்இந்தப் பிழைப்புவாதத் தமிழ்ச் சமுதாயும்,முள்ளி வாய்க்கால்வரை  மூன்று இலட்சம் மக்களைப் படுகொலைசெய்தும்,கட்டாயமாகக் கொலைக்களத்துள் தள்ளியும் இலங்கை அரசோடு "தமிழீழ வார்த்தகஞ்" செய்து போட்டியிட்டனர்.

இத்தகைய வர்த்தகத்தின் மிக முன்னேறிய வடிவமாக இயக்ககங்கள்"போதை வஸ்த்துக்களை"க் கடத்தி, உலகம் பூராகவுமுள்ள மக்களைக் கொல்வதற்கு உடந்தையானர்கள்.இந்த வர்த்தகத்துள் சேர்ந்த பணங்களை வைத்து மேலும் வாத்தகக் குழுமங்களை உருவாக்கிக் கொண்டனர்.இதன் உச்சத்தில்தாம் தமது கொலை அரசியலைத் தமிழீழமெனச் சொல்லி இந்திய -மேற்குலகத் தேசங்களுக்குத் தரகர்களாகவும் -அடியாட்களாகவும் இந்தத் தமிழ் மாபியாக்கள்செயற்பட்டனர் - செயற்படுகின்றனர்.


இவர்களோ இன்று, எஸ்.பொன்னுத்துரைக்கும் இன்னும் எவரெவருக்கோவெல்லாம்நினைவேந்தல் -அஞ்சலியெனத் தமது இருப்புக்காக கூட்டங்களும் -நோட்டீசுகளுமாக வெளிப்பட்டுக்கொள்வதற்கான முக மூடிகளைத் தேடுகின்றனர்.
இத்தகைய தமிழ்ச் சமுதாயமானது இதுவரை தாம் சொல்லி வந்த "தேசியத் தலைவர்" என்ற மனிதனின் மரணத்தைப்பற்றியோ அன்றி, அவனது நினைவஞ்சலி குறித்தோ இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவும் இல்லை -புலிகளது இறுதி முடிவுக்கான எந்தத் தார்மீகப் பொறுப்பும் எடுக்கவுமில்லை!

பிரபாகரன் இருக்கும்வரை தமிழ்ச் சிறார்களது உயிரைத் "தமிழீழ விடுதலைக்கு" என்று துஷ்பிரயோகஞ் செய்து பிழைத்த , இந்த மாபியாக்கள், பிரபாகரனது கொலையோடு தமிழ்மக்கள்மீது தாம் மேற்கொண்ட கொலை அரசியலையும்வரலாற்றிலிருந்து மூடிமறைப்பதற்காகத் தொடர்ந்து "மக்களுக்காக" மரித்த அனைத்தியக்கப் போராளிகளுக்கும் நினைவு கூர்வதாகவேறு வகப்பெடுக்கின்றனர்.

ஒவ்வொரு இயக்கமும் மக்களைக் கொன்று குவித்த வரலாறானது இப்போது, "மக்களுக்காக" என்ற கபட நாடகத்தோடு தாம் செய்த கொலைகளுக்குத் தமிழ் மாபியாக்கள் விளக்கமளிக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய ஏமாற்று மோசடி!

இத்தகைய மோசடிக்காரர்கள் உண்மையில் மக்களது அழிவுகுறித்தும்,சிங்கள அரசுகளது இனவாத  அராஜகங் குறித்தும் எந்தக் கவலையுமற்ற வர்த்தகாகள்.இவர்கள்தாம் இப்போது இலங்கையில் அரசு  மாற்றத்தை ஏற்படுத்தும்  மேற்குலகச் சதிக்கு ஆதரவானவொரு அரசியற் பிழைப்பு வாதத்தைச் செய்து, அதற்கான வர்த்தகச் சூதாட்டத்துள் பணம் தேடுகின்றனர்.இவர்களை நம்பி, இவர்கள் செய்யும் "அஞ்சலி! அரசியலுக்குள் குப்பற விழுகின்றவர்கள் தமிழ்பேசும் மக்களது அரசியல் எதிர்கால வாழ்வில் மீளவும் நெருப்புக் கொள்ளியைச் சொருகுபவர்களே!.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2014

Thursday, November 27, 2014

கார்த்திகை 27: தேசியத் தலைவர் !



செல்வா கனகநாயத்துக்கும்,
எஸ்.பொ. வுக்கும் அஞ்சலியும், அழுகையும்கொண்டு
கோலமிட்ட தெருவெல்லாம்
நடந்து களைத்து விட்டேன்!

எங்கும்,
பிரபாகரனுக்கான தடயம் இருக்கவில்லை!

பல்லாயிரம் பாலர்களைக் கொன்ற
"தமிழீழ விடுதலை"ப் போரென்ற அராஜகக் கூத்துள்
காணமாற்போன சனங்களைப் போலவே
பிரபாகரனும் எப்போதோ காணாது போனான்-
ஒரு தெருவோரச் சொறி நாயின் சாவைப் போல!

போடா போ!
உனது காலத்துள்
உன்னைத் "தேசியத் தலைவர்" என்ற
வஞ்சகக் குரல்களுக்குள் நீ மயங்கிக் கிடந்தாய்.

ஆனால்,
உன்னைக் கொல்வதற்கு
நீயே காரணமான
உனது அராஜகக் காலத்துள்
முளையரும்பிய
உனது கொலைச் சேட்டைகளே
உன் உச்சி பிளந்த
துட்டக் கைமுனுக்களை
உனக்குள் உருவாக்கி வைத்தபோது
உன்னை
எவன் கோலமிடுவான்-என்னைத் தவிர?

ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2014

Friday, May 30, 2014

தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து...

புலிகளின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து...


புலிகள் அமைப்பின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவி அவர்களது பேட்டியைப் படித்ததிலிருந்து அவரைச் சந்திக்கவும்,அவரது எழுத்துக்களைத் தேடியெடுத்துப் படிக்கவும் ஆர்வம் மேலோங்குகிறது.இதுவரை ,அவர் நாம் அறியாதயெதையும் பேசவில்லை!கடந்த 30 ஆண்டுகளாகப் புலிகள் குறித்த எமது மதிப்பீட்டை , விமர்சனத்தை அவர் உறுதிப்படுத்துகிறார் -அவ்வளவுதாம்!நாம் பரந்தப்பட்ட மக்களை அண்மித்துப் புலிகள்மீதும்,தமிழ்த் தேசியத்தின் மீதும் வைத்த விமர்சனத்தைப் பலர் கிரகிக்கமுடியாது நம்மைத் துரோகியென எச்சரித்தனர்.ஆனால், நமது கருத்து உண்மையென்று நம் ஆயுட்காலத்திலேயே-நம் கண்முன்னேயே சாத்தியமாவது மாற்றுக் கருத்துக்குக் கிடைத்த வெற்றியே!


இயக்கவாத மாயை தகரும் நமது கருத்தியற் போராட்டமானது மக்களைப் பற்றிக்கொண்டால் சிங்கள இனவாத அரசின் ஓடுக்குமுறை ஜந்திரம் நிச்சம் தகரும்.அதற்கு முன் சிங்கள அரசின் ஆதிக்கம் தகர்ந்தாகவேண்டும்.இது தகராமாற் சிங்கள வன்முறை ஜந்திரத்தின்மீது எவரும் கையை வைக்க முடியாது.


இதுள், தமிழ்க்கவியின் கருத்துக்களிலிருந்து சிங்கள அரச ஆதிக்கம் பல் முனைகளில் தனது ஆதிக்கத்தை நிலையாட்டியுள்ளதென்பதும்,அதையே மேலும் விருத்திக்கிட்டுச் செல்லும் போக்கில், இன்றைய புலிகளது "மிச்சசொச்சம்" உதவுகிறார்களென்பதும் புரியத்தக்கதே!இதைக் குறித்துப் கணிப்பிடுவதில் நாம் சரியான வரையறையைச் செய்தாகவேண்டும்.


புலிகளது முன்னாள் பிரமுகர்கள் தற்போது தமிழ் நிலப்பரப்பெங்கும் "கட்டாக்காலி எருமைகளாக" அலைந்து, "இணக்க அரசியல் -இந்தியாவைக் கையாளுதல்"என வகுப்பெடுக்கின்றனர்.இவர்களை அரவணைத்து, இயங்கும் இந்திய -இலங்கைப் புலனாய்வுத்துறையானது இத்தகையவர்களோடு மிக நெருங்கிய நட்புப் பாராட்டுவதிலிருந்து நமது போராட்டம் மேலும் ,மேலெழ முடியாதவரையில் தமிழர்களைக்கொண்டே தமிழர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.இது மிக கொடுமையானவொரு சூழல்!







முள்ளிவாய்க்காலில் புலிகளது "சாண் ஏறிய போராட்டம்,முழஞ் சறுக்கிய சரணடைவிலிருந்து"தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் அராஜக இயக்கங்களின்வழி நமக்குள் வந்து சேர்ந்தன.இதுள் பேச்சுவார்த்தை மூலம்"தமிழீழம்"காணப் பிரபாகரன் மூன்று இலட்சம் மக்களைப் பலியெடுத்து, யுத்தத்தின் மூலம் பேச்சு வார்த்தைக்கு இலங்கையை நிர்ப்பந்தித்ததிலிருந்து நாம் மாபெரும் சமூகக் கிரிமினல் குற்றங்கொண்டவொரு பரப்புரையின் வழியிலான கொலை அரசியலைத் தரிசிக்கின்றோம்.இது எந்தவிதத்திலும் சிங்களவின ஒடுக்குமுறைக்கெதிரானவொரு பரந்துபட்ட மக்களது போராட்டமல்ல.மாறாக, அந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்த புலிகள் தமிழ்பேசும் மக்களது உயிரைத்  துஷ்ப்பிரயோகஞ்செய்து தமது இருப்புக்கானவொரு யுத்த்தால் தாமே அழிந்து போயினர்.இதை அன்று நாம் பரவலாக விவாதித்தபோது புலிகளை ஊதிப் பெருக்கி விவாதித்த "தமிழ் தேசியவாதிகள்"இன்று பெருங் கோடிசுவரர்களாகத் தமிழர்களது உயிர் -உடமை கொண்டு மகிந்தாவோடு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.இவர்களே மேலும் தேசியம் -விடுதலை எனவும் பரப்புரை செய்கின்றனர் தமது ஊடகங்களின்வழி!


இந்தக் கிரிமினல் குற்றஞ் செய்தவர்கள் அனைவரும் இப்போது புலிகளாகவிருந்து சாதரண மக்களாக மாறிவிட்டனராம்.ஆனால், அப்பாவிகள் தமது உறவுகளை மட்டுமல்ல தம் "இடம்- பொருள் - ஆவி " அனைத்தையும் இழந்து, முடவர்களாக வாழும் போது அவர்களைக் குறித்து இவர்களைக் கிரிமினல் கூண்டில் ஏற்றுவதென்பது சிங்கள அரசின்அடுத்த சதியாட்டத்தை மட்டுப்படுத்துவதென்பதில் சந்தேகமில்லை!இது குறித்துப் பல்வேற பரப்புகளில் விவாதித்தாகவேண்டும்.



இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலை "நாடுகடந்த தமிழீழ அரசு" என்ற  "ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீலகள்அடங்கியவொரு கூட்டம்"  மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்துக் கொண்டிருக்கிறது!இது, இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்து வருகிறது.குறிப்பாகப் புலத்தில்.



இங்கே, இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.

"இந்தியாவைக் கையாளுதல்"எனும் கருத்தியற் கட்டுமானத்தின்வழி இந்திய அரசியல் வியூகத்தை இலங்கைக்குள் இழுத்துவந்து அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்நிலத்தில் பலர் முன்னாள் புலிகளாய் வலம் வருகின்றனர்!




இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தை அப்பாவித் தமிழர்கள் -இஸ்லாமியர்கள்மீது திணித்த அந்நிய தேசங்கள்புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கி அழித்ததன்பின் இந்தியா, இப்போது அந்தக் குறும் ஆயுத -அராஜகக்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய இந்திய லொபிகளை உருவாக்குகிறது.இந்த லொபிகளது குரலேதாம் "இந்தியாவைக் கையாளுதல்,இலங்கை அரசோடு இணக்க அரசியலை" செய்தலென்ற குரலாகும்.



சாரம்சத்தில் இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த லொபிகள்அவசியமாகிறார்கள்.


முள்ளி வாய்க்காலின் தோல்விகண்ட புலிகள், அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது சகோரா இயக்கங்களை அழித்துக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மை அழித்தே வழியைத் திறந்துவிட்டிருப்பினும் அந்த வழியெங்கும் அந்நிய உளவுப்படைகளும்,முன்னாள் புலிகளது அந்நிய எடுபிடிகளுமாகத் தமிழ் மண் முற்றுமுழுதான துரோகத்தால் நிறைந்திருக்கிறது.இதைத் தமிழ்கவியின் பேட்டியிலிருந்து மிக நுணுக்கமாக இனங் காண முடியும்!



ப.வி.ஸ்ரீரங்கன்
30.05.2014

Friday, February 21, 2014

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.

23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக  முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.இது பார்ப்பனச் சோவினது இராச தந்திரமாகும். இது குறித்துச் சில விடையங்களை நோக்குவோம்.அப்போதுதாம் இவர்களது இரட்டை முகம் புரியத்தக்கதாக மாறும்.

    "ராஜீவ் கொலையாளிகள் விடுதலை’’ என்றலறும் ஊடகங்களும்  "தேசியவாதிகளும்" அவர்கள் பின்னாலுள்ள இந்திய ஆளும் வர்க்க நலன்களும் புரிந்துக்கொள்ளத்தக்கவுண்மைகளை மறைக்கின்றன!இராஜீவ் படுகொலை என்பது திட்டமிடப்பட்ட இந்திய ரோவின் [Research and Analysis Wing  ]சதியாகும்.இது வொரு "புலியைப் பயன்படுத்தும் " தந்திரமாக RAW வால் நிகழ்த்தப்பட்டது.அதாவது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு காந்திக் குடும்ப அரசியல் ஒவ்வாது.அந்தப் பிரிவுக்குக் கணிசமான அளவுக்கு இந்திய ரோவுக்குள் ஆதரவுண்டு.அஃதுதாம் இப்போது தேர்தலில் வெற்றி சூடுமெனக் கருதப்படும் மோடிக்குப் பின்னால் நிற்கும் ஆளும் வர்க்கம்.ராசீவ் கொலையின்வழி இந்திய ஆளும் வர்க்கம் ஒரே கல்லிலிருந்து 3 மாங்காய்களைப் பறித்தது!

    1: தமிழகத்திலிருந்து ராசீவ் படுகொலை செய்யப்பட்டதன்வழி தமிழ்நாடு ஈழத்துக்காகக் கெம்பி எழுவதைத் தடுத்தது.

    2.புலிகளையும் தமிழகத்து மக்களையும் உணர்வுரீதியாகப் பிளந்து அப்புறப்படுத்தியது.

    3:இந்திய ஆளும் வர்க்கம் தன்னால் படுகொலை செய்யப்பட்ட மாகத்மா காந்தி;சய்சேய்காந்தி;இந்திரா காந்தி போன்றவர்களது வரலாற்றுப்பழியிலிருந்து விடுபட்டு ராசீவ் காந்தியின் கொலைக்குள் முழு இந்தியர்களையும் திணித்தது.

     இதைத் திட்டமிட்டு மறைக்கும் ஆளும்வர்க்கத்தின் வினையான தொகையில்:

 "ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை".எனப் பார்பன ஊடகங்கள்,

 "இவையெல்லாம் நடந்தது, உங்கள் பார்வையிற் பிழையுள்ளது" -பாதிக்கப்பட்ட நமது குரல்.

 1): குஜராத்தில் 3000  இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை  நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

 2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

 3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்,செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும்  ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை ,எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்!



அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான "இந்தியர்களும்,தமிழர்களும்"  நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவார்கள்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா??இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.

 எனவே இன்னும் மேலே செல்வோம்.இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில்இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத (பாரதீய ஜனதா மற்றும் ஆர்.ஏஸ்.எஸ் கும்பலை விழிகள் முன் கொணர்க) அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது அன்றைய மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக் கேற்வாறு  மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காத்துக்கொண்டது-கொள்கிறது!

இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உள தேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது.

 இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்-பார்ப்பான் -திராவிடன் ", தமிழன் போக்குகள்.என்றபோதும் பெருந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும்  மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு வன்முறைசார்ந்தும் வன்முறைசாராததுமான ஒடுக்குமுறைகளால் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சித்தரிக்கின்றனர்.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிதுருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசமும் இதற்கு விதிவிலக்கற்று "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" தாம்!இந்தத் தேசம் நிச்சியமாக உடைந்து சிதறக் காத்திருக்கிறது.

இத்தகைய நிலை தோன்றும்போது ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது. இதுதாம் ஈழத்திலும் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.தற்போதைய நிலையில் இராசீவ் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களது தூக்குத்தண்டனை இரத்து -விடுதலையென்ற அரசியலுள் ,கட்சி அரசியல் செய்யும் சதி நிரம்பிய அரசியலானது தமிழ்நாட்டுப் பார்ப்பனச் சாதிய நலன்களோடு பின்னப்பட்ட அதிகாரத்துக்கான வியூகமாக மாற்றப்படுகிறது.

 இது ,மகாபாரதச் சகுனியினது பாத்திரத்தை செயலலிதாவின் அரசியல் பாத்திரத்தில் இனங்காணத்தக்கதாகவே இருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் இராச தந்திரத்தைச் சோவின் தொட்டிலில் கற்றுக்கொண்ட தமிழ்நாட்டு முதல்வரோ தனது கெடுதியான அரசியலை 23 ஆண்டுகள் சிறையில் வாழும் மனிதர்களது உளவியலோடு விளையாடுவது ( தூக்குத்தண்டனை இரத்துவென உச்ச நீதிமன்றம் அறிவித்தவுடனேயே அவர்களைத் தமிழ்நாடு விடுதலை செய்யுமெனப் "போட்டுக்கொடுத்து" க் காங்கிரசுக் கயவர்களை எழுச்சிகொள்ள வைத்ததும்; அதன் விளைவால் அவர்களது விடுதலையைத் தட்டிக்கழிக்க வைக்கும் முயற்சி) மனித நாகரீகமற்றது.

இந்த மனித நாகரீகத்தை ஒரு போதும் பார்ப்பனர்களிடம் காணமுடியாது.

     ஏனெனில் ,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.இவர்களிடமிருந்து எந்த ஜனநாயக விழுமியத்தையும் நாம் எதிர்பார்ப்பது மடமையானது.

 ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2014