Showing posts with label மறுபக்கம். Show all posts
Showing posts with label மறுபக்கம். Show all posts

Friday, February 21, 2014

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.

23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக  முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.இது பார்ப்பனச் சோவினது இராச தந்திரமாகும். இது குறித்துச் சில விடையங்களை நோக்குவோம்.அப்போதுதாம் இவர்களது இரட்டை முகம் புரியத்தக்கதாக மாறும்.

    "ராஜீவ் கொலையாளிகள் விடுதலை’’ என்றலறும் ஊடகங்களும்  "தேசியவாதிகளும்" அவர்கள் பின்னாலுள்ள இந்திய ஆளும் வர்க்க நலன்களும் புரிந்துக்கொள்ளத்தக்கவுண்மைகளை மறைக்கின்றன!இராஜீவ் படுகொலை என்பது திட்டமிடப்பட்ட இந்திய ரோவின் [Research and Analysis Wing  ]சதியாகும்.இது வொரு "புலியைப் பயன்படுத்தும் " தந்திரமாக RAW வால் நிகழ்த்தப்பட்டது.அதாவது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு காந்திக் குடும்ப அரசியல் ஒவ்வாது.அந்தப் பிரிவுக்குக் கணிசமான அளவுக்கு இந்திய ரோவுக்குள் ஆதரவுண்டு.அஃதுதாம் இப்போது தேர்தலில் வெற்றி சூடுமெனக் கருதப்படும் மோடிக்குப் பின்னால் நிற்கும் ஆளும் வர்க்கம்.ராசீவ் கொலையின்வழி இந்திய ஆளும் வர்க்கம் ஒரே கல்லிலிருந்து 3 மாங்காய்களைப் பறித்தது!

    1: தமிழகத்திலிருந்து ராசீவ் படுகொலை செய்யப்பட்டதன்வழி தமிழ்நாடு ஈழத்துக்காகக் கெம்பி எழுவதைத் தடுத்தது.

    2.புலிகளையும் தமிழகத்து மக்களையும் உணர்வுரீதியாகப் பிளந்து அப்புறப்படுத்தியது.

    3:இந்திய ஆளும் வர்க்கம் தன்னால் படுகொலை செய்யப்பட்ட மாகத்மா காந்தி;சய்சேய்காந்தி;இந்திரா காந்தி போன்றவர்களது வரலாற்றுப்பழியிலிருந்து விடுபட்டு ராசீவ் காந்தியின் கொலைக்குள் முழு இந்தியர்களையும் திணித்தது.

     இதைத் திட்டமிட்டு மறைக்கும் ஆளும்வர்க்கத்தின் வினையான தொகையில்:

 "ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை".எனப் பார்பன ஊடகங்கள்,

 "இவையெல்லாம் நடந்தது, உங்கள் பார்வையிற் பிழையுள்ளது" -பாதிக்கப்பட்ட நமது குரல்.

 1): குஜராத்தில் 3000  இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை  நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

 2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

 3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்,செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும்  ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை ,எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்!



அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான "இந்தியர்களும்,தமிழர்களும்"  நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவார்கள்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா??இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.

 எனவே இன்னும் மேலே செல்வோம்.இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில்இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத (பாரதீய ஜனதா மற்றும் ஆர்.ஏஸ்.எஸ் கும்பலை விழிகள் முன் கொணர்க) அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது அன்றைய மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக் கேற்வாறு  மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காத்துக்கொண்டது-கொள்கிறது!

இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உள தேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது.

 இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்-பார்ப்பான் -திராவிடன் ", தமிழன் போக்குகள்.என்றபோதும் பெருந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும்  மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு வன்முறைசார்ந்தும் வன்முறைசாராததுமான ஒடுக்குமுறைகளால் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சித்தரிக்கின்றனர்.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிதுருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசமும் இதற்கு விதிவிலக்கற்று "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" தாம்!இந்தத் தேசம் நிச்சியமாக உடைந்து சிதறக் காத்திருக்கிறது.

இத்தகைய நிலை தோன்றும்போது ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது. இதுதாம் ஈழத்திலும் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.தற்போதைய நிலையில் இராசீவ் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களது தூக்குத்தண்டனை இரத்து -விடுதலையென்ற அரசியலுள் ,கட்சி அரசியல் செய்யும் சதி நிரம்பிய அரசியலானது தமிழ்நாட்டுப் பார்ப்பனச் சாதிய நலன்களோடு பின்னப்பட்ட அதிகாரத்துக்கான வியூகமாக மாற்றப்படுகிறது.

 இது ,மகாபாரதச் சகுனியினது பாத்திரத்தை செயலலிதாவின் அரசியல் பாத்திரத்தில் இனங்காணத்தக்கதாகவே இருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் இராச தந்திரத்தைச் சோவின் தொட்டிலில் கற்றுக்கொண்ட தமிழ்நாட்டு முதல்வரோ தனது கெடுதியான அரசியலை 23 ஆண்டுகள் சிறையில் வாழும் மனிதர்களது உளவியலோடு விளையாடுவது ( தூக்குத்தண்டனை இரத்துவென உச்ச நீதிமன்றம் அறிவித்தவுடனேயே அவர்களைத் தமிழ்நாடு விடுதலை செய்யுமெனப் "போட்டுக்கொடுத்து" க் காங்கிரசுக் கயவர்களை எழுச்சிகொள்ள வைத்ததும்; அதன் விளைவால் அவர்களது விடுதலையைத் தட்டிக்கழிக்க வைக்கும் முயற்சி) மனித நாகரீகமற்றது.

இந்த மனித நாகரீகத்தை ஒரு போதும் பார்ப்பனர்களிடம் காணமுடியாது.

     ஏனெனில் ,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.இவர்களிடமிருந்து எந்த ஜனநாயக விழுமியத்தையும் நாம் எதிர்பார்ப்பது மடமையானது.

 ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2014

Sunday, May 11, 2008

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா...

இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல!


//தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல
நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான
சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில்
பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது
தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. //


இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா என்பதைக் கூட ஐயத்திற்கும் விவாதத்திற்கும் உரிய விடயமாக்குவதில் தமிழக அரசியல்வாதிகள் சிலரும் அவர்கட்கு முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்களும் சிறிது வெற்றி பெற்றிருந்தாலும் அண்மைய செய்திகள் உண்மை என்னவென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும் இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல.

உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும் குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள் கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும் விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை. அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப் பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன? இன்றுவரை நாடற்றவர்களாகத் தமது மண்ணிலும் அண்டை நாடுகளிலும் அதற்கப்பாலும் அகதிகளாக வாழுகிறார்கள். தமது சொந்த மண்ணில் மிகக் கொடுமையாக அடக்கப்படுகிறார்கள்.


//அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம்
என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால்
மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி,
தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக
மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில்,
குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத்
தெரிகிறது.
அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம்
சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும்
மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும். //



உலகெங்கும் தமிழர் உள்ளனர் அவர்கட்கென்று ஒரு நாடு இல்லை என்றும் சனத்தொகையில் தமிழருடன் ஒப்பிடத்தக்க அராபியருக்கு இருபதுக்கும் மேலான நாடுகள் உண்டு என்னும் வாய்ப்பாடு மாதிரிச் சிலர் ஒப்பித்து எழுதி வருகின்றனர். அத்தனை அரபு நாடுகள் இருந்தும் உலக அரபு மக்களின் நிலை என்ன? இன்னமும் இஸ்ரேலால் எந்தவிதமான தயக்கமுமின்றிப் பலஸ்தீன மண்ணைத் தொடர்ந்து அபகரிக்கவும் பலஸ்தீன அராபியரை இம்சிக்கவும் முடிகிறது. லெபனானின் எல்லைக்குக் குறுக்காகத் தாக்குதல் தொடுப்பதுடன் அதன் தலைநகர் மீதுங் குண்டெறிய முடிகிறது. சிரியாவிடமிருந்து நாற்பது ஆண்டுகள் முன்பு பறித்த பகுதியிலிருந்து வெளியேற மறுக்கிறதுடன் சிரியாவிற்குள் தாக்குதல்களை நடத்த முடிகிறது . இஸ்ரேல் தனது சொந்த வலிமை காரணமாக இவ்வளவு திமிருடன் நடந்துகொள்ள முடிகிறது என்று யாருஞ் சொல்ல இயலுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கரமாகவே இஸ்ரேல் செயற்படுகிறது. இஸ்ரேலின் வலிமை அமெரிக்காவின் வலிமையே ஒழிய வேறல்ல. இன்று மத்திய கிழக்கில் அமெரிக்கா- இஸ்ரேல் - துருக்கி என்கிற கூட்டணி ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்கா மீதான அச்சங்காரணமாக அல்லது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நிலைக்க முடியாது என்பதனால் மத்திய கிழக்கில் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக் கேட்க இயலாதவையாக அரபு அரசுகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் எந்த அமெரிக்கா உலகில் சனநாயகத்தை நிலைநிறுத்தவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் போர் தொடுத்து வருகிறதோ, அதே அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தமது நாடுகளில் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளை நடத்துகின்றன. அமெரிக்கா ஒழித்துக்கட்டப் போவதாகச் சபதம் செய்துள்ளதே, அந்த அல்-க்ஹைதா அதை உருவாக்கியதும் சோவியத் யூனியனிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அனுப்பி வைத்ததும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்த சவூதி அரேபியாதான்.


//ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான
புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது
என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை
நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும்
பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா
பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து
பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது
ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக்
கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக்
கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு
நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?
//

அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் நன்மைகளை அரபு மக்களில் ஒரு சிறிய பகுதியினரே அனுபவிக்கின்றனர். ஊழல் மிக்க, நடத்தை கெட்ட ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பேரைச் சொல்லி அரபு மக்களை துய்த்தும் அடக்கியும் ஆண்டு வருகிறார்கள். அரபு மக்களின் நலனுக்கும் அராபியருக்கான நாடுகள் எத்தனை உள்ளன என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. சில நாடுகளில் அரபு மக்களின் நலனுக்காக இயங்கி வந்த இடதுசாரிகளை 1940களில் ஒழித்துக் கட்டிய அரபு தேசியவாதக் கட்சிகள் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளாயின. எனினும், அவற்றில் ஓரளவேனும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தது. இப்போது அதுவும் ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் பூரண சுதந்திரமான அரபு நாடு என்று சொல்லக்கூடிய நிலையில் ஒரு அரபு நாடும் இல்லை.


1950 களில் முடியாட்சிகளை வீழ்த்தத் தொடங்கி 1960 களில் அந்நிய ஆட்சியாளரை விரட்டிய விடுதலை இயக்கத்தை அரபு மக்கள் மீளக் கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கான போராட்ட மரபு பலஸ்தீனத்தில் உயிருடன் உள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.


அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும் பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக் கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?

இங்கெல்லாம் தேசிய இனப்பிரச்சினைகள் அந்நிய வல்லரசுகளது உலக மேலாதிக்க, பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்கு வசதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான், உலக மக்களின் நட்பையும், நீதிக்கான போராட்டங்கட்கான பொதுவான ஆதரவையும் ஆட்சியாளர்களின் இரகசிய நோக்கங்களையும் வேறுபடுத்திக் காணத் தவறுகிற போது மேலாதிக்க நோக்கங்கட்கு நாம் உதவுகிறவர்களாகிறோம்.


தமது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு நாம் வேண்டிக் கொள்கிற ஒவ்வொரு அந்நிய நாடும் எவ்வாறு தமது பிரச்சினை தொடர்பாக நடந்து கொண்டுள்ளது என்று கவனிப்போமா? சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? உலக அரங்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா குறுக்கிட்டுள்ள அளவுக்கு வேறெந்த நாடாவது குறுக்கிட்டுள்ளதா? அக்குறுக்கீடுகளால் நன்மை கண்டோர் யார்? அமெரிக்க மக்களும் அமெரிக்கக் குறுக்கீடுகளால் நன்மை அடையவில்லை என்பதை நாம் மறக்கலாகாது. அமெரிக்காவின் போர்களால் ஏற்படுகிற எண்ணெய் விலை ஏற்றமும் அமெரிக்காவின் பெரு முதலாளிய நிறுவனங்கட்கே நன்மையாகியது. அங்கே பஞ்சம் ஏற்பட்டாலும் அவர்கள் பணங் குவித்துக் கொண்ட இருப்பார்கள். அதுவே உலகப் போர்க் காலங்களிலும் அமெரிக்கப் பொருளாதார நெருக்கடிகளின் போதும் நடந்தது.


இந்தியாவை அஞ்சி அண்டை நாடுகளின் அலுவல்களில் குறுக்கிட்ட நாடும் கிடையாது. ஆக்கிரமிப்பிலும் போரிலும் இறங்கிய நாடும் கிடையாது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிய இந்தியா, சோவியத் யூனியன் பலவீனப்படத் தொடங்கிய நிலையிலே அமெரிக்காவுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தொடங்கிவிட்டது. சோவியத் - இந்திய ஒத்துழைப்பில் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் பொது எதிரியாகச் சீனா இருந்தது. அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம் இரு நாடுகட்கும் பாதகமானதாய் இருந்தது. சோவியத் விஸ்தரிப்பு நோக்கங்கள் செயற்பட்ட பிராந்தியங்களும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலக்குகளும் வெவ்வேறாகவே இருந்தன.



//உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு
குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ
அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள்
பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும்
குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள்
கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும்
போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும்
விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு
சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை.
அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப்
பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப்
பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த
மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி
அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன?
//

அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம் என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால் மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி, தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில், குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத் தெரிகிறது.

அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம் சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும்.



>>இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல. <<

தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில் பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது.



தினக்குரலில் மறுபக்கஞ் சொல்வது:
-கோகர்ணன்

Sunday, January 20, 2008

அரசியல் தலைமைகள்...

மேலாதிக்கத்திற்கும்
ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற
எந்த ஒரு விடுதலை இயக்கமும்
குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்!



>>>அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும்
முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய
விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு
வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற
கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது
உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும்
இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது
நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும். <<<


இந்தியா சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் ஜனவரி 10 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்தியா மட்டுமே தீர்க்க இயலும் என்று சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் அரசியல்வாதிகட்கும் இது ஒன்றும் புதிதல்ல. எல்லாருமே பலவிதமான முறைகளில் இந்தியா பலவாறான தீர்வுகளை இலங்கை மீது திணிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அதேவேளை அவர்கள் டில்லி மீது எந்த விதமான நெருக்குவாரத்தைச் செலுத்தலாம் என்றும் அதன் வரையறைகள் பற்றியும் அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆனாலும் அந்த நாடகம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லுகிறவர் இன்று தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சர். அது அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வாக்கெடுப்பு நடத்துகிற போது கையை உயர்த்தத் தவறாத அமைச்சர். அவர் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொன்னதற்காக இந்த நாட்டு அரசாங்கத் தலைமை அவரை மெச்சுமா? இல்லை கண்டிக்குமா? இல்லை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றுமா? அல்லாமல் போனால் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று அவரும் இந்தியா உதவவேண்டும் என்று சனாதிபதியும் வேண்டிக் கொள்வது ஒரே நோக்கத்துடனா? நம் அமைச்சர் சொல்லுக்கு அங்குஞ்சரி இங்குஞ்சரி பெறுமதி குறைவு.




>>>கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள்
எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும்
அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன்
அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான்
நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத்
தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும். <<<




இன்றைய மலையகத் தமிழ்த் தலைவர்களால் மலையகத் தமிழரது, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளரது தேவைகள் பற்றி என்ன செய்ய முடிகிறது? தலைவர்களது துரோகங்களால் கசப்படைந்து தொழிற்சங்கங்களின் தலைமைகளை மீறிப் போராடிய தொழிலாளர்களது போராட்டத்தைக் கூடக் காட்டிக் கொடுத்த பெருமை அவர்கட்குரியது. மலையகத் தமிழ் சிறுவர்களது கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. பாடசாலை நிருவாகங்களில் இவர்கள் குறுக்கிட்டுத் தங்களது அதிகார உரிமையைக் காட்டிக் கொள்கிறதன் மூலம் பொறுப்புள்ள ஆசிரியர்கள் மனமுடைந்து போகிறார்கள். தட்டிக் கேட்கிறவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சாதி, பிரதேசம் போன்ற பலவிடயங்களும் பாடசாலைகள் முதல் வேலைவாய்ப்புகள் வரை பலவற்றிலும் நுழைக்கப்படுகின்றன. மலையகத் தமிழரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் போராடத் தலைமை தாங்கவும் வேண்டிய தலைவர்கள் பதவிக்கட்காகவும் சலுகைகட்காகவும் ஒடுக்குமுறை அரசாங்கங்களிடம் சரணடைகிறார்கள். மேல் கொத்மலைத் திட்ட கட்டிக் கொடுப்புக்குக் கூடாகாத மலையகத் தலைமைகளிடம் எதை எதிர்பார்ப்பது என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே தான் மலையகத் தலைவர்களுக்கு வடக்கு-கிழக்கு பற்றிப் பேசுவது வசதியாகவுள்ளது. அது தமிழகத்தின் உணர்ச்சி அரசியலுக்கு வசதியானது. அங்கு உரிய இடங்களில் பல்வேறு லாபகரமான தொடர்புகளை ஏற்படுத்த வசதியானது.




என்றாலும் எல்லாருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும். தமிழக அரசில் யார் ஆட்சியிலிருந்தாலும் டில்லியை மீறி எதுவுமே தமிழக அரசு செய்யாது எனறும் தெரியும். நாடகமே உலகம் என்பார்கள். நாடகமென்றால் தமிழகத்தில் நடக்கிற உணர்ச்சி அரசியலல்லவா நாடகம். தமிழ் சினிமாவின் முன்னோடியான நாடகமேடைப் பாரம்பரியம் இன்று தமிழகத்தின் அரசியலை ஊடுருவி நிற்கிறது. தமிழ்ச் சினிமா தமிழகத்தின் சீரழிவு, தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவின் அடையாளம் என்றால் தமிழகச் சட்டமன்ற அரசியலின் சீரழிவு அதன் உச்சக்கட்டம் எனலாம். தமிழ்ச் சினிமாவை உண்மையான வாழ்க்கை என்று நினைக்கக் கூடியவர்கள் உள்ளனர். அது ஒரு காலத்தில் போதையூட்டும் இன்பக்கனவாக இருந்தது. இப்போது அது பயங்கர கனவாகவுமுள்ளது. போக்கிரிகள் தான் இன்றைய கதாநாயகர்களாகக் காட்டப்படுகிறார்கள். சண்டித்தனமே இன்று தலைமைத்துவப் பண்பாகக் காட்டப்படுகிறது. அந்தளவுக்கு மட்டும் அது தமிழகத்தின் அரசியலை யதார்த்தமாக சித்திரிக்கின்றது.



இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சில்லறைப் பாத்திரங்கள் மாதிரி ஈழத்து அரசியல்வாதிகள் போய்த் தலையை காட்டிவிட்டு வரலாம். அவர்களுடைய பங்கேற்பை அரசியல் வசதிக்காக அங்குள்ள அரசியல் தலைமைகள் பயன்படுத்துமேயொழிய அதனால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. 1983 வன்முறையை அடுத்துத் தமிழ்நாட்டின் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்பாராத ஒரு உணர்ச்சி அலை எழுந்தது. ஆனால், 1987 அளவில் தமிழக அரசியல்வாதிகள் அதை எப்படிக் கையாண்டு தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த இயலும் என்பதில் போதிய பயிற்சி பெற்றுவிட்டனர். அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களிற் கணிசமான பகுதியினரை இந்திய ஆட்சியாளர்கள் தங்களது முகவர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போரட்டத்திற்கு மட்டுமல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகட்கும் செய்துள்ள துரோகத்தையும் குழி பறிப்பையும் நமது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் நன்கறிவார்கள். ஆனாலும், இன்று வரை ஆக மிஞ்சி அவர்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி வருந்துகின்றோம், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதுதான். இந்திய அதிகார வர்க்கமும் அதன் அரச நிறுவனமும் எந்தத் திசையில் என்ன இலக்கை மனதிற்கொண்டு செயற்படுகின்றன என்று அறிய முடியாதளவுக்கு இவர்கள் சின்னப்பிள்ளைகளல்ல.


>>>சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற
அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக்
கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து
சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச்
சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான
போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எந்த
வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம்.
வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள்
சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப்
போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன்
மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும்
ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும்
குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம். <<<


ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் அமெரிக்காவுடனான நெருக்கம். ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக்க உதவியது என்பது இன்றைய இந்திய ஆட்சியாளர்களது நினைவின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கலாம். எனினும் இன்னமும் இந்தியாவின் ஆயுதத் தளபாடங்களில் 70 சதவீதம் ரஷ்யாவில் உற்பத்தியானவையயாகவே உள்ளதால் ஏதோ வகையான உறவு தொடரும். எனினும் இந்தியாவின் அமெரிக்கா நோக்கிய நகர்வு, சோவியத் யூனியனின் உடைவையடுத்துத் துரிதமடைந்தது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஏற்படுத்திவருகிற நெருக்கமான உறவை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கிற இந்தியாவின் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளால் தடுக்க இயலாது. தமிழ்த் தேசியவாதமும் தெலுங்கு தேசியவாதமும் பேசுகிற பிராந்தியக் கட்சிகளும் இந்தியாவின் அயற்கொள்கை பற்றியோ உலகமயமாதலுக்கு இந்தியாவை இரையாக்குவது பற்றியோ கவலைகாட்டவில்லை. இந்தியாவின் ஆளும் அதிகாரவர்க்கம் இந்தியாவை அமெரிக்க உலக ஆதிக்க முயற்சிக்கு ஒரு அடியாளாக மாற்றுவதற்கு முழுமையாக உடன்பட்டு வருகிறது. அதற்குப் பிரதியாக இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா தடையாக இராது. இதனால் நட்டப்படப்போவோர் இந்தியாவின் உழைக்கும் மக்கள்தான்.



சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச் சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.


எந்த வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம். வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள் சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும் குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்.



கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள் எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன் அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான் நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத் தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும்.


அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும்.



-மறுபக்கம்

தினக்குரலிலிருந்து மறுபக்கம் மீள் பதிவாகிறது இங்கே:நன்றி!

Sunday, December 30, 2007

செய்திகள் சில ஏன் அடக்கி வாசிக்கப்படுகின்றன?

பாராளுமன்றமே ஒரு மோசடியாக இருக்கிறது.


டகங்கட்குரிய பொறுப்பான நடத்தை நாகரீகமான நடத்தை என்கிற விடயங்கள் உள்ளன. பொறுப்பு என்பது முதலில் சமூகப் பொறுப்பு. சொல்லுகிற விடயங்கள் சரியா தவறா ஐயத்துக்குரியனவா என்பன பற்றி உறுதிப்படுத்தி அதற்கமையத் தகவல்களை வழங்குவது முக்கியமானது. எவர் மீதுங் குற்றச்சாட்டுக்களை வைக்கு முன்பு அவற்றுக்கு மறுமொழி சொல்ல அவருக்கு ஒரு வாய்ப்பளித்த பின்பே குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைப்பது நியாயமானது. தகவல்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிற மொழிநடை, பேசுகிற தொனி என்பன நாகரிகமான நடத்தைக்குட்பட்டவை. குறிப்பாக நேர்காணல்களின் போதும் கேள்விகளைக் கேட்கும் போதும் மற்றவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது நாகரிகமானது.


இப்போதெல்லாம் தொலைக்காட்சியிலுஞ் சரி வானொலியிலுஞ் சரி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுகிறவர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறவர்கள் பேசுகிற தோரணை வீட்டில் தாய் தகப்பன் இவர்கட்கு நல்ல பழக்கங்களைக் கற்பிக்கவில்லையோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது. அறியாமைக்கே உரிய திமிர்த்தனத்துடன் தான் இன்று இளம் ஒலி பரப்பாளர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிற இளையவர்களும் நடந்து கொள்கிறார்கள். வயது எதற்குமுரிய தகுதியல்ல என்று நினைவூட்டுகிற விதமாகச் சில வயதில் மூத்த பத்திரிகை எழுத்தாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் நடந்து கொள்ளுகிறார்கள்.


இந்த விதமான சில்லரைத் தனங்கள் பெருகுவதற்கு ஊடக நிறுவனங்களும் அவற்றின் எசமானார்களும் பொறுப்பேற்றாக வேண்டும். இன்று ஊடகவியலாளர்களை வளர்த்தெடுப்பதில் ஊடக நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை. வேகமாக முன்னேறுகிறதாக எண்ணிக் கொண்டு தோற்றப்பாடான விடயங்களில் மட்டுமே அக்கறை காட்டுகிற பல இளைஞர்கள் எதையுமே கற்க முயலுவதில்லை. செய்தி என்பதே ஒரு பொழுது போக்கு - விளம்பர நிகழ்ச்சியாகி விட்டபின்பு யாருக்கு எதைப்பற்றி என்ன அக்கறை!


எனினும், இந்தவிதமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவு கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற ஒரு போக்கையும் வளர்த்துள்ளது. இது அரசாங்க ஊடகங்களில் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது என்றாலும் தனியார் துறை ஊடகங்கள் பல அரசாங்க ஊடகங்கட்கு எவ்விதத்திலும் சளைக்காத விதமாகவே நடந்து வந்துள்ளன.


சூரியன் எப்.எம். முடக்கப்படுவதற்குச் சில காலம் முன்பு வரை அதன் உள்ளூர் முதலாளியை ஒரு பெரிய அரசியல் பிரமுகராக்குகிற விதமாகச் செய்தியில் அவரைப் பற்றிய விளம்பரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மற்றப்படி தரமான முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்த அந்த வானொலிக்கு இப்படி ஒரு களங்கம் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்ததில்லை என்றே தோன்றுகிறது.
ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் ஒரு அரசியற் சார்பு இருக்கிறது. அதை விட முக்கியமாக வணிக நோக்கும் இருக்கிறது. எனவே சில விதமான பக்கச் சார்புகளும் சமரசங்களும் நாம் எதிர்பார்க்கக் கூடியவையே. ஆனாலும் இவற்றை இரகசியமாக வைத்துக் கொண்டு, நடுநிலை வேடம் போடுவது கொஞ்சம் அருவருப்பூட்டுவது.


அண்மையில் மிலிந்த மொறகொடவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுப் பற்றிய பாராளுமன்ற விசாரணையிற் குறுக்கிடுகிற விதமாகத் `தெரிவிப்பது நாங்கள் - தீர்மானிப்பது நீங்கள்' ஊடக நிறுவனம் நடந்து கொண்டது பற்றி எழுதியிருந்தேன். காரியம் ஆகிவிட்டதாலோ என்னவோ அந்தக் கேவலமான குறுக்கீடு நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அந்த விவாதம் வருகிற வரை அதற்கு ஓய்வு உண்டு.

அதனிலுங் கேவலமான ஒரு காரியம் தமிழர் தேசிய முன்னணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி வரவு - செலவுத் திட்ட வாக்கொடுப்புக்கு முன்பும் பின்பும் நடந்தது.


தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மூன்று உறுப்பினரதும் உறவினர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்குபற்றினால் கடத்தப்பட்ட உறவினர் கொல்லப்படுவர் என்ற மிரட்டலின் பின்னணியில் வாக்கெடுப்பில் பங்குபற்ற வேண்டுமா, கூடாதா என்று தெரிந்தெடுக்கப்பட்ட சிலரிடங் கேள்வி கேட்டனர் . அக்கேள்விக்கான விடைகள் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் முன்பு வரை தொலைபரப்பப்பட்டன. போதாக்குறைக்கு வாக்கெடுப்பிற்குப் பின்பும் கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் தொலைபரப்பப்பட்டன.


இந்த விடயம் வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அவரது உறவினர்களது உயிரைக் காப்பாற்றுவது முக்கியமா , கடமையுணர்வுடன் பாராளுமன்றத்தில் வாக்களிப்பது முக்கியமா என்ற விதமாகச் சுருக்கப்பட்ட பின்பு கடமை தான் முக்கியம் என்கிற கருத்து விடையாக வலிந்து வரவழைக்கப்பட்டது. ஆனால், இந்த வரவு- செலவுத் திட்டத்தில் வாக்களிக்கிற தேவை தான் என்ன என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் விடைகள் வேறுவிதமாக வந்திருக்கலாம். வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் தமிழர்களைப் பொறுத்தவரை என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தால், தேர்தல் ஒன்று வந்து எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தால், மறுமொழியைக் கொஞ்சம் யோசித்துச் சொல்ல வாய்ப்பிருந்திருக்கும்.


தமிழ்ப் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதன் நோக்கம் வரவு- செலவுத் திட்டம் பற்றிய தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உணர்த்தவேயொழிய யூ.என்.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எனவே, சிலரை வாக்களிக்காது தடுத்ததால் அந்தக் காரியத்திற்கு எதுவிதமான கேடும் இல்லை.


பாராளுமன்றமே ஒரு மோசடியாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது இரட்டை மோசடி. அதில் உள்ள ஒரே நல்ல விடயம் தமிழ் மக்களின் பிரதான கட்சி எதுவும் 1968 க்குப் பிறகு இதுவரை அமைச்சர் பதவி பெறாதது மட்டுமே.

இது போக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொண்டே தமது உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்கிற பரிந்துரையை முன்வைத்த ஊடக நிறுவனம் இன்று நாட்டில் நடக்கிற எத்தனையோ அக்கிரமங்கட்கு யார் யார் பொறுப்பு என்று அறியாதா? அவை பற்றி ஏன் எதுவுமே பேசப்படுவதில்லை?

செய்திகள் சில ஏன் அடக்கி வாசிக்கப்படுகின்றன?

36 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியை அடுத்து, தாடிக்கார இளைஞர்களை பொலிஸார் பிடித்துச் சென்று விசாரித்தனர். அதனால் பல இளைஞர்கள் போல எனது நண்பர் ஒருவரும் தனது பிரியத்திற்குரிய தாடியைத் தியாகம் செய்தார்.

தனது தாடிக்குச் சேதமில்லாதவரான இன்னொரு நண்பர் அவரைப் பார்த்து நீ ஒரு கோழை என்று கேலி செய்தார். முதலாமவர் நிதானமாக என்னிடமும் ஒரு 5 ஸ்ரீ காரும். பொலிஸில் உயர் பதவியில் நண்பரும் இருந்தால் நானும் உன்போல் வீரம் பேசுவேன் என்றார். மற்றவரின் தாடிக்குள்ளாகவும் அவரது முகம் சிவந்தது.

`பரமசிவன் தலையிலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?' என்கிற மாதிரி நாம் மற்றவர்கள் மீது தீர்ப்பு வழங்க முதல் நம்மையே கேட்டுக் கொள்வது நல்லது.

இதே ஊடக நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை அரசியல் பிரமுகராக்குவதற்குப் படாத பாடுபட்ட வருவதை நாம் அறிவோம். முஸ்லிம்களையும், மலையக மக்களையும் முட்டாள்களாகக் கருதுகிற விதமாகச் சொல்லப்பட்ட கருத்துகளின் நோக்கத்தையும் அறிவோம்.
விளம்பரத்தாலே உயர்ந்தவர் நிலைமை நிரந்தரமல்ல என்பதை மட்டும் சொல்லிக் கொள்வது போதுமானது. எவ்வளவு பண வலிமையுள்ள நிறுவனமானாலும் அது எவ்வளவு கவனமாகப் போடுகிற வேடமாக இருந்தாலும் வேடங்கள் எல்லாம் என்றோ கலைந்துதானாக வேண்டும்.


-மறுபக்கம்
நன்றி:தினக்குரலுக்கு

Monday, October 08, 2007

அப்பட்டமான பொய்மை...

அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?


சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்தின் ெபாருளாதாரம் பெரும் நன்மை பெறும் என்ற வாதத்தை முன்வைத்து, அத்திட்டத்தைத் தொடருவதற்கு ஆதரவாகப் பலவேறு தி.மு.க. தோழமைக் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. அத்திட்டத்தால் ஒட்டுமொத்தமான பொருளாதார நன்மை உண்டா என்பது இன்னமும் ஐயத்துக்குரியது. ஆயினும், அதன் மூலம் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள், குறிப்பாக இலங்கை தொடர்பானவை, நிறைவேறும் வாய்ப்புக்கள் அதிகம். இவ்விடயத்தில் அகில இந்திய அரசியல் தளத்தில் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன.


எனினும், அதிகமாகப் பேசப்படாத சில உண்மைகள் முக்கியமானவை. இத்திட்டத்தால் நிச்சயமாகத் தி.மு.க.வினர் சிலரதும் தி.மு.க. தலைமையில் உள்ள குடும்பத்தினதும் செல்வம் பெருகும். இங்கே மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் எத்தனை பேர் சம்பாதிக்கப் போகிறார்கள். எந்த மலையகக் கட்சிகளது தலைமைகள் தங்கள் துரோகத்திற்காகப் பலவாறான சன்மானங்களைப் பெற்றுள்ளனர் என்று தெரியுமானால், தமிழகத்தில் எவ்வளவு காசு கைமாறும் என்று ஊகிப்பது கடினமானதல்ல. இது தங்கப் புதையல் என்றால் அது தங்கச் சுரங்கம் - அள்ளப் போகிறவர்கட்கு.


சிங்களத் தீவினுக்கோர் பாலமமைக்கிற யோசனை ஏழு ஆண்டுகள் முன்பு எழுந்து பிறகு ஏனோ தானாகவே கைவிடப்பட்டது. பாலம் அமைப்பதானாலும் பள்ளந் தோண்டுவதானாலும் அவற்றுக்கான இராணுவ மேலாதிக்க நோக்கம் ஒன்றே. அது பற்றி எவரும் பேசப்போவதில்லை. ஆனாலும், எதையெதையோ பற்றியெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. பொதுவாக அவற்றில் நேர்மையில்லை. அது இந்திய, தமிழக தேர்தல் அரசியலின் அடையாளம். இன்று இன்னொருமுறை ராமாயணமும் சேது சமுத்திரத்தால் அரசியலாகிவிட்டது.


ராமாயணம் வரலாறல்ல. அதற்கு வரலாறு கூறும் நோக்கம் இருந்ததுமில்லை யாரும் ரகுவம்சத்துக்கு வாரிசு உரிமை கோரியதுமில்லை. ராமாயணம் எல்லா இடத்தும் ஒரே விதமாகச் சொல்லப்பட்ட கதையுமல்ல. ராமாயணத்தின் மீது, அது எங்கு எப்போது கூறப்பட்டது என்பதைப் பொறுத்து, ஒரு அதிகார வர்க்க நலன் சார்ந்த பார்வை திணிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய சமூகத்தின் ஆதிக்கச் சிந்தனையும் அற விழுமியங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. முரண்பாடுகள் கூர்மைபெற்ற சூழல்களில் அது ஒரு தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பயன்பட்டுள்ளது. மகாபாரதத்தை விட அதிகமாகவே ஆணாதிக்கமும் சாதியமும் ராமாயணத்தில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன எனவுங் கூறலாம். தமிழுக்கு வந்த ராமாயணம் ஒரு பெண்ணை அயலவன் தொட்டாலே கற்பிற்குக் கேடு என்கிற கருத்தை வற்புறுத்துமளவுக்கு இராவணன் சீதையைத் தரையோடு பெயர்த்துக் கொண்டு சென்றதாக கூறுகிறது. ராமாயணம் ஒவ்வொன்றிலும் வருகிற பல விடயங்கள் பகுத்தறிவுக்கு முரணானவை மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் நோக்கினால் உண்மை சாராதவை. எனினும், இராமாயணம் தென்னாசியாவுக்கும் அப்பால் இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வரை மக்களின் கவனத்தைப் பல நூற்றாண்டுகளாக ஈர்த்த ஒரு காவியம். அது கூறுகிற விழுமியங்களுடன் ஏதோ வகையில் அவர்கள் உடன்பாடு காணுகின்றனர். அந்தளவில் அதை நாம் மதிக்க வேண்டும்.


ராமாயணத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வு இருந்திருக்கலாம். ஆனால், அது கூறும் இடங்கள் எல்லாம் இன்று நாங்கள் அடையாளப்படுத்துகிற இடங்களல்ல.



அவையெல்லாம் ராமாயணத்துடன் தொடர்புடையன என்றால் புற்பக விமானத்தையும் அதனுடன் கடல் தாண்டப் பறந்ததையும் மட்டுமன்றி ராவணனுக்குப் பத்துத் தலைகள் என்பதையும் நாம் நம்பலாம். இலங்கைக்கும் ராமாயணத்துக்கும் கட்டப்பட்ட முடிச்சு, காலத்தாற் பிற்பட்டது. இராமாயணம் இந்தியாவின் தென்புறம் வந்த பின்பே இந்தத் தீவு இராமாயணங் கூறுகிற லங்காவுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனாலும், தென்னாசியப் பண்பாட்டில் புராணப் புனைவுகட்கும் வரலாற்று உண்மைகட்குமிடையே தெளிவான வேறுபடுத்தல் கிடையாது. இது நிலவுடைமைச் சமுதாயச் சிந்தனைகள் சில நம் மீது இன்னமும் கொண்டுள்ள அழுங்குப்பிடி இது நெகிழக் காலமெடுக்கும். அதேவேளை, நவீன விஞ்ஞானத்தை ஆதாரங்காட்டி, மூட நம்பிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நம்மிடையே சிந்தனையில் நேர்மைக் குறைபாடுள்ளது. கடவுளின் பேரால், மரபின் பேரால் ஆன்மிகவாதிகள் எனப்படுகிற பலர் மனமறியப் பொய்யுரைக்கிறார்கள். நம்புகிறதாகப் பாசாங்கு செய்கிறவர்களும் அதற்கு உடந்தையாகிறார்கள். எதை நம்புவது சிலருக்கு வசதியானதோ அதை நம்புமாறு பலரும் வற்புறுத்தப்படுகிறோம். சில சமயம் அவ்வாறு நம்புவது நமக்கும் வசதியாகிறது.


இவ்வாறான பொய்களின் விளைவுகளாக எத்தனை வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன? எத்தனை இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன? எத்தனை போர்கள் நடந்துள்ளன?


எதுவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் நமது வரலாறு நூற்றாண்டுகளால் மட்டுமல்ல, பல ஆயிரமாண்டுகளாலும் பின் நகர்த்தப்படுகிறது. புனைவுகளை ஆதாரமாகக் கொண்டு புதிய புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. வெட்கமில்லாமல் எழுதப்படுகிற பொய்களை அதைவிட வெட்கக் கேடாக நமது ஏடுகள் பிரசுரிக்கின்றன.

ராமர் பாலம் ஒரு அற்புதமான கற்பனை. அணிற் பிள்ளை கூட ஒரு கல்லை எடுத்துப் போட்ட கதை சுவையான கற்பனை. ஆனால், அவை உண்மைகளல்ல. அவை பற்றி நாம் விவாதிப்பதே வெட்கக் கேடானது. அதைவிடப் பூமி தட்டையா, உருண்டையா என்று விவாதிக்கலாம். அல்லது பூமியைச் சூரியன் சுற்றுகிறதா, சூரியன் பூமியைச் சுற்றுகிறதா என்று விவாதிக்கலாம். அவையே பயனற்றுப் போன விவாதங்கள். ஆனால், ஒரு கால்வாயை வெட்டுவது தேவையா இல்லையா என்பதை விவாதிக்க நமக்கு வேறு நல்ல நியாயங்களே இல்லையா?


கருணாநிதிக்குப் பகுத்தறிவு திரும்பியிருப்பது பற்றிச் சிலர் மகிழ்ச்சியடையலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிற விதமான ஞானம் இது. தேர்தல் அரசியலுக்காகத் தி.மு.க. எப்போதோ கைகழுவிவிட்ட விடயத்தை ஏன் இப்போது பேச வேண்டும்? ராமாயணம் என நாமறிந்த எந்தக் கதையுமே அப்படியே நடந்ததல்ல என்பதை இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் மட்டுமன்றி இந்து அரசியலை முன்னெடுத்த பிரபல அரசியல் தலைவர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், ராமன் இருக்கவில்லை என்று எப்படி எவராலும் உறுதியாகக் கூற முடியும்? கம்பரதோ வால்மீகியினதோ துளசிதாசரதோ ராமன் இல்லாதிருக்கலாம். இன்று இருக்கிற ஒவ்வொரு ராமனும் ஒரு புனைவாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஏதோ ஒரு அடிப்படை இருந்தது. ஒவ்வொரு இராமனையும் ஏற்பவர்களது மனதைப் புண்படுத்தாமல் கருணாநிதியாற் பேசியிருக்க இயலும். ஆனாலும், அவரது பேராசை அவரை அவசரப்படுத்திவிட்டது.


ஆரிய - திராவிடப் பகை பற்றிப் பேசித் தமிழகத்தில் அரசியல் நடத்த இயலாமற் போனதற்கு எந்தப் பார்ப்பனச் சதியும் காரணமில்லை. திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட சீரழிவே அதற்குக் காரணம். இந்தியாவில், தலித்துக்கள், பழங்குடியினர், ஒடுக்குமுறைக்குட்பட்ட சிறிய தேசிய இனங்கள், நிலமற்ற விவசாயிகள் போன்றோருக்காகக் குரல்கொடுக்கிற விதமாகத் திராவிட இயக்கம் விரிவுபடுத்தப்படவில்லை. அது தமிழரிடையே சில சாதிப் பிரிவுகட்குரிய வசதி படைத்த பகுதியினரது நலன்களையே சார்ந்து இயங்கியது. எனவே, தான் சமூகத்தின் அடிநிலையிலிருந்த மக்களைப்பற்றி அதனாற் பேச முடியவில்லை. ஈ.வெ.ரா. பேசினார். ஆனால், அவரது பார்ப்பன எதிர்ப்பு அரசியல் காரணமாக, அவர் தமிழகத்தின் பிற சமூக ஒடுக்குமுறைகள் பற்றிக் காட்டியிருக்கக் கூடியளவு கவனத்தைக் காட்டத் தவறிவிட்டார். அவரது ராமாயண எதிர்ப்பு இயக்கமும் நீண்டகாலத்திற்குத் தொடரப்படவில்லை.

அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியலின் தேவை, பிள்ளையார் சிலை உடைப்புக் கூட அப்படித்தான். அவருடைய வாரிசுகளாக வளர்ந்து பிரிந்து போன `கண்ணீர்த் துளிகளின்' கதை வேறு. அவர்கள் பூரணமான அரசியல் வணிகர்கள். எனவே, தான் அவர்களது விவாதங்கள் மக்கள் நலன் சாராத விடயங்களிற் கவனங்காட்டுகின்றன. அவர்கள் எக்கேடாயினும் கெடட்டும்.

சேது சமுத்திரம் நமது சுற்றுச் சூழலுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி நமது அறிஞர்களால் எழுத முடியாதா? தங்களுக்கு விளங்காத வரலாற்றையும் புவியியலையும் விஞ்ஞானத்தையும் பற்றிச் சில பேர் பக்கம் பக்கமாக விவாதிக்க நமது ஏடுகளின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களுட் வாராவாரம் இடமொதுக்கப்பட்டுள்ள அளவு சேது சமுத்திரத்தின் அரசியல் பற்றி ஆராய ஏன் எல்லோரும் பின் நிற்கிறார்கள்?
மக்களுடைய அறியாமையையே ஆதாரமாகக் கொண்டுதான் மதவாத, தேசிய வாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குள் கேடான தேசியவாத, மதவாத அரசியலைக் கண்டிக்க நமக்கு இயலும். நமக்குச் சாதகமாக அமைகிறபோது நமக்கு அதைக் கண்டிக்க இயலாது. நாம் இவ்வாறான அவலத்தினின்று விடுபட வேண்டும்.

சரி பிழைகள் பற்றி நமக்கு நேர்மையான பார்வை வேண்டும். நமது நம்பிக்கைகளை நாம் மீளவும் மீளவும் கேள்விக்குட்படுத்துவதன் மூலமும் நேர்மையாகவும் பகுத்தறிவு சார்ந்தும் சிந்திப்பதன் மூலமுமே நாமும் நமது சமூகமும் உய்வும் உயர்வும் அடைய இயலும். நம்மைப் பிணித்துள்ள அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?


மறுபக்கம்

கோகர்ணன்

தினக்குரல், நன்றி.