Monday, April 18, 2016

தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்!


 
தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை ; 
கட்டமைப்பு ;பன்மைத்துவம் :கடைந்தெடுத்த முட்டாள்கள்தம் 
மூலமறியா மொக்கு வாதங்கள்! -சில முக்கியமான தரவுகள்.
 
 
 
“எதுவுமே அறியாத புலம் பெயர் தமிழர்கள் தம்மைப் பின் நவீனத்துவாதிகள் ;தலித்துவவாதிகள் என்பதில் தமிழகத்து “மொக்கு”ப் பேராசிரியர்களது மேற்குலக வாந்தியின் மொழியாக்கத்தை அப்படியே உறிஞ்சுகிறார்கள். நானறியப் புலம்பெயர் தமிழ் இளைஞர்களிற் பலர் எம்.ஜி. சுரேஷ்சுக்கு விசிறிகள்.தமிழகத்து முட்டாள்கள் பலர் இத்தகைய வாதங்களுக்குப் பின்னேயுள்ள மூலத்தைக் குறித்த அறிவற்ற சடங்கள்.இவர்கள் வாந்தியெடுக்கும் அரசியல் ;தத்துவார்த்த நுனிப்புல் மேச்சலுக்குள் புகுந்து விளையாடும் ஏகாதிபத்தியம் இந்தியாவில் பல அசீசு நந்திகளை (Ashis Nandy) தமக்கான கருத்தியிற் பீரங்கிகளாக்கிய பின் தமிழகத்த அறிசீவிகளை நினைத்தால் எள்ளி நகையாடவே முனைவேன்.”
 
 
 
நண்பர்களே,இந்தக் குறிப்பு எழுதத்தாம் வேண்டுமாவென ஒரு கேள்வி.இன்றிருக்கும் தமிழ் வாசகச் சூழலில் "இது அவசியமா?" என்ற கேள்வி.எனினும் ,இதைக் குறித்துத்தாம் ஆகவேண்டும்.புலம்பெயர் சூழலில் தமிழகத்து க் கற்றுக் குட்டிகள் மொழியாக்கும் மேற்சொன்ன மேற்கத்தைய எழுத்துக்களைத் தமிழில் வாசித்துவிட்டுத் தம்மைப் பெரும் பின் நவீனத்துவவாதிகளாகக் கருதும் அறிவூக்கமற்ற சடங்களுக்கு நடுவே அதன் சூத்திரம் குறித்துச் சொல்வது அவசியமே!
 
 
போல்சுவிக் "புரட்சிக்கு"ப்பின்பான மேற்குலக அரசியல் ,கலை -இலக்கியத் தத்துவார்த்தப் போக்கும் அதுசார்ந்த விஞ்ஞான விளையாட்டுக்களும் முதலாளித்துவ -ஏகாதிபத்தியவுலகுக்கொரு திடமான கருத்தியற் போரை ஊக்குவித்தது.அதன் சூத்திரதாரர்கள் அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கமாகும். கொம்யூனிசமென்பதைத் இப்படியும் சாத்தியமாக்கலாமென நிரூபித்த இருசிய ஓக்ரோபர் புரட்சியின் முன் திகைப்படைந்த ஏகாதிபத்தியமானது தனது வலுவுக்கெட்டியபடி இராண்டாமுலகப் போருக்குப் பின்பான காலத்தை இதற்காகவே முடக்கி விட்டது.
 
 
பனிபோரைத் [The Cold War ] தொடக்கி அதை வளர்ப்பதற்கான அறிவையும் ;வழிகாட்டலையும் கல்வித்துறைகக்குள் புகுத்தி அதையொரு கம்யூனிசத் தத்துவார்த்த எதிர்ப்புத் தளமாக விரிவுப்படுத்திய அமெரிக்கா,அதன் தலைமையிலான ஆளும் வர்க்கமானது 1947 ஆம் ஆண்டுமுதல் கண்டடைந்த பொருளியல் விஞ்ஞானத் துறைக்கு "Die Mont Pèlerin Society " என்ற அமைப்பாகும்[ https://de.wikipedia.org/wiki/Mont_… ].
 
 
இதற்காக திருவாளர் பிரிட்டிறீக் காயக் ( Friedrich von Hayek)தலைமை ஏற்க அந்தப் போக்குக்கு "தாராளவாதப் பொருளியல்( Wirtschaftsliberalismus ) எனத் தத்துவார்த்த அரசியற் கருத்தியற்றளமிடப்படுக்கிறது.திருவாளர் கார்ல் போப்பர் (Karl Popper) இதற்கான எதிர் மார்ச்சிய விமர்சனத்தை மிக நுணுக்கமான கணிதவியற்றரவுகளோடு முன்வைக்கும் தலைமையைப் பொறுப்பேற்கத் சுதந்திரச் சந்தைப் பொருளாதார நகர்வென(freier Marktwirtschaft )இரண்டாம் உலகமாகாயுத்தத்துக்குப் பின்பான ஏகாதிபத்திய உயரடுக்கு வர்க்கத்துக்கான பாதுகாப்பு அரண் தொழிலாள வர்க்கத்தைப் புதிய திசையில் வேட்டையாடுவதற்கானவொரு இலக்கைக் கண்டடைந்தது. 
 

பொறுப்பை யேர்மனிய அன்றைய நிதி மந்திரி Ludwig Wilhelm Erhard ஏற்ற கையுடன் அவர் அதற்கான (சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம்) மாற்றை சமூகச் சந்தைப் பொருளாதாரம்(Soziale Marktwirtschaft )என அழைத்து முழுமூச்சாகக் கம்யூனிச எதிர்பைப் பொருளாதரம் மற்றும் அரசியற்றளத்தில் கட்டியமைக்க, அவரால் அழைத்திணைக்கப்பட்டவர்கள் : Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Friedrich August von Hayek, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler.இத்தகைப் பெருந் தலைகளாகும்.இவர்கள் அனைவரும் அமெரிக்கச் சி.ஐ.ஏ.வால் தகவமைக்கப்பட்ட பொருளியல் விற்பனகர்கள்.
 
 
சரி.சோசலிசப் பொருளாதாரப் பொறி முறைக்கு எதிரான பொருளாதார அறிஞர்கள் அணியைத் தகவமைத்த சி.ஐ.ஏ இதைத் தொடர்ந்து நியாயப்படுத்தும் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போக்கையும் அதுசார்ந்த கலை -இலக்கிய நகர்வையும் ஒருவழிமுறைக்குட்பட்ட தெரிவுடன்(கம்யூனிசத்தைத் தொடர்ந்து பயங்கரமாகவும் ;அடக்குமுறை வடிவமாகவும் ;சனநாயகத்துக்குப் புறம்பான சர்வதிகாரமாகவும் சித்தரித்தல்)கட்டியமைக்க முனைந்தது.இதன் தொடரிற்றாம் பிரஞ்சிய மேட்டிமை வர்க்க அறிவுத்துறையை அண்மித்த பின் நவீனத்துவ உரையாடல்கள்(Die Postmoderne ) Jean-François Lyotards, Francis Fukuyamas, Susan Sontag,Michel Foucault, Jacques Derrida, Roland Barthes[ Dekonstruktivismus, Poststrukturalismus ,Diskursanalyse ] ,Luce Irigaray [Erasmus-Universität Rotterdam ],Jacques Lacans,Melanie Klein, Hélène Cixous, Gilles Deleuze மேற்காணும் முகாமுக்குள் சி.ஐ.ஏ.வால் நிகழ்த்தப்பட்டுக்கொன்டிருக்க இதற்கு நிகராகக் கலை -இலக்கியத்துறைக்கும் ;கல்விசார் பெரும் பல்கலைக்கழகங்கள் ;உயர் பாடசாலைகளுக்குள் அமெரிக்க வல்லாதிக்கம் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.
அங்கே, Frankfurter Schule முதற்பலியாகிறது.Max Horkheimer தனது நிலையிலிருந்து இராண்டாவது மகா யுத்தக் காலத்தில் இடம்பெயரக் கல்வித்துறை செனிவாவில் (Genf -Schweiz )நிறுவப்படுகிறது.கோர்க்கைமரோ கொலிம்பியாப் பல்கலைக்கழகத்துக்குள்( Columbia University ) தனது ஆய்வைத் திணித்தபோது சி.ஐ.ஏ அவரைமட்டுமல்ல ஆடர்னோவையும்( Adorno ) தமக்குள் மெல்ல உள்வாங்குகிறது.இவர்கள் மூலமாகத்தான் காபர் மாசு(Jürgen Habermas );ஓசுக்கார் நேக்ற் ( Oskar Negt )மகாயுத்தத்துக்குப்பின் சி.ஐ.ஏ. தலைமையில் கோர்கைமரது மரணத்தோடு பிராங்பேர்ட் பள்ளியைக் கைப்பற்றினர்.
இன்று, உலகம் முழுவதும் சி.ஐ.ஏ கல்வித்துறையைக் கைப்பற்றி கம்யூனிசத்துக்கெதிரான கருத்தியற்றனத்தைப் பல்வேறு தத்துவங்களுக்கூடாக நகர்த்துகிறது.அதுள், பின்நவீனத்துப் பாணி உரையாடல்கள் முன்னிலையுள் நிலைபெற்றன.50 களில் நடைபெற்ற மிகப் பெரும் பனிப்போர் (Kalter Krieg )ஆரம்பத்தில் ( 1947 bis 1989 ) எழுந்த அனைத்துத்துறைசார் அறிவும் அமெரிக்காவல் தகவமைக்கப்பட்ட சி.ஐ.ஏ.வால் மேர்பார்வைக்கும் , பொருளாதார ஒத்துழைப்புக்கும் உட்பட்டே எழுந்தன.
 
 
இவை கம்யூனிசத்தைக் கருவறுக்கும் கருத்தியலைக் கல்வித்துறைக்குள் கற்பனைக்கெட்டாத முறையுள் நகர்த்தினார்கள்.அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்துடன் ஓயவேயில்லை அது 1950 ஆம் ஆண்டு பண்பாட்டுச் சுதந்திரம்(Cultural Freedom) என்று கூறியபடி தனக்கான பல்தளத் தத்துவார்த்தக் கருத்தியலைக் கணிசமாகவுர்த்திபண்ணி மார்க்சியத்தை வேரோடு பிடுங்க உலகமெல்லாம் சுமார் 37 நாடுகளில் The Congress for Cultural Freedom (CCF) எனும் அமைப்புக்டாகக் கல்வியாளர்களைத் தகவமைத்தது.
 
 
இந்தியாவில் அதற்காக ஒரு பத்திகையை(Quest (Indian journal) ) ஆரம்பித்துக் கீழ்காணும் புரவலர்களை இந்திய வரலாற்றியலாளராகவும் ;புத்திசீவிகளாகவும் உருவாக்கியது. அவர்களுள் இவர்கள் : Nirad Chaudhuri, Dilip Chitre, Allen Ginsberg, Jyotirmoy Datta, Mujibur Rehman, Agha Shahid Ali, Jayanta Mahapatra Dom Moraes, Ashis Nandy, Gauri Deshpande, Adil Jussawalla, Mahapatra, A.K. Ramanujan, Saleem Peeradina, Kolatkar, Chitre, Keki Daruwalla, Anita Desai, Kiran Nagarkar and Abraham Eraly முக்கியமான சி.ஐ.ஏ.புத்திசீவிகள். 
 
 
அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் தற்போது நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின் ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மூன்றாது உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!
 
அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.ஜேர்மனியில் நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare ] விருத்திக்கு மற்றும் மரபணமாற்றப் பயிர்களுக்காக புதிய தேடல்கனளுக்காவும் இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!
 
 
இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின் குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.
கார்ல் போப்பர் (Karl R. Popper ) அவர்கள் தொடர்ந்து தன் வாழ்நாட் பூராகவும் மார்க்சியத்தை வெறும் கதையாடலாகப் பிழையான போதனையாக வர்ணித்துக் கொண்டிருந்தபோதுதாம் அவருக்கு London School of Economics and Political Science பல்கலைக் கழகத்துள் விரிவுரையாளராகும் தகுதியை அதி மேற்ராணியார் எலிசபெத்து அம்மையார் ஏற்படுத்திப்பின் Sir பட்டத்தையும் ஒட்டிவிட்டார்.
 
 
ஏகாதிபத்தியத்துக்குத் தன்னைப் பலியாக்கியவொரு கல்வியாளன் போப்பர்!ஆனால், அவருடைய தேசத்து Ludwig Wittgenstein( இவர்தாம் தருக்கவியலின் கொடுமுடி) மற்றும் Erwin Schrödinger( இவர் குவாண்டம் இயங்கியலின் தந்தை) போன்றோருடும் உறவு ரீதியாகப் பெரும் காழ்ப்புணர்வோடு இருந்தார்.Ludwig Wittgenstein னை ஒரு தடவை சந்தித்தபின் சாகும்வரை போப்பர் சந்திக்கவில்லை!இது, ஏனென்பதில் எனக்கு ஒரே குடைச்சல்!
 
 
இன்றும்,இதே ஏகாதிகத்தியம் அன்று பல கார்ல் போப்பர்களை உருவாக்கி வைத்து மார்க்சியத்தை வேரறுத்ததுபோன்றே தொடர்கிறது.
 
 
இது தற்போது, பற்பல இனத்துக்குள் உருவாகும் புத்தாசாலி மாணவர்களைப் பாடசாலைகளிலேயே பிடித்து அமுக்கிக் காயடிக்கிறது.அப்படிப் பிஞ்சிலேயே காயடிக்கப்படும் தமிழ்மாணவர்கள் ஐரோப்பாவில் ஏராளம்.எனக்குத் தெரிந்த அப்படியொரு தமிழ் மாணவனை அவனது 13 வயதினிலேயே அமெரிக்க வல்லாதிக்கம் அமுக்கிப் பிடித்து ,அவனது பெயரில் தனது இசுலாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை நூலாக வெளியிட்டு அவனை இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளது.எதிர்காலத்தில் பெரும் விஞ்ஞானியாக உருவாக வேண்டிய அவ் மாணவன் அமெரிக்க இராணுவத்துக்கு இரசயான ஆயுதங்கள் செய்யத்தக்கபடி இப்போதே அதை நோக்கிய (Biochemistry)ஆய்வுக்குள் தள்ளப்பட்டுள்ளான்.
 

-ப.வி.ஶ்ரீரங்கன்
18.04.2016
 
 
உசாத்துணை :
Wer die Zeche zahlt. Der CIA und die Kultur im Kalten Krieg.von Historian Frances Stonor Saunders

US-Militär finanziert deutsche Forscher
Pentagon finanziert deutsche Forschung :

Aufträge vom Pentagon: Die Naivität der deutschen Forscher

No comments: