Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, April 18, 2016

தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்!


 
தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை ; 
கட்டமைப்பு ;பன்மைத்துவம் :கடைந்தெடுத்த முட்டாள்கள்தம் 
மூலமறியா மொக்கு வாதங்கள்! -சில முக்கியமான தரவுகள்.
 
 
 
“எதுவுமே அறியாத புலம் பெயர் தமிழர்கள் தம்மைப் பின் நவீனத்துவாதிகள் ;தலித்துவவாதிகள் என்பதில் தமிழகத்து “மொக்கு”ப் பேராசிரியர்களது மேற்குலக வாந்தியின் மொழியாக்கத்தை அப்படியே உறிஞ்சுகிறார்கள். நானறியப் புலம்பெயர் தமிழ் இளைஞர்களிற் பலர் எம்.ஜி. சுரேஷ்சுக்கு விசிறிகள்.தமிழகத்து முட்டாள்கள் பலர் இத்தகைய வாதங்களுக்குப் பின்னேயுள்ள மூலத்தைக் குறித்த அறிவற்ற சடங்கள்.இவர்கள் வாந்தியெடுக்கும் அரசியல் ;தத்துவார்த்த நுனிப்புல் மேச்சலுக்குள் புகுந்து விளையாடும் ஏகாதிபத்தியம் இந்தியாவில் பல அசீசு நந்திகளை (Ashis Nandy) தமக்கான கருத்தியிற் பீரங்கிகளாக்கிய பின் தமிழகத்த அறிசீவிகளை நினைத்தால் எள்ளி நகையாடவே முனைவேன்.”
 
 
 
நண்பர்களே,இந்தக் குறிப்பு எழுதத்தாம் வேண்டுமாவென ஒரு கேள்வி.இன்றிருக்கும் தமிழ் வாசகச் சூழலில் "இது அவசியமா?" என்ற கேள்வி.எனினும் ,இதைக் குறித்துத்தாம் ஆகவேண்டும்.புலம்பெயர் சூழலில் தமிழகத்து க் கற்றுக் குட்டிகள் மொழியாக்கும் மேற்சொன்ன மேற்கத்தைய எழுத்துக்களைத் தமிழில் வாசித்துவிட்டுத் தம்மைப் பெரும் பின் நவீனத்துவவாதிகளாகக் கருதும் அறிவூக்கமற்ற சடங்களுக்கு நடுவே அதன் சூத்திரம் குறித்துச் சொல்வது அவசியமே!
 
 
போல்சுவிக் "புரட்சிக்கு"ப்பின்பான மேற்குலக அரசியல் ,கலை -இலக்கியத் தத்துவார்த்தப் போக்கும் அதுசார்ந்த விஞ்ஞான விளையாட்டுக்களும் முதலாளித்துவ -ஏகாதிபத்தியவுலகுக்கொரு திடமான கருத்தியற் போரை ஊக்குவித்தது.அதன் சூத்திரதாரர்கள் அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கமாகும். கொம்யூனிசமென்பதைத் இப்படியும் சாத்தியமாக்கலாமென நிரூபித்த இருசிய ஓக்ரோபர் புரட்சியின் முன் திகைப்படைந்த ஏகாதிபத்தியமானது தனது வலுவுக்கெட்டியபடி இராண்டாமுலகப் போருக்குப் பின்பான காலத்தை இதற்காகவே முடக்கி விட்டது.
 
 
பனிபோரைத் [The Cold War ] தொடக்கி அதை வளர்ப்பதற்கான அறிவையும் ;வழிகாட்டலையும் கல்வித்துறைகக்குள் புகுத்தி அதையொரு கம்யூனிசத் தத்துவார்த்த எதிர்ப்புத் தளமாக விரிவுப்படுத்திய அமெரிக்கா,அதன் தலைமையிலான ஆளும் வர்க்கமானது 1947 ஆம் ஆண்டுமுதல் கண்டடைந்த பொருளியல் விஞ்ஞானத் துறைக்கு "Die Mont Pèlerin Society " என்ற அமைப்பாகும்[ https://de.wikipedia.org/wiki/Mont_… ].
 
 
இதற்காக திருவாளர் பிரிட்டிறீக் காயக் ( Friedrich von Hayek)தலைமை ஏற்க அந்தப் போக்குக்கு "தாராளவாதப் பொருளியல்( Wirtschaftsliberalismus ) எனத் தத்துவார்த்த அரசியற் கருத்தியற்றளமிடப்படுக்கிறது.திருவாளர் கார்ல் போப்பர் (Karl Popper) இதற்கான எதிர் மார்ச்சிய விமர்சனத்தை மிக நுணுக்கமான கணிதவியற்றரவுகளோடு முன்வைக்கும் தலைமையைப் பொறுப்பேற்கத் சுதந்திரச் சந்தைப் பொருளாதார நகர்வென(freier Marktwirtschaft )இரண்டாம் உலகமாகாயுத்தத்துக்குப் பின்பான ஏகாதிபத்திய உயரடுக்கு வர்க்கத்துக்கான பாதுகாப்பு அரண் தொழிலாள வர்க்கத்தைப் புதிய திசையில் வேட்டையாடுவதற்கானவொரு இலக்கைக் கண்டடைந்தது. 
 

பொறுப்பை யேர்மனிய அன்றைய நிதி மந்திரி Ludwig Wilhelm Erhard ஏற்ற கையுடன் அவர் அதற்கான (சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம்) மாற்றை சமூகச் சந்தைப் பொருளாதாரம்(Soziale Marktwirtschaft )என அழைத்து முழுமூச்சாகக் கம்யூனிச எதிர்பைப் பொருளாதரம் மற்றும் அரசியற்றளத்தில் கட்டியமைக்க, அவரால் அழைத்திணைக்கப்பட்டவர்கள் : Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Friedrich August von Hayek, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler.இத்தகைப் பெருந் தலைகளாகும்.இவர்கள் அனைவரும் அமெரிக்கச் சி.ஐ.ஏ.வால் தகவமைக்கப்பட்ட பொருளியல் விற்பனகர்கள்.
 
 
சரி.சோசலிசப் பொருளாதாரப் பொறி முறைக்கு எதிரான பொருளாதார அறிஞர்கள் அணியைத் தகவமைத்த சி.ஐ.ஏ இதைத் தொடர்ந்து நியாயப்படுத்தும் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போக்கையும் அதுசார்ந்த கலை -இலக்கிய நகர்வையும் ஒருவழிமுறைக்குட்பட்ட தெரிவுடன்(கம்யூனிசத்தைத் தொடர்ந்து பயங்கரமாகவும் ;அடக்குமுறை வடிவமாகவும் ;சனநாயகத்துக்குப் புறம்பான சர்வதிகாரமாகவும் சித்தரித்தல்)கட்டியமைக்க முனைந்தது.இதன் தொடரிற்றாம் பிரஞ்சிய மேட்டிமை வர்க்க அறிவுத்துறையை அண்மித்த பின் நவீனத்துவ உரையாடல்கள்(Die Postmoderne ) Jean-François Lyotards, Francis Fukuyamas, Susan Sontag,Michel Foucault, Jacques Derrida, Roland Barthes[ Dekonstruktivismus, Poststrukturalismus ,Diskursanalyse ] ,Luce Irigaray [Erasmus-Universität Rotterdam ],Jacques Lacans,Melanie Klein, Hélène Cixous, Gilles Deleuze மேற்காணும் முகாமுக்குள் சி.ஐ.ஏ.வால் நிகழ்த்தப்பட்டுக்கொன்டிருக்க இதற்கு நிகராகக் கலை -இலக்கியத்துறைக்கும் ;கல்விசார் பெரும் பல்கலைக்கழகங்கள் ;உயர் பாடசாலைகளுக்குள் அமெரிக்க வல்லாதிக்கம் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.
அங்கே, Frankfurter Schule முதற்பலியாகிறது.Max Horkheimer தனது நிலையிலிருந்து இராண்டாவது மகா யுத்தக் காலத்தில் இடம்பெயரக் கல்வித்துறை செனிவாவில் (Genf -Schweiz )நிறுவப்படுகிறது.கோர்க்கைமரோ கொலிம்பியாப் பல்கலைக்கழகத்துக்குள்( Columbia University ) தனது ஆய்வைத் திணித்தபோது சி.ஐ.ஏ அவரைமட்டுமல்ல ஆடர்னோவையும்( Adorno ) தமக்குள் மெல்ல உள்வாங்குகிறது.இவர்கள் மூலமாகத்தான் காபர் மாசு(Jürgen Habermas );ஓசுக்கார் நேக்ற் ( Oskar Negt )மகாயுத்தத்துக்குப்பின் சி.ஐ.ஏ. தலைமையில் கோர்கைமரது மரணத்தோடு பிராங்பேர்ட் பள்ளியைக் கைப்பற்றினர்.
இன்று, உலகம் முழுவதும் சி.ஐ.ஏ கல்வித்துறையைக் கைப்பற்றி கம்யூனிசத்துக்கெதிரான கருத்தியற்றனத்தைப் பல்வேறு தத்துவங்களுக்கூடாக நகர்த்துகிறது.அதுள், பின்நவீனத்துப் பாணி உரையாடல்கள் முன்னிலையுள் நிலைபெற்றன.50 களில் நடைபெற்ற மிகப் பெரும் பனிப்போர் (Kalter Krieg )ஆரம்பத்தில் ( 1947 bis 1989 ) எழுந்த அனைத்துத்துறைசார் அறிவும் அமெரிக்காவல் தகவமைக்கப்பட்ட சி.ஐ.ஏ.வால் மேர்பார்வைக்கும் , பொருளாதார ஒத்துழைப்புக்கும் உட்பட்டே எழுந்தன.
 
 
இவை கம்யூனிசத்தைக் கருவறுக்கும் கருத்தியலைக் கல்வித்துறைக்குள் கற்பனைக்கெட்டாத முறையுள் நகர்த்தினார்கள்.அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்துடன் ஓயவேயில்லை அது 1950 ஆம் ஆண்டு பண்பாட்டுச் சுதந்திரம்(Cultural Freedom) என்று கூறியபடி தனக்கான பல்தளத் தத்துவார்த்தக் கருத்தியலைக் கணிசமாகவுர்த்திபண்ணி மார்க்சியத்தை வேரோடு பிடுங்க உலகமெல்லாம் சுமார் 37 நாடுகளில் The Congress for Cultural Freedom (CCF) எனும் அமைப்புக்டாகக் கல்வியாளர்களைத் தகவமைத்தது.
 
 
இந்தியாவில் அதற்காக ஒரு பத்திகையை(Quest (Indian journal) ) ஆரம்பித்துக் கீழ்காணும் புரவலர்களை இந்திய வரலாற்றியலாளராகவும் ;புத்திசீவிகளாகவும் உருவாக்கியது. அவர்களுள் இவர்கள் : Nirad Chaudhuri, Dilip Chitre, Allen Ginsberg, Jyotirmoy Datta, Mujibur Rehman, Agha Shahid Ali, Jayanta Mahapatra Dom Moraes, Ashis Nandy, Gauri Deshpande, Adil Jussawalla, Mahapatra, A.K. Ramanujan, Saleem Peeradina, Kolatkar, Chitre, Keki Daruwalla, Anita Desai, Kiran Nagarkar and Abraham Eraly முக்கியமான சி.ஐ.ஏ.புத்திசீவிகள். 
 
 
அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் தற்போது நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின் ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மூன்றாது உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!
 
அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.ஜேர்மனியில் நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare ] விருத்திக்கு மற்றும் மரபணமாற்றப் பயிர்களுக்காக புதிய தேடல்கனளுக்காவும் இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!
 
 
இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின் குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.
கார்ல் போப்பர் (Karl R. Popper ) அவர்கள் தொடர்ந்து தன் வாழ்நாட் பூராகவும் மார்க்சியத்தை வெறும் கதையாடலாகப் பிழையான போதனையாக வர்ணித்துக் கொண்டிருந்தபோதுதாம் அவருக்கு London School of Economics and Political Science பல்கலைக் கழகத்துள் விரிவுரையாளராகும் தகுதியை அதி மேற்ராணியார் எலிசபெத்து அம்மையார் ஏற்படுத்திப்பின் Sir பட்டத்தையும் ஒட்டிவிட்டார்.
 
 
ஏகாதிபத்தியத்துக்குத் தன்னைப் பலியாக்கியவொரு கல்வியாளன் போப்பர்!ஆனால், அவருடைய தேசத்து Ludwig Wittgenstein( இவர்தாம் தருக்கவியலின் கொடுமுடி) மற்றும் Erwin Schrödinger( இவர் குவாண்டம் இயங்கியலின் தந்தை) போன்றோருடும் உறவு ரீதியாகப் பெரும் காழ்ப்புணர்வோடு இருந்தார்.Ludwig Wittgenstein னை ஒரு தடவை சந்தித்தபின் சாகும்வரை போப்பர் சந்திக்கவில்லை!இது, ஏனென்பதில் எனக்கு ஒரே குடைச்சல்!
 
 
இன்றும்,இதே ஏகாதிகத்தியம் அன்று பல கார்ல் போப்பர்களை உருவாக்கி வைத்து மார்க்சியத்தை வேரறுத்ததுபோன்றே தொடர்கிறது.
 
 
இது தற்போது, பற்பல இனத்துக்குள் உருவாகும் புத்தாசாலி மாணவர்களைப் பாடசாலைகளிலேயே பிடித்து அமுக்கிக் காயடிக்கிறது.அப்படிப் பிஞ்சிலேயே காயடிக்கப்படும் தமிழ்மாணவர்கள் ஐரோப்பாவில் ஏராளம்.எனக்குத் தெரிந்த அப்படியொரு தமிழ் மாணவனை அவனது 13 வயதினிலேயே அமெரிக்க வல்லாதிக்கம் அமுக்கிப் பிடித்து ,அவனது பெயரில் தனது இசுலாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை நூலாக வெளியிட்டு அவனை இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளது.எதிர்காலத்தில் பெரும் விஞ்ஞானியாக உருவாக வேண்டிய அவ் மாணவன் அமெரிக்க இராணுவத்துக்கு இரசயான ஆயுதங்கள் செய்யத்தக்கபடி இப்போதே அதை நோக்கிய (Biochemistry)ஆய்வுக்குள் தள்ளப்பட்டுள்ளான்.
 

-ப.வி.ஶ்ரீரங்கன்
18.04.2016
 
 
உசாத்துணை :
Wer die Zeche zahlt. Der CIA und die Kultur im Kalten Krieg.von Historian Frances Stonor Saunders

US-Militär finanziert deutsche Forscher
Pentagon finanziert deutsche Forschung :

Aufträge vom Pentagon: Die Naivität der deutschen Forscher

Friday, January 07, 2011

நாவலன்: சொந்த முகங்களை இழந்து...

"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்!

"சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் "நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்."புலம் பெயர் மக்கள்"இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்...நாம்,மேலே போவோம்.

நாவலன்,"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!

நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.

இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.

அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!



நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :

[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//

//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//

//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]

இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?

சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு "ஒழுங்குக்கு" உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட"ஈஸ்ற்-வெஸ்ற்"[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.

அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.

"குங்குமம்"ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!"ஆர்பைட் மார்க் பிறாய்"[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?

தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?

புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.

எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!

எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு "கொடி-தேசம்,மொழி-பண்பாடு" நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் "கமல்-ரஜனி வாழ்வு" பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.



இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,"சாமத்திய-கல்யாண-பிறந்ததின"க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.

புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.

முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் "பில்லி-சூனியமெல்லாஞ் " செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட "ஒழுங்குக்குள்" வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?

[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]

நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு"ஒரு ஒழுங்குக்குள்"வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான"அடையாள"நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.

தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட"வாழ்நிலை"இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!

[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]

"கருப்பு-வெள்ளை"-திருமணப் பந்தம்-எதிர்காலம்."கற்பு"-பதிவுத்திருமணத்துக்கு முன் "உடலறுவு"ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து"சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-"அழகாக"இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்"கருப்பு-அவலட்சணம்"கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து"வெள்ளையாக"இருக்கும் நபருக்கு இருக்கும்"செருக்கு"எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை"கருமையாக"இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து"கருமையுடைய"பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?"கருப்பு-வெள்ளை"கருத்தியலைச் செய்த "மேற்கு,கிழக்கு"க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.

இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை."அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்" வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.

[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]

தூரத்தே உருவாகும்"தூரத்தேசியவுண்ர்வு"என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்"துராத் தேசியவுணர்வடைகிறார்கள்"என்பது தப்பான கற்பித்தலாகும்.

இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.

இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன் ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :

"இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்,
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக."


[ Hier

fremd geblieben

dort

fremd geworden

Vielleicht

sollten wir

ein land suchen

einen Staat gruenden

fuer alle

die irgenwo

irgenwie

Fremde sind.]

-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984


[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]

புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!

"கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்" நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.

ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!


1:"ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்"

2;"தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்"

3:"தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்"

4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை"

ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,"கண்மூடி-கண்திறப்பு" வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.

நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை"புலம்பெயர் மக்கள்"குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!

[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]

ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?


[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]


இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா "ஜனநாயகம்"செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது "ஜனநாயகம்"என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் "ஜனநாயக"ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.


இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி...(?...)

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.01.2011

Saturday, November 13, 2010

சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்...

சோபாசக்தி,வளர்மதி:இடையில் நான்...

Shaseevan hat geschrieben:
„அண்ணை, நீங்கள் சோபாசக்தி கேட்ட கேள்விக்கு எழுதப்போகும் பதிலை நினைத்தால் ஃபேஸ்புக்கை விட்டு ஓடி ஒளியவேண்டும் போல் உள்ளது. எதிர்காலத்தில் 'சளாப்பல்' என்ற சொல்லுக்கு உங்கள் பதிலே உதாரணமாக இருக்கும். :)



Shoba Sakthi13 November 2010 at 10:14
Betreff: From Shoba
/உங்கள் நேரத்தை இப்படியானவர்களுடன் விவாதித்து விரயம் செய்யவேண்டாம் என்று அனுபவத்தாலும் நட்பினாலும் கேட்டுக்கொள்கிறேன்// என எழுதப்பட்ட பின்னூட்டமான்றிற்கு தீபச்செல்வனும் சிறீரங்கன் அண்ணனும் விருப்பம் சொல்லியிருக்கிறீர்கள் இங்கே 'இப்படியானவர்கள்' எனச் சொல்லப்படுவது நான்தான். என்னுடன் விவாதிப்பது விரயம் என்றா நீங்கள் இருவரும் கருதுகிறீர்கள்? உங்கள் இருவரதும் பதில்கள் எனக்கு முக்கியமானவை.



இக் கிழமை முதல்,நான் புதிய வேலைகிடைத்து என்னுடல்-மூளை வருத்தி ஓய்ந்து,குடித்துத் தூங்கி,மதுமயக்கத்தில் எழுந்தபோது,கணினித்திரை மங்கலாக இருக்கச் சோபாசக்தியின் கேள்வியும்,நாரதன் சசீவனின் கருத்தும் கண்ணிலேபட்டுத் தாக்கியது மண்டையை!

இனி விஷயத்துக்கு வருவோமா தம்பி சசீவா?(இஃது-பொதுவூழ்)

தம்பி,சசீவா!,சோபாசக்தி என்ன சொறுடிங்கரது பிரச்சனைகளை அல்லது பின்னங்களைப் போட்டா கேள்வி எழுப்பியுள்ளார்?-நான் சளாப்ப!

அவரைப் பொருத்தவரை,தன்மீதான அரசியல் உரையாடலையொட்டி,அவர் இருப்புச் சம்பந்தப்பட்டதும்,அதுள் எழுந்துள்ள அடையாள நெருக்கடிகுறித்ததுமான புரிதலில் அவர்சார் அரசியலைக் குறித்து நாம் எதிர்கொள்ளும் போக்குகளோடு நெருங்க முனைகிறார்.அல்லது, நொருக்க முனைகிறார்.இது,எனக்கு,எப்போதும்போலவே விருப்புக்குரியதும்-என்னை உரைத்துப் பார்ப்பதற்கும் உவகையானதே!(இது"நான்" எழு நிலை).

அன்புச் சோபாசக்தி, "உங்கள் அரசியல்-எழுத்துப் பரந்தபட்ட மக்களது அரசியல்வாழ்வோடு இயங்குகிறதா?அல்லது நீங்கள் குறிப்பிட்டவொரு நிலையில் அத்தகைய எழுத்துக்களை மக்களது பரந்துபட்ட நலன்களோடிணைத்துப் பரந்துபட்ட மக்களையொடுக்க முனையும் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு மேய்ப்பர்களாக்கும் முயற்சியில் வியூகம் அமைப்பவரா?"(...)

ஒடுக்குமுறைகளை உடைத்து முன்னகர முனையும் எம் மக்களக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது எனக்கு உடந்தையானதில்லை!உங்களுக்கும் அப்படியே எனக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

உங்களை நோக்கி(சோபாசக்தியை நோக்கி)பல்வேறு கட்டுரைகளை-கேள்விகளை நண்பர் வளர்மதி எழுதியுள்ளார்-எழுப்பியுள்ளார்.அவருடைய கேள்வியானது உங்கள் அரசியல் நடாத்தையைக் கேள்விக்குட்படுத்துபவை.சமீகாலமாக நான் கவனித்துவரும் எழுத்துக்களில் முக்கியமானது வளர்மதியின் எழுத்துக்கள்.எப்படி உங்கள் எழுத்துக்கள் நமது மக்களது வாழ்வோடும்-விடுதலையோடும்,அவர்களது அரசியலோடும் விளைவுகளை ஏற்படுத்த முனைகிறதோ அதேயளவு உங்களது அரசியல் நடாத்தையைக் கேள்விக் குட்படுத்துவது வளர்மதியின் கேள்விகள்.

இந்தப் புள்ளியில்,நீங்கள் இதுவரை எதுவுமே நடாவாததுபோன்றிருந்துகொண்டு, மற்றவிடயங்களில் மூழ்கும்போது(அப்படிக் காட்டும் நிலையில்) நான் வளர்மதிக்கு உரைக்கிறேன்"சோபசக்தியோடு விவாதிக்க முனைவது வீண் விரயம்" என்று.அத்தகைய எழுத்தை முன்வைக்கும் பின்னூட்டமும் விருப்பமாகிறது!

வளர்மதிக்குப் பதிலுரைப்பது உங்களதுரிமை.ஆனால்,சமீபக காலமாக நீங்கள் இயக்கும் அரசியல் உரையாடல்உலகத்தால் ஒடுக்கப்படும்தமிழ்பேசும் மக்களது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதென்பதால்,நீங்கள் பொதுத் தளத்தில் வளர்மதியோடு உரையாடவேண்டும்-அவர் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும்,தாங்கள் குறித்த அரசியல் நடாத்தைக்கும் பதிலுரைத்தே ஆக வேண்டும்.இத்தைய கடப்பாட்டைத் தட்டிக்கழித்துவிட்டு என்னிடம் பதில் கேட்பதன் நியாயத்தோடு வந்திருப்பது சரியே!அதேபோன்று,நானும்"சோபாசக்தியோடு உரையாடுவது விரயம்"எனச் சொல்வதும் தங்கள் நிலையினது விளைவுதரும்எனது புரிதலில் எனக்கும் நியாயமாகிறது!

இந்த எனது "நியாயத்தை"தப்புவென நிரூபிப்பது உங்கள் கையில்.அதைச் செய்து(வளர்மதிக்குப் பதிலுரைத்து) என்னைக் கேள்வி கேட்பது இன்னொரு தளத்தில் இயலுமாகும் சோபாசக்தி.அதுவரையும்...



ப.வி.ஸ்ரீரங்கன்.

13.11.2010