Showing posts with label பொதுப் புத்தி. Show all posts
Showing posts with label பொதுப் புத்தி. Show all posts

Friday, February 21, 2014

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.

23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக  முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.இது பார்ப்பனச் சோவினது இராச தந்திரமாகும். இது குறித்துச் சில விடையங்களை நோக்குவோம்.அப்போதுதாம் இவர்களது இரட்டை முகம் புரியத்தக்கதாக மாறும்.

    "ராஜீவ் கொலையாளிகள் விடுதலை’’ என்றலறும் ஊடகங்களும்  "தேசியவாதிகளும்" அவர்கள் பின்னாலுள்ள இந்திய ஆளும் வர்க்க நலன்களும் புரிந்துக்கொள்ளத்தக்கவுண்மைகளை மறைக்கின்றன!இராஜீவ் படுகொலை என்பது திட்டமிடப்பட்ட இந்திய ரோவின் [Research and Analysis Wing  ]சதியாகும்.இது வொரு "புலியைப் பயன்படுத்தும் " தந்திரமாக RAW வால் நிகழ்த்தப்பட்டது.அதாவது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு காந்திக் குடும்ப அரசியல் ஒவ்வாது.அந்தப் பிரிவுக்குக் கணிசமான அளவுக்கு இந்திய ரோவுக்குள் ஆதரவுண்டு.அஃதுதாம் இப்போது தேர்தலில் வெற்றி சூடுமெனக் கருதப்படும் மோடிக்குப் பின்னால் நிற்கும் ஆளும் வர்க்கம்.ராசீவ் கொலையின்வழி இந்திய ஆளும் வர்க்கம் ஒரே கல்லிலிருந்து 3 மாங்காய்களைப் பறித்தது!

    1: தமிழகத்திலிருந்து ராசீவ் படுகொலை செய்யப்பட்டதன்வழி தமிழ்நாடு ஈழத்துக்காகக் கெம்பி எழுவதைத் தடுத்தது.

    2.புலிகளையும் தமிழகத்து மக்களையும் உணர்வுரீதியாகப் பிளந்து அப்புறப்படுத்தியது.

    3:இந்திய ஆளும் வர்க்கம் தன்னால் படுகொலை செய்யப்பட்ட மாகத்மா காந்தி;சய்சேய்காந்தி;இந்திரா காந்தி போன்றவர்களது வரலாற்றுப்பழியிலிருந்து விடுபட்டு ராசீவ் காந்தியின் கொலைக்குள் முழு இந்தியர்களையும் திணித்தது.

     இதைத் திட்டமிட்டு மறைக்கும் ஆளும்வர்க்கத்தின் வினையான தொகையில்:

 "ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை".எனப் பார்பன ஊடகங்கள்,

 "இவையெல்லாம் நடந்தது, உங்கள் பார்வையிற் பிழையுள்ளது" -பாதிக்கப்பட்ட நமது குரல்.

 1): குஜராத்தில் 3000  இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை  நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

 2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

 3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்,செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும்  ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை ,எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்!



அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான "இந்தியர்களும்,தமிழர்களும்"  நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவார்கள்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா??இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.

 எனவே இன்னும் மேலே செல்வோம்.இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில்இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத (பாரதீய ஜனதா மற்றும் ஆர்.ஏஸ்.எஸ் கும்பலை விழிகள் முன் கொணர்க) அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது அன்றைய மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக் கேற்வாறு  மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காத்துக்கொண்டது-கொள்கிறது!

இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உள தேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது.

 இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்-பார்ப்பான் -திராவிடன் ", தமிழன் போக்குகள்.என்றபோதும் பெருந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும்  மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு வன்முறைசார்ந்தும் வன்முறைசாராததுமான ஒடுக்குமுறைகளால் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சித்தரிக்கின்றனர்.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிதுருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசமும் இதற்கு விதிவிலக்கற்று "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" தாம்!இந்தத் தேசம் நிச்சியமாக உடைந்து சிதறக் காத்திருக்கிறது.

இத்தகைய நிலை தோன்றும்போது ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது. இதுதாம் ஈழத்திலும் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.தற்போதைய நிலையில் இராசீவ் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களது தூக்குத்தண்டனை இரத்து -விடுதலையென்ற அரசியலுள் ,கட்சி அரசியல் செய்யும் சதி நிரம்பிய அரசியலானது தமிழ்நாட்டுப் பார்ப்பனச் சாதிய நலன்களோடு பின்னப்பட்ட அதிகாரத்துக்கான வியூகமாக மாற்றப்படுகிறது.

 இது ,மகாபாரதச் சகுனியினது பாத்திரத்தை செயலலிதாவின் அரசியல் பாத்திரத்தில் இனங்காணத்தக்கதாகவே இருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் இராச தந்திரத்தைச் சோவின் தொட்டிலில் கற்றுக்கொண்ட தமிழ்நாட்டு முதல்வரோ தனது கெடுதியான அரசியலை 23 ஆண்டுகள் சிறையில் வாழும் மனிதர்களது உளவியலோடு விளையாடுவது ( தூக்குத்தண்டனை இரத்துவென உச்ச நீதிமன்றம் அறிவித்தவுடனேயே அவர்களைத் தமிழ்நாடு விடுதலை செய்யுமெனப் "போட்டுக்கொடுத்து" க் காங்கிரசுக் கயவர்களை எழுச்சிகொள்ள வைத்ததும்; அதன் விளைவால் அவர்களது விடுதலையைத் தட்டிக்கழிக்க வைக்கும் முயற்சி) மனித நாகரீகமற்றது.

இந்த மனித நாகரீகத்தை ஒரு போதும் பார்ப்பனர்களிடம் காணமுடியாது.

     ஏனெனில் ,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.இவர்களிடமிருந்து எந்த ஜனநாயக விழுமியத்தையும் நாம் எதிர்பார்ப்பது மடமையானது.

 ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2014

Thursday, December 05, 2013

புலத்து இடதுசாரிகள்தாம் புரட்சியாளர்கள்!

ந்தச் சூழலுள்  தமிழ்பேசும் மக்களாகிய நமது  அரசியல் வாழ்வு குறித்து யோசித்தோமானால்,"நாம் எப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்?இந்த ஏமாற்று வேலையை எமக்குள் இருந்து மிகக் கச்சிதமாக நடாத்தி முடிப்பவர்கள் எவர்கள்?" என்று கேள்விகள் தொடர்கின்றன!


நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்?


 "தமிழீழ" விடுதலை,சுதந்திரம்-சுய நிர்ணயமென்றதெல்லாம் எப்படிப் போயுள்ளது?


புலம் பெயர் புலிகளதும்-மாற்றுக் குழுக்களதும் நாணயம் எந்த வகையானது?


இவர்களது அரசியலது தெரிவில் மலிந்துலாவும் நலங்கள் என்ன-தமிழ் "இடதுசாரி"யர்களாகத் தம்மை வலிந்து நிறுவும் குழுவாத மனிதர்கள் எமது மக்களுக்கெதை வழங்க முடியும்?


இவர்கள் ஒருதரையொருவர் கழுத்துவெட்டக் கங்கணம் கட்டிச் செய்யும் சதி வலைகள் எத்தகையவை?


இவைகள் குறித்தான குறைந்தபட்சப் புரிதாலாவது ஒரு பொதுவெண்ணவோட்டமாக உருவாகாதா?



புலத்துப் "புரட்சி-இடதுசாரிய" மாபியாக்கள்  பாணியிலான சூழ்ச்சி அரசியலைப் பின்னப் பற் பலக் குள்ள நரி "இடது போலிகள்"ஒவ்வொரு திசையிலும் நமது மக்களது நலன்கள் குறித்து வகுப்பெடுக்கின்றன.இத்தகைய மனித விரோதிகளது தெரிவுக்கு "எது-எப்படி" ப்  பலியாகிறதென்றவுண்மை "மக்கள்" நலன் எனும் முகமூடியோடு சதா நம்மை எட்டுகின்றன.




பார்க்கும் இடமெங்கும் போலி "இடது சாரிகளது" கை மேலோங்கியிருக்கிறது. அவர்கள், புலிகளது பினாமிகளாக இருந்த அன்றைய அதே, அரசியலோடின்றும் பொதுத் தளத்தில் மயிர் பிடுங்கும் விவாதமெனத் தள்ளும் எழுத்துக் குப்பைகள் அற்பத் தனமாக மக்களை ஏமாற்றுவதென்பதையெவருமிலகுவில்  அறிய முடியாதபடி தகவமைக்கப்படுகிறது "புரட்சி வேடம்" தாங்கும் காலம்!.


முன்னிலைச் சோசலிசக்கட்சியினதும் அதன் லொபிக் குழுவான சமவுரிமை இயக்கத்தினதும் பெயரால் தொடர்ந்து, ஏமாற்றப்படும் இளைஞர்களைப் புது வகையாக மொட்டையடிக்குமொரு  ஒடுக்குமுறைச் சூழலைப் புரிந்துகொள்வதென்பது , இதற்கு மாற்றான வழியொன்றைத் தேடுவதென்று நம்பவேண்டாம்.குறைந்த பட்சம் போலிகளது வலையிற் சிக்காதிருக்க விழிப்படைதலென்றே பொருள்!



இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களது உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங்கண்டாக வேண்டும்.


புலம் பெயர் மண்ணிலிருந்தபடி "புரட்சி" பேசும் இந்தப் போலிகள் தாம் வாழும் நாட்டு இடதுசாரியப் பாரம்பரியத்தோடு துளியளவும் தொடர்பற்ற போலிகள்-பொய்யர்கள்!இவர்களது எஜமானர்கள் நிலத்தில் முன்னெடுக்கும் "பின் ஈழப்போராட்ட ஆயுதக் கலாச்சாரமானது" மீளவும்,கொலையைக் குறித்தே இயங்குகிறது.இதைச் சாத்தியப்படுத்திவிடப் புலத்திலிருந்தபடியே கை காட்டும் இந்த ";இடதுசாரி-மாற்றுக் கருத்து" மாபியாக்கள், எப்பயெப்படியோ "எவரையும்"  போட்டுத் தாக்கித் தம்மை நிலைப்படுத்துவதில் பல பக்கப் "புரட்சிகர"  வர்ண ஜாலக் கட்டுரைகளோடு கடந்த 25 ஆண்டுகளாக நம்மையெல்லாம் ஏமாற்றும்போது இவர்களது வரும்படியும்-இந்த எதிர்ப் புரட்சிகரப் பாத்திரமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருக்கிறது.


தாம் வாழும் நாட்டின் எந்தப் போராட்டத்திலும் தம்மை இணைக்காத இந்தக் கூட்டம் தமக்கும் புரட்சிக்கும் வரலாறிருப்பதாக ஏப்பம் விடுகிறது.இதை, நம்பும்படி மக்களை வற்புறுத்துகிறது-மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முனைகிறது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின் உடைவை மறைத்து மீளவும், மக்களை முட்டாளாக்கித் தமது தொடர் சேவையைச் செவ்வனவே செய்ய மற்றவர்களைக் கொச்சைப்படுத்துகிறது, இந்தப் புலத்து இடதுசாரி மாபியாக் கூட்டம்.


இத்தகைய ஏமாற்று அரசியலுக்குப் புலத்து-நிலத்துத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?


இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே, மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?


இந்த அழிப்புக்கும் மேற்காணும் புலம்பெயர் போலி "இடது-வலதுகளுக்கும்" எத்தகைய தொடர்புகள் இருந்தன-இருக்கின்றன?




ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி இந்த மாபியாக்களது எதிர்ப் புரட்சிப்  போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.

நம்மைப் புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.

இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று தமது நலன்களை இலங்கையில் எட்ட முனைகின்றன.

அந்த முயற்சிக்குப் பங்கம் ஏற்படாத முறையில் அவர்களது  சேவர்கள்"இடது-புலம்பெயர் புரட்சிகர அணிகள்-மாற்றுக் கருத்தாளர்கள்"எனும் போர்வையில் தமக்குள் முட்டிமோதுகின்றன.

இந்தப் போலிகளில் எவரும், மக்களது நலனை முதன்மைப் படுத்தும் எந்தவொரு அமைப்பையும் நிறுவ முடியும்.அதன் வழியாக நமது மக்களது சுயவெழிச்சியை வேட்டையாட முடியும்.இது,மிக ஆபத்தான காலம்.ஒரு முன்னிலைச் சோசலிசக் கட்சி விழுந்தால், இன்னொரு போலி அணியை முன் தள்ளும் அனைத்துப் பலமும் இலங்கை-இந்திய ஆளும் வர்க்கங்களுக்குண்டு.அந்தப் பலத்தோடு புலத்தில் "புரட்சி" வேடங் கட்டப் பல நூறு இரயாகரன்களும் உண்டு-உண்டு!!!

எல்லாமே, மக்களது நலன்வழியானதென இத்தகைய எச்சில் பேய்கள் கூக் குரலிடுகின்றன.இதுள், முன்னணியில் எவருள்ளார்கள் என்பதிற்கூடப் பல போட்டிகள்.

தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழுமொத்த மனித சமுதாயத்துகே எதிரான போக்கில் இந்தக் குழுக்கள் இயங்குகின்றனவென்ற சிறியவுண்மைகூடப் பகிரங்கமாகப் பேசப்படுவதில் பல சிக்கல்கள்!இவர்களால் முன் தள்ளப்படும் சந்திப்புகளும்,வெளியிடப்படும் தொகுப்புகளும்-பகிரங்கவுரையாடல்களும் ஒடுக்குமுறையாளர்களது தயவிலும்-நிகழ்சிக்குட்பட்டுமே இயக்கப்படுகிறதென்றவுண்மையைப் பரவலாகப் பேசப்பட வேண்டும்.

இதன் வழிகொண்டு, " புரட்சி-விடுதலை "  என்ற மோசடி மாய்மாலங்களை புரிந்தோமானால் வருங்காலத்திலாவது  "குறைந்த பட்சமாவது மனிதர்களாய் வாழ்வதற்குத் தமிழ்பேசும் ஈழ மக்களுக்கு"  இப் புவிப்பரப்பில்  உரித்துண்டாகலாம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.12.2013

Sunday, December 30, 2007

பெனாசிர் பூட்டோ...

குஞ்சாமணிபிடித்து மூத்திரம் அடிக்கத்தெரியாத
குழந்தை ஒருகட்சிக்குத் தலைவராகி...



பாகிஸ்தான்.தென்கிழக்காசியாப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்த்திரமற்ற சூழலுக்கான திறவுகோலாக இருத்திவைக்கப்பட்ட தேசம்.மேற்குலக மற்றும் அமெரிக்காவின் நம்பத்தகு ஏஜன்டுக்களால் நிர்வாகிக்கப்பட்ட இராணுவச் சர்வதிகாரத் தேசம்! இன்று, தடல்புடலான மாற்றங்களை வேண்டிப் படுகொலை அரசியலை மீண்டும் உள்வாங்கியுள்ளது.இது பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் புதிதில்லை.



ஆளும் வர்க்கங்கள் தமது வலியை தேசத்தின் பெரும்பகுதி மக்களின் வலியாக்குவதற்குத் திட்டமிட்டுப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுத் தமது ஆர்வங்களை-நலன்களை அறுவடை செய்வதொன்றும் புதிதில்லை.இப்போது, இதுவே பாகிஸ்த்தானிலும் நடைபெறுகிறது.



அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் குரல்தரவல்ல அதிகாரியான ஸ்ரெபான் கொடேக் கூறுகிறார்:The United States offered FBI assistance in investigating Bhutto's assassination, but Pakistan has not yet made a request என்றும், அமெரிக்க ஸ்ரேற் டிப்பாட்மென் குரல்தரவல்ல அதிகாரி ரொம் கேசி சொல்கிறார்We don't know who is responsible for this attack. ... But it is clear that whoever is responsible is someone who opposes peaceful, democratic development and change in Pakistan." :என்றும்.





ஆகப் பாகிஸ்தானில் இதுவரை ஜனநாயகம் ஒன்று இல்லாததை ஒத்துக்கொண்டவர்கள்,இப்போது, பெனாசிரைக் கொல்பவர்கள் அதற்குத் தடையாக இருப்பதாகவும் குரல்கொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது.சமாதனம்,ஜனநாயகம்,அபிவிருத்தி மாற்றங்கள் என்பதன் பின்னால் ஒழிந்திருக்கும் மேற்குலக-அமெரிக்க நலன்கள் இன்றைய பாகிஸ்த்தான் அதிபர் முஸ்ராப்பிடம் இவற்றைக் கோரமுடியாதிருப்பது உண்மாயானதா?பெனாசீர் இவற்றையெல்லாம் பாகிஸ்த்தானில் செய்து முடித்து மக்களுக்கான செழுமையான முதலாளித்துவ ஜனநாயகத்தைப் படைத்துவிடுவாதாகவும் இவர்கள் சொல்லும் தரணங்களை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?



இன்றைய தென்கிழக்காசியாவின் எந்த நாட்டிலும்(இந்தியா உட்பட)பெயரளவிலான ஜனநாயகப் பண்புகூடக் கிடையாது.குடும்ப அரசியலில் கட்சிகளைக் குடும்பச் சொத்தாக்கித் தத்தமது குடும்ப அதிகாரங்களை நாட்டின் இராணுவ-பொலிஸ் பலத்துடன் தேசமக்களின்மீது கொடுமையாகச் செலுத்தும் அரை இராணுவத் தன்மையிலான இராணுவச் சர்வதிகாரத்தைப் பிரயோகிக்கும் இத்தகைய அரசியலில், மக்களுக்கான அடிமை விலங்கை மிகக் கபடத்தனமாகப் பூட்டும் இவர்களை, மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் தலைவர்களாகக் காட்டும் இன்றைய உலக ஆர்வங்களுக்குள் புதிதாக முளைவிட்ட நெருக்குவாரங்கள் இத்தகைய தேசங்களுக்குப் புதியவை அல்ல.



பாகிஸ்தான்,இந்தியாபோன்ற நாடுகளில் மிகக் கொடுமையான குடும்பச் சர்வதிகாரமானது மேற்குலக எஜமானர்களின் அதீத ஒப்புதலோடே நடந்தேறுகிறது.பாகிஸ்தானுக்கு அணுக்குண்டைச் செய்வதற்கு அன்றைய மேற்கு ஜேர்மனியும் அதன் தலைமையில் இன்னுஞ் சில நாடுகளும் உதவி புரிந்தன.இது இந்திய-சோவியத்யூனிய நட்பைக் குறித்த வியூகத்தின் மறுவிளைவாக அன்று நடந்தேறியது.இப்போது, இத்தகைய தேசங்களில் அமெரிக்க-மேற்குலகத் தேசங்களின் நிதிமூலதனம் மிக வேகமாக விரைந்து பாய்கிறது.இதன் தொடர்ச்சியில் பாகிஸ்தானின் இன்றைய முஸ்ராப் பாணியிலான ஆட்சியமைப்பு மேற்குலகத்தின் தேவைகளைப் பூரணமாக நிறைவேற்றவில்லையென்று வெளிப்படையாகத் திட்டும் மேற்குலகம் பெனாசீரைப் பகடைக்காயாக்கிக் கொன்றுள்ளது.



தற்போதைய நிலையில் முஸ்ராப்பை வெளிப்படையாகச் சாடும் மேற்குலகம்,அன்றைய முஸ்ராப்பின் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கக் கூட்டானது தன்னைக் காப்பதற்கென்றே சாடுகின்றன.சாரம்சத்தில் முஸ்ராப் மிகத் தந்திரமான இராணுவ அதிகாரியாக இருக்கமுடியுமா?அவரது இருப்பானது அன்றைய இராணுவப் புரட்சிக்குப் பின்பும் முன்பும் அமெரிக்க-மேற்குலக ஒப்புதலோடும்,உதவிகளோடுமே சாத்தியமானது.எனினும்,முஸ்ரப்மீதான நம்பிக்கையீனம் எங்ஙனம் தோற்றம் காணுகிறது.பாகிஸ்தானின் வளங்கள் பற்றிய மதிப்பீட்டில் அதன் இரும்பு,எரிவாயு,செம்பு போன்ற வளங்களையும் தாண்டி மேற்குலக நிதிமூலதனத்தின் சுயமான இயக்கத்துக்கு எதிரான முஸ்லீம் அடிப்படைவாதத்தின் இருப்பிடமாக உணர்ந்த வர்த்தக நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் அதீத-மிகை மதிப்பீடுகளுக்குள் சிக்குண்ட மேற்குலக-அமெரிக்கப் புலனாய்வுத் துறைகளின் ஏவற்காரணங்கள் அதைமறுத்து வற்புறத்தித் தமது வேலையைச் சுயாதீனமாக ஆற்றமுடியாத நிலையில், தமக்கு நம்பகமான எடுபிடியாகப் பெனாசீர் பூட்டோவை இந்த அரங்கத்துக்கு அழைத்து வந்து முஸ்ராப்பைத் தலைவெட்ட எடுத்த முடிவுகளின் விளைவுகள் இன்றைய பாகிஸ்த்தானின் அரசியல் சூழலாக மாறுகிறது.


பெனாசீர் மரித்துவிட்டபின்பும் இந்த ஆர்வங்கள் மடியாதென்பதற்கு பெனாசீரின் வாரீசான 19 வயது பைலாவல் (Bilawal ) பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக முடிசூட்டிய வரலாறு சாட்சி பகிரும்.குஞ்சாமணிபிடித்து மூத்திரம் அடிக்கத்தெரியாத குழந்தை ஒருகட்சிக்குத் தலைவராகித் தென்கிழக்காசியாவின் அறிவின் நிலையைக் கேலிப்படுத்தும்போது, நாம் தலைகுனிகிறோம்.ஒக்ஸ்பேர்ட்டில் சட்டம் படித்தாற்போல் அவருக்குத் தலைமைதாங்கும் பெரு நிலை உருவாகவில்லை.ஆங்கிலம் பேசத் தெரிந்தவனெல்லாம் தென்கிழக்காசிய மக்களுக்குப் படித்தவன்,அறிஞன் என்ற பொதுப் புத்தி இந்தப் பயலையும் தலைவராக்கும் மேற்குலகத்துக்கு ஒத்திசைவாக இருக்கும்.வாரீசு அதிகாரச் சேட்டை மிக்க இத்தகைய பிரதேசத்தில் இது புதுமையில்லை.


கார்டியன் பத்திரிகை எழுதுகிறது: பாகிஸ்த்தான் மக்கள் கட்சி மக்களின் நலன்களைத் தக்கவைக்கும் கட்சியாகத் தன்னைப் புனரமைக்க வேண்டுமாம்.


நியூஸ்வீக் எழுதுகிறது:பாகிஸ்த்தானின் பிரச்சனையானது உள்ளநாட்டோ அன்றிப் பிராந்தியப் பிரச்சனை அல்லவாம்.அது மேற்குலகத்துக்கும் அமெரிக்காவுக்குமாக இப்படிப்பார்க்கிறது:This is no local or regional matter: Pakistan is also a country that, as a harbor for both Islamic extremism and nuclear arms knowhow, today more than ever poses one of the most dangerous threats to America and the West.


நியூயோர்க் ரைம்ஸ் எழுதுகிறது: அமெரிக்காவானது முஸ்ராப்புக்கான உதவிகள் குறித்து மீள்மதிப்பீடு,வியூகம் செய்தாகவேண்டுமாம்.அமெரிக்காவால் முஸ்ராப் பெற்று வரும் கோடிக்கணக்கான நிதி பயங்கரவாத்தத்துக்கெதிரான பாகிஸ்தானின் செயற்பாட்டிற்காக வழங்கப்படினும் அது வேறான வகையில் பயன்படுவதாகக் குற்றஞ் சுமத்திவிடுகிறது.



இத்தகைய சூழலில் தேசம் நெற்றில் அன்பர் திரு.சேனன் பாகிஸ்தான் குறித்தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.தமிழ்ச் சூழலில் பாகிஸ்தான் குறித்துச் சில கோணப் பார்வையை இது முன் வைக்கிறது.எனினும்,இக்கட்டுரை மேற்காணும் தரவுகளோடு இணைத்துப் படிப்பதற்கானதாகவே இருக்கிறது.ஏனெனில்,இன்றைய பாகிஸ்தான் பற்றிய பலகோணப் பார்வைகளை இது முன் வைக்கவில்லை.பாகிஸ்தான் மக்களுக்குள் எந்தொரு கட்சிக்குமான ஒருமித்து ஆன்மீக ஒத்துழைப்புக்கிடையாது.பாகிஸ்த்தானில் மக்களினங்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக்கிடக்கும்போது அவர்களை இணைத்துப் போராடி ஜனநாயகத்தைப் பெறுவதான அவரது பார்வையில் தவறிருக்கிறது.பாகிஸ்தானானது பல்வேறு உலக நலன்களின் மிகப் பெரும் வேட்டைக் காடாகும்.அங்கு மக்கள் புரட்சியென்பது திடீரென வெடிப்பதற்கில்லை.மக்களின் ஒருமித்த போராட்ட உணர்வை வேண்டி நிற்கும் ஒரு தேசியக் கட்சியும் அங்கில்லை.இது குறித்த வாசகர்களின் கருத்துக்கள் எதிர்பார்க்கப் படுகிறது.


கீழ்க்காணும் சேனின் கட்டுரையை தேசம் நெற்றிலிருந்து நன்றியோடு பதிவிடுகிறோம்.


தோழமையோடு,


பரமுவேலன் கருணாநந்தன்


30.12.2007


பெனாசிர் பூட்டோ: மேற்குலகும் அது கூறும் ஜனநாயகமும் :சேனன்



கடந்த 27ம் திகதி ராவல்பின்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெனாசிர் (Benazir Bhutto) சுட்டுக் கொல்லப்பட்டார். பெனாசிரை சுட்ட கையுடன் கொலையாளி ஏற்படுத்திய தற்கொலை குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். முசராப்பின் அரசாங்கம் அல்கைடாவின் பைதுள்ளா முஸ்சுத்தை குற்றம்சாட்ட, அனைத்து மேற்கத்தேய ஊடகங்களும் மீண்டும் ஒரு ரவுன்ட் அல்கைடா வசைபாடி ஓய்ந்துள்ளன. பாக்கிஸ்தான் அல்கைடாவின் பேச்சாளர் இக்கொலையை தாம் செய்ததாக அறிவித்திருந்தாலும், இக்கொலைக்கு பின்னால் இருக்கும் அரசின் பங்கை மூடி மறைக்க முடியவில்லை. குண்டுவெடிப்பின் அதிர்வில் பெனாசிரின் தலை வாகனத்தில் மோதியதாலேயே அவர் இறந்தார் என்று அவர் ஏதோ தற்கொலை செய்து கொண்டதுபோல் அரசு செய்திகள் வெளியிடுகிறது.


பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் ; (PPP- Pakistan Peoples Party) தலைவியான அவரை பாக்கிஸ்தானுக்கு திரும்பி போகும்படி தூண்டியதில் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. பெனாசிர் திரும்பி சென்று, தேர்தலில் நின்று வெற்றி பெற்று, தமக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்குவதை, பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் கொண்டுவருவதாக பார்த்தனர் மேற்கத்தேய அரசுகள்.


முசராப்பின் அரசு தமது செல்வாக்கை மக்கள் மத்தியில் இழந்ததும், பெனாசிர் முசராப்புக்கும் மேலாக அதிக சலுகைகளை மேற்குலக நாடுகளுக்கு வழங்க முன்வந்ததுமே ஆதிக்க சக்திகளுக்கு பெனாசிர் மேலான கரிசனை ஏற்பட முக்கிய காரணம். இதுவரை காலமாக இராணுவ ஆட்சி செய்து பெரும் ஜனநாயக மறுப்புகள் செய்து வந்த முசராபை தமது முதுகில் தூக்கித் திரிந்த மேற்கத்தேய அரசுகள் உடனடியாக அவரை கீழே தள்ளிவிட விரும்பவில்லை. மக்கள் அண்மையில் கிளர்ந்து எழுந்து போராடியிருக்;கா விட்டால் அவர்கள் தொடர்ந்தும் முசராபுக்கு ஆதரவை வழங்கியிருப்பார்கள் என்பதில் ஜயமில்லை. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், டாக்டர்கள் முதற்கொண்டு தொழிற் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் தெருவில் இறங்கி போராட தயாரானது ஆதிக்க சக்திகளுக்கு கிலி ஏற்படுத்தியது ஆச்சரியமானதல்ல.


போதாக்குறைக்கு வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் - குறிப்பாக அணுஆயுத பலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கையில் போய்விடுமோ என்ற பயம் இவர்களை தொடர்ந்து ஆட்டி வருகிறது. இந்த நிலையில் முசராபை கேள்விகேட்க இவர்கள் தயாராக இல்லை. அதே தருணம் தமது இராணுவத்தை பாக்கிஸ்தானில் நிலைநாட்ட தொடர்ந்து முயற்சித்து வரும் அமெரிக்காவுக்கு முசராப் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார். அதற்கு தான் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக பெனாசிர் அறிவித்தது அவரை அமெரிக்காவின் முதல்தர நண்பராக்கியதும் அல்கைடாவின் முதல்தர எதிரியாக்கினதும் ஆச்சரியமான விசயமில்லை.



முசராபின் அரசு தன்னை கொலை செய்யும் முயற்சியில் இருப்பதாக பெனாசிர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார். 150க்கும் மேலான உயிர்களை பலிகொண்ட கடந்த அக்டோபர் 18 தற்கொலை தாக்குதலில் இருந்து தப்பிய கையுடன் அவர் அரசாங்கத்தையே குற்றம்சாட்டி இருந்தார். அவரது வீட்டை இராணுவம் முற்றுகையிட்டு காவலில் வைத்திருந்த பொழுது பெனாசிர் பி பி சி ரேடியோவுக்கு வழங்கிய பேட்டியில் அரசை கடுமையாக சாடியிருந்தார். அதே நிகழ்ச்சியில் பெனாசிருடன் பங்கேற்ற இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் முசராபுக்கு தமது முழு எதிர்பையும் தர மறுத்துவிட்டார். முசராப் உடனடியாக அரச பொறுப்பில் இருந்து விலத்;த வேன்டும் என்று பெனாசிரும் நிகழ்ச்சி நிருபரும் மீண்டும் மீண்டும் கேட்டும் பதில்தர மறுத்துவிட்டார் மிலபான்ட். ஜோர்ஜ் புஸ் முசராப் தமது உடை மாற்ற வேன்டும் என்று கோர முஸரப் உடை மாற்றிய கதை எமக்கு தெரியும். பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் கொண்டுவரும் இவர்தம் அக்கறையான நடவடிக்கைகள் இவை.



இன்று பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஆதரவின்றி பாக்கிஸ்தானில் யாரும் அரசமைப்பது என்பது நடக்ககூடிய காரியமாக தெரியவில்லை. பாக்கிஸ்தான் உருவான காலம் தொட்டு இந்நாடு இராணுவ ஆட்சியில் இருந்த காலமே அதிகம். இராணுவத்துக்குள் பல்வேறு கிளைகள் பல்வேறு அரசியல் நோக்கில் செயல்படுகின்றன. இருப்பினும் முழு பாக்கிஸ்தானும் இராணுவத்தினதோ அரசினதோ கட்டுப்பாட்டில் இல்லை. உதாரணமாக வடக்கு பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்கள் பல்வேறு பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். போதாக்குறைக்கு அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள் தனித்து இயங்குகின்றன. ஒன்றோடு ஒன்று தொடர்புபடாத வகையில் தனிப்பட்ட அரசியல் நோக்கோடு வௌ;வேறு அரச அமைப்புக்கள் தங்களது சொந்த நலன்சார் அரசியலுடன் இயங்குகின்றன. ஊழலும் சுரண்டலும் உச்சக் கட்டத்தில் இருக்கும் பாக்கிஸ்தானில் மக்கள் வறுமையில் வாடுவது பற்றி எந்த ஆதிக்க சக்திகளும் கவலைப்படவில்லை. இராணுவத்தின் அரசியல் பலத்தை குறைத்து குறைந்தபட்ச ஜனநாயகத்தையாவது கொண்டுவருவதற்கு யாரும் தயாராக இல்லை.


பெனாசிருக்கோ PPPக்கோ இராணுவத்தின் முழு ஆதரவு ஒருபோதும் இருக்கவில்லை. மேற்குலக அரசுகளும் பெனாசிரை நம்பும் அளவுக்கு PPPஜ நம்ப தயாரில்லை. 60 களில் ஏற்பட்ட இடதுசாரி எழுச்சியின் விளைவாக உருவாகிய இக்கட்சிக்குள் இன்றும் பல்வேறு இடதுசாரி போக்குகள் உண்டு. இந்நிலையில் பெனாசிரின் இறப்பு பலத்த சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.


பெனாசிருக்கோ அல்லது அவரது குடும்பத்துக்கோ பெரும்பான்மை மக்கள் ஆதரவு இன்று இல்லை. அவர்கள் அரசாட்சியில் இருந்தபோது செய்த அநியாயங்களை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. பெனாசிரின் கணவர் 10வீதக்காரர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். 10வீதம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எல்லாவித ஊழல்களையும் அனுமதித்தவர் அவர். இருப்பினும் பெனாசிரின் குடும்ப உறுப்பினர் ஒருவரையே இக்கட்சிக்கு தலைவராக்க முயற்சி நடக்கும் என்று நாம் நம்பலாம். பூட்டோவின் பெயரை வைத்து அரசியல் செய்ய விரும்பும் PPPயின் முன்னனி தலைவர்கள் மக்களின் அதிருப்தி பற்றி அவர்களின் போராட்டம் பற்றி எந்த அக்கறையும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். PPPஜ ஆரம்பித்த பெனாசிரின் தந்தை அலி பூட்டோ 1979ல் தூக்கில் இடப்பட்டதை தொடர்ந்து இக்குடும்பம் சந்திக்கும் நாலாவது கொலை இது. இதன்முலம் ஏற்படும் அனுதாப அலையை பாவிக்க – வரும் தேர்தலில் உபயோகிக்க - கட்சி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இன்னுமொரு பூட்டோவை கட்சிக்கு தலைமையாக்குவதில் முன்னனி உறுப்பினர்கள் முன்நிற்பர். இதில் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

வரும் ஜனவரி 8ல் நடக்க இருக்கும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது என்பதும், கள்ள வாக்குகளும் ஊழலும் நிரம்பி வழியும் இத்தேர்தலின் பின் பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் வந்துவிட்டதாக மேற்குலக ஊடகங்கள் கூவப்போவதும் எமக்கு தெரிந்ததே. இது பாக்கிஸ்தானுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவர போவதில்லை.


சிந்து பிரதேசம் உட்பட பாக்கிஸ்தான் எங்கும் இன்று கிளர்ந்தெழுந்துள்ள மக்களை ஒன்று திரட்டி தற்காப்பு கமிட்டிகளை உருவாக்கி ஒரு மக்கள் அமைப்பை கட்டி எழுப்புவதன் மூலம்தான் இராணுவத்தையும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்கொள்ள முடியும். இதன்மூலம் தான் பாக்கிஸ்தானுக்கு நியாயமான ஜனநாயகத்தை கொண்டுவர முடியும்.