Friday, January 28, 2011

பெற்றோலிய டொலர்க் கொள்ளை!

துனிசியா,எகிப்த்து: இன்னும்பல தேசத் தலைகள் உருளும்!

ரபு தேசங்களில் நடப்பது மக்கள் புரட்சியின் பெயரால் பெற்றோலிய டொலர்க் கொள்ளை!இப்படி ஒரே வார்த்தையில் போட்டுடைக்கும் தீர்ப்புக்கு,விரிவாக எழுதப்படும் ஒரு நீண்ட புலம்பாதிக்கக் குஞ்சம், சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனது துணிவுகொண்டு...

இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக புரட்சி,ஜனநாயகம்-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இலக்கியம்,புனரமைப்பு,அபிவிருத்தியென்றெல்லாம் "சந்திப்புகள்"படு அமர்க்களமாக மாதந்தோறும் அரங்கேறுகிறது.

இலக்கியத்துக்கான நிகழ்வுகள்,உலகப் புகழ்பூத்த எழுத்தாளர்களது தயவோடு நடக்கின்றன.

எழுத்தின் மீதான பார்வைகள் மக்களுக்கான விடுதலை-ஜனநாயமெனும் மொழியாடல்களதுவழியிலேயே உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆக்க இலக்கியமென்பதை மனிதவாழ்வின் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் அதன் வர்க்கச்சாரம் புரியப்படலானது.நிலைத்திருக்கும் எழுத்து முனைப்புக்குள் நிறுவனப்பட்டியங்கும் அதிகாரங்கள்,அதுசார்ந்த கருத்தியற் பேணுகை உடைப்பட்டுப் புரிந்தும் போனது.எப்போதும்போலவே இந்தப் புரிதலிலும் ஒரு எல்லையிடப்பட்டது.கலைவடிவங்கள் கலையெனப்பேணப்பட்ட இயக்கப்போக்கின் விருத்தி மிக நேர்த்தியான கதைசொல்லிகளை வளர்த்தெடுத்திருந்தபோது அந்தக் கதைசொல்லிகள் பண்டமாக மாற்றப்பட்டபோது மிக முன்னேறிய தேசத்து இலக்கியவாதிகள் எல்லோருஞ் சந்தைப்படுத்தப்பட்டார்கள்.அவர்களே,இப்போது மக்கள் அனைவருக்குமான குரலுமாக ஒலிக்கத் தொடங்கினர்.அதிகாரம் இவர்களை ஊடகமாக்கியபின் படைப்பிலக்கியத்தின் போலித்தனம் அருவருக்கத் தக்கதாகியது.அது,மார்ட்டின் வல்சரையோ அல்லது குன்ரர் கிரசையோ மேல் நோக்கிய மனிதர்கள் என்பதை ஒரு நொடியில் நொருக்கி எறிந்துபோடுகிறது.



என்றபோதும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ராய் (Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி (Dostojewskij: Der Idiot)முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின் (Alexander S.Puschkin:Erzaelungen) கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...).

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்."

இவர்களது தடத்தைப் புரியமுனையும்போது சாதாரணமான பரிசீலனைக்குப் போவதென்பது ஆகக் குறைந்த புரிதலென்பதையுந்தாண்டி என்ன-ஏதாகிறது எழுத்தெனுங் கேள்விக்கு விடைதேடுவதாக மாறகிறதெனக்கொண்டு மேலுள்ள வரிகளை எழுதிப் பார்த்தால் உடனே அமெரிக்கா வருகிறது.

என்னவெனச் சொல்!நீ,சொல்லமாட்டாய்.சொல்வதில்-புரிவதில் சிக்கல் இல்லை!வர்க்க உணர்வில்த்தாம் சிக்கல்.எனக்குப் புரிந்ததைச் சொல்வதில் சிக்கலெழ முடியவில்லை.என் வர்க்கவுணர்வானது எனது வாழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டது.


சரி.அப்படியே இருக்கட்டும்!

இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?

சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?

கொஞ்சம் அண்மிக்கிறேனா? சரி!


அல்ஜீரியனான Camus தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

இவ்வளவும் எதற்கு?:

மாறிவரும் அரேபிய உலகின் சமீபத்திய போராட்டம் என்ன?துனிசியாவினதும்,அதைத் தொடர்ந்து ஜெமேன்,எகிப்த்துவெனத் தொடரும்"ஜனநாயகபத்தியத்தின்" [democratic imperialism]போராட்டம் எதுவரை?இதற்கும்[ Global Revolution(...) ]மரபுசார்ந்த மக்கள் போராட்டத்துக்கும்[Revolution] எந்தவழிகளில் மாறுபாடுகள் இருக்கிறது?அல்லது இது மக்கள் போராட்டமாகிறதா?வர்க்கப் போராட்டத்துள் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்?உழைப்பாளர்களது அதிகாரத்தை இங்கே எதிர்வுகூறமுடியுமா?

பரவலாக துனிசியாவிலோ ,எகிப்திலோ எந்தவொரு பகுதியிலும் ஆண்களே போராட்டத்துள் அதிகமாக ஈடுபடுவதும் இந்தத்திசையில் அரேபிய பெண்களது பாத்திரம் என்ன?மக்கள் போராட்டத்துள் பெண்ணின் பாத்திரம் புறகணிக்கப்பாட்டதொரு சூழலை நினைத்தே பார்க்க முடியாதிருக்கும்.ஆனால்,அரேபிய தேசத்தில் அதுவே உண்மையாகிறது.

தொடர்ந்து சமூகவுணர்வு-சமூகவாழ்வே உணர்வைத் தீர்மானிப்பதென்ற வாய்ப்பாடுகளைத்தாண்டி இந்த அரேபிய உலகத்தை உற்று நோக்கும்போது அவர்களது சமூகப் போராட்டத்தைப் புரிவதில் பலசிக்கல்கள் இருந்தன.நேற்றுவரை இதுவே எனக்குள்ள பிரச்சனையாக இருந்தது.இதை மேற்குலகங்கள் கூறுவதுபோன்று மக்கள் போராட்டமெனக்கொள்வதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கிறது.கிழக்கு ஐரோப்பியச்"சோசலிசச் சரிவு" போன்று இதுவும் அரோபியச் சர்வதிகாரிகளது சரிவு எனச் சொல்லும் மேற்குலகச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!அவர்கள் தேசத்து அரசுகளும்,தலைவர்களும் போராடும் அரேபிய மக்களது போராட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.மக்களது போராட்டம் எனவும் பேரிகை கொட்டுவதில் அமெரிக்க வெளிவிவகார மந்திரியும்,அஞ்கேலா மேர்கலும்(ஜேர்மனிய அதிபர்) முந்திக்கொள்கின்றனர்.கூடவே,அரேபியத் தேசத்துச் சர்வதிகாரிகளுக்குக் கோரிக்கையும்விட்டு,"அமைதிவழிப் போராட்டத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்"என ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.

எகித்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அறிமுகமாகும் எல் பாறடாய் [Mohamed ElBaradei]அணுக் கண்காணிப்புக்குழுவுக்குத் தலைவராகவிருந்து ஈரான் பற்றித் துப்புத் துலக்கி அமெரிக்காவுக்கு வக்காலத்துவேண்டிய கடந்தகாலம் என் கண்களில் பட்டுத் தெறிக்கிறது! இன்றைய அவரது வருகையில் எகித்தியப் போராட்டம்,துனிசியா போன்றவற்றின் தொடரில் அரேபிய மாபியாக்கள் பலரது தலைகள் மறைந்து போகலாம்-தத்தம் தேசங்களைவிட்டு ஓடலாம்.ஆனாலும் இது மக்களுக்கான,அவர்களது அதிகாரத்துக்கான போராட்டமாக எடுக்கமுடியுமா?-என்னால் முடியவில்லை!



துனிசியவை விட்டு வெளியேறிய அதன் தலைவர் பென் அலியை இதுவரை ஜனநாயகத் தலைவராகக் கொண்டாடிய மேர்குலகக் கட்சித் தலைவர்கள் இப்போது அவனை சர்வதிகாரியெனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.பென் அலியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளியலுக வங்கிக் கணக்கு-பணம் முடக்கப்படுகிறது.இதன் தொடராகச் சிலவற்றைக் குறித்துப் பேசமுடியும்.

1: அரேபிய உலகத்தில் நடப்பது மக்கள் போராட்டம் அல்ல,

2: இப்போராட்டத்தினது சூத்திரதாரிகள் ஏகாதிபத்திய உலகத்தவர்கள்,

3: அரேபிய உலகத்திலுள்ள தேசங்களது "அரசுகள்-தலைவர்கள்"கவிழும்போது அதன் இடத்தில் புதிய மேற்குலகச் சார்பு அரசுகளே மீளவும் வரமுடியும்,

4: தேசங்களைவிட்டுச் செல்லும் சர்வதிகாரிகளது வெளிநாட்டுச் சொத்துடமை-செல்வம்-முலதனம் முடகத்துக்குள் வந்துவிடும்.


ஓடுகின்ற அரோபியச் சர்வதிகாரிகள் ஏலவே "மக்கள் புரட்சிக்கு"தயாராகின்ற தேசங்கள்(சவுதி அரேபியா,குவைத்,கட்டார்) நோக்கியே ஓடுகின்றனர்.மேற்கில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

வழமையாக உலகச்சர்வதிகாரிகளுக்கு உறைவிடமான அமெரிக்கா இதில் கடுகளவும் இடம்கொடுக்காது ஜனநாயக வேடங்கொண்டும் உள்ளது.இதன் அச்சொட்டான அரசியல் என்னவாக இருக்க முடியுமென்பதற்காக மேலே சொன்னவற்றை மீளச் சிந்திப்பதில் கவனமெடுத்தால் நிச்சியம் இந்தப் போராட்டத்தின் திசைவழியைப் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக அரேபியத் தேசங்களது இன்றைய போராட்டமானது "சமூக இணையத் தொடர்பாடலது அழுத்தமான பங்களிப்புடனே"யேதாம் அரேபியத் தேசத்துள் "மக்கள் எழிச்சி" எழுந்துள்ளதாகவும்,ரிவிட்டர்,பேஷ்புக்-புளக்கர் போன்ற இணையவழி ஊடகங்களே இதைச் சாத்தியமாக்கப் பெரும் பங்கு செய்ததாகவும் பலர் குரலிட முனைகின்றனர்.மக்கள் எழிச்சிக்குள்ளாகும் சமூகப் புறநிலை எப்போதுமே இஸ்லாமிய மத அழுத்தங்களால் இல்லாதாக்கப்பட்டபோதும், அரேபியவுலகத்துள் சமூகவுணர்வானது வயிற்றுப்பாட்டின் வீச்சில் ஆவேசமாகும் என்பது ஏலவே அறியப்பட்டதே. இதை என் எகிப்தியப் பிரயாணங்களில் அதிகம் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன்.

இத்தாலிய மாபியாக்களது "மாபியாப் பொருளாதாரம்"உலக வணிகத்துள் நாற்பது வீதம் சுழல்கிறது என்கிறார் "மாபியா டொச்சுலாந்து"என்ற நூலின் ஆசிரியர் இயூர்கன் இரொத் .மேற்குலகில் வீழ்த்தப்படும் மாபியாக்களது இறுதியிடமானது அரேபிய-ஆசியக்கடற்கரைகளாக இருக்கின்றவென்பதை நான் சார்மல் சைக் நகரத்தில் கண்டேன்.அரேபிய-ஆசியக் கடற்கரைகளில் நிறுவப்படும் பல நட்ஷத்திர ஓட்டல்களும்,உல்லாசப் பிரயாணத்துறையையும் இந்த இத்தாலிய-உலக மாப்பியாக்களே கைப்பற்றியுள்ளனர்.இவர்களால் மொய்க்கப்பட்ட அரேபிய உலகக் கடற்கரைகளது பரந்தவெளிகள் மேற்குலகத்துக்கு நல்ல வருமானந்தரும் வியாபாரமாக இருக்கிறது.என்றபோதும் இந்த அரேபியப் போராட்டத்தால் இப் பொருளாதாரத் துறை நொருங்கிவருகிறது.இதை அனுமதிக்கும் மேற்குலகம் இந்த மாபியாக்களாலேயேதாம் ஆளப்படுகிறது.என்றபோதும் ஏன் இந்தப் போராட்டங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கு?வரவேற்று,வாழ்த்துவதன் நோக்கமென்ன?

எண்ணை டொலர்[Petrodollar] :

இன்றைய மேற்குலகத்தின் இதுகாலவரையான இயக்கத்துக்கு-இருப்பு பக்கப்பலமாக இருப்பவை உலக நாணய நிதியம்,உலக வங்கி என்பது ஒருவகையான உண்மை.இந்த வங்கிகளது வாடிக்கையாளர்கள் அதிகமாக மூன்றமுலகம் எனப்படும் தேசங்களே.கடன் கொடுத்தல் வட்டியறவிடுதல் என்பதையுந்தாண்டி இவ் வங்கிகள்-நிதியங்கள் சம்பந்தப்பட்ட தேசங்களது அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துபவை.

இந்த உலக வங்கி,நாணய நிதியங்களுக்கு எவர்களது நிதி வந்துசேர்கிறது-எப்படி வந்து சேர்கிறதெனப் பலருக்கு புரியும்.அதிகமான வளர்ச்சியடைந்த தேசத்து அரசுகளது நிதிமூலதனமே இவற்றுக்கூடாக நகர்வதாக நாம் அறிவோமா?ஆனால்,அது கடுகளவும் உண்மையில்லை!




இன்றைய நவலிபரல் பொருளாதார நகர்வில் ஊகவணிகம் அனைத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறது.உணவுப் பொருட்களையே ஊகவணிகம் விட்டுவிடவில்லை.பொருளாதாரச் சழற்சி நொடிவதும்,தேங்குவதும்,துண்டு விழுவதும்,கருப்பு மூலதனம் பணவீக்கத்தைச் செயற்கையாகப் பின்னுவதும் தொடர்கதையே.மேற்குத் தேசங்களே திவாலாகும் இன்றைய சூழலில் அமெரிக்கா கடன் பளுவிலும் 500 மில்லியன்கள் டொலருக்கு அவ்கானிஸ்தானில் தூதுவராலயம் அமைக்கிறது.தேசங்கள்,மக்கள் துவண்டுபோகும்போதும் அதிகார வர்க்கம்-ஆதிக்க வர்க்கம் தமது கைகளில் கடிக்கும் நிதிப் பளுவை மக்களது தலையிற்சுமத்துவதை ஐரோப்பியக் கூட்டமைப்பினது யூரோ நாணயத்தைக் காக்கும் நிதியீடுகளுக்குள் காணமுடியும்.அதை செவிவழி Doves G-20 பொருளாதாரக் கூட்டினது [Weltwirtschaftsforum in Davos] சந்திப்புக்குள் கேட்டக முடியும்.

பொருளாதாரம் பொறியும்போது,உலக வங்கி,நாணய நிதியம் தனது கையிருப்புத் தங்கத் தைச் சீனாவுக்கு விற்றுக் கொண்டதென்பதும் வரலாறு.

செல்வம் எங்கே?சேந்த நிதி எங்கே?உலக வங் கிகளது கையிருப்பில் இருக்கும் ரிசேர்வ்த் தங்கம்,பெற்றோலிய டொலர்களது புண்ணியம்.அதென்ன பெற்றேலாலிய டொலர்?
லருக்குப் புரியும்.எண்ணை விலை உயர்ந்தபோதும்,உயரும்போதும் குவியும் உபரிச் செல்வமானது அரேபிய மாபியாக்களது(தேசத்துத் தலைவர் எனக்கொள்க)கைகளில் குவியும்.அதை அவர்கள் மேற்குலக வங்ககளில் குவித்துவைத்துக் கனவு காண்பர்.அப்படிக் குவிக்கப்பட்ட பணம் பெற்றோலிய டொலர்கள் என்பது வரலாறு.இதன் பெறுமதி அண்ணளவாக 15 றில்லியன்கள் எனக் கொள்ள முடியும்.எனினும்,சட்டபூர்வமாக அது 6 றில்யன்கள் எனச் சொல்கிறார்கள்.இந்த பெற்றோலிய டொலர்கள் சமீபத்துப் பொருளாதாரப் பொறிவில் 25 வீதம் மூன்றே மாதத்துள் சாம்பலாகியது.அப்படியிருந்தும் இன்னும் 75 % வீதம் அமெரிக்க-ஐரோப்பிய வங் கிகளுக்குள் சுழ ல்கிறது.

இந்தப் பணம் யாருடையது?:

அரோபிய தேசங்களது தலைவர்கள்,அமைச்சர்கள்,அரேபியச் சேக்குகளது.அரோபியாவுக்கு"ஜனநாயக ஏகாதிபத்தியம்"மக்கள் புரட்சியெவெடிக்கும்போது ஒரு பென் அலி தனது பெற்றோலிய டொலர்ச் சேமிப்பை இழந்தார்.அதன் பெறுமதி 8 பில்லியன் டொலரென மதிப்பிடப்படுகிறது.

இத்தகைய பெற்றோலிய டொலர் உரைமையாளர்கள் ஒவ்வொன்றாகச் சரிவார்கள்.இது திட்டமிடப்பட்ட,நவீனத் தட்டிப்பறிப்பு.அதற்கு மக்களது ஆவேசம்,வர்க்கப் போராட்டமே பலியாகி ஒவ்வொரு அரேபிய தேசத்துக்கும் புதிய மேற்குலக எடுபிடிகள் பதவிக்கு வருவார்கள்.

அவர்கள் ஜனநாயகம் அதிகமாகப் பேசுவார்கள்.

பழைய பெற்றோலிய டொலர் உரிமையாளர்கள் தலை தப்பினால் போதுமென ஒதுங்க அவர்களது மக்கள் விரோதத்தின் அரசியல்-உரிமைப் பிரச்சனையுள் இந்தப் பெற்றோலிய டொலர்கள் மாயமாக மறைந்துவிடும்.அரேபியத் தேசங்களுக்கு புதிதாய் வரும் அரசுகள் இந்தப் பெற்றோலிய டொலர்களை மீளப் பெற முனையுமா?

அப்படிப் பெற முடியாதவாறேதாம் இன்றைய துரோக அரசியல் அரேபிய தேசத்துள் 80களின் பின் பகுதி கிழக்கு ஐரோப்பிய-இருஷ்சிய வீழ்ச்சிகளை ஞாபகமூட்டுகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.01.11

No comments: