Monday, January 29, 2007

நாம் போற்றத்தக்க மகா கலைஞன்!


நாம் போற்றத்தக்க மகா கலைஞன்!



கீற்று இணையச் சஞ்சிகையில் திருவாளர் சார்ளிச் சப்பிளின் குறித்தவொரு துணுக்கு எழுதப்பட்டள்ளது!அதை வாசித்தபோது எனக்கு அவரது ஞாபகம் மேவிக்கொள்கிறது.அநேகமாகச் சார்ளிச் சப்பளீனின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டேன.; கூடவே அவரது அனைத்துப் படங்களும் என்னிடம் இருக்கிறது.இந்த மனிதரின் படங்கள் யாவையும் எனது மனதுக்குப் பிடித்துப்போய் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன்.


எதற்காக?


இவரது செயற்பாடுதான் என்ன?



உலகத்திலுள்ள எந்தத் திரைப்படக் கலைஞனுக்குமில்லாத சமூக அக்கறை இந்த மனிதரிடம் குடிகொண்டிருந்தது,மிகச் சிறப்பாக விளிம்புநிலை மக்களைப்பற்றிக் கரிசனையோடிருந்த இந்தக் கலைஞனை எனக்குப் பிடித்துப்போனது.


உலகத்தில் எத்தனையே மனிதர்கள் பிறக்கிறார்கள்,செத்தொழிந்து போகின்றார்கள்.ஆனால் சார்ளிக்குச் சாவேயில்லை என்பேன்!


சார்ளியின் படங்கள் எல்லாமே எனக்குப் பிடித்தவை.எனினும் அவரது நவீனக் காலம்((Modern Times -1936) எனும் படமே இந்த நூற்றாண்டிலும் பேசத்தக்க படமாகும்.


இந்தவுலகத்தில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்காக உழைத்து ஓடாய்ப்போகும் வதையைப்பேசும் அற்புதமான படைப்பு! அவரது இந்தப்படமானது நவீனக்காலத்தின் உருவாக்கமானது மனிதர்களை அவர்களது படைப்பாற்றிலிலிருந்து அன்னியப்படுத்தும் காலத்தின் கொடுமையையும்,அதன் வாயிலாக ஜந்திரத்தின் முன் மனிதன் செல்லாக் காசாக அடிமைப்பட்டுப்போன அவஸ்த்தையைச் சொல்லும் விதத்தில், சார்ளிச் சப்பிளின் மிக நேர்த்தியாகக் கலைப்படைப்பைக் கையாளுகிறார்.


இவரது அரிய கலைத்திறானது மக்களின் நலனை முதன்மைப்படுத்தி,அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்த திறனாகும்.காலத்தில் வாழ்ந்த கடைசி மனிதர் இந்தச் சார்ளிச் சப்பிளின்தான் என்று அறைகூவ முடியும்.


இன்றிருக்கும் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையானது வெறுமனவே இலாப வேட்கையுடையதல்ல.அது தனது வியாபித்த இருப்புக்கான போராட்டத்தையும் செயற்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு பொறிமுறையாகும்.இந்தச் சூழலில் மனித நாகரீகத்துக்குப் புறம்பான வகைகளில் அதன் அனைத்துப் பரிணாமங்களும் நிலைபெற்றிருக்கும் தறுவாயில் சாப்பிளீனின் நவீனக் காலமெனும் படம் மிகப் பெரிய அளவில் இந்தச் சமுதாயத்தைக் கேலிக் குள்ளாக்கி விமர்சிக்கிறது.ஜந்திரத்தோடு ஜந்திரமாகும் மனிதர்கள் இறுதியில் அதன் வீச்சுக் ஈடுகொடுக்க முடியாது அழியும் அவலத்தைப் பேசுவதையே முதன்படுத்தி,மக்களின் உரிமைக்காகப் பேசுவதில் சார்ளி மனித்துவத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறர்ர்.


இன்றையத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்கும்போது நமது சமுதாயத்தில் மனிதநேயத்தை உணராதவர்களே அதிகமாகி வருவதை அறியமுடியும்(சேரன் நீங்கலாக) கோடம்பாக்கமானது வர்த்தகச் சினிமாவின் வடிகட்டிய மாபியாக்களின் இருப்பிடமாகும்.இங்கு ஆணையும் பெண்ணையும் அறுத்து அந்தரத்தில் தொங்கப்போடும் கசாப்புக்கடை நிலையில், காசுபண்ணும் நிலையே கலையாகிறது.நாம் சார்ளிச் சப்ளீனிடமிருந்து நிறையக் கற்கவேண்டும்.


இந்தச் சமுதாயத்திலிருந்துகொண்டு,அதாவது கொடிய அடக்குமுறைச் சமுதாயத்துள் தானுமொரு உறுப்பினராக இருந்துகொண்டே மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இன்றையச் சினிமா நட்ஷத்திரங்கள் ,சார்ளிச் சப்பிளினிடமிருந்து மனித நேசிப்பையும், அதனூடாகச் சமுதாயத்தில் உழைப்பவர்கள்படும் துன்பத்தையும் காணமுயலும் சூழல் வரவேண்டும்.என்றுமில்லாதவாறு உழைப்பவர்கள் படும் துன்பம் இன்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.அந்த அவலத்தைப் பேசத்தக்க எந்தக் கலைவடிவத்தையும் தமிழர்கள் இதுவரை நேர்த்தியாகத் தரவில்லை.மானுட நேசிப்பற்றவொரு சூழலில் எவராலும் அந்த மகத்தான பங்கைச் செய்யமுடியாதென்பதற்குத் தமிழ்ச் சினிமாவும் அதன் கலைஞர்களுமே சாட்சியாக இருக்கின்றார்கள்!


இங்கேதான் சார்ளியின் சமூகநோக்கும்,வர்க்கவுணர்வும் மிகவும் ஒழுங்கமைந்த முறையில் உருவாகி அவரை மனிதத்தைப் பேசத்தூண்டும் மகத்தான மனிதராக்கிறது!இழந்துவரும் வாழ்வைக்கொண்டுள்ள மனிதனை இந்தவுலகம் உழைப்பாளியாக்கி உருக் குலைப்பதில் விடாமுயற்சியாவுள்ளதை அவர் தனது படைப்புகளில் சுட்டிக்காட்டி, இந்தச் சமுதாயத்தின் கோரத்தனத்தை அம்பலப்படுத்தி,அதற்கெதிரானவொரு வலுமிக்கப் போராட்டத்தைச் செய்தார், இந்தத் தரணத்தில்தான் ஜேர்மனியச் சர்வதிகாரி கிட்லருக்கெதிராகவும் அவரால் படைப்பைத் தரமுடிந்தது.அவரது சர்வதிகாரி(The Great Dictator-1940)எனும் படமானது மிகப்பெரிய பாசிச எதிர்ப்புப் படமாகும்.தான் வாழ்ந்த காலத்தில் தன் படைப்பை மிகப்பெரும் ஆயுதமாக முன் நிறுத்தி, இந்த முதலாளியத்தின் முதுகெலும்பை முறிப்பதற்காகப் போராடிய மேதையே சார்ளி என்பேன்.


எங்கோவொரு வழியில் போனபோது அவரையும் எண்ணிக்கொண்டேன்!



பரமுவேலன் கருணாநந்தன்


3 comments:

P.V.Sri Rangan said...

பரிசோதனைக்காக...

அருள் said...

சிரிக்க சிந்திக்க வைத்த சாப்ளின்
மகா கலைஞன்.

அருமையான கட்டுரை.வாழ்த்துக்கள்.

P.V.Sri Rangan said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,அருள்.