Friday, March 30, 2007

தோழி இலஷ்மிக்கான தோழமைக் கரமொன்று...

நிழற்கூத்தின் நிழலாடு படலம்.


(உயிரை நிழலாய் விரிக்கும் அன்புத் தோழி இலஷ்மிக்கான தோழமைக் கரமொன்று மெல்ல வருடும் தரணங்களாய்...)


இந்தக் கணம் வரை இந்தக் குதிரை நேரான பாதையிழந்து பிரயாணிப்பதை அதன்மீதிருந்து சவாரிக்கும் அந்தப் "பேரறிஞன்"அறிவதாகவும் இல்லை.இருந்தும் அவன் மீது காதல் கொண்டவர்களும் தம்முயிர் நீக்கும் பாசத்துக்குரிய தம்பிகளும் அந்தக் குதிரையைச் சரியான திசையில் சவாரிக்கும்படி கோருவதற்கும் எந்தப் பெரு மனமும் கொள்ளவேயில்லை.கலைக்குக் கொலை-கொலைக்குக் கலை,கலையின் கொலையில் கலைக்கு முயற்சிக்கும் நெடுந்துயில் கலைப்பில் மனதை வருடும் இசைப்பின் ஓரத்துச் சொற்றெறிப்பில் மருண்ட மனதுங் துறவு கொண்டே தொலைந்து போகும் ஒற்றைத் தரணங் காவுகொள்ளுமொரு தமிழர் உரிமைப் பொழுதின் அழிவில் நின்று...

நாமிருப்பது நலிந்துபோன பொருளுலகில்.நித்திரை செய்யும்போதுங்கூட வாடகை வீட்டின் கூலி பற்றியும் கூட்டுக் கொம்பனிகளென்ற பங்குச் சந்தைப் பெருந் தொழிலகத்தின் விடியலில் கைமாறப்பட்ட புதுப் பெரு முதலாளிகளின் கனவுக்குத் தீனியாவது எப்படியெனும் பயத்தில் தூக்கம் தொலைக்கும் இந்தக் கும்மிருட்டில் தன் முயற்சியில் சிறிதும் மனந் தளராத நம்மூர் விக்கிரமாதித்தனின் வினை முடுக்கிவிடும் வேகத்துள் வினையாகும் வெட்டேந்தித் தொழிலுக்கு "துரோகம்"எனும் முக மூடிப் பண்பு தமிழில் உச்சபட்ச பரப்புரையில் பொழுதெல்லாம் புடம்போட்ட சில புண்ணிய குறிப்புக்களுக்கு புகை சூழ்ந்த நம் குதிரைப் பாகனின் பகற் கனவு சிதலமடைந்து, சில சின்னத் தனங்கள் சிரசைக் குறிவைக்கும் நவீனத் தனங்களை நல்லதொரு வினையாகத் தினம் முடுக்குவதில் "அவன்"தேர்ந்த வியாபாரியாக இருந்தான்.ஆவணமென்றால் அஞ்சிக்கொள்ளும் அரண்ட விழிகளின் மருண்ட பார்வைக் கெடுதல் பழித்தொதுக்கும் பஞ்சிப் பொழுதுகள் படைத்தலற்ற புறத்தே வெருட்டவேண்டிய நிர்வாணப் புனைவு, நெடுந் தொலைவில் ஆடும் அக்கப்போர் எந்தப் பெயரில் "மையங்"கொள்ளும் எத்தனை ஆயிரம் சேர்த்து?

என்றோ ஓர் நாள் பொழிகின்ற பதவிப் பெருமழையின் பெரு விருப்போடு எல்லாம் மறந்த "அவன்"மீளவும் உயிர்த்திருப்பதற்கானவொரு திடீர் பாய்ச்சலாகத் தன்னம்பைக் குகைப் பாத்திரமறிந்து "படாத பாடுகள்" படுத்திய தமிழ்ப் புரவலர்களைப் பிடித்த சனியனின் வாலில் தைக்க வைத்து- தான் தொங்குவதென்று திடமனதோடான மிகைவிருப்பில், தன் பணி பிணி செய்து கிடப்பதேயென்பதாகச் செய்யுங் கடாசலில் பேரென்ன புகழென்ன எல்லாம் போகினும்"எனக்கெதிரான எந்தத் தும்மலையும்"நிறுத்தி விடுவதற்கேனும் தும்மலுக்குச் சொந்தமான மூக்கையறுக்கும் சூர்பனகைக் கோலத்தைக் கனாக் கண்டபடி கண்ணயர்ந்த சந்தர்ப்பத்தில் திடீர் நிலை மறுத்தொதுக்கி, அவன் வெருண்டெழுகின்ற திசையில் பேனைகளின் ஊர்வலம் அவனைப் பிய்த்தெறிவதற்கானவொரு மெட்டுக் கட்டுவதை- அவனுக்கு அருவெறுப்பாக இருப்பதை அவன் காவடி தூக்கிகளுக்கு மெயில் வரைந்த ஒரு நொடிப் பொழுதில், திரண்ட தமிழ்ப் பால் குருதிகளின் புடைப்புக்கு "பெட்டை"ஒருத்தி தன் நண்பன் போன திசை மறந்து திரண்ட வெண்ணையில் மிதந்த ஒரு சில மனிதக் கணங்களில் மெல்லக் கன்னம் வைத்த வெட்கம் பறந்த "மாவீரர்கள்"வானம் போய் கானம்பாடிக் கொண்டு இருவிரல் நீட்டிய வெற்றியும் மருண்ட கதையாய் கலைச்செல்வன் பொண்டாட்டியின் மனை புகுந்து புதுப் போராட்ட இலக்கில் போன உயிராய்ப்போன "சபாலிங்கத்தின் சமாதியின்" இன்றைய கதையும் தம் நிலை சொல்லும் சாத்திரமுண்டானால் சகலதையும் தொலைத்துவிடும் தமிழ் நெறிப் பரம்பலில் "எங்களுக்கென்ற"வினைப் பயன் நெடுக்கும் குறுக்குமாய் வெட்டும் விழுதில் தொங்கிய குரங்காய் அந்தப்"பேரறிஞன்!"

பிந்திய பொழுதொன்றின் பிறழ்வின் பின் வலிக் காலமொன்று நமக்கு நக்குத் தண்ணிக்கும் வழியற்ற பெரு வெளியைச் சுட்டி,வெருட்டிக் கொள்ளும் வினையொன்று புறத்தே வருமென்றெவர் புகல்வரொ அவர் குருடர்!நமக்கு நாமே கொள்ளி பிடிக்கும் கொடுங்கரத்தை இன்னொரு பொழுதில் தமிழின் நலமென்ற நலமடிப்பில் நம்ப வைக்கும் நடுச் சாமத்தில் பொழிகின்ற சுழியோட்டத்தில் கருமுளைக்குங் கொடு நிகழ்வில்லையென்ற உண்மைப் பொலிவுறும் பொழுதே தமிழின் இறுதிச் சாவோலை வரையும் காலம்.
விதி!

இதைவிடுத்தெதை விதைப்பேன் சொல் இலஷ்மி?

பரமுவேலன் கருணாநந்தன்
30.03.2007







No comments: