Monday, February 19, 2007

எஸ்.எஸ்.குகநாதன்: என்னைப்பற்றிய...



எஸ்.எஸ்.குகநாதன்:
என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்!


அன்பு வாசகர்களே,வணக்கம்!


நம்ம தேசத்துத் தமிழர்கள் தனி நாடு கேட்டுப் போராட வெளிக்கிட்டான்கள்.

அதை தத்தமது தேவைக்காகவும்,தமது வர்த்தக மற்றும் நிதிச் சேகரிப்புக்காவும்,பொருள் குவிப்புப் போட்டிக்காகவும் தொடங்கி, இப்போது பல்லாயிரம் மக்களைக் கொன்று- இந்தத் தொகை இலட்சத்தை எட்டும்போது, புலம் பெயர்ந்த மண்ணில் தத்தமது வியாபாரப் போட்டிக்காகப் புலிகளின் பினாமிகளும் ஈழத்து வியாபாரத் திமிங்கிலங்களும் தெருச் சண்டை போடுகிறாங்கள்.

அன்றைக்குத் தமிழ் ஒலி-தமிழ் ஒளி எனும் வானொலி,தொலைக்காட்சியை எழுத்தாளர் காவலூர் ஜெகநாதனின் தம்பி குகநாதன் புலம்பெயர் நாட்டில் முதன் முதலாக ஆரம்பித்து வியாபாரத்தில் ஓ.ஓஓஓஓஓஓஓஓஓ என்று ஓங்கியபோது, அதைப் புலிகள் கைப்பற்ற தலையால் கிடங்கிட்டுப் பற்பல மோசடியூடே கைப்பற்றினார்கள்.


குகநாதனோ வர்த்தகத் துறையில் முறைப்படிப் பட்டங்கள் பெற்றுத் தொழிலைத் திறம்பட நடாத்துவதில் எல்லோரையும் விஞ்சுபவர்.அவருக்கே தண்ணி காட்டிய புலிப் பினாமி வர்த்தகர்கள், மீளவும் இலண்டனில் இருந்து ஒலிப் பரப்பாகிய ஐ.பி.சி. எனும் வானொலியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை ஸ்தாபித்த நம்ம குரு திரு.தாசியஸ் என்ற முன்னாள் கல்விப் பரிசோதகர்-நாடக இயக்குனர் எவ்வளவு போராடியும் முடியாது ஓரம் போனார்.அந்தோ அதுவும் புலிகள் வசமாகின.

இப்போது புதிய போர்!

புலிகளின் பினாமி வர்த்தகர்களுக்கும் பொதுஜனச் சாதரண வர்த்தகர்களுக்கும் போட்டி மேல் போட்டி.இப்போது தெருச் சண்டை போட்டு,ஆளாளுக்குத் தாக்குதல் தொடுத்தபடி.

இது ஈழப் போராட்டத்தின் அடுத்த பிரதிபலிப்பு.

ஈழத்தில் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சி எப்படி இலட்சம் மக்களைக் கொல்லும் போராட்டமாக மாறியதோ,அதேமாதிரி இங்கேயும் ஐரோப்பாவில் தமிழன் அடிபடுகிறான் வர்த்தகப் போட்டியில்.


இவன்கள் எப்போது திருந்துவது?

சாதரணமாக இதை எடுத்துவிடாதீர்கள்.

இதற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மிகவும் பல ஒற்றுமைகள் உண்டு.அதனது முரண்பாடு இங்கே துலக்கமுறுகிறது.

இந்தத் தெரு நாய்கள்தான் தமிழருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பான்களாம்!

ஒருவனையொருவன் துரோகி சொல்லிப் பணம் உழைக்கும் தற்குறிகளா நமது மக்களின் விடுதலைக்குப் போராடி,வென்றெடுத்து நமது மக்களை விடுதலை செய்வது?

எல்லாம் பணத்துக்கும்-சந்தை வாய்புக்கும்தான் தமிழ்,தமிழ்-உறுவே,தொப்பிள் கொடி உறவே!கருணாநிதியும் திராவிடக் கட்சிகளும் இவர்களிடம் பிச்சை எடுக்க வேணும்.

இன்னும் அமைதியானால் சொல்லுவான்கள் பல.
கேளுங்கள் இவர்கள்தான் தமிழின் காவலர்கள்!
தூ....


கருணாநந்தன பரமுவேலன்
19.02.07



---------------------------------------------


என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்:

எஸ்.எஸ்.குகநாதன்

.
கடந்த சில நாட்களாக என்னைப்பற்றியும் டான் தொலைக்காட்சி பற்றியும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுவருகின்றன. தமிழகத்தில் எமது டான் தொலைக்காட்சி தமிழகத்திலுள்ள தொலைக்காட்சி விநியோகஸ்தர்களை மோசடி செய்துவிட்டது போலவும் அதற்காக எனது பெயரைக் குறிப்பிட்டு குகநாதனின் மோசடி என்றும் அந்த இணையத்தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதலில் டான் தொலைக்காட்சி எனக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்பதும், குறிப்பாக இந்தியாவில் டான் தொலைக்காட்சியை ஒளிபரப்பிவரும் டான் ரெலிவிசன் நிறுவனத்தில் நான் 30 சதவீத பங்குகளை மாத்திரமே கொண்டிருக்கின்றேன் என்பதையும் மிகுதி 70 வீத பங்குகளுக்கு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களே சொந்தக்காரர்கள் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மிக இலகுவாக மறந்துவிடுகின்றன.
தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

டான் தொலைக்காட்சியின் விநியோகஸ்தர்களாக அவர்களே விரும்பி அதற்காக முறைப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு விநியோகஸ்தர்களாகினார்கள். அதற்காக முற்பணமும் அந்த நிறுவனத்தின் பெயரில் அதன் வங்கிக் கணக்கிற்குத்தான் செலுத்தினார்கள். அவர்களை டான் நிறுவனம் ஏமாற்றியதென்றால் அந்த நிறுவனத்தின் மீதுதான் அவர்கள் புகார் கூறலாம். அந்தப் பணத்தை நான் தனிப்பட்ட முறையில் மோசடி செய்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்றைய பங்குதாரர்கள் தான் என்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தலாம்.அதுதவிர, மூன்று தொலைக்கட்சி சேவைகளை தமிழிலும் ஐரோப்பாவின் பிரபல தொலைக்காட்சிகளான ய+ரோ நிய+ஸ(Euro news) ரேஸ்ரிவி (Trace TV) என்ற மிய+சிக் செனல் ஆகியவற்றையும் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது வருகின்றது டான் ரெலிவிசன் நிறுவனம். இந்த ஐந்து தொலைக்காட்சிகளையும் 2005 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒளிபரப்புவதற்கு அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை முதலிட்டிருக்கும் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மறந்துவிடுகின்றன.



டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி இன்றும் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகின்றது என்பது மாத்திரமல்ல ஐரோப்பாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சியை இந்தியாவில் மறுஒளிபரப்புச் செய்துவருவதும் டான் ரெலிவிசன் நிறுவனம்தான் என்பதும் பலருக்குத் தெரியாவிட்டாலும் அந்த விநியோகஸ்தர்களுக்குத் தெரியும். டான் ரிவி தமிழகத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியபோது அதனை தமிழகத்தில் சன்ரிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. என்ற கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் தவிர்ந்த ஏனைய அனைத்து கேபிள் ரிவி ஆப்பரேட்டர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள் என்பதையும் சில அதிகாரத்திலுள்ளவர்களின் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அந்த கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் ஒளிபரப்பியதையும் ஏன் இந்த இணையத்தளங்கள் குறிப்பிட மறந்துவிட்டன என்பதும் தெரியவில்லை.

ஒரு ஈழத்தமிழனின் தொலைக்காட்சியைக் கண்டு அந்த ஜாம்பவான்களே பயந்தார்கள் என்றால் அதைக்கண்டு உண்மையான ஈழத்தமிழன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டில் ஒளிபரப்பாகும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு ஒரு ஈழத்தமிழன் அனுமதியைப் பெற்றிருக்கின்றான். இது என்னைப்பொறுத்தவரை பெருமைக்குரியவையே எம்மை ஒழிப்பதற்காக என்றே சிலர் எடுத்த நடவடிக்கையின் விளைவாக நாம் எமது செயற்பாடுகளை சென்னையில் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றோமே தவிர, எமது செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிடவில்லை.ய+ரோ நிய+ஸ், ரேஸ்ரிவி என்பன இன்றும் இந்தியா எங்கும் ஒளிபரப்பாகிவருவதுடன், இந்தியாவின் முன்னணி டிரிஎச் சேவையான டிஷ் ரிவியிலும் இன்றும் ஒளிபரப்பாகிவருகின்றது. டான் ரெலிவிசன் நிறுவனம் பாண்டிச்சேரியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் இல்லத்திலேயே இயங்கிவருகின்றது. சென்னை கலையகம் மாத்திரமே தற்காலிகமாக மூடப்படிருக்கின்றது. நான் இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் குறிப்பிட்டுவருகின்றன. நான் கடந்த வாரமும் அங்குதான் இருந்தேன் என்பதை எமது நண்பர்கள் அறிவார்கள்.
(படங்களுக்கு நன்றி.நிதர்சனம்.கொம்)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக கோவை நந்தனை அனுப்பி அந்த ஏற்பாடுகளைச் செய்கின்ற அளவிற்கு ஒன்றும் விபரம் தெரியாதவன் நானல்ல. தொலைக்காட்சி நடாத்துவது என்பது இணையத்தளங்களை நடாத்துவது போன்ற ஒன்று என்று கருதுபவர்கள் தான் கோவை நந்தனை அனுப்பி அந்த பணிகளை செய்ய முயலலாம்.என்னைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவதற்காக சில இணையத்தளங்களும் சில தனிப்பட்டவர்களும் செய்துவருகின்ற விசமப்பிரச்சாரமே இது என்பதை எமது ஊடகப்பணியை நேசிக்கும் அன்பர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.அண்மையில் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாரிஸ் வந்தபோது நானே கூட்டத்திற்கு இடம் ஏற்பாடுசெய்ததாகவும் புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அமைச்சரின் வருகைக்காக கூட்டத்தை தமது அலுவலகத்திலேயே சிறிலங்கா தூதரகம் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்கு குகநாதனின் உதவி எதற்காக பயன்பட்டது என்பது தெரியவில்லை. அதுமாத்திரமல்ல, அவர் வருகையின்போது நான் இந்தியாவில் இருந்தேன்.ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ்ஒளி என்கின்ற தொலைக்காட்சி இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்று மிகச் சாதாரணமாக இந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டிற்கு முன்பு மாத்திரமல்ல, பத்து ஆண்டுகளாக தமிழ்ஒளி ஐரோப்பிய மண்ணில் வந்துகொண்டிருக்கின்றது என்பதும் சில வாரங்களாக மாத்திரம் காணாமல்போன அந்த தொலைக்காட்சி இவ்வாரம் முதல் மீண்டும் வந்திருக்கின்றது என்பதையும் இந்த இணையத்தளங்கள் வேண்டும்என்றே மறைத்துவிட்டன. தமிழ்ஒளி என்ற அந்த தொல்லைக்காட்சி தான் இன்று ரிரிஎன் என்ற பெயரில் தேசியத்தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது என்பதையும் இன்று புதிதாக இணையத்தளம் மூலம் ஊடகத்துறைக்கு வந்த இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இனியாவது தெரிந்துகொள்வது நல்லது.

நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நண்பர்கள் சிலருடன் இணைந்து தொலைக்காட்சியை ஆரம்பித்தபோது என்னை நம்பி நிதி உதவி செய்துவிட்டு இன்றுவரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் - இன்று வரை என்னுடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்கள் வேண்டுமானால் என்னை நோக்கி தங்கள் சுட்டுவிரல்களை நீட்டலாம். வேறு எவருக்கும் என்னை நோக்கி சுட்டுவிரல்களை மாத்திரமல்ல கண்பார்வையைக் கூடத் திருப்பும் தகுதியோ அருகதையோ இல்லை.


தேனியீலிருநது...

2 comments:

Anonymous said...

DAN TVயின் மோசடி??!!

குமுதம்-ரிப்போர்டர் ஏட்டில் வெளிவந்த கட்டுரை)


ஓராண்டிற்கு முன்னால் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒளிபரப்பான ‘டான் தமிழ் ஒளி’ என்கிற சாட்டிலைட் சேனல், தமிழ்த்தொலைக்காட்சி உலகை ஒரு கலக்குக் கலக்கியது. இந்த சேனலுக்குக் கிடைத்த வரவேற்பால், டான் மியூசிக், டான் சினிமா என்ற புதிய சேனல்கள் அதிரடியாக முளைத்தன.

இப்படி ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல்கள், இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது.

இந்த நிலையில், ‘எங்களிடம் பல லட்ச ரூபாய்களை வசூலித்துக் கொண்டு, எங்களுக்கு நாமம் போட்டு விட்டது டான் டி.வி. நிர்வாகம்,’ என்று புலம்பிக் கொண்டு திரிகிறார்கள் தமிழ்த் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள்.

‘டிஷ்’ ஏசியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடட்’ என்ற விரிவாக்கம் கொண்ட டான் டி.வி., பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம். இது தமிழர்களுக்காக ‘டான் தமிழ் ஒளி’ என்ற சாட்டிலைட் சேனலை, 1997 முதல் தொடங்கி நடத்தி வருகிறது. அயல்நாட்டுத் தமிழர்கள் மத்தியில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருந்த டான் டி.வி.யின் கவனம், தமிழ்நாட்டின் மீது திரும்பியது. இந்தியாவிற்குள்ளிருந்து ஒளிபரப்பும் அனுமதியை இதனால் உடனடியாகப் பெற முடியாத காரணத்தால், பிரான்ஸிலிருந்தே இதன் ஒளிபரப்பு தொடங்கியது.

ராஜ் டி.வி.யில் மிக முக்கியப் பொறுப்பை வகித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கபிலன் என்பவர், இந்தியாவில் டான் டி.வி. குழுமத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாண்டிச்சேரியில் நிர்வாக அலுவலகத்தையும், சென்னை அசோக் நகரில் செயல் அலுவலகத்தையும் கொண்டு, கடந்த 2005 நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் டான் டி.வி.யின் தமிழ் ஒளி தன்னுடைய சோதனை ஒளிபரப்பைத் தொடங்கியது.

இலங்கைத் தமிழில் கதைத்து, தமிழ் சினிமாக்களின் பாடல்களையும், காட்சிகளையும் டான் டி.வி.’ ஒளிபரப்பிய விதம், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. செய்திகள் ஒளிபரப்பாகின. மேலும் தூர்தர்ஷன், ராஜ் டி.வி., ஜெயா டி.வி. போன்றவற்றில் ஒளிபரப்பாகி ஹிட்டான தொடர்களை மறு ஒளிபரப்பச் செய்ய, டான் டி.வி. ஏற்பாடு செய்தது. ‘பழைய தமிழ்ப்படங்கள் அனைத்தையும் விரைவில் நீங்கள் காணலாம்’ என்று அறிவிப்பையும் அது வெளியிட்டது.

இதனையடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முன்னணி கேபிள் ஆபரேட்டர்களும் டான் டி.வி.யின் தமிழ் சேனல்களை முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பினர்.

தமிழகத்தில் தமிழ் ஒளி சேனலுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, டான் மியூசிக், டான் சினிமா என்ற இரு புதிய சேனல்களையும் டான் டி.வி. நிர்வாகம் தொடங்கியது.

இந்த நிலையில்தான், தன் மூன்று சேனல்களையும் கட்டண சேனல்களாக மாற்றியது டான். கேபிள் ஆபரேட்டர்கள் டான் டி.வி.யின் ஒளிபரப்பைக் காட்டுவதாக இருந்தால், அதற்கான சிக்னல் டி கோடர் கருவிகளை வாங்குவதோடு, ஒளிபரப்புக்கான சந்தாவையும் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விநியோகஸ்தர்களை டான் டி.வி. நிறுவனம் நியமனம் செய்தது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ‘நான்’, ‘நீ’ என்று போட்டி போட்டுக் கொண்டு டான் டி.வி. ஒளிபரப்பு விநியோக உரிமையைப் பலரும் பெற்றனர். டெபாசிட் தொகையாக அவர்களிடமிருந்து ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து, ஐந்து லட்சம் வரையில் வசூலிக்கப்பட்டது.

தமிழக மக்கள் மத்தியில் டான் டி.வி. பிரபலமடைந்து தங்களுக்கு வணிக ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிய பிறகுதான், பிற சாட்டிலைட் தமிழ் சேனல்கள் விழித்துக் கொண்டன. தமிழ்த் திரைப்படங்களை சின்னத்திரையில் வெளியிடும் உரிமையை சன் டி.வி.யும், ராஜ் டி.வி.யும் மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டிருந்தன.

அப்படிப்பட்ட படங்களின் காட்சிகளும் படங்களும் தமிழ் ஒளியில் ஒளிபரப்பாவதைக் கண்ட சன் டிவி, ராஜ் டி.வி. போன்றவை அதிர்ந்தன. சட்டரீதியாக டான் டி.வி. மீது நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளில் இறங்கின.

தாங்கள் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை டான் டி.வி. தொடர்ந்து சட்ட விரோதமாகத் திரையிட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஜ் டி.வி. நிர்வாகம் சென்னை மாநகர போலீஸில் புகார் செய்தது. காப்பிரைட் விதிமுறைகளை மீறி படங்களைத் திரையிட்டதாக போலீஸார் டான் டி.வி. மீது 2006_ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, டான் டி.வி.யின் பார்ட்னர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த குலாம் என்பவர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். தங்கள் மீது இப்படியரு நடவடிக்கை அதிரடியாகப் பாயும் என்று எதிர்பாராத டான் டி.வி. நிர்வாகம் கதிகலங்கிப் போனது.

டான் டி.வி.யை ஒளிபரப்பிய கேபிள் ஆபரேட்டர்களுக்கோ வேறு மாதிரியான நெருக்கடிகள் உண்டாகின. ‘டான் டி.வி.யை ஒளிபரப்பினால் இனி எங்களுடைய சேனல்களை ஒளிபரப்ப அனுமதி தரமாட்டோம்’ என்று பிற சாட்டிலைட் தமிழ் சேனல்கள் நெருக்கடி கொடுத்தன.

இதனால் வேறு வழியின்றி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் டான் டி.வி.யை ஒளிபரப்புவதை நிறுத்தினர். இந்தியாவில் அமர்க்களமாகத் தொடங்கிய டான் டி.வி.யின் ஒளிபரப்பு, 2006_ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் முடிவிற்கு வந்தது. தமிழகம், பாண்டியில் இயங்கிய டான் டி.வி.யின் அலுவலகங்களும் பூட்டப்பட்டு விட்டன. டான் டி.வி.யின் துணைத்தலைவரான கபிலன் உள்ளிட்ட அதன் நிர்வாகி கள் தலைமறைவாகி விட்டனர்.

இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, 25.11.2006_ல் டான் டி.வி.யின் தலைவரான குகநாதனின் பெயரால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘வணிகப் போட்டியினை எதிர்கொள்ளும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மீதான வழக்கு முடிந்து மறுபடியும் ஒளிபரப்பு தொடங்கும் வரை நீங்கள் எங்கள் விநியோகஸ்தர்களாகத் தொடர்ந்து இருந்து ஒத்துழைப்பைத் தரப் போகிறீர்களா? இல்லை, உங்களின் விநியோக உரிமையை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட விரும்புகிறீர்களா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், டான் டி.வி.யின் விநியோகஸ்தர்களாக நீடிக்க யாரும் விரும்பவில்லை. தங்களுடைய டெபாசிட் தொகையைத் திரும்பத் தரும்படி அவர்கள் பிரான்ஸிலிருக்கும் டான் டி.வி.யின் நிர்வாக அலுவலகத்திற்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தனர். ஆனால், இதுநாள் வரை எந்தப் பதிலும் இல்லை. பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் சிலரைச் சந்தித்தோம்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுனில்குமார் என்ற விநியோகஸ்தர், ‘‘டான் டி.வி.யோட துணைத் தலைவர் கபிலனைத்தான் எங்களுக்குத் தெரியும். அவரிடம்தான் டெபாசிட் தொகையான ஐந்து லட்ச ரூபாயைக் கொடுத்தேன். டான் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட பிறகு, ஆறுமாதம் கழித்து டெபாசிட்டை திரும்பத் தருவதாகக் கடிதம் வந்தது. ஆனால், பணம் வரவில்லை. எங்களை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம். இது குறித்து தமிழக முதல்வரிடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் புகார் கொடுக்க உள்ளோம். இந்தியா முழுவதும் நடந்த மிகப்பெரிய மோசடி இது!’’ என்று குமுறினார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமு, கோவையைச் சேர்ந்த ஜெய்லா ஆகியோரிடம் பேசினோம். அவர்களும் கபிலனையே குறை சொன்னார்கள். ‘‘எங்களிடம் தகவல் சொல்லாமல், நிறுவனத்தை மூடிவிட்டு ஓடியது மிகப்பெரிய ஏமாற்று வேலை. தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட பேர் இவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டிலிருக்கும் டான் டி.வி. நிறுவனத்திடமிருந்து எங்களின் பணத்தைப் பெற்றுத்தர தமிழக முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

‘‘வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் டான் டி.வி.யின் பெயரால் டிராப்ட்டாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. பணமாக அதை நாங்கள் வசூலிக்காததால் தப்பித்தோம். இல்லையென்றால், நாங்களும் இந்த மோசடிப் புகாரில் சிக்கியிருப்போம்!’’ என்றார் டான் டி.வி.யின் முன்னாள் ஊழியர் ஒருவர்.

Anonymous said...

//...தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை....//

அப்ப கோடிக்கணக்காக கொள்ளை அடிச்சவனெல்லாம் இந்தியாவில் சிறை வாசம் தான் என்கிறீர்கள்???
ந்ல்ல ஜோக் தான்!!!!!