Saturday, January 05, 2008

நேபாள மாஓவாதிகளை உள்ளடக்கிச் செய்தி வெளியிட்டிருந்தன...

புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெறுவோர் பட்டியலிலும் நேபாள மாஓவாதிகளை உள்ளடக்கிச் செய்தி வெளியிட்டிருந்தன.


"எனக்குள் ஒரு சிறிய ஐயம்.
ப்ரசண்டா மெய்யாகவே என்ன சொல்லியிருப்பார்
என்று
அறிய இணையத்தளத்திற்குப் போனேன். "


>>>பல பொய்கள் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்குகிற நோக்கில் அல்லது ஏற்கெனவே உள்ள சில எண்ணங்களை வலுப்படுத்துகிற நோக்கில் உற்பத்தியாகின்றன. ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகிவிடும் என்கிற கலாநிதி கொயபெல்ஸின் ஃபாஸிஸ நடைமுறை அவதானிப்புப் பற்றிப் பகிரங்கமாகப் பேசாது போனாலும், அந்த நடைமுறையைத் தந்திரமாக நிறைவேற்றப் பல முகவர்களைத் தம்வசம் வைத்துத்தான் சி.ஐ.ஏ.முதலாக றோ வரையிலான உளவு நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன. அவற்றுக்கு உடந்தையாக ஊடக நிறுவனங்கள் பல இயங்கி வந்துள்ளன. இப்போது இணையத் தளங்களும் சேர்ந்து கொண்டுள்ளன. தகவல் புரட்சி என்கிறார்களே, அதில் இப்போது தகவல் புரட்டும் பெருமளவில் உள்ளது. <<<


//அயல் ஊடகங்கள் இத்தகவலை உண்மைக்கும் பத்திரிகா தர்மத்திற்கும் முன்னுதாரணமாக
விளங்கும் எங்கள் ஐலன்ட் ஏட்டிலிருந்தே பெற்றிருந்ததும் தெரிய வந்தது. மனதுள்
வள்ளுவருக்கு நன்றி சொல்லி விட்டு இணையத்தளத்திலிருந்து விடைபெற்றேன்.
இதே
இலங்கை ஊடகங்கள் சில மாதங்கள் முன்பு வரை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம்
வழங்குகிறவர்களின் பட்டியலிலும் விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெறுவோர்
பட்டியலிலும் நேபாள மாஓவாதிகளை உள்ளடக்கிச் செய்தி வெளியிட்டிருந்தன. இப்
பட்டியலில் உள்ளடங்குகின்ற இயக்கங்கள் அல் ஹைடா முதலாக மாஓவாதிகள் வரை
அமெரிக்காவுக்கு எதிரான பலவிதமான போராளி அமைப்புக்களும் மட்டுமன்றி அமெரிக்காவின்
ஏவல்நாய் போல இயங்கும் எதியோப்பியாவின் தாக்குதலுக்கு ஆளாகி வந்த எரித்திரியா கூட
உள்ளடங்கி இருந்தது. இந்த விதமான பட்டியல்கள் யாரால் ஏன் உற்பத்தி செய்யப்படுகின்றன
என்று விளங்கிக் கொள்வது கடினமல்ல. ஆனால், இவற்றின் உற்பத்தித் தரம் கொஞ்சங்
கொஞ்சமாக குறைந்து கொண்டே போகிறது. பொய்களை நம்பகமானவையாக்குவதற்கு முன்பு
எடுக்கப்பட்ட முயற்சிகள் கூடிய கவனத்துடன் எடுக்கப்பட்டன என்பது உண்மையாக
இருக்கலாம். ஆனாலும், இப்போது பொய்களின் நோக்கம் அவற்றை எல்லாரும் எப்போதும் நம்ப
வேண்டும் என்பதல்ல என்றே ஊகிக்கிறேன் . பல குறுகிய கால பாவனையின் பின்
எறிவதற்கானவை. //




இன்று இலங்கையின் சனநாயகம் கடுமையான சோதனைகளை எதிர்நோக்குகிறது.



நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் `ப்ரசண்டா' விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென்றும் தனி மனிதப் படுகொலைகளை நிறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதாக 2007 டிசம்பர் பிற்பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. அது உண்மையா பொய்யா என்பது ஒருபுறமிருக்க அது சாத்தியமா இல்லையா என்று யோசித்தேன். அது சாத்தியமானது போலவே இருந்தது. அடுத்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டுப் பேச்சுவார்த்தைகளுக்குப் போக வேண்டும் என்று ஆலோசனை சொன்னார் என்றுஞ் சொல்லப்பட்டிருந்தது. ஆயுதங்களைக் களையாமலே பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கப்பட்ட அடிப்படைகளின் மீது தேர்தலில் பங்குபற்ற உடன்பட்டு அதன் பின்பு பிரதமரின் தரப்பு ஏமாற்றப்பார்க்கிறது என்று அறிந்ததால் மீண்டும் ஆயுதமேந்திப் போராட நேரிடும் என்று எச்சரித்து ஆட்சியினின்று விலகி பிரதமரைப் பணிய வைத்த ஒரு இயக்கத்தின் தலைவர் இப்படி ஒரு ஆலோசனையை முன்வைப்பாரா என்று யோசித்தேன். இதுவும் ஒரு வரையறைக்குட் சாத்தியமானதே என நினைத்தேன். எல்லா மாக்ஸிய லெனினியவாதிகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குப் பேச்சவார்த்தை மூலமான தீர்வையே வற்புறுத்துமளவில் அதில் ஒரு பகுதியாவது உண்மையாய் இருக்கும் என்று நினைத்தேன்.




இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து டெய்லி மிரர் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. ப்ரசண்டாவே சொல்லி விட்டார், பிரபாகரன் கேட்க வேண்டிய நல்ல ஆலோசனை என்ற விதமாக தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. என்றாலும் எனக்குள் ஒரு சிறிய ஐயம். ப்ரசண்டா மெய்யாகவே என்ன சொல்லியிருப்பார் என்று அறிய இணையத்தளத்திற்குப் போனேன். ப்ரசண்டா, ஷ்ரீலங்கா, விடுதலைப்புலிகள் என்ற சொற்களை வைத்துத் தேடினேன். பத்தாயிரக்கணக்கான பதிவுகள் இருந்தன. எனினும், அது பொருத்தமானவை முதலில் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் இலங்கையில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தென்னாசிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் சொன்னதாகவும் ஒரு செய்தித் தலைப்பு இருந்தது. நேபாள மாஓவாதிகளுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்புப் பற்றி அறிந்த ஒருவர் இப்படிப் பேசியிருப்பாரா என்று மனதில் ஐயம் எழுந்தது.


ஒவ்வொரு செய்தித் தலைப்பின் கீழும் முழுச் செய்தியையும் காண்பதற்கான இணைப்பு அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கம், இராணுவம், பிரதான இலங்கை ஊடக நிறுவனங்கள் என்பனவே தகவல்களின் தோற்றுவாய்களாகக் கூறப்பட்டிருந்தன. திருவள்ளுவர் நினைவுக்கு வந்தார், `எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்...'.மெய்ப்பொருள் காணுவது இந்தத் தகவல் யுகத்தில் மிகவும் கடினம். எனினும், ஆழமாகத் தேடினால் உண்மை சில கிடைக்கும் என்று ஒவ்வொரு தகவலாகத் துருவினேன். முதல் இரண்டும் பற்றிய விரிவான அறிக்கைகள் கைக்கெட்டின. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது பற்றிய விரிவான விளக்கம் எதையுமே எட்ட இயலவில்லை. எனினும் மற்றவை கூறப்பட்டிருந்தன. தகவலின் தோற்றுவாய் எது என்று தேடினால் அது அமைச்சர் சிறிபால டீ சில்வா என்று தெரியவந்தது.



அயல் ஊடகங்கள் இத்தகவலை உண்மைக்கும் பத்திரிகா தர்மத்திற்கும் முன்னுதாரணமாக விளங்கும் எங்கள் ஐலன்ட் ஏட்டிலிருந்தே பெற்றிருந்ததும் தெரிய வந்தது. மனதுள் வள்ளுவருக்கு நன்றி சொல்லி விட்டு இணையத்தளத்திலிருந்து விடைபெற்றேன்.
இதே இலங்கை ஊடகங்கள் சில மாதங்கள் முன்பு வரை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்குகிறவர்களின் பட்டியலிலும் விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெறுவோர் பட்டியலிலும் நேபாள மாஓவாதிகளை உள்ளடக்கிச் செய்தி வெளியிட்டிருந்தன. இப் பட்டியலில் உள்ளடங்குகின்ற இயக்கங்கள் அல் ஹைடா முதலாக மாஓவாதிகள் வரை அமெரிக்காவுக்கு எதிரான பலவிதமான போராளி அமைப்புக்களும் மட்டுமன்றி அமெரிக்காவின் ஏவல்நாய் போல இயங்கும் எதியோப்பியாவின் தாக்குதலுக்கு ஆளாகி வந்த எரித்திரியா கூட உள்ளடங்கி இருந்தது. இந்த விதமான பட்டியல்கள் யாரால் ஏன் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று விளங்கிக் கொள்வது கடினமல்ல. ஆனால், இவற்றின் உற்பத்தித் தரம் கொஞ்சங் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகிறது. பொய்களை நம்பகமானவையாக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முயற்சிகள் கூடிய கவனத்துடன் எடுக்கப்பட்டன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனாலும், இப்போது பொய்களின் நோக்கம் அவற்றை எல்லாரும் எப்போதும் நம்ப வேண்டும் என்பதல்ல என்றே ஊகிக்கிறேன் . பல குறுகிய கால பாவனையின் பின் எறிவதற்கானவை.



பல பொய்கள் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்குகிற நோக்கில் அல்லது ஏற்கெனவே உள்ள சில எண்ணங்களை வலுப்படுத்துகிற நோக்கில் உற்பத்தியாகின்றன. ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகிவிடும் என்கிற கலாநிதி கொயபெல்ஸின் ஃபாஸிஸ நடைமுறை அவதானிப்புப் பற்றிப் பகிரங்கமாகப் பேசாது போனாலும், அந்த நடைமுறையைத் தந்திரமாக நிறைவேற்றப் பல முகவர்களைத் தம்வசம் வைத்துத்தான் சி.ஐ.ஏ.முதலாக றோ வரையிலான உளவு நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன. அவற்றுக்கு உடந்தையாக ஊடக நிறுவனங்கள் பல இயங்கி வந்துள்ளன. இப்போது இணையத் தளங்களும் சேர்ந்து கொண்டுள்ளன. தகவல் புரட்சி என்கிறார்களே, அதில் இப்போது தகவல் புரட்டும் பெருமளவில் உள்ளது.


ஏராளமான அரை உண்மைகளிடையே உண்மைகளைக் கண்டறிவது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. ஒரு அரை உண்மையை நம்ப விரும்புகிறவர்கள். அதிற் தமக்கு வசதியான பகுதிகளைத் தேர்ந்து பரப்புகிறார்கள். இதன் மூலம் பலரது சாட்சியமாக ஒரே பொய் சொல்லப்படுகிறது. அதை நம்ப விரும்புகிறவர்கள் அதற்கப்பால் எதையுமே தேடப் போவதில்லை.மாறாக வருகின்ற எத்தகவலையும் புறக்கணித்து விடுகிறார்கள். அவர்கட்கு வசதியாகவே அவர்கள் தேடி வாசிக்கின்ற நாளேடுகளும் விரும்பிக் கேட்கிற வானொலி நிலையங்களும் பார்க்கிற தொலைக்காட்சி நிலையங்களும் தேடுகிற இணையத் தளங்களும் அமைகின்றன.



மதமாகட்டும், அரசியலாகட்டும், நாம் நமது குருட்டு நம்பிக்கைகளின் கைதிகளாக உள்ளளவும் நம்மை ஏய்ப்பது எவருக்கும் எளிது. நாம் ஏமாற விரும்புகிற விதமாகவே நாளாந்தம் நாம் ஏய்க்கப்படுகிறோம். அவ்வாறே நாம் பிறரை ஏய்ப்பதிலும் ஒத்துழைக்கிறோம்.

பெனாசிர் பூட்டோ மீதான முதற் கொலை முயற்சியின் பின்பு ஆட்சியாளர் மீது தனது ஐயத்தை அவர் தெரிவித்திருந்தார். இரண்டாவது முயற்சி நடக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். அவரது எதிர்பார்ப்புப் பிழைக்கவில்லை. அவரைக் கொலை செய்தோர் முஸ்லிம் தீவிரவாதிகளே என்ற கருத்தை உடனடியாகவே பாகிஸ்தான் அரசாங்கமும் அதற்கு உடந்தையான ஊடகங்களும் பரப்பின. பின்னர் கொலைக்கான பொறுப்பை அல் ஹைடா ஏற்றுக் கொண்டதாக ஒரு அறிவித்தல் வந்தது. அதற்குப் பின்னர் அல் ஹைடாவினர் தங்களுக்கு இக் கொலையுடன் தொடர்பில்லை என ஆணித்தரமாக மறுத்தனர். இவ்வளவு காலமும் அல் ஹைடா பற்றி நான் கேட்ட செய்திகளின் அடிப்படையில், அநேகமாக அல் ஹைடா தான் அவ் விடயங்களில் உண்மையைச் சொல்கிறது என்றே நம்பத் தோன்றுகிறது.



கொலையைச் செய்தவர் யாராயிருந்தாலும் முஷாரப்பின் தலைமைத்துவம் இக் கொலையால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இது முஷாரப் அதிகாரத்தின் முடிவாக அமையுமாயின், அம் முடிவு கொலையா தற்கொலையா என்ற உண்மையை அறிவது இந்த மண்ணில் நடந்த எத்தனையோ கொலைகளின் உண்மையை அறிவதினளவு கடினமானது. கொலைக்கு காரணமானவர்கள் மட்டுமே உண்மையை அறிவர். அவர்கள் அதைச் சொல்லப் போவதில்லை. சொல்ல நினைத்தால் அவர்களது கொலைகளின் காரணங்களையுஞ் சேர்த்து நாம் விசாரிக்க நேரும். ஆனால், உண்மைகள் தெரிய வர மாட்டா.


இதனாலேயே ஊடகத் துறையினரது சமூகப் பொறுப்பு முக்கியமானது. ஊடக நிறுவனங்களது எசமானர்கள் எதை விரும்பினாலும், உண்மைக்குப் புறம்பான விடயங்கள் பற்றி மக்களை எச்சரிப்பது அவர்களது கடமையாகிறது. ஊடகத் துறையினர் தம்மிடையே ஒன்றுபட்டு நின்றால் அவர்களிற் பலர் தமது மனச்சாட்சிக்கு விரோதமாகப் பேசவும் எழுதவுமான நிலைமையை அவர்களாற் தவிர்க்க இயலும்.

நான் முற்குறிப்பிட்ட விடயங்களில் ஐயத்துக்குரிய பகுதிகள் பற்றி அவற்றை வெளியிட்ட ஒவ்வொரு ஊடகமும் மக்களை அவை பற்றி எச்சரிக்கத் தவறி விட்டது. அதன் மூலம் அவ்வூடகங்கள் தமது நம்பகத்தன்மையை இழந்துள்ளன. ஊடகத் துறை ஊழியர்களால் அதிகாரத்தை மீற இயலும். அது அவர்களது சமூகக் கடமையும் உரிமையுமாகும். மக்களுக்கு உண்மைகளைச் சொல்வது என்பது வெறுமனே தெரிந்தெடுத்த தகவல்களைச் சொல்வதல்ல. சொல்ல வேண்டிய பிறவற்றைச் சொல்வதும் சொல்லப்பட்ட பொய்களை மறுப்பதும் உண்மையைச் சொல்லுவதன் ஒரு முக்கியமான பகுதி.


இன்று இலங்கையின் சனநாயகம் கடுமையான சோதனைகளை எதிர்நோக்குகிறது. இந்த நெருக்கடியான சூழலில் சனநாயகத்திற்கான குரல்கள் அடக்கப்படாமல் தடுக்கத் தவறுகிற எந்த ஊடகத் துறையினருக்கும் அதன் விளைவான அராஜகத்தினை எதிர்த்து வாய்திறக்க வாய்ப்பே இராது.

-மறுபக்கம்

No comments: