Showing posts with label நூல் வெளியீடுகள். Show all posts
Showing posts with label நூல் வெளியீடுகள். Show all posts

Sunday, January 08, 2012

கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்

இப்பொழுது ,புலம் பெயர் தமிழர்கள் அதிகமாகப் புத்தகங்கள் போடுகிறார்கள்.

புலிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து எழுதமால் இருந்திருப்பினம்.

புலியிருக்கும்போது மக்கள் சாவதைத் தேசிய விடுதலையெனக் கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம் இப்போது,கதை-கவிதைத் தொகுப்பென வெளியிடுகினம்.அதையும் , காலச்சுவடு முதல் கிழக்கு-மேற்குப் பதிப்பகங்களென வெளியிட ,தேசியப் பேச்சாளர் சேரன் பெறுகிறார்.


என்ன கொடுமையடா!,

நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்"துரோகி-எட்டப்பன்"என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!


அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?

புலியில்லை-சாவில்லை,பிறகென்ன எல்லாம் ஆறாத வடுக்களாகப் புண்பட்டிருக்கிறதென பாம்புப் புற்றுக்குளிருந்து தலைகாட்டும் இந்தக் காளான்கள் ,மக்கள் குறித்தும்,அவர்கள் வலி குறித்தும் வகுப்பெடுப்பதையும் நாம் இனிக் கேட்டாக வேண்டும்.


கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?

எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.

கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.

இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.

வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?

விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.

நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.

50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது...

// இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.//
-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

08.01.2012